My Discussion in the Hindu Paper Topic

My discussion on thehindu

Polittcal advertising is mainly focusing on the Government department notes in a nutshell for framing the achievement of the ruling party.

By framing the picture of the rulers should cut by enlarging the schemes in which the people beneficial positions in actual status.

Title: Should online political advertising be regulated?

My discussion on thehindu

The Current Accountal System Holding(CASH), the Cash which is valuable for transacting the materials is in the transformation stage. The Cash value at present need to have genuine transactional merits rather than the possessional approach.

Shifts from Currency to Digital format would take more time to understand the concept behind it.
Till Such time, The Currency in terms of Cash Value holds good.

Title: Three years since demonetisation, cash is back

My discussion on thehindu

Ease Of Doing(EOD) is a trend for all people and this is the strategy for Government Initiative at present. It is very difficult for Rural people. The Coverage for entire people for our country is tobe only in farming Sectors.

EOD(Ease Of Doing) for the livelihood is basic necessity to be fulfiled for all citizens.
For livelihood, Natural Employment opportunities is always in Agricultural sectors.

In the National Rural employment Scheme, Farming sector should tune into service sector with all the Electronic Gadgets for maximising the agricultural sector for EOD.

As rightly pointed out by this article author, support must focus on to the rural umemployed people so as to avoid pressure on Land.

Title : What makes doing business easier

தமிழ் இணைய கருத்தரங்கம் 2019-பதிப்பு

இந்த பதிப்பு தமிழில் இணையக் கருத்தரங்க செயல் மன்ற பதிவின் தொகுப்புக் கட்டுரை.

இயற்கை மொழி பகுப்பு – இ.மொ.ப

இயற்கை மொழிமுறை பகுப்பு:

(இ.மொ.ப)ஆய்வு முறை:

முன்னுரை:

