ஆன்றோர் செயல் சான்றில் தொடரும்.

ஆன்றோர் செயல்
சான்றில் தொடரும்.

இடம் பலவாறு இருந்த போதும்
மடத்தில் படுத்து உறங்கும் வேளையிலும்
திடமாக உறுதி கொடுக்கும் ஆற்றல்
படம் பிடித்து முடிவெடுக்கும் கணம்.

கணம் கூடி காக்கும் திறன்
குணம் மூலத் தன்மையுறும் பன்மை
மணம் கூடுகையில் உள்ள மதிப்பு
பணத் தொகை
(தொண்டுடன் கைமாறும்) நிகழ்வு என்றும் .

என்றும் நட்புடன் பழகும் பண்பு
ஊன்றும் பலகலைகள் மாண்பு மிகும்
இன்றும் பலருக்கு தொடரும் நல்கை(கொடை)
நன்றும் தீதும் பதியும் ஆன்றோர்.

ஆன்றோர் செயல் சான்றில் தொடரும்
சான்றோர் பேச்சு வகை உண்டு
நின்று பலகால பணியில் தொடர்புறும்
தோன்றி மலரும் படிமலர்ச்சி வரலாறு.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA