Featured

410 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
ஒற்றை செல் முதல் நிலைக்கருவிலி
முதல் நிலைக்கரு உயிரின தோற்றம் ஆகும்.

Listen to the most recent episode of my podcast: 410 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை செல் முதல் நிலைக்கருவிலி # முதல் நிலைக்கரு **உயிரின தோற்றம்** https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/410-e1f16p4

Featured

கணம் இனி, கணினி,எண்ணில் எணினி

கணம் இனி – கணினி ;எண்ணில் எணினி-

உலகமயச் சூழலில் கற்றல் கற்பித்தலும் கணினியில்,எணினியில் உருவாகும் கலைச் சொல்லாக்கச் சவால்களும்:
ஆய்வுச் சுருக்கம்:
ஒவ்வொரு காலத்திலும் கற்றல், கற்பித்தலும் மனித இன வளர்ச்சியின் நிலைப்பாடுகள். இந்த ஆய்வுக் கட்டுரை கணினி தமிழ் எழுத்துருக்கள் எவ்வாறு அடிப்படை எழுத்து, ஒலி உருபன்களாக மாறி, சொற்களில் நிலைப் பெற்றது என்பதை அறிய உதவும். மேலும் இணையத் தள சேவை இன்றைய ஏன் தேவை என்பது குறித்த பதிவாகும்.
சொல் ஆக்கம் மரபு வழியில் இலக்கை அக்கணமே மொழி மூலம் புரிந்து கொள்ள எழுத்து வடிவில் பயன்படுத்தும் கற்றல் முறையில் நெறி படுத்துவதாகும். பல இரு எழுத்துக்களைக் கொண்ட தமிழ் சொற்கள் எவ்வாறு விரிவடைந்து அந்தந்நத கால சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுகிறது என அறிவோம். மக்களுக்கு அதன் ரசனையை மேலும் விரிவாக்கம் செய்வதே மரபு ஆகும்.
மரபு என்ற சொல் உருவாக்கம்,
ம-மக்களின்
ர-ரசனையை
பு-புரிதலே ஆகும்.
முதலில் ஒலி உருவம் பெற்று அதனை புரிந்து கொண்டு, பின் வரி வடிவமாகி, நிலைப் பெற்று, சொல்ஆக்கம் பெற்றது நாம் அறிந்த நிதர்சன உண்மை.
காலந்தோறும் எழுத்துருக்கள் எவ்வாறு புரிந்து கொண்டு ஒரு சில வேர் சொற்களில் இருந்து உருவாகிறது என்று பார்ப்போம்.

முன்னுரை:

புதிய கருத்துக்கள், சொற்களில் பயன்படுத்த வேண்டிய சொற்களை பிற மொழிகளிலும் இருந்து மொழி பெயர்த்தும், புதிய சொற்களின் உருவாக்கமே சொல்லாக்கம் எனப்படும்.
சொல் ஆக்க முயற்சிகள், புதிய சொற்கள் உருவாக்குதல், துறை சார்ந்த சொற்கள் உருவாக்குதல் மொழி பெயர்ப்பு சொற்கள் என வகை படுத்த பட்டு உள்ளது.
சொல் மரபு வழியில் பயன்படுத்தி, மக்களின் ரசனையை புரிய வைப்பதே மரபு வழி சொல் ஆக்கம் எனப்படும்.
முதல் எழுத்தும், சார்பு எழுத்தும் சேர்ந்து எழுத்தின் வகை இலக்கணம் உருவாகிறது.(*1)
இந்த கட்டுரையில் கணினி, எணினி என்ற சொல் ஆக்க முறைமைகள் எப்படி அடித்தளமாக அமைந்து இருக்கிறது.
ஒரு பொருள் செயல், இயல்பு, நோக்கம், அமைப்பு, சிறப்பு, பயன்பாடு, குறியீடு, சுருக்கம் என்று சொல் முறைமைகளை அறியலாம்.
இந்த ஆய்வுக் கட்டுரை உலகமயச் சூழலில் கணினி இனி -எணினி இனி கற்றல், கற்பித்தல் அதன் மூலம் உருவாகும் கலை சொல்லாக்கத்தை அடிப்படையாக கொண்டு உள்ளது.
கணிதம் கண நேரத்தில் முடிவு எடுக்கும் மனித மூளையின் செயல் ஊக்கி.
தமிழ் மொழியில் கணிதம் என்ற சொல் கண நேரத்தில் முடிவு எடுக்கும் ஒரு சக்தி வாய்ந்த கருவி.
கண நேரத்தில் இதமாக, மனித இனத்திற்கு இதமாக பயன்பட்டதால் கணிதம் என்ற சொல்லாக்கம் தமிழ் மொழியில் உருவாகி இருக்கிறது.
மேலும் கண்ணில் மூலம் மூளை நரம்புக்குள் செலுத்தி கண நேரத்தில் இதமாக கணிக்கப்படுவதால் கணிதம் என்று அழைக்கிறோம்.
தமிழ் சொற்களின் சொல்லாக்கம் அந்தந்த எழுத்துக்களின் அமைப்பில் உருவாக்கப்படுவது தமிழ் மொழிக்கும் உரிய தனிச் சிறப்பு.
தமிழ் மொழியின் எழுத்துக்களின் ஆராய்ச்சி தமிழ் மொழி சொல் உருவாக்கத்திற்கு மிகவும் பயன்படும்.

கணினி சொல் உருவாக்கம்:
கணிதம் என்ற சொல் உருவாக்கத்தை காண்போம்.
கண் என்ற சொல்லில் இருந்து கணி, என்ற சொல் ‘ கண் ‘ உடன் (இ)தம் ஆக கணிதம் என்று ஆவதை நாம் அறிகிறோம்.
விரிவாக்கம்: கண்+(இ)>கணி; இதம்>(இ)தம்=கணிதம்
கண்+(இ)= கணி என்று ஆகிறது.
இதம் என்ற சொல்லில் ‘ இ ‘ என்ற எழுத்து மறைந்து ‘ தம் ‘ என்ற சொல் உருவாக்கம் ஆகிறது.
கண்(இ)=கணி + (இ)தம் = கணிதம்

கணினி சொல் உருவாக்கம்
கண் இனி, என்ற இரு சொற்கள் இணைந்து
‘கணனி ‘ என்ற சொல்லாக்கம் எப்படி அமைகிறது என்று காண்போம்.
கண, இன் என்ற சொல்
இணைந்து கண+(இ) என்ற கணி என்று ஆனது.

‘ இன் ‘ என்ற சொல்,(வேற்றுமை உருபு, தொல்காப்பியம், எழுத்து அதிகாரம்-114)
இ என்ற எழுத்து கண என்ற சொல்லில் புணர்ந்ததால், கணி என்று ஆகிறது.
‘ இன் ‘ என்ற சொல்,இனி என்று ஒலித்து ‘ இ ‘ என்ற சொல் மறைந்து,
‘ கணினி’ என சொல்லாக்கம் பயன் உருவில் தமிழில் பயன்படுத்தப்படுகிறது

எணினி என்ற சொல் உருவாக்கத்தை காண்போம்.

எண்ணம் அற்று இருந்தவை, எண்ணத்தில் (எண்ண+(அ)த்தில்) நிலைப்பெற்று ‘ மனித எண்ணங்கள் ‘ஆக நிலை பெற்று உள்ளது என்று அறிவோம்.
மனித எண்ணத்தில் எண்ண+(அ)த்தில் தோன்றிய எண்களில் உருவாகி எணினி என்று நிலைப் பெற்று இருக்கிறது.
மனித எண்ணம் வரிசை படுத்தும் அமைப்பில், இலக்கத்தில் நிலைபெறும் நோக்கில் எண்ணி அளக்கக்கூடிய சொல் ஆக்கமாக உருவெடுத்த சொல்
‘ எணினி ‘ ஆகும்.
எண்ணி அளக்கக்கூடிய மின் இலக்கமாக எணினி என்ற சொல் தற்கால ஆங்கில எழுத்து ‘ Digital ‘என்ற சொற்களில் இலக்க எண்களாக பயன்படுத்தப்பட்டு, பல்வேறு நேரடி தொடர்புக்கு பயன்பட்டு வருகிறது.

எண்ணங்களில் வயப்பட்டு, ‘ எண்ணிம ‘ ஆக,, எணினி ஆக, ‘ எண்மிய ‘ அங்கத்தில் பெரிதும் பயன்பட்டு வருகிறது, எணினி என்ற சொல்.

எண் என்ற சொல் எண்மருவி, ‘ எணி ‘என்று ஆகி, இனி என்ற சொல்லில் ‘ இ’ என்ற உயிர் எழுத்தில் மறைந்து, (இ)னி ‘ எணினி ‘என்ற சொல் ஆக நிலைப்பெற்று இருக்கிறது.

கணினி விரிவாக்க கலைச் சொற்கள்.

கணிப்பான், கணிப்பொறி என்ற இந்த சிறு இயந்திரம்
கணக்குகளை கச்சிதமாக கணக்கிடும் பொறி ஆகும்.

கற்றலில் கணினி தற்பொழுது பெருவாரியாக பங்களிக்கிறது. கற்பித்தலுக்கு தேவையான கணினி சொற்றொடர்கள் பிற மொழி, குறிப்பாக, ஆங்கில மொழியில் பயன்பாட்டில் இருந்த போதும், தமிழ் மொழி சொல் ஆக்கமும் இன்றியமையாத ஒன்றாகிறது.

கணினி என்பது முறைப்படியான தரவுகளை கோர்வையாக செயல்படுத்தும் ஓர் கருவி ஆகும்.

கணினியில், பெருமுகக் கணினி, குறுமுக கணினி, நுண்கணினி, சொந்த கணினி, மீத்திறன் கணினி, மேசைக் கணினி, கையேட்டுக் கணினி, மடிக்கணினி,
வரைபட்டிகை கணினி, உள்ளங்கை கணினி என பயன்பாட்டிற்கு தக்கவாறு அமைந்து உள்ளது.

மென்பொருள்:

மென் பொருள் என்பது கணிப் பொறி நிரல்கள் மற்றும் கணிப் பொறிகளால் படிக்கவும், எழுதப்பட முடிகின்ற தரவுகளால் சேர்க்கப்படும் ஓர் சொல் ஆகும்.

மென்பொருள் இலக்க முறையில் நிரலாக்கப்பட்ட மொழிகளால், உரை ஆக்க மொழிகளால் பரந்த அளவிலான தயாரிப்புகளை உள்ளடக்கியது.

மென்பொருள், சாதன இயக்கிகள், இயங்கு தளம், சேவை இணைப்பு தளம், பயனீடுகள், பொறி செயல்முறையை உள்ளடக்கியதாக இருக்கும்.

கருவியம்:

கரு, என்ற சொல்லில் இருந்து உருவகம் பெற்று, கருவியாகி, இயல்பு இயலில், கருவியம் என்ற சொல்லாக நிலை பெற்று உள்ளது.
கணினியின் பயன்பாடு மென்பொருளில் கருவி மூலம் இயல்பாக இயங்குவது கருவியம் ஆகும்.
வன் பொருள் என்று அழைப்பதை விட கருவியம் என்று அழைப்பதே மிகவும் சிறப்பு.
கணினியின் உருவகத்தில் கருவியம் என்ற சொல்லே மிகவும் சிறந்தது.
இயல்பு இயலில், தமிழ் பல்கலைக் கழக அகராதியிலும் கருவியம் என்ற சொல்லே இடம் பெற்று உள்ளது.
இயற்பியலிலும் கருவியம் என்பதை ஏற்றுப் பயன்படுத்துகின்றனர்.

கருவியம் தொடர்பான சில சொற்களும் அதன் தொடர்பான தொடர்பு கருவி அமைப்புகளை பார்ப்போம்.
கருவிய வடிவமைப்பு, கருவிய நுட்பவியல்,கருவிய மீட்டமைப்பு,
கருவிய முரண்பாடு, கருவிய வல்லுநர்,கருவிய வளங்கள்,
கருவிய விசை,கருவிய விவரிப்பு, விளம்பி(மொழி),கருவியக்கடை
கருவியக்கல்வி,கருவியக்குவிப்பு, கருவியச் சார்வு கருவியச்சான்றிதழ்,
கருவியச்சிறப்பறிவாளர், கருவியப் பட்டயம், கருவியப் பாய்வுக் கட்டுப்பாடு
கருவியப் பொறியாளர், கருவியப்பொறிஞர், கருவியப்படிப்பித்தல்
கருவியப்பாடமுறைமை, புதிய கருவியைத்தை இணை,வரைகலை உள்ளீட்டுக் கருவியம், வரைகலை வெளியீட்டுக் கருவியம்

என கருவியம் என்ற தமிழ் சொல் ஆக்கத்தை பயன்படுத்துவோம்.

செயல் திரல்கள் மூலம் பல மென் பொருள்களை குறியீடுகள் மூலம் பயன் அளிக்கப்படுகிறது.

தமிழ் மொழி இயல்பாக எண்ணற்ற மென் பொருள்களை உருவாக்கி வருகின்றனர்.
உதாரணமாக தரவுகளைக் சேகரித்து அத்தரவுகளின் மூலம் மொழிப் பெயர்ப்பு செய்யவும், இலக்கணத்தை உட்புகுத்தி எழுத்து, சொல், பொருள், வாக்கியம் போன்றவை கண்டறிவதற்கும் கணினித் தமிழ் ஆய்வுகள் ஆராய்ந்து வருகின்றனர்.
தொன்மைக் கால ஆவணங்களைக் கணினியின் துணைக்கொண்டு முயற்சி செய்து வருகின்றனர். தமிழ் மொழி ஆய்வு வளர்ச்சியில் சொல்லுருபு பிழைத்திருத்தி,
வாக்கிய அமைப்பு பிழைத்திருத்தி, இலக்கணப்பிழைத்திருத்தி போன்ற மென்பொருள்கள் வெளிவந்துள்ளன.
மக்கள் பேசும் மொழிக்கும் கணினித் தெரிந்து கொள்ளும் மொழிக்கும் வேறுபாடு உண்டு.
கணினிக்கு தெரிந்த மொழி பூஜ்யம்(0), ஒன்று (1)
இந்த இரண்டைத் தவிர வேறொன்றும் அதற்கு தெரியாது.

எந்த ஒரு மொழியில் எழுத்துக்கள் குறைந்துள்ளதோ அம்மொழி கணினியில்
முதன்மை இடமாக வகிக்கின்றது.
தமிழ் எழுத்துக்களை எடுத்துக் கொண்டோமானால் 71 எழுத்துகள் மட்டுமே கணினிக்கு தேவைப்படுகிறது.
ஆங்கில எழுத்துகளைவிட குறைவானதாக நம் தமிழ் மொழி இருக்கிறது.
ஆனாலும் நம் தமிழர்கள் ஆங்கிலத்தையே பின்பற்றி தமிழை ஆய்ந்து வருகின்றனர்.
அதனால்தான் தொழில் நுட்ப வளர்ச்சியில் நாம் பின்தங்கியே கிடக்கிறோம்.
கணினி பயன்பாட்டிற்கு தமிழ் எழுத்தான உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18, ஆய்த எழுத்து 1 எண்கள் 10 எழுத்துகள் குறியீடு 30 ஆக மொத்தம் 71 எழுத்துகள் மட்டுமே கணினிக்கு நிரல்நிரை செய்வதற்குத் தேவைப்படுகிறது.

இணையம்:

இணையம் என்பதற்கு வித்திட்டவர் ஜதன் பாஸ்டல் என்னும் அமெரிக்கர் ஆவார்.
உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க இணையம் பயன்படுகிறது.
ஒரே நேரத்தில் பல இணைப்புகளை தொடர்புபடுத்தி
இணையாக, இயல்பாக பார்க்க தொகுக்கப்படுவதால் இணையம் என்ற சொல் அமைந்து உள்ளது.
உலகெங்கும் வலையமாக அமைவதால் உலகில் அகண்ட வலையக் கற்றைகளில் மூலம் காணலாம்.
இலக்கியம், அறிவியல், புவியியல், கணிதம், திரைப்படம் என எண்ணற்ற துறைகள் பற்றி இணையத்தின் வாயிலாகச் செய்திகள் அறிய முடிகிறது.
கடந்த இருபதாண்டுக் கணினிப் பயன்பாட்டில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது.
இந்த உலகம் முழுமையான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிம்பெர்னர் லீ என்னும் இயற்பியல் வல்லுநர் 1989ஆம் ஆண்டு இணையத்தளத்திற்கு உலகளாவிய வலைப்பின்னல் எனப் பெயரிட்டார். இதனை வையக விரிவு வலை எனவும் அழைக்கலாம்.
இவ்வையக வலைப்பின்னல் பல செய்திகளை அழியாமல் பாதுகாக்க உதவுகிறது.

இணையத்தளத்தின் வரலாறு

கணினியுடன் இணைத்தள இணைப்பு படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. 1960ஆம் ஆண்டில் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குச் செய்தியை மாற்ற
மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர்.

இது மிகுந்த காலச்செலவை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்திற்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க தூய வெளி வலை (ஈதர் நெட்) அட்டை என்னும் சிறு பலகைப் பொருத்திப் பயன்படுத்தினர்.

இந்த இணைப்பு குறும்பரப்பு வலைப்பின்னல் எனப்பட்டது.
இந்த வலைப்பின்னல் வழியாக உலகம் முழுவதும் உள்ள கணினிகளை ஓரளவுதான் இணைக்க முடிந்தது.
முழுமையான இணைப்பைப் பெறச் செயற்கைக் கோள் வழியாகப் பயன்படுத்திப்
புவியைச் சுற்றி நாடுகளின் மீது வலம்வரும் விண்வெளிக்கலன்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த உலகம் முழுமையானவலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.

தமிழ் வளர்ச்சியில் இணையத்தின் பயன்கள்

தமிழ் மொழி வளர்ச்சியில் கணினியைப் பயன்படுத்திக் கற்க வழி வகை செய்யப்ட்டு உள்ளது.
வீட்டில் இருந்தபடியே பலமொழிப்பாடங்கள் கற்றுக் கொள்ள இயலும்.
தொலை தூரக் கல்வியை இணையத்தின் உதவியால் கணினி வழியாகப் பலரும் கற்று வருகின்றனர்.
இணையத்தின் வாயிலாக ஒருவருக்கு ஏற்படும் ஐயங்கள், சிக்கல்கள், தேவைகள், வழிகாட்டுதல்கள் பெறவியலும். மொழியின் அடிப்படைத்திறன்களானக் கேட்டல், பேசுதல், எழுதுதல், படித்தல் எனத் தொடங்கி உயர்நிலைத் திறன்களானக் கதை, கட்டுரை, செய்யுள், பாடல், கடிதம் சுருக்கி வரைதல் விரித்தெழுதுதல், குறிப்பெடுத்தல், அகராதித் தேடல் என அனைத்தையும் இணையம் வாயிலாகக் கற்க இயலும். உலகெங்கும் வாழும் தமிழர்க்கும் தமிழ் அறிய விழைவோர்க்கும் இவ்வாய்ப்பினைத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் வழங்குகிறது. தமிழ் என்னும் இணையத்தளம் தமிழ் எழுத்துகளை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத் தருகிறது.

உலகளாவிய இணைய வலையின் ஒரு சிறு பகுதி

ஜே.சி.ஆர். லிக்லைடர் இணையத் தந்தையாக அறியப்படுகிறார். இணையம் என்பதன் தமிழ்ச்சொல்லாகும் இணையம் எனப்படுவது பல கணினிகளை ஒரு மையக் கணினியுடன் இணைத்துச் செயற்படுத்துவதாகும்.

தமிழும் இணையமும்

தமிழும் இணையமும்:
பல உள்ளடக்கங்களைக் இணையச் செயல்பாடுகளைக் கொண்டு உள்ளது.
இணையம் ஒர்அறிமுகம், இணையத்தின் வரலாறு, கணினியில் இணையத்தில் தமிழ்
தமிழ் இணையம்,மாநாடு, கருத்தரங்கம், இணையத்தின் தமிழின் பயன்பாடு
இணையத்தின் தமிழ்க்கல்வி, தமிழ் மின் இதழ்கள், இணைத்தில் தமிழ் மின் நூலகம்
இணையம் கணினி வழி ஆய்வுகள், இணையம் அகராதி, இணையத் தமிழ் இதழ்களின் முகவரி உலகில் நடைபெற்றத் தமிழ் இணையம் தொடர்பான நடைபெற்ற மாநாடுகள் கருத்தரங்குகள் குறித்த தகவல்கள் தரப்பட்டு உள்ளன.

ஏன் தமிழ் இணையம் தேவை?

‘தகவல் அறிவது அறிவின் வளர்ச்சி’.

‘உலகம் இணையத்தால் இணைக்கப்படுகிறது.’

ஆங்காங்கு ஆங்கில மொழி அறிவு அணித்திரட்டாக ஒருங்கிணைந்து உள்ளது.

தமிழ் தரவு இணைப்பு தாராளமாக இணைக்க,தரணி எங்கும் தமிழ் மொழிச் சொற்கள்
சரளமாக பரவ தமிழ் மொழி இணையத்திலும் நமது பங்கை தரமாக,
வழங்குவோமே.

செய்திதாள்கள் இணைய வெளியீடு,கற்றல் கல்விநிலைய இணையத்தில்,
வியாபாரத்தில்,விசாலாமாக வணிகப் பெருக்கம்,அலைப் பேசியும் அனைவரின் கையிலும்,நூலகமும் கையடக்கத்தில்,பொழுது போக்கும் போகும் இடமெல்லாம்
பரவி வருகிறது.

கடலுக்கு அடியில் இருந்த கண்டம் கண்ணெதிரே,நாற்சுவர் நாகரிகமும்
நாண்மாடக்கூடல் நகரத்தில்,நாகரிகத்தில் கீழே தள்ளப்பட்ட கால வரிசை,
கீழடியில் காண்கையில் மேலும் தமிழ் மொழி உலக மொழிகளுக்குள் தரமான
மொழியாகிறது.
தமிழ் இலக்கிய மொழி இலக்கியங்களில்,தன்னிகரற்ற மொழியாகிறது.
‘உலக வரைப்படத்தில்,தென்னக பாரதமும் தெளிவுள்ள மனித தடத்தை பதிந்திருக்கிறது’ என மனித இன வரலாற்று இணையும் கோடுகள்காணொலியில் கண்ணார காண்கிறோம்.
கணினியும், இணையமும் இயற்கை பகுப்பு மொழி ஆய்வில் ஆட்களின் தேவையும் அறிகின்றோம்.
கறையான் அரித்த ஏட்டுச் சுவடுகளும்,காகிதத்தில் ஏறாமல் கணினி,எணினியில் வலம்
வர முயற்சிப்போமே!
‘தமிழோடு தொடர்பு கொள்ள பல்வேறு இணையத்தளங்கள் தொழில் நுட்ப அறிவுச் செறிவைநோக்கி சாதிக்க முடியும் ‘என தமிழ் தரவுச் சொற்கள் பல வலையத்திலும் இணைகின்றன.

மதுரையிலே மதுரைத்திட்டம், இலக்கியத் தொகுப்பை மின் பதிப்பாகிறது.
தஞ்சையிலே ஒலைச்சுவடிகள் பல,இணையத்தின் தொழில் நுட்ப வரவுக்காக
காத்திருக்கிறது.
தமிழ் இணையக் கல்விக்கழகம், இணையநூல்களும் இணைந்து
செயல்பட இணைவுக்கு காத்து உள்ளது. www.tamilvu.org.
இலக்கியச் சொற்கள் பல தமிழ்சொற்குவைக் கூட்டஇணைய இணைவிற்கு
இணைந்து இருக்கிறது.
தேடு பொறியில் திருக்குறளில் ஏதாவதுஒரு சொல் கொடுத்தால் அந்த சொல் எந்தெந்த இடங்களில் வரும் என அறியும் இணையதளம் காண்போம்,
இணையதளங்களில்.சொற்கள் குவியல்,குவியலாக சொற்குவை
இணையத்தளத்தில் அறிவோம்.
www.sorkuvai.com எணினி நூலகத் தளத்தில்
சிறுகதைகள், நாவல்களைப் படிக்க முடியும்.
பழைய இலக்கிய நூல்களை இத்தளத்தில் படிக்க முடியும்.தமிழ் மரபுகளை அறியஓரு இணையத்தளம்ஓலைச்சுவடிகளைமின்வடிவில் தர முயற்சி நடைபெறுகிறது.
பல இணைய இதழ்களும் தமிழ் மொழியிலும் காணலாம்.
வலைத் தமிழ் இணையம்,பி.பி.சி தமிழ் இணைய இதழ் கவிதைகளை வழங்குகின்றது.
செய்திகளை மட்டும் வழங்கும் தமிழ் இணையத்தளங்களும் உள்ளன.
தமிழ்.காம், எம்.எஸ்.என். தமிழ்.காம் முதலானவை இதில் அடங்கும்.
தமிழ் இணையப்பரப்பில் வலைப் பூக்கள் பிளாக்கர்களும் மிகச் சிறந்த இடத்தைப் பெறுகிறது.

தமிழ் இலக்கியப் பாடல்களும் இன்னிசையோடு தரும் இணையத்தளங்களும் உள்ளன.
தமிழ், ஆங்கிலப் பேச்சு மாறி ஒலித்து அந்தந்த மொழிக்கு ஏற்ப மாற்றி அமைக்க உதவுகிறது.
தருவோம் தரமான படைப்புகளை,தமிழ் மொழியிலும் இணையத்தில் இணைவோம்.