இயற்கை மொழி பகுப்பு முறை விதி சார்ந்து அமைக்கப்படும் அணுகுமுறை முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு சொல்லுக்கு இலக்கணக் குறிப்பு அதன் பின்னோட்டு சொல் முறை நிலைப்படுத்தும் காலமிது.
தமிழில் இலக்கணம், இலக்கை அக்கணமே தெரிவிப்பதை இலக்கணம் என்போம்.
மொழியை நாம் உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் உறுப்பு, வாய். ‘எழு ‘ ‘வாய்’ என்ற நம் வாயை உச்சரிக்கச் செய்வதால் தமிழில் பெயரை ‘எழுவாய்’ என்கிறோம்.
நம் செயலின் ‘பயன் நிலை’யை குறிப்பிடுவதால் ‘பயனிலை’ என்கிறோம்.
நமக்கு ‘பயன்படு’கின்ற ‘பொருள் ‘குறிப்பிடுவதால் ‘பயன்படுபொருள்’ என்கிறோம்.
தமிழில் எழுவாய், பயன்படுபொருள், பயனிலை, சொற்றொடரை முறையாக அமைக்க உதவும் இலக்கண அடிப்படைக் குறிப்பு.
இலக்கணம்:
தமிழன் வளர்கிறான்.
தமிழன் வளர்ந்தான்.
தமிழன் வளர்வான்.
ஒரு செயலையோ அல்லது வினையைக் குறிக்க வளர்கிறான், வளர்ந்தான், வளர்வான் என கால அளவை நிர்ணயித்துக் கூறுவோம்.
‘ றான் ‘ என்பது வளர்கின்றதை குறித்து
நியமிக்கும் சொல் ஆகும்.
இச்சொல் செயலின் உடனிலை குறிப்பு அணி சொல்லாகும்.
தமிழன் என்ற பெயருடன் அவன் வளர்கின்றதை விளக்கும் சொல்லாகும்.
எல்லா மொழிகளுக்கும் இந்த முறையே
அடிப்படை ஆகாது.
எனவே இந்த முறைமையை எல்லா மொழிகளுக்கும் மாற்றப் படும் பொழுது அவற்றிற்கு உள்ள தமிழ் இலக்கண அடிப்படை ஒப்பந்த முறைக்கு மாற்றுவது சாலச் சிறந்தது.
அந்தாதித் தொடை
‘முற்சுட்டு, அந்தாதி தொடை’ என்ற தமிழ் சொல் ‘ Anaphora ‘ என்ற ஆங்கில சொல் ‘Anapharein’ கிரெக்க மொழியில் மீண்டும் செயல்படுத்து, பார்த்தலாகும்.
இந்த குறியீடுகளை பேசும் பொழுது அறிந்து கொண்டு
பெயர், செயல் அல்லது வினையை என அறிந்து கொள்கிறோம்.
இந்த அடிப்படையில் அறிந்து கொள்ளும் பொழுது பேசுபவரின் நிலையை புரிந்து கொள்வோம்.
எந்த குறியீடு மாற்றம் ஒவ்வொரு நிலையை அறிந்து கொள்ளப் பயன்படுகிறது என்பதை முடிவாக தெரிந்து கொள்வோம்.
தொடராக நடைபெறும் செயல்களை அறிந்து கொள்ள ‘தொடரியில்’, ‘சொற்பொருள்’ என்று தமிழில் சொல்லக்கூடிய ‘Syntactic, Semantic’ என்ற ஆங்கிலச் சொல்லை நாம் பயன்படுத்துகிறோம்.
உருபனியல் பகுப்பு ஆய்வு இயற்கை மொழி முறைக்கு முக்கியமான ஒன்றாகும்.
கொடுக்கப்பட்டு உள்ள ஒரு தமிழ் சொல்லின் பின்னோட்டு இலக்கணத் தகவல்கள் உருபனியல் பகுப்பு ஆய்வு முறைக்கு உகந்ததாக இருக்கும்.
தமிழ் உருவ(Morphological) முறையில் ஒரு சொல்லை கணினியில் உள்ளிடு செய்வதும், இலக்கண அமைப்பில் வெளி வருவதும் ஆகும்.
உருவ இயல் பகுப்பு ஆய்வில் தகவல் மீட்பு,
தேடு பொறி, உச்சரிப்பு, இலக்கணத்தை சரிபார்த்தல், இயந்திர மொழி பெயர்ப்பு, அகராதி சரிபார்த்தல், தகவல் பிரித்தெடுத்தல், உள்ளடக்க ஆய்வு, கேள்வி பதில் ஆகியவற்றிற்கு உண்டான கருவிகள் இயற்கை மொழி முறைமைக்கு தேவையானதாக கருதலாம்.
முக்கிய வார்த்தைகள்:
உருவ இயல் பகுப்பு, பழங்கால தமிழ், இயற்கை மொழி பகுப்பு முறை (இ.மொ.ப) தமிழ்.
ஒரு சொல்லின் உட்கூறுகளின் உருவ இயல் பகுப்பு படிப்பு முறையாகும். உருவ இயல் பகுப்பில் ஒரு மொழியில் சொல்லின் இலக்கண முறை அறிதலை கட்டுருபன்(morpheme) என்று கூறுகிறோம்.
தேடு பொருளில் ஒரு சொல்லை கொடுத்தவுடன் அச்சொல்லுக்கு உண்டான ஆவணங்களை தேடி தரும் நிறுவுதல் சிறப்பாகும். இந்த முறைமை தமிழில் அதிக கோப்புகளுக்கு தேடுவதற்கு உண்டான பயன்பாட்டை நிலைப்படுத்தும்.
பாரம்பரிய தமிழ் சொற்களை கண்டுபிடித்து அதற்கு உண்டான தேடு பொறியை கண்டு பிடிக்க உதவும் கருவியாக இந்த இ.மொ.ப இருக்கும்.
தமிழ் அடிப்படை சொற்கள் அமைப்பதற்க்கு சொற்பொருட்கள், சொல் இலக்கண மாற்றம் ஆகியவற்றிற்கு உண்டான கருவிகளை எடுத்துக் கொள்வோம்.
ஒரு சொல்லுருவில் பயன்படுத்துவதற்கு அதனுடைய வேர்ச் சொற்களை சொற்பொருள், சொல் இலக்கணமாற்ற தகவல் ஆகியவைகளை எடுத்துக் கொண்டு வகைபடுத்துவதும், கூட்டிஅமைப்பதற்கும் பயன்படுத்துவோம்.
தமிழ் மொழிச் சொற்களுக்கு அண்ணா பல்கலைக் கழகம், இந்திய மொழி- இந்திய மொழி பொறி மாற்ற நிறுவனம், மத்திய இந்திய மொழி மாற்ற நிறுவனங்கள் ஆகியவைகளில் சொற் களஞ்சியம் உள்ளது.
ஓரு பொருளைப் பற்றிய முழுமையான இலக்கியத் தொகுப்பு தோராய அடிப்படை மாதிரியாகவும் கலப்பு அணுகுமுறையில் பல்வேறு இடங்களில் பெறலாம்.
உருவ இயல் பகுப்பு முறையில் கூட்டுச் சொல்லுக்கு உண்டான சொல்விதி, சொற்பொருள் போன்ற முக்கிய தகவல் அடங்கியதாகும்.
தற்பொழுதைய பகுப்பு ஆய்வு அமைப்புகள்:
பேராசிரியர் ராஜேந்திரன், தமிழ் பல்கலை கழகம் தமிழ் மொழியில் இருந்து இந்தி மொழிக்கு பகுத்தாய்ந்து உள்ளார். அண்ணா பல்கலைகழகம் KB சந்திரசேகர் மையம் (AU-KBC)தமிழ் மொழியில் பகுத்து உள்ளது, உருவாக்கப்படவில்லை.
‘அச்சரம்’ என்ற பகுப்பு ஆய்வு முறையை அண்ணா பல்கலைகழகம்-KBC , RCILTS என்ற தொழில் நுட்ப தீர்வு மையம் தமிழ் எழுத்து உருவ பகுப்பு தயார் செய்து உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்து உருவாக்கம் ஆகி உள்ளது.
இந்த தமிழ் எழுத்துருவாக்கம், கல்வெட்டில் இருக்கும் பொழுது ஓலைச்சுவடியில் அமையும் பொழுதும் காகிதத்தில் அச்சு செய்யும் பொழுதும் அதற்கு தகுந்தவாறு பதிவேற்றம் மாறி உள்ளது
தற்பொழுது கணினி, எணினி என பயன்படும் சூழ்நிலைக்கு தமிழ் மொழி இயற்கை மொழி மாறுபாட்டு முறைமைக்கேற்ப எழுத்துக்கள் தமிழ் இலக்கண முறைப்படியும் பகுப்பு மாற வேண்டி உள்ளது.
அகராதி, கலைக்களஞ்சியக் குறிப்பு, சங்க கால இலக்கியக் குறிப்புகள் இ.மொ.ப தகவல் கிடங்குகள் சேகரிக்கப்பட்டு முறைமைப் படுத்த வேண்டும்.
ஒவ்வொரு வேர்ச்சொல்லும் அகரச் சுருக்க கோவையில்(XML) இருந்து சேகரிக்கப்பட்டு தமிழ் மெய் ஆவணமாக தயாரிக்கப்பட வேண்டி உள்ளது.
தமிழ் சொல் வகைக் குறியிடும் கருவி (POS tagger)
செய்வதன் மூலம் பல்பொருள் ஒரு சொல் போன்ற தெளிவிலா உரையை தெளிவு படுத்த பயன்படும்.
சொற்களின் வகை(POS) யை இலக்கண அடிப்படையிலும் முறைமைப் படுத்தப்பட வேண்டும்.
சொல்லின் மூல ஆவணம், ஆதாரம், ஏற்ற சொல், ஒருமை, பன்மை, காலநிலை, இடநிலை முதலானவற்றினை நிலைப்படுத்த வேண்டும்.
இலக்கண அமைப்பு முறையில் முன்னோட்டு, பின்னோட்டு குறியீடுகள் மூல ஆதாரச் சொற்களுடன் இணைக்கப்பட வேண்டும்.
கணினி முறையில் ஆம், இல்லை என்ற முறைமை தொகுப்பை தமிழ் மொழி எழுத்துருவுக்கள் தன்னிரவுத் தமிழ்ச் சொற்களின் தகவல் திரட்டு நெறிமுறைப்படி
தொகுக்கப்பட வேண்டும்.
தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 500,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.
இந்த அகர முதலியில் மொத்தம் 31 தொகுதிகள். 37 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கப்பட்ட தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் (Tamil etymological Dictionary project) அண்மையில் முழுமையடைந்தது.
பழந்தமிழ் சொற்களின் அமைப்பில் 500,000 சொற்கள் அமைக்கலாம் என்கின்றனர்.
இந்தச் சொற்கள் வேர்ச் சொல் தேடுவதற்கு பழைமை நூற்கள் பல அடிப்படைத் தகவல்கள் திரட்டு தேவைப்படுகிறது.
இயந்திரத் தகவல்களை சீரமைத்தால் சீர்படுத்தப்படலாம்.

முடிவுரை :
இந்த இ.மொ.ப முறை பழைய நூற்களின் தகவல் தொகுப்புத் திரட்டின் மூலம் கணினியில், எணினியின் மூலமும் முறைப்படுத்தப்படலாம் என்பதையும் சொற்களின் வேர்ச் சொல்லின் உருவாக்கம் புரிந்து கொள்ளலாம். சொற்கள், பொருட்களின் அடிப்படையிலும் அறிந்து கொண்டு நல்முறையில் கணினியிலும் தமிழ் மொழிச் சொற்களை நிலைப்படுத்துவோம்.

SIMPLE RULES

ACROSTIC
___________

SIMPLE RULES = சாதாரண விதிகள்
________________________________________________

SIMPLE= Signals Intensified Moment ,

Planned Level Easily .

RULES = Regulating Universal Learning

Existence , Simplified .

________________________________________________

THE SIGNAL INTENSIFIES

EVERY MOMENT

FOR OUR

SIMPLIFIED LIFE .

RULES ARE REGULATING

FOR

EXISTENCE WITH

OUR

UNIVERSAL

UNDERSTANDING .

The rules ,

which are regulating our

atmosphere ,

what we create

ourselves.

It is purely based on our

unique experience , what

WE FACE in our day today

LIFE.

THREE SIMPLE RULES.
________________________
1 . DETERMINE , WHERE YOU WANT TO GO ,

2 . ASK ,TO GET ANSWER

3. STEP FORWARD.

INDIAN EXPRESS My Comments on Various Topic

Comments on various topics in செயல் மன்றம்

Modi 2.0 must do something to improve ‘well-being’
of an ordinary Indian:

Income for all can only generate
with natural environmental growth
by preserving the natural resources,
not by startup in the way of providing loans
to some greedy people
who are showing their whims
and fancies in the name of collateral securities.

Modi 2.0 must do.something to improve ‘well-being’
of an ordinary Indian:

It is time to realise the impact
of our Country’s development
in terms of real growth with
employment generation in the
fixed income upward mobilty
for all kinds of people.

Is it possible that GDP was over-estimated and no
one knew about it, including economists in govt?

The GDP in real sense, as furnished in this article, is not estimating the real growth of our economy.

It is a figure in terms of productions level with our miniscule estimation of human knowledge in economic perspective.

A Human being productional capacity in the terms of National Income can measure in terms of worthiness of the person’s possession level.

Whereas Nation as a whole, it is difficult to judge in Genuine Progress Indication.

Particularly, The National Environmental Impact in climate changes, as a result of which, the estimation made by our economists could not measure very accurately.

