குறள் – நமது குரல்

குறள் -நமது குரல்

707.

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ? உவப்பினும்

காயினும் தான்முந் துறும்.

விளக்கம் :

முகம் விருப்பு வெறுப்புகளை தெரிவிக்கும் ;

முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ ?

நினைவகச் செயல் :

நினைவகத்தின் அறிகுறியை முகத்தில் தெரிந்து

கொள்ளலாம். அகம் காட்டும் கண்ணாடி முகம்.

நினைவகத்தில் தோன்றிய நல்கருத்துக்களை

செயல்படுத்தவே, மேதகு. அப்துல் கலாம் அவர்கள் நல்ல

கனவுகளை அகத்தில் ஏற்றி செயல்படுங்கள் என்று

அன்றாடம் வலியுறுத்தினார்.