முடிவுரை:
தமிழ் இரு எழுத்துக்களில் இரு அடிப்படை சொற்களை உருவாக்கி, அந்த எழுத்துக்களில் கணினி, எணினி, இணையம் போன்ற தற்கால தொழில்நுட்ப செயலாக்கத்திற்கேற்ப பல சொற்களை இந்த கட்டுரையில் பதிந்து உள்ளது.

உசாத்துணை :

1. தமிழ் இணைய கல்வி கழகம்

2. தமிழ் பல்கலை கழகம், தஞ்சாவூர்,

3. உலக தமிழ் இணைய கருத்தரங்க மாநாடு

4. பல தற்கால, அக்கால இணைய பதிவேடுகள்.

5. சொற்குவை இணையம்.

Featured

2020 செயல் மன்றப் பதிவு

2020-செயல் மன்றப் பதிவு

01-01-2020

1. காலம்
********

காலமே இந்த உலகம்.

‘ ஒரு பதம் ‘ எனும்
பிரபஞ்சத்தில்
‘ 2020 ‘ என்ற
கால கட்டத்தில்
நுழைகிறோம்.

‘ 2020
புதிய ஆண்டு மகிழ்வுடன்
வாழ்த்துக்களுடன் பகிர்கிறேன்,’

‘ 20ல் 20 ‘ என்ற இந்த இனிய கால பதிவில்.

காலம்,
நம்மை கால,
காலமாக கடத்துகிறது.

எண்ணத்தைக் கொண்ட
எண்ணிக்கையை
எண்ணில் வடிவு எடுத்து,
காலம்,
நேரம் என
கணித்து,
நம் ஒவ்வொருவரின்
காலத்தையும் கடத்துகிறோம்.

நம் கால நடைமுறைகள்
நம்மை வழி நடத்துகின்றன.

ஒவ்வொரு காலத்தில்
நடக்கும் செயல்கள்,
நம் எண்ணத்தில்
தோன்றியவை,
செயல்களாக,
பொருட்களாக
பரிமாண அளவை அடைகின்றன.

பொருட்களாக
பரிமாணம் பெற்றவை,
நிலைக்கின்ற பொருட்கள்
நிலைப்பெற்று,
பயன்பாட்டு அளவிற்கு
நம் செயல்பாட்டில்
நிலை பெறுகின்றன.

காலமென கணித்தவை,
கணக்கில் எடுத்துக்கொண்டு
கால, காலமாக
பயன்படும் அளவிற்கு,
எண்ணத்தில் தோன்றியவைகளை,
அந்தந்த வட்டார பழக்க,
குறிகளில், வடிவத்தில்,
எழுத்துருவில்,
மொழிகளில்
பதியப் பட்டு,
பொதுவாக
அனைவரும் அறியும்
வண்ணம்,
‘ கால கணிப்பு ‘
பொதுவாக
‘ உலக மனிதர்களின்
கணிப்பில் ‘
ஆண்டுகளில்
நிலைப் பெறுகின்றன.

காலம் பற்றிய கணிப்பு,
காலத்திற்கேற்ப
நம் அறிவின் ஆற்றலால்
நிலைப்படுகிறது.

ஒருமை படுத்துவதற்கு,
ஒரு பத சூழலில்
ஒருங்கே அறிய
ஒற்றுமையாக அனைவரும்
ஒரே கால சூழலை
ஒன்றென பகுத்துள்ள
நாம் ‘ 20ல் 20 ‘ இன்று நுழைகிறோம்.

20ம் வயது, கடந்த அனைவரும்,
20 வயதில் இருக்கும் அன்பர்களுக்கும்,
20வது வயது வர இருக்கும் இளையவர்களுக்கும்
‘ 2020ம் ‘ ஆண்டு ஒரு சிறப்பு ஆண்டு என்போம்.

சிந்தனையை சீர்படுத்தி,
ஏற்றமிகு செயல்களால்
எழில் தரும் பணியை
2020 ஆண்டினை,
நம் லட்சியத்தினை
பகுத்து,
உணர்ந்து,
நாம் வகுக்கும்
ஒவ்வொரு
கால கட்டத்தினையும்,
களிப்புடன் கணித்து,
காலத்தே செயல்படுவோம்.

கலாம் கணித்த காலம் 2020.
—————————

கலாம் கணித்த காலம் 2020.
கலாம் கனவு அடைய வேண்டிய
‘ கனா காணுங்கள் ‘
என அவர் வாழ்நாளில்
கணித்த கால
ஆண்டு எண் : ‘ 2020 ‘ .

விண்ணில் பறப்போம் !
விண்ணகத்தை நோக்கி
பறப்போம் என கணித்தார்.

எண் ‘ 2020 ‘ என்று
எண் அகத்தில் பதித்ததை
எண்ணத்தில் நிறைவேற்றிட
எண்ணில்லா கனவுகளை
நம்
ஒவ்வொருவர் உள்ளத்திலும்
விதைத்தார்.

விதைத்த விதைகள்
கனிவாக
கணினியில்,
எணினியில்,
எண்ணிக்கையில்
ஏற்றம் பெற்று,
விரைவாக செய்திகளை
அனைவரும் பகிர்கிறோம்.

ஆற்றல்மிகு,
கையடக்க
செல்லினிலே
சாமர்த்தியமாக,
சாதனைகள்
பல புரிய
காத்திருக்கும் யுக மனிதர்களே!

கண்ணியமாய்,
நம் உடலில் உள்ள
செல்களினில் நம் அகத்தை,
தரணியில்,
தரமான பணியினில்,
நம்பிக்கை சிறகோடு
நானிலம் போற்ற
நாவினிலே நல் சொற்கள்
நாளும் நவில
நற் செயல்களை நலமுடனே
பழகுவோம், பயில்வோம்,
பழகுகின்ற சொற்களில்
பாங்காக செயலமைத்து,
பயின்றது அனைத்தையும் பரப்பிடுவோம்.

காலம் காலாமாக
மாறும், மாற்றம் அடைகின்ற
காலக் கணக்கிலே கணிக்கின்ற
நம் செயல்கள்,
அடைந்த மாற்றத்தை
அசை போட்டு பாட,
கலாம் கனவு
கண்டதையும்
ஒருவாறு
அடைந்துவிட்டோம்
எனிலும்,
எண்ணிக்கையில்
குறைந்தோர் பலரே
உளமாற உணர்ந்ததால்
உவகையுடன் உரைக்கின்றனர்.

உண்மை தனை
பகிர்ந்தால்,
ஊரில் உள்ளோர் பலருக்கு
எட்டாக் கனியாகவே,
கணினியின், எணினியின் செயல்கள்
எப்படி
நமக்கு
சாத்தியப்படுத்திக் கொள்வோம்
எனவே உணர்கின்றனர்.

அறிவியல் செயல்கள் பல
அறிவினால் இயக்கப்படுவதால்
ஆங்காங்கே இயந்திரங்கள்
அங்குலம், அங்குலமாக
மனித செயல்களை
மாண்புறவே செய்கின்றன.

மனித இனம்
மகத்துவமாக
செய்த பல
செயல்கள்
பலவற்றை
பலமான ஆற்றலினால்
இயந்திரங்கள்
பல
ஒரு சில காலங்களில்
இது தான் உங்கள்
எல்லை,
உங்கள் செயல்களில்,
நீங்களே எங்களுக்கு
கட்டளைகளை தொகுத்தீர்.

கட்டளைகளை, கனிவுடன்
ஆற்றலாக மாற்றினோம்.

பல கோடி மக்கள் பரிதவித்து
இருக்கையிலே,
பலரையும்
பலம் அடையச் செய்ய இந்த
கால கட்டத்தில்
‘ 20ல் 20 ‘ நேரத்தை கணிப்போம்.

பதிவர்,
செயல்மன்றம்.

2020 செயல் மன்றப் பதிவு:

02-01-2020

நேரம் :
——

‘ காலம் ‘
வகுத்ததை ‘ நேரம் ‘
நிலைத்து காட்டும்.

நேரம்,
வரலாற்று
அடிப்படையில்
மனித இனத்தால்
நிர்ணயிக்கப்பட்டவை.

அண்டத்தின் நிலைத்த
தொடரான பரிமாண கூறு.

நேரம்,
அறிவுசார் அமைப்பிலும்,
நிகழ்வுகளாக,
இயக்கமான
கால அளவு இயலாகும்.