Let us find some find some new method of calculation on these measurements.

Too good to be true :

This article is timely present
for renewal of educational policy
with educational department it self.
DNEP is to focus on
scientific community development
in real sense with the statewise
culture with the focus on unit y
as the real strength of our country.

India’s GDP growth: New evidence for fresh beginnings:

Expenditure based estimates
as rightly pointed out in this
article can focus some reality.

தினமணியில் விமர்சனம்: தலைப்பு

தினமணியில் விமர்சனம்:

தலைப்பு : மொழிப் பகையை மாற்ற…

கல்வி,கால வளர்ச்சியின் மக்களிடையே
பரவும் ஒரு தகவல் பரிமாற்றம்.

மொழி நம் கருத்தை தெரிவிக்கும் உடலில்
உள்ள ஒர் கருவி.

தாய் மொழி நமது பழக்கத்தால்
உருவாக்கப்பட்டது.

மொழி , அரசாங்கத்தின் மூலம்
வலியுறுத்துவது அரசாங்கத்தில்
நடைமுறையில் உள்ள
இடர்பாடுகளை தவிர்ப்பதாக
இருக்க வேண்டும்.

தற்கால தகவல் பரிமாற்றம்,
தொழில் நுட்ப கருவிகள் மூலமும்
கற்றுக் கொள்வது எளிது.

அவரவர்களின் தேவைக்கு ஏற்ப கற்றுக்கொள்ளமுடியும்.

மொழி திணிக்கப்பட வேண்டியதில்லை.

வாழ்க்கை கையேடு

வாழ்க்கை கையைடு .
———————————–

கற்றலே , ஓவ்வொருவரின்
வளர்ச்சி , முன்னேற்றம் .

கற்பதற்கு , படிப்பு ,
ஓர் கருவி.

படிப்பு , வாழ்க்கையை
உணர்ந்து
கொள்வதற்குண்டான
ஓர் பரந்த நிலைப்பாடு .

ஒவ்வொருவரின்
தகுதியை
வளர்ப்பதே ,
சரியான வளர்ச்சி ,
முன்னேற்றம் .

தகுதி = த ரம் ,
கு ணம் ,
தி றமை .

தரத்தை மேம்படுத்துவதே ,
ஒவ்வொருவரின் பிரத்யேக
செயல் .

தரம் , அவரவர்களின்
உடல் செல்களின் அமைப்பினால்
உண்டாகும் ஒர் நிலை .

தரத்தை , மேலும் சீர்திருத்த
நற்குணங்களை
வளர்ப்பதே ,
அடுத்த நிலை .

ஒவ்வொருவரின் தனி்பட்ட
முயற்சியே ,
தரமாகிய , உடல் செல்களின்
அமைப்பில் இருந்து ,
நற்சிந்தனையை , செயலாக்க
உருவாக்கும்
ஓர் பயிற்சி .

PASS = P ersuasion
A nd
S teps ( into )
S ystem .
வாழ்க்கை முறைமையை
அறிதலே , முன்னேற்றத்திற்கு
உண்டான தேர்ச்சி .

  1. கையேடு தொடரும் . ,

வாழ்க்கை கையேடு – 2
————————————
தரமும் , குணமும்
ஒவ்வொருவரின் அடித்தளம் .

தரமான செல்களின்
தோற்றம் , நிலைப்புதன்மை ,
குணமாக அமையும் .

உயிர்ப்பித்தலே , செல்களின்
ஆதாரம் .

நல்ல சிந்தனை ,
ஓர் சிறந்த செயலுக்கான
வித்து .

நற்சிந்தனை , குணமாக
ஒவ்வொருவரின்
வாழ்க்கை நிலையை
உயர்த்தும் .

தரமும் , குணமும்
முக்கோண வடிவின்
இரு அடித்தள முனைகள் .

முக்கோண வடிவின்
கூரான
மேல் பகுதியே
ஒவ்வொருவரின்
திறமையாகும் .

எனவே , நம்
செல்களின் அடித்தளம்
தரமும் குணமும் .

நம் திறமை ,
நற்செயலுக்கான
கூர்மையான அறிவு .

தரம் , குணம்
திறமை நம் செல்களின்
முக்கோண பரிமாணம் (size).

தகுதி = த ரம் ,
கு ணம்
தி றமை .

நம் தகுதியை ,
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
மேம்படுத்துவோம் .

நிலையான வாழ்வு ,
தரத்தையும் , குணத்தையும்
கொண்டு
நம் , நல்ல திறமையை
வளர்ச்சி பாதைக்கு
கொண்டு செல்வோம் .

தொடரும் கையேடு . , . ,

வாழ்க்கை கையேடு -3
———————————-
தகுதியை மேம்படுத்த,
தன் முனைப்பே ,
முதல் செயலாகும் .

அவரவர்களின் ஆதார குறிப்பை
பதிவதேயே, கல்லிலும்,
ஏட்டிலும் பதித்தோம் .

கல்லில் , தம் ஆதாரத்தை
விளக்கியதால் ,
*கல்வி(ளக்கம் ) *
என குறிப்பிடுகிறோம் .

கல்வி = கல்+வி (ளக்கம்) .