நேரம்,
நேர்த்தியுடன்
ரகவாரியாக பிரித்து
நம் செயலை
மேன்மையடையச் செய்வதற்கு
உரியதே ஆகும்.

ஆம் நண்பர்களே!
‘ நேரமே,’
எனும் சொல்லை
“கரந்து உறையில் நிலை
பெறச் செய்வோம்.”

நே-நேர்மையுடன்
ர-ரக வாரியாக பிரித்து
மே-மேன்மை

அடையச் செய்வதே ஆகும்.

நேர்த்தியுடன்,
நேரத்தை பிரித்து
நற் செயல்களுக்காக
செயல்படும்
எக்காலமும்
மேம்பாடு அடைவதற்கே
வகுக்கப்படும்.

நேரத்தை
நேர்த்தியுடன்
பயன்படுத்தினால்,
மகிழ்வுடன் வாழலாம்.

அதிகாலை எழுவதால்,
அதிக நேரம்
தமது விருப்பம்
சார்ந்த
செயல்களுக்கு
ஈடுபடுத்த முடியும்.

நேர சேமிப்பு,
சேமிப்பில் முக்கிய பங்கு
வகிக்கும்.

காலமும்,
நேரமும்
பகுத்துக் கொண்டவர்களுக்கு
எந்த ஒரு செயலுக்கும்
உகந்ததாக அமையும்.

‘ முடியும் ‘ எனும்
பாங்கு உடையோர்,
செயல்களை
முடித்துக் காட்டுவார்கள்.

நேரத்தை முறையாக
பயன்படுத்துபவர்களுக்கு
வாய்ப்புகள் என்றும் நிலைக்கும்.

நேரத்தை, தமிழில்
நாழிகையில் பிரித்தனர்.

நேரம்,
பூமி தன் அச்சில்
சூழல்வதை
அடிப்படையாக கொண்டு
அளக்கப் பட்டவை ஆகும்.

நம் நாட்டின் பழைய
கால அளவையை
அறிவோம்.

சூரியன் உதிக்கும் நேரம்
ஓவ்வொரு இடத்திற்கும்
மாறுபடுவதால்,
குழி, என்றும்,
கண் இமைக்கும் நேரம்,
கைந்நொடி,
மாத்திரை,
குரு,
உயிர்நாடி,
சணிகம்,
தற்பரை,
விநாடி
என பகுத்து
60 விநாடியை -1 நாழிகை
என பிரித்தார்கள்.

60 நொடிகள் 1 நிமிடம் என
ஏற்கனவே
நம் அனைவருக்கும்
தெரிந்த ஒன்றே.

நேரத்தை, பொழுதாக
பிரித்தார்கள்.

பொழுது:

காலை- 6-10( 1 -4 ஓரை)
நண்பகல்- 10-12(5-8 ஓரை)
ஏற்பாடு – 2-6(9-12 ஓரை)
மாலை – 6-10(13-16 ஓரை)
இடையாமம்-10-2(17-20 ஓரை)
வைகறை-2-6(21-24 ஓரை)

நேரம்,
சூரியனின் இயக்கத்தை
மையமாக வைத்து,
நேரம்,
நாட்கள்,
வாரங்கள்,
மாதங்கள்
என முற்காலத்தில்
கணிக்கப்பட்டன.

நேரம் ஒரு மிகப் பெரிய
மர்மம் நிறைந்தது.

ஒன்றுமே செய்யாமல்
இருந்தாலும்
நேரம் கடந்து விடும்.

நாம் நேரத்தை வகுத்து
வாழ்வில்
நிலை பெறுகிறோம்.

இந்து சமய நம்பிக்கையில்,
‘ சிவா ‘ வின் நடனம்
ஒரே பதமாகிய
பிரபஞ்ச இயக்கம்
என கணக்கிடப் படுகிறது.

ஒவ்வொருவருக்கும்
நேரத்தே கடந்து
உள்ளே
சென்று,
இறைமையை/
இயற்கை முறைமையை
தொடர்ந்து
கடைபிடிப்பதன் மூலம்
அவரவர்கள்
வெளிச் செயல்களுக்கும்
பயன்படுத்துவது
ஒவ்வொருவரின்
பழக்க வழக்கமாகிறது.

காலம், நேரம்
ஆகியவற்றின் வழி,
பால்வெளி மண்டலத்தின்,
படுகையில்
சுற்று வட்ட பாதையில்
நிர்ணியிக்கப்படுகிறது.

நம் காலம்,
நேரம்,
நாம் கருவாக
உருவாகிய பின்
தோன்றும்
பல்லாயிரக் கணக்கான
செல்கள்,
பல்லாயிரக் கணக்கான
மரங்களின் விதைகளில்
இருந்து
ஆங்காங்கே
மரங்களாக
உருவாவது போல,

நம் உடலில் உள்ள
பல்லாயிரகணக்கான செல்கள்
பெருக்கம்
அடைந்து
ஒவ்வொரு
உறுப்புகளாக
விரிவடைந்து,
நிலை பெறுகிறது.

நமது கால, நேர வளர்ச்சியை
நாம் பிறந்து வளரும்,
செல்களின்
உருவாக்கத்தில் உள்ள
உடலின் பாகங்களின்
சூழ்நிலைக்கு ஏற்ப
நல்நிலை படுத்தி,
நம் உடல் உறுப்புகளின்
செல் நிலைக்கு ஏற்ப,
நாம் பிறந்து,
வளர்ந்து,
இறக்கும்
வரை உள்ள
கால, நேர
எல்லைகள்
அவரவர்களுக்கு
நிலைக்கப்படுகின்றன.

நேர்த்தியாக,
நேரம் கடைபிடிக்க
உதவும்
நம்
செல்களை
நம்மால் முடியும் வரை,
‘ முடியும் ‘
என்ற நம்பிக்கையோடு
செயல் படுவோம்.

நேரம், காலம்
நம் செல்களில்
ஏற்படும்
நல்ல ‘ காற்று ‘
பதிவினை
அறிவோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

2020 செயல் மன்றப் பதிவு

03-01-2020

காற்று:

ஒளியில்
இருள் மறையும்
ஓங்கார
ஒலி பெருகும்.

ஓசையின்
வடிவினிலே
காற்று வரும்
எனும்
காலம் ஒன்றை
அறிந்திட்டோமோ!

கேள்வி தனை
தொடுத்திட்டதனால்
கற்க
முனைந்து
காற்றினை
உணர தலைப்பட்டோம்.

‘ க ‘
எனும்
மெய்யுறு
எழுத்துருவில்,
‘ஆறு ‘தலுடனே
‘ ஆற்று ‘
எனும்
சொல்லில்
கலந்து
“( க+ஆ=கா+ஆற்று)=
” காற்று ” என்ற சொல்
ஆகி
வளி மண்டலத்தில்
உலவிட
உயிர் பெற்று
உள்ளோம்.

வெளிதனில்
வளி மண்டலத்தில்
உலவிடும்
” காற்று ”
நம் உயிர்
அக
காற்றாகிய
” உயிரக காற்று “.
என்பது
என அறிவோம்.

அணுவினிலும்
அணுவாய்,
அணுக்கள்
ஒன்றுக்கு
ஒன்று
இணைப்பில்
நிலை பெறாமல்
அலைந்து
திரியும் பொருளின்
கண்டும் காணாத
புற வடிவ
நிலைக் கொண்டதனில்
வளிம நிலையில்
உள்ள ‘ கலவை ‘
ஒன்றின் பெயர்
உமது என
அறிந்தோம்.

கலவையில்
இருப்பதை
கற்க
முற்பட்டதில்
உள்ள
வளிம நிலையில்
78 சதவிதமாக உள்ள
” நைதரசன் ” என்ற
பொதுவான தனிமம்
என்றும்,
இரண்டு நைதரச அணுக்கள்
புணர்ந்து,
நமது சூரிய மண்டலத்தில்
7வது
அணு எண்
” காற்று ” என
அறிந்தோம்.

ரூதர்போர்டு,
1772 ” நைதரசனை ”
கண்டுபிடித்த
வளிமத்தில்
இருப்பதை அறிந்தார்.

நில
உலகில்
ஆக்ஸிசன்
என்ற தனிம
” உயிரக காற்று, ” (O-2)
அணு எண் 8ல் உள்ளது.

வளி மண்டலத்தில்
நைதரசனுக்கு
அடுத்த படியாக
” உயிரக காற்று ‘
21 சதவிதமாகவும்,
மீதி உள்ள 1 சதவிதம்
ரசயான
கலவையுடன் கலந்து
மற்ற காற்று என்றும்,

உயிரக காற்று,

நீர் மண்டலத்தில்
86 விழுக்காடு,
மனித உடலில்
உள்ள
ஒவ்வொரு செல்களின்
அமைப்பிலும்
3ல் 2 பங்கும்,

நீரில் பத்தில் 9 என்று
அறிந்தோம்.

அனைத்து
உயிரணு ஆற்றல்
பரிமாற்றங்களில்
இந்த
” உயிரக காற்று ”
பயன்படுத்தப்படுகிறது.

உயிரணுக்கள்
செல்லினுள்
உயிர்ப்பு பெற்று
ஆற்றலை பெருக்குகிறது.

நம்
உயிரணுக்கள்
உயிர் பெற
” உயிரக காற்று ”
பல்லாயிர கணக்கான
செல்களில்
உயிர்ப்பு நிலையை
தோற்றுவிப்பது
உயிரக காற்று
செயல் நிலை
என்று அறிவோம்.

உயிரக காற்று
நம்மில் புகுந்து
நுரையீரல்
செல்
அணுக்களில்
உள்ள
சிகப்பு இரத்த செல்
அணுக்களில் புகுந்து
நமது
உடம்பு அணு
செல்களில்
பயன் பெறும்
என்பதனையும்,

நுரையீரல் இருந்து,
கரியமிலவளி
வெளிவளியில்
செல்வது
என்பதனையும் அறிந்தோம்.

இன்று சூரிய ஒளி
எங்கும்
பரவிட,
வளி மண்டலக் காற்று
நான்கு திக்கில் சைகையாக வரும்
காற்றின் பெயரை அறிவோம்.

தெற்கில் இருந்து வருவது ” தென்றல் ”
கிழக்கில் இருந்து வருவது ” கொண்டல் ”
மேற்கில் இருந்து வருவது ” மேலை ”
வடக்கில் இருந்து வருவது ” வாடை ”

காற்றின் ஆற்றல்
நம்மை பெயர்த்து
வைப்பதால்
காற்றின் ஆற்றலை
பெயரிலும்
அறிவோம்.

6 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று
” மென்காற்று “.

6-11 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று
” இளந்தென்றல் “.

12-19 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று
” தென்றல் “.

20-29 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று
” புழுதிக்காற்று “.

30-39 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று
“ஆடிக்காற்று “.

100கி.மீ வேகத்தில
வீசும் காற்று
” கடுங்காற்று “.

101 -120 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று
” புயற்காற்று “.

120 கி.மீ மேல்
வேகமாக
வீசும் காற்று
” சூறாவளிக் காற்று “.

என்பது என்றும் அறிவோம்.

காற்றின் வேகம்
மிதமென
இருந்தால்,
தினமும் உயிர்கள்
பல நிலைக்கும்
அன்றோ!

காலம்,
நேரம்,
காற்று
என்று அறிந்த
ஒரு சிலவற்றோடு
” ஆற்றல் ” என்பதனையும்
தொடர்ந்து அறிவோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

04-01-2020

2020 செயல் மன்றப் பதிவு

ஆற்றல்:

ஆற்றலின் அமைதி
அகிலத்தின் செயல்பாடு.

ஆற்றல்,
மாற்றத்தில் மட்டுமே
செயல்படும்.

அண்டத்தின் செயல்கள்
ஆற்றலில் வெளிப்படும்.

அகிலத்தின் அச்சு
ஆற்றலின் நிலைச் சுற்று.

அனைத்தின்
ஆதாரத்தோன்றல்,
பெருக்கம்,
சுருக்கம்
விரிவாக்கம்,
இயங்கும்,
இயங்காத
பொருட்களின்
நிலைப் பாட்டு சக்தி.

சூரியினின் உள்ள
அணுக்கரு இணைவின்
செயல்,

வெப்ப ஆற்றலாக
இந்த சூரிய கதிரியக்கத்தின்
ஆற்றலில்,

ஒரு சில துணுக்களின்
ஆற்றல் புவியின்
வெளி அடுக்குக்கு
வெப்ப ஆற்றலாக
தெளிக்கப்படுகிறது.

வெப்ப ஆற்றலின்
செயல்பாடு
புவி இயக்கத்தின்
செயல்பாடுகளை
நிலைக்கச் செய்கிறது.

உணவில் இருந்து
கிடைக்கும் ஆற்றலால்
மனித இனம்
உயிர் வாழ்வது போல,
மற்ற உயிர்
இனங்களுக்கும் கிடைக்கிறது.

சூரியனின் கதிர்
இயக்க ஆற்றல்,
புவியின்
கதிர் இயக்க ஆற்றலை
நிலைக்கச் செய்கிறது.

இயங்கும் திறமையே
ஆற்றல் எனப்படும்.

ஆற்றலின்
மாற்றச் செயல்பாடுகளே
பொருட்களின் நிலைப்பாடு.

அகிலம்
ஆற்றலில் அடங்கும்.

” ஆ ” என்ற சொல்லில் உயிர் எழுத்தில் எழுந்து
” ஆறு ” என்ற சொல்லில் நிலைப்பட்டு
” ஆற்று ” என்ற சொல்லாகி
” ஆற்ற + (அ)ல் ” = ” ஆற்றல் ”

என்ற
சொல்லில் உருவாக்கம்
அடைகிறது.

ஆற்றல் வகை
பல செயல்படுகின்ற போதிலும்
நிலைக்க வேண்டிய ஆற்றலை மட்டும்
இப்பதிவில் பதிவாகிறது.

புவிவெப்பச் சக்தி

புவிவெப்ப ஆற்றல்
என்பது புவியில்
சேமிக்கப்பட்டுள்ள
வெப்பத்தில்
இருந்து
பெறப்படும்
ஆற்றல் ஆகும்.

கோள் உருவாகும் போதும்,
தாதுக்களின்
கதிரியக்கச் சிதைவில்
இருந்தும்,
புறப்பரப்பில்
இருந்து உறிஞ்சப்படும்
சூரிய ஆற்றலில் இருந்தும்
இந்த
புவிவெப்பச் சக்தி
தோன்றுகிறது.

சூரிய ஆற்றல்

சூரிய ஓளி மற்றும்
வெப்பத்திலிருந்து
நேரடியாக பெறப்படும்
ஆற்றல் சூரிய ஆற்றல்
எனப்படுகிறது.

சூரிய ஆற்றல்
நேரடியாக
மட்டுமின்றி
மறைமுகமாகவும்
மற்ற மீள
உருவாக்கக்கூடிய
ஆற்றல்களான,
காற்றாற்றல்,
நீர்மின்னியல்,
மற்றும் உயிரியல் தொகுதி
ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு
பெருமளவில்
துணை புரிகிறது.

பூமியில் விழும்
சூரிய ஆற்றலில்
மிகவும் சிறிய
பகுதியே
ஆக்கப்பூர்வமாக
பயன்படுத்தப்படுகிறது.

சூரிய ஆற்றலில்
இருந்து மின்சாரம்
இரண்டு
வகைகளில்
தயாரிக்கப்படுகிறது.

சூரிய ஓளியில், வெப்பத்தில்
இருந்து
மின்சாரம் தயாரிப்பு

அலை ஆற்றல்

அலை ஆற்றல்,
நீர்ப்பெருக்கு ஆற்றல்
சிலநேரங்களில்
நீர்ப்பெருக்குத் திறன்
என்பது
நீராற்றல் வகைகளில்
கடல் நீர் வரத்தில் ஏற்படும்
ஏற்ற இறக்கங்களை
பயன்படுத்தி மின்னாற்றல்
அல்லது வேறு
ஆற்றல்வகையாக
மாற்றிக் கிடைத்திடும்
ஆற்றலாகும்.

ஆற்றல் என்பது,
மகிழ்வு, ஆனந்த இயக்கம்.

ஆற்றலிலைக் கொண்ட
அண்டத்தை அறிவோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

05-01-2020

2020 செயல் மன்றப் பதிவு

அண்டம்:
———

ஒவ்வொரு
எழுத்தும்,
எழுத்துருவும்
அந்தந்த வட்டார
சைகைகளில்,
வரி வடிவத்தில்
பழக்கமாக
நிலைப் பெற்ற

“உம், அம் ” என்ற
நாம் ஒலிக்கும் ஒலி

ஓர் எழுத்து,
இரு எழுத்துக்களாக
உணர்ந்து,

உணரும் தன்மை
நிலைமைப் பெற்று,

சொற்களின்
வடிவம்,
அந்தந்த
மொழிகளில்
எழுத்து உருவத்தை
குறிக்கின்றன.