மூதாதையர்களின் விளக்க
குறிப்பே , சமயமாக ,
சமுதாய கருத்துக்களாக
அறிந்து கொள்கிறோம் .

அன்பும் , அறனுமே
நம் பண்பும் பயனும்
ஆகும் .

அறத்துடன் வாழ்வது ,
சரியான ஆன்மீக நிலைக்கு ,
நம் வாழ்க்கையை
இட்டுச்செல்லும் .

ஔவையின் ஆத்திசூடியை
கற்றறிதல் ,
நம் ஆன்ம நேயத்தை
வளர்க்கும் ஓர் உன்னத
பாங்கு .

பட்டமும் , பதவியும்
நம் அறிந்து செயல்படுவதற்கான
ஓர் கருவி .

நாம் அறிந்து கொண்டதை ,
அனுபவத்தை
பதிந்ததனால் ,
ஏடாக மாறின .

ஏட்டில் பதிந்தது ,
எக்காலமும்
அறிவதற்குண்டான
வாய்ப்பு .

கற்றலுக்கு உண்டான
முதல் நிலை, அனுபவமே .

போற்றுவோம் , நல் கருத்துக்களை .

கையேடு தொடரும் . , ,

வாழ்க்கை கையேடு -4
———————————-
நம்உடலின் வளர்ச்சி ,
செல்களின் அமைப்பே .

அவரவர்களின் தனிப்பட்ட
தோற்றம் , செல்களால்
உருவாக்கப்படும் சீரமைப்பே .

செல்களை மேலும் வளர்ச்சி
பெறச்செய்வது , நாம்
உண்ணும் ஆகாரமே .

உடலும் , உள்ளம்
வளர்ச்சி பெறுவது ,
நம் பெற்றோர்களின்
பெரு முயற்சி .

எங்கு வளர்கிறோமோ ,
அந்தந்த மொழி ,
கலாச்சாரம் ,
நம்மில் உருவாக்கப்படும் .

நல்ல பல மாற்றங்கள் ,
ஒவ்வொருவரின் வாழ்வில்
தோன்றும் அரிய
நிகழ்ச்சிகள்.

சுற்றுப்புற சூழ்நிலை ,
நம் வாழ்வின் தரத்தை
நிலை நிறுத்தும்
ஓர் பொக்கிஷம் .

ஒரே உடல் ,
ஒரே தோற்றம்
ஒரே பதமாகிய
இப்பிரபஞ்சம் .

நம் வாழ்வுக்கு
ஆதாரம் ,
காற்று , நீர் ,
நம் உடல் ,
நம்மை இயக்கும்
எரி பொருளாகிய சக்தி ,
நாம் இருக்கும்
இப்பிரபஞ்சமாகிய
ஒரே பதம், நம் உடல் .

நாம் உணரும் ,
ஒவ்வொரு
நிலையும்
எண்ணிலடங்காதவையே .

உடலும் , உயிரும்
ஒருங்கே வளருவதே
நம் தோற்றம் ,
நம் வளர்ச்சி .

நற்குணங்களுடன்
வாழ்வோம் .
நல்ல தகுதியை
பெறுவோம் .

கையேடு தொடரும் .

வாழ்க்கை கையேடு – 5
————————————–
நம் செல்களினால்
உருவாகும் , தரமும் ,
குணமும் ,
திறமையினால்
வெளிப்படும் .

நம்
கட்டளை , மந்திரம்
தரத்தையும் ,
குணத்தையும்
மேம்படுத்துவதே .

நற்குணங்கள் ,
நாளும் வளர்கின்ற
ஓர் அற்புதம் .

திறமை ,
நம்மை வளர்க்கும் ,
ஓர் இயந்திரம் .

நல்ல பயிற்சி தான்
என்றும் சிறந்து
விளங்கும்
நம் நிலை .

பயிரிடுவோம் ,
நல்ல தரத்தையும்
குணத்தையும் .

நல்ல பழக்கம் ,
கற்று உணர்ந்து
செயல்படுதலில் ,
நன்மையை
தோற்றுவிக்கும் .

வளர்ச்சி ,
என்றும் நம் தரத்தையும்
குணத்தையும்
ஓர் கருவி.

திறமைதான்
நமது செல்வம் .

வாழ்க்கை கையேடு – 6
————————————-
திறமை தான் நமது
செல்வம் .

திற(உன் )மை(யத்தை) .

திறமையை வெளிகொணர்வது
உங்களின் தனிப்பட்ட முயற்சியே .

உங்களின் தரத்தையும் ,
குணத்தையும்
செயல்படுத்துவது .
திறமையே .

திறமை , ஒவ்வொருவரின்
தனிப்பட்ட முயற்சி .

ஒவ்வொருவருக்கும் ,
திறமை தான்
பொக்கிஷம் .

திறமையின் ,
திறவுகோலே
செயல் தான் .

திறம்பட
செயல்படுத்துவோம் ,
நம் திறமையை .

நமது திறமை ,
அனவருக்கும்
பயன்படுவதாக
இருக்கட்டும் .

தொடரும் கையேடு . ,

வாழ்க்கை கையேடு – 7
————————————-
கல்வி , தகுதியை
வளர்க்கும் .

செல்வம் , செயலை
மேம்படுத்தும் .