‘ ஒருமை ‘
ஒன்றில்
உருப் பெற்று
மைய பொருளாகி
அந்த (அ)ம்,
” அண்டம் ”
என்ற அந்த

” ஒருமை இல ”

” ஓரு ‘ – ஒரு
” மை ” -மையப் புள்ளியில்
நிலைப் பெற்று,

” இல” –

இ-இன்மையின்
ல-லட்சியமாக

ஆற்றலின் திசை
பெற்று,
ஒவ்வோரு
அணுவிலும்,
அண்ட,
அண்ட
அந்த
“அ”ம்,
“உ”ம்”
அண்டமாகிறது.

ஆம்,
ஓம், எனும்
ஓங்காரத்தில்
உருவெடுத்து,
அந்த ஆதி

ஆ-ஆற்றலின்
தி-திசையாகி,

அந்த
அம்
” அண்டம் ”
என்று
ஒரு நிலைப் பொருள்
பல ஆற்றல் பொருளாக
நிலை பெற்று உள்ளது
என்று அறிவோம்.

” அண்டம் ” என்பது
” அணு ”
பக்கத்தில்
உள்ளவற்றில்
அண்ட, அண்ட
குறிக்கின்ற
அணுக்கள் ஒன்றி
இணைந்து
” அண்டம் ”
ஆகிறது.

பூமி,
நிலவு,
வானம்,
சூரியன்,
சூரியனைச் சுற்றி வரும்
கோள்கள்,
விண்மீன்கள்,
விண்மீன்களுக்கு
இடையுள்ள
விண் துகள்கள்,
அவற்றின் இயக்கம்,
இவை எல்லாம் சூழ்ந்துள்ள
வையகமாகி,

வெட்ட வெளியில்
நிலைப் பொருளாகி
இயங்குகிறது.

கண்ணுக்குத் தெரியாத
தொலைவில் உள்ள
விண்மீன்களுக்கும்
அப்பால்
உள்ள
விண்மீன் குழுக்கள்
ஆகிய அனைத்தும்

” அண்டம் ” என்ற
சொல்லில் அடங்கும்.

இத்துடன்
காலம் என்ற
கருத்தும் அது
தொடர்பான முறைமைகளும்
இதில் அடங்கும்.

ஒரு புதிய ஆய்வு,
அண்டம் வாழ்க்கைக்கு
ஏற்ற நிலையைப்பெற
தேவையான
அளவு வேகமாக
விரிவடைந்து
வருவதை
உறுதிசெய்கிறது.

தொலை தூரத்தில்
இருந்து
வரும்
ஒளிக்கதிர்கள்
கதிர் வீச்சுகள்
இவற்றை
வைத்துக் கொண்டு
நம்மால்
அறிந்து கொள்ள முடிந்த
அண்டத்தின் பகுதியை
அறியப்பட்ட அண்டம்
என்று சொல்லப்படுகின்றது.

இந்த அறியப்பட்ட அண்டம்
ஒரு கோள வடிவில்
இருப்பது இயல்பு.

இக் கோளத்தின்
விட்டம் 92 பில்லியன்
ஒளி ஆண்டுகள்
அல்லது
அதற்கு மேலும்
இருக்கலாம்
எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஓர் ஒளி
ஆண்டு என்பது,
ஒளி,
ஓர்
ஆண்டில்
போகின்ற
தூரத்தைக் குறிக்கும்.

ஒளி ஒரு நொடியில்
299,792,458 மீட்டர்
தூரம் போகின்றது;

ஓர் ஆண்டில்,
9,460,730,472,580,800
மீட்டர் போகும்.

எனவே, ஒரு ஒளி ஆண்டு என்பது 9,460,730,472,580,800 மீட்டர் ஆகும்.

92 பில்லியன்
ஒளி ஆண்டுகள்
என்பது ஏறத்தாழ
8.80 ×1026 மீட்டர்
என்றாகும்.

ஏன் ஒரு பதம் என்கிறோம் ?
————————–

” யுனிவெர்ஸ் ” என்ற
ஆங்கிலச் சொல்லானது
பழைய ஃப்ரெஞ்சு
சொல்லான
யுனிவெர்ஸ்
என்பதிலிருந்து
வருகிறது,

மேலும்
இந்த ஃப்ரெஞ்சு
சொல்லானது
இலத்தீன் சொல்லான
” யுனிவெர்ஸம் ”
என்ற
சொல்லிலிருந்து
உருவாகியுள்ளது.

இலத்தீன் சொல்லான,
” யுனிவெர்ஸம் ”

சைசுரோ
மற்றும்
பல ஆசிரியர்களால்
தற்கால
ஆங்கிலச் சொல்லோடு
பயன்படுத்தப்படுகிறது.

அதே பொருளில்
பல முறை
பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த
இலத்தீன் சொல்லானது,
‘ செய்யுள் ‘
சேர்ப்பான
” யுன்வோர்ஸம் ”
என்பதிலிருந்து
உருவாகியுள்ளது. —

‘ யுனிவர்ஸம் ‘ என்ற
இச்சொல்
லுக்ரிடியஸ்
என்பவரின்
” பொருட்களின் இயல்பு பற்றி ”
என்ற புத்தகத்தின் தொகுதி
IV வரி 262 இல்
பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது
யுன்,
யூனி,
யூனுஸ்
அல்லது
” ஒன் ”

ஆகிய
சொற்களின்
சேர்ப்பு வடிவம்,
வோர்ஸம், வெர்ஸம்
“சுழலும், உருளும், மாறும் ஒன்று ”
எனப் பொருள்படும்

லுக்ரீஷஸ் என்பவர்,
இந்தச் சொல்லை

“ஒன்றாகச் சுழலும்
அனைத்தும்,
ஒன்றாகச் சேர்ந்த
அனைத்தும்”

என்ற பொருளில்
பயன்படுத்தினார்.

யுன்வோர்ஸம்
என்ற சொல்லுக்கு
மாற்றுப் பொருள் புரிதல்,
“ஒன்றாக சுழலும் அனைத்தும்”
அல்லது
“ஒன்றால் சுழற்றப்படும்
அனைத்தும்” என்பதாகும்.

இவ்வாறு ஓன்றாக
சுழற்றப்படும்
அனைத்தும்,

தமிழ் சொல்லிலும்

ஒரு சொல்லாகி
” ஒரு பதம் ” என்று
நிலைப் படுகிறது.

06-01-2020

செயல் மன்றப் பதிவு

அறி :

அறி,
அறிய வேண்டியதை
அறிந்து கொள்வோம்.

அறிந்து கொள்வதை
அறிவித்து செயல்படுவோம்.

அறிந்து
செயல்படுவதை
அறிவின்,
இயல்பில் உணர்வோம்.

அறிந்து உணர்வதால்
அறியாமை அகலும்.

அறிகுறிகளில் நல்லதை
அறிக்கைகளில் வெளியிடுவோம்.

அறிந்து கொள்ளுதல்
பருவ வளர்ச்சியில் நிலைப்படும்.

நமது
நரம்பு செல்
தூண்டல்கள்,
தோல்,
புலன் உணர்ச்சி செல்
இயக்கச் செல்லுடன்
இயங்கி,
இணைப்பு செல் மூலம்
ஜவகை புலன்களில்
அறிந்து
நம் உடலில்
செயல்படுகிறது.

குறியீட்டு அறிவு,
தர்க்க முறையில்
சிந்தித்து,
காரண காரியங்களை
அறிந்து கொள்கிறது.

அறிதல் திறன்,
ஆக்கப் பூர்வ வளர்ச்சியாக
உடல் ஊக்கமாக,
புரத உணவு மேம்பட
அறிதல் உணர்வில்
மிளிர்கிறது.

மொழி வளர்ச்சி,
குடும்ப பின்னணியில்
பெரிதும்
நினைவு,
பேச்சாற்றலை வளர்க்கும்.

எண்ணங்களில்
ஏற்றம் பெற,
செயல் வடிவம்
நிறைவாக்கத்தை
பெருக்கும்.

சமூக உணர்வே
சுமூக அறிவு.

உள்ளத்தின்
அறிவு
உலக செயல்பாடுகளுக்கு
பங்கேற்கும் ஊக்கத்தில்
நிலைக்கிறது.

விளைவின் செயலை
விளையாட்டில் அறிவோம்.

தன்னை அறிந்து
தரணியை தளிர்க்கச் செய்வோம்.

பலம் பெறுதல்
புலன்களின் ஊக்கமாகும்.

கலந்து உறவாடி
மக்களின்
நற்செயல்களை பாராட்டுவோம்.

நம் உடல் பாகம்
அனைத்தும்
நம் மக்களை
பாசப் பிணைப்பில்
பகிர்ந்து உறவாடுவோம்.