வீரத்தின் வெளிப்பாடு
சேவையே .

*தகுதியும் , செயலும் ,
சேவையும் *
மக்களின்
நிரந்தர அடிப்படை
தொடர் நிகழ்ச்சிகள் .

இத்தொடர் நிகழ்ச்சிகள் ,
ஒவ்வொருவரின்
வாழ்க்கையை
அமைக்கும்
தேவையான கடமைகளாகும் .

செயலே , பொருள்
ஆதாரத்திற்கு
ஊன்றுகோல் .

* செயலாக = செ வ்வனே
ய தார்த்தமாக
லா வகமாக
க டமையாற்றுவதே .*

செயலே , பொருள் உருவாக்கம் .

பொருள்கள் அனைத்தும்
பிரபஞ்சமாகிய
ஒரே பதத்தின்
உடைமை .

  • அந்த * ஒரேபத *
    உடைமையில்
    தொடர்ச்சியாக
    பணியாற்றுவதே
    நம் கடமை .

வாழ்க்கை கையேடு – 8
————————————–
வாழ்க்கை புரியாத புதிர் .

புரிந்து கொள்ளுதலே உயர்வு .

நம் உடலும் , உயிரும்
செல்களின் பரிணாம
தோற்றம் .

செயல்களின்
கட்டுபாட்டில்
இயங்கும் நம் தசைகள் ,
உணர்வின்
இயக்க
புரிதல்,
நம் உடல்
பருவ மாற்றத்தின்
நிலை .

இளமை பருவம் ,
இயங்கும் பருவம் .

முதுமை தோற்றம் ,
இயக்கும் பருவம் .

இயங்குவதும் ,
இயக்குவதும்
நம் இன்றியமையாத
நிலை .

இயக்குவோம் ,
நல்ல செல்களின்
வடிவை .

புரிந்து கொள்வோம் ,
நம் உடல் , உயிர்
மாற்றத்தின் நிலையை .

வாழ்க்கை கையேடு – 9
————————————-
தேடல் , ஆன்ம அமைதியும் ,
சேவையின் தேவையும் .

ஆன்ம அமைதியே ,
அனைவரின் வழிபாடு .

சேவை செய்வதே ,
நமது தேடலின்
முக்கிய
நோக்கம் .

சேவையின் தேவையை ,
கலந்து உரையாடுதல்
எக்காலத்திற்கும்
பயன் தரும் .

ஆன்மீக தேடலில்
இசையே பிரதானமாக
கருதுகிறோம் .

இசை = இ னிமையின்
சை கை .

இசை = இ றைவனின்
சை கை கோட்பாடு .

கோயில் வழிபாடு ,
அனைவரையும்
ஆன்மீகத்துக்கு
இட்டு செல்லும் வழி .

சேவை = சே ர்ப்போம்
வை யகத்தில் .

தேவை = தே டுவோம்
வை யகத்தில் .

சேவை ,
நாம்
பெற்றதை ,
பகிர்ந்து
அளிப்பதாகும் .

சேவையின் தேவையே
நமது தேடலாக
இருக்கட்டும் .

பொருள் ,
அடிப்படை
தேவையை
பூர்த்தி
செய்வதாக
இருக்கட்டுமே .

வாழ்க்கை கையேடு – 10
————————————–
நேரமே = நே ர்த்தியான
ர கவாரியான
மே ன்மைக்கு .
——————————————–
மானிடர்கள் பயன்படுத்தும்
மேன்மைக்குரிய கருவி.

இயற்கையின் பங்களிப்பே ,
நேர்த்தியான நேர
மேலாண்மை .

நாம் இருக்கும்
இடத்தை ,
சுழலும்
பூமியில் ,
ரக வாரியாக
காட்டும் .

360 ் அளவையும்
துல்லியமாக
காட்டும்

நம் வாழ்க்கை
ஓட்டமும் ,
நேரத்தின்
ஊடாக
செல்லும் .

நேரம் அறிந்து
செயல்படுதல் ,
நம் வாழ்க்கை
பகிர்வுக்கு
ஓர் நிலை கண்ணாடி .

நேரமே ,
நம் எல்லோருடைய
வாழ்நாளிலும்
தொடரும் ,
ஓர் ஓட்ட பந்தய
நிகழ்ச்சி .

நேரம் ,
நாம் செல்லும்
வாழ்க்கையின்
செல்வம் .

வாழ்க்கை கையேடு – 11

காலங்கள்
—————–
ஒவ்வொருவருக்கும்
இளமை பருவம் ,
இனிமையான அனுபவம் .

பெற்றோர்களின்
ஆதரவும் , பாராட்டுதலும்
சிறப்பாக இருக்கும் ,
இளமை பருவத்தில் .

இளமை கால லட்சியம் ,
பெரியோர்களின்
வளர்ப்பே .

இளமை காலத்தில் ,
அறிவு , ஆற்றல்
மிளிரும் தன்மை ,
மொழி மற்றும் கலாச்சாரத்தின்
தூண்டுகோலே .

சமுதாய நோக்கு ,
கற்றலிலும் ,
அனுபவத்திலும்
வெளிப்படும் .

காலமே = கா க்கும்
ல ட்சியத்தின்
மே ன்மைக்காக .