அறிந்ததில்
வளர்வது
உலகில் நிலைப்படும்.

அறிவது
குறிப்பு அது,
வளர்வது
உணர்வது
‘ அறிவு ‘ என்ற
சொல்லில் நிலவுகிறது.

அறிகுறிகள்:

அனுபவம்
மூலம்
பெறப்பட்ட
உண்மைகள்,
தகவல்களில்
விளக்கியதை,
நம் திறமைகளை
அறிந்து,
கண்டு பிடிப்பத்திருப்பதை
கற்று,
அந்தந்த
கருத்தை
நடைமுறையில்
புரிந்து செயல்படுவோம்.

ஒரு அறிந்த,
நியாயமான
கருத்தை
நம்பிக்கையுடன்
செயல்படுத்துவோம்.

ஒரு குறிப்பிட்ட
சூழல்,
தருணம்,
நிலைமையைப் பற்றி
நல் அறிவு
சூழ்நிலையில் அறிவோம்

அறிய வேண்டியது
பல வகை
அறிவது நம் நிலை.

இயற்கை அறிவை
உணர்வுடன் அறிந்து
படிப் படியாக
படிப்பிலும் அறிந்து
பட்டறிவை
பகுத்து அறிந்து,
கல்வி அறிவை
நிலைப்பட தெரிந்து,
தொழில் சார்ந்த
கல்வியிலும்
முறையுடன் அறிந்து
துறைச்சார்பு
விரிவினையும்
துடிப்புடன் அறிந்து,

அனுபவ அறிவும்,
பொது அறிவும்
பல்வேறு
மனங்களிலும்
செயல்பட
செயலக அறிவை
செழிப்பாக செய்வோம்.

அறிதலை
செயலகத்தில்
நிலை பெறச் செய்வோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

07-01-2020

2020 செயல் மன்றப் பதிவு :

மொழி:

மனித இனத்தின்
ஐவகை
ஐம்புலன்களில்
உருவாகி,
முழுமை பெற்று
உடல் உறுப்புகளின்
துணையோடு,

நாக்கின்
மொக்கினிலே
மொழிந்து,
வழி,
வழியாக
மனிதர்களின்
மரபில்
உருவாக்கும்,

உருவாகிய
எழுத்துக்களில்
நிலை பெறுகிறது.

ஒவ்வொரு காலத்தில்
எழுத்துருக்கள்
நிலைப் பெற்றாலும்
எக்காலம் என அந்தந்த
மொழிகள்
பயனுற,

வலியுறுத்திய
இடங்களில்
மட்டும் தான்,

மக்களின் போராட்ட நிலைகளிலும்,
சமய ஒருமைபாட்டிலும்
நிலைத்து நிற்கிறது.

அண்டம்
தோன்றியது
13.5 பில்லியன் ஆண்டுகள்
எனவும்,

தற்கால மனித இனம்
2,50,000
ஆண்டுகளுக்கு
முன்னர் அறிவு
இயல்பாளர்கள்
எனவும் கருதுகின்றர்.

நடைமுறை பதிவில்,
1,00,000-50000 ஆண்டுகளுக்கு
முன்
மனித இனம்
மத்திய ஆசியா ஊடாக,
ஐரோப்பா,
ஆசியா,
அமெரிக்கா
ஆகிய
இடங்களில்
பரவியதாக
பதிவாகி உள்ளது.

சுமார் 40,000
ஆண்டுகளுக்கு
முன்பு
‘ பேச்சு மொழி ‘
தோன்றியிருக்கலாம்
எனக் கருதப்படுகிறது.

மொழிகள்,
ஓலியின்
கூறுகளாகவே
பல காலங்கள்
நிலைப் பெற்றன.

மொழிகள்
அந்தந்த
வட்டார மனிதர்களின்
நடைமுறை
பயன்பாட்டில்
மொழி நிலை பெற்றது.

பசியி்ல் உணவைத்தேடி,
உயிரில்
நிலைப் பெற்றது
மனித இனமும்.

கால் போன போக்கில்,
காட்டுவாசி
ஆகிய மனித
இன
உயிரணுக்களாக,
மரபில் தோன்றி
இருந்த
மனித இனம்,

கிமு 10 000
ஆண்டுகள்
அளவில்
ஆற்று ஒரப்பகுதியிலும்,
காட்டில்
விலங்குகள் வேட்டையாடியும்,

விவசாயத்திலும்
பல நிலைப்படுகின்ற
தொழிலில்களின் நிலையில் இருந்தும்,

தத்தமது பகுதிகளில்,
பல இடங்களுக்கு
மாற்றலாகியும்,

மனித இன உயிரின்
தரத்தினை
மேம்படுத்தினர்.

5000 ஆண்டுகளுக்கு
முன்னரே
பதிவால்
நிலைப்பெற்று,
பதிந்த
பொருட்களுக்கு
ஏற்ப
எழுத்துருக்கள்
நிலைப் பெற்றன.

தமிழ் மொழியில்
எழுத்துருக்கள்
நிலை பெற
சமீபத்தில்
ஆயிரக் கணக்கான
கல்வெட்டு,
தொல்லெழுத்துப் பதிவுகளில்
கிடைத்துள்ளன.

கண்டு பிடிக்கப்பட்டவைகளில்,
ஏறத்தாழ
95 விழுக்காடு
தமிழில் உள்ளன;

மற்ற மொழிகள்
அனைத்திலும்
ஐந்து விழுக்காட்டுக்கும்
குறைவானவே
கல்வெட்டுகளில் உள்ளன.

பனையோலைகளில்
எழுதப்பட்டு,
பலரும்
வாய்மொழி
மூலம்
வழி,
வழியாகப் பாதுகாக்கப்பட்டு
வந்ததால்,
மிகப் பழைய தமிழ்
மொழிஆக்கங்களின்
காலங்களைக் கணித்தே
கருத்துக்கள்
பதிவாக உள்ளது.

மொழி இயல்பின்
உட்சான்றுகள்,
மிகப் பழைய
ஆக்கங்கள்
கி. மு. 4 ஆம் நூற்றாண்டுக்கும்
கி. பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும்
இடைப்பட்ட
காலத்தில்
கணிக்கப்படுகின்றன.

தமிழில் இன்று மொழிகளில்
ஆதாரமாக
கிடைக்கக்கூடிய
மிகப் பழைய
ஆக்கம்
தொல்காப்பியம் ஆகும்.

தொன்மையான
பண்டைக்காலத் தமிழ்
மொழியின்
இலக்குகளை
அக்கணமே
எழுத்துருவில்,
சொற்களின் அடிப்படையில்,
முதலில்
பொருட்கள்(எழுத்தின் மூலமும்)
உருவாக்குவதற்கும்
தமிழிலும்
விளக்கும்
ஒரு நூலாகும்.

கதை வடிவில்
கற்பனையில்
தோன்றிய
காப்பியமாகிய
சிலப்பதிகாரமும் போன்ற
இதிகாசங்கள்,
கி. மு 200 முதல் கி.பி 200
பதிவுகளின் பிரதியில்,
பல்வேறு முறைகளில்
தொடர்ச்சியாக
பதியபட்டதை
பாதுகாக்கின்றனர்.

சமய கோட்பாடுகள்,
நிலை
பெறுவதற்கு,
மொழிகளின் மூலம்
பல நூற்றாண்டுகளாக
அந்தந்த நாட்டு மக்களின்
பழக்க வழக்கத்திற்கேற்ப
வாழும் முறைமையில்
மொழிகள் நிலைப்படுத்தப்படுகிறது.

சமயமும், கலையும்
பகுத்து உணர்வது,
நாட்டு மக்களின்
மொழி பிரவாகத்திலும்
ஒவ்வொரு கால எல்லைக்குள்
நடைமுறைமைக்கு
ஏற்ப பரவுகிறது.

பரவிடும் காற்று,
மொழிக்கும்,
வாழ்க்கைக்கும்,
மனித இனத்துக்கும்
உதவட்டும்.

பதிவர்,
செயல் மன்றம்.

08-01-2020

செயல் மன்றப் பதிவு:

இயற்கை:

இயல்பினில்
இயங்குவது
இங்கிதமான
‘ இயற்கை ‘
நிகழ்வே.

நிகழ்வதில்
நிற்கும்
நிலைப்பாடு
நித்தம் இயங்கும்
இயற்கை செயலே.

‘ அ’மைதி,
‘ஆ’ற்றலில்
‘இ’யங்கும்
‘ஈ’ர்ப்பு,

‘உ’லக மக்களில்
‘ஊ’ற்றெடுத்து
‘எ’ண்ணத்திலும்
‘