இளமை கால குறிக்கோள்கள் ,
சமூக வரையறையே .

சமய கோட்பாட்டுகளும் ,
பழக்கத்தினால்
உருவாகுபவையே .

சமய நோக்கும் ,
பழக்க வழக்கத்தின்
அடிப்படையே .

வாழ்வின் அமைப்பே ,
சமுதாய வழிமுறைகளே .

சமுதாயமே = ச மமான நோக்கு ,
மு ன்னேறத்திற்காக ,
தா மே
ய தார்த்தமான முறையில்
மே ன்மையடைபவயே .

சமமான பார்வை நோக்கு ,
கற்றலினாலும் ,
அனுபவத்தினாலும்
பெறுபவையே .

மனிதர்களின்
வரலாற்றில் ,
சமுதாயத்தை ,
யதார்த்தமான
வகையில்
மேன்மையடைய செய்யும் ,
ஒவ்வொரு
பருவகாலங்களின்
அமைப்பும் .

கையேடு தொடரும் . ,

வாழ்க்கை கையேடு – 13
—————————————-
செய்க பொருளை
——————————
வாழ்வதற்கு தேவையான

பொருட்களை செய்வதே

நமது சரியான மேன்மை .

அதிக உற்பத்தி என்பதைவிட

தேவையான பொருட்களை

நமக்கு , என்றும் முதலிடம்

பெறும் .

அதிக லாபமே =அ டுக்காக
தி னமும்
க டமையாற்றுவதில்

லா வகமாக
ப ணத்தின் மூலம்
மே ன்மையடைவது

வியாபாரமா ? = வி னையால்
யா வருக்கும்
பா ங்காக
ர கவாரியாக
மா னிடரின்
– தேவையை
– பூர்த்தி செய்வது .

அதிக லாபமே வியாபாரமா ?

வியாபாரம் , மக்களின்
தேவையை பூர்த்தி செய்வதே .

லாபம் ஈட்டுவது ,
அடுக்கு
முறை சுழற்சியில்
இருப்பதே ,
அனைவருக்குமான
நலமாகும் .

ஒரு சாரார் பணம் ஈட்டுவது மட்டுமே ,
வியாபாரமா என்பது
கேள்விகுறியே .

பொருள்தான் ஆதாரம் .

லாபம் என்பது ,
கண்ணுக்கு புலப்படாத
ஓர் குறியீடு .

பொருள் முதன்மை
பெறுதல் அனைவருக்கும் நலமாகும் .

ஒரு சாரர்கள்
பயன்பெறுவது தான் ,
பொருளாதார முன்னேற்றமா
என்பது
என்றும் கேள்விகுறியே .

எங்கும்
இயற்கையின் ஆதாரமே ,
பொருள்களாக மாறும்
தன்மை உடையவைகளாகும் .

செய்வோம் பொருள்களை !

நலம் பெறுவோம் ,
நாம் கடமேயாற்றுவதில் .

வாழ்க்கை கையேடு – 14
————————————–
தலைமை செயலகமே
————————————-
நம் அகத்தின் தலைமை

செயலகம் , மூளை .

நம் செயலுக்கு உத்வேகமே ,

மூளை நரம்புகளின் ஆதிக்கம் .

நமது அகத்தின் கட்டளை

இடும்

எஜமான் .

நினைவுகளின் ,

தொடர்

இயக்கம் .

தலைமை செயலகமே =

தலை யே
மை யமான

செ யலாற்றலுக்கு
ய தார்த்தமான
ல ட்சியத்துக்கும் ,
க டமை புரிந்து ,
மே ன்மையாற்றக்கூடியவை .

நமது அங்கத்தை ,

ஆளும்

செயல் மன்றம் ,

மூளை .

அமிக்டாலா என்று

சொல்லக்கூடிய மூளையின்

பதிவேடு , நமது

அங்க உணர்ச்சிகளுக்கான

சாதனை-தாங்கி .

நம் உடலை காக்கும்

மிகவும் பத்திரமான

பதிவேடு .

நம் செயலாற்றலுக்கும்

யதார்த்தமாக , நம்

லட்சியத்துக்கு

இட்டு செல்லும்

வழி காட்டி .

ஒவ்வொருவரையும் மேன்மையடைய

செய்யும் , நம்

வாழ்வின் பெட்டகம் .

காப்போம் ,

நம் தலைமை செயலகத்தை .

கையேடு தொடரும் . ,

மாபெரும் தமிழ்க் கனவு-அண்ணா – இந்து தமிழ் திசை வெளியீடு- M.S உதயமூர்த்தி கட்டுரை

‘மாபொரும் தமிழ்க் கனவு’ –
“இந்து தமிழ் திசை ”
தொகுப்பு நூல் விமர்சனம்-செயல் மன்றம்.

தலைப்பு:
‘இந்தியாவுக்கு வெளியே அண்ணா’-
பதிவர் : எம்.எஸ். உதயமூர்த்தி-

எம்.எஸ். உதயமூர்த்தி தம்முடைய
எழுத்துருவில் குறிப்பிட்ட
ஒரு சில பகுதிகளை
இந்நூலில்

‘அண்ணா முதல்வராக ‘

பொறுப்பேற்றபின்
மேலை நாட்டு பயணங்களில்

“அமெரிக்காவில் அண்ணா”

என்ற பதிவை
ஆவணங்களாக இந்நூல்
தொகுப்பு ஆசிரியர் ‘சமஸ் ‘
மற்றும் பல வல்லுநர்கள்
தொகுப்பாக
வெளியிட்டு உள்ளனர்.

‘பேரறிஞருக்கு மரியாதை’

என
இந்நூலில் கே.அசோகன்,
இந்து தமிழ் ஆசிரியர்
முன்னுரை அளித்து உள்ளார்.

அண்ணா தன் வாழ்நாளில்
என்னென்ன நிகழ்ச்சிகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து
உள்ளார் என்பதனை இந்நூல்
மூலம் அறிந்து கொள்ளலாம்.

அண்ணாவின்
‘சட்ட மன்ற, நாடாளுமன்ற உரைகள்’
மிகவும் சிறப்பாக
தமிழ்நாட்டின்
தமிழக கனவுகளை
இந்நூல் சிறு
தொகுப்பாக
பதிந்து உள்ளது.

தமிழ் நாட்டிற்கு
என்னவெல்லாம்
மேலை நாடுகளின்
அனுபவங்களில்
இருந்து பெறலாம் என்பதன்
தொகுப்பு இந்த
விமர்சனப்பதிவு.

மாபெரும் கனவு பதிவாக
அண்ணாவின் வருகையை
அமெரிக்காவில் அப்பொழுது
அங்கு குடி இருந்த
இந்திய குடிமக்கள்,
பத்திரிக்கையாளர்களின்
வருணனையை
‘உதயமூர்த்தி’
அவர்கள்
குறிப்பிடுகிறார்.

‘அண்ணாவின்
‘சொல்லும் செயலும் ‘
அவரது
பண்புகளும் குணங்களும்
பேச்சில்
பரிமளிக்கின்றன’

என அண்ணாவைப் பற்றி
விவரிக்கிறார்.

‘ ஏன் காங்கிரஸ் தோற்றது ‘
என்ற கேள்விக்கு
‘நீண்ட நாட்கள்
பதவியில் இருந்ததால்’

எனக் கூறிவிட்டு உடனே

‘ எந்த கட்சியும் அதிகமாகப் போனால்
10 ஆண்டுகளுக்கு மேல்
பதவியில் இருக்கக் கூடாது’

என அமெரிக்காவில் உள்ள
திட்டத்தையும் கூறிவிட்டு

‘ அதிகார போதை
என் மண்டையில் ஏறாமல்
இருக்க வேண்டும் ‘

என்று அண்ணா
பதிலளிப்பதை பதிகிறார்.

‘நாம் பிரச்னைகளைத்
தீர்க்கத்தான் வேண்டும்,
நழுவ முயலக் கூடாது’ என

‘உள் நாட்டு போர்’
அபாயத்தைப் பற்றிய
பிரச்னைகளை
ஏல் கல்லூரி வளாகத்தில்
பதிலளித்ததை
குறிப்பிடுகிறார்.

‘உங்கள் நாட்டுக்கு
ஜனநாயகம்
புதிதல்லவோ’

என்ற கேள்விக்கு

எங்கள் நாட்டுக்கு
மக்களின் பங்களிப்பு
புதியதல்ல எனவும்

2000க்கு முன்பே
பனை ஓலையில்
குடவோலையில்
சமுதாயத் தலைமைத்
தேர்ந்தெடுத்ததை
அண்ணாவுடன் அமெரிக்காவில்
பயணம் செய்திட்ட நாட்களில்
‘அண்ணா ‘ பதிலளித்ததை
‘உதயமூர்த்தி’ அவர்கள்
ஆவணபடுத்துகிறார்.

நேருவும், இந்திராவும்
மொழிக் கொள்கைகளில் எடுத்த
அவசரமுடிவுகளை
அண்ணா பதிலளித்ததை பகிர்கிறார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு
தமிழ்நாட்டு
தேவை குறித்து கேட்டதற்கு
உடனே
120 கோடி தேவை என்று
அன்றைய
தமிழ் நாட்டுத் திட்டத்தையும்
பல தொழில்
முன்னேற்றத் திட்டங்களை
விளக்குவதை
இந்த தொகுப்பில் உதயமூர்த்தி
அவர்கள்
விளக்குகிறார்.

தமிழ் நாட்டு மாணாக்கர்கள்,
அரசுப்பணியாளர்கள்
இயக்க, கட்சி முன்னோடிகள்
படிக்க வேண்டிய
மாபெரும் தமிழ்க் கனவை,

உண்மையில் செயல் படும்
ஆர்வலர்கள்
தத்தம் செயலாற்றலுக்கு உகந்த நூல்.

‘நாடு என்பது
பூகோளப் படம் அல்ல,
அங்கு வாழும்
மக்களின் உணர்ச்சி
தொகுப்பு;

‘நாடு வாழ
நம்முடைய உழைப்பும்
தேவை என்ற
உணர்வு எல்லோருக்கும்
எழ வேண்டும்.’

என்ற அண்ணாவின் வரிகள்

நம்
ஒவ்வொருவரின்
‘மாபெரும் தமிழ்க் கனவு’

நினைவுடன் செயல்படுவோம்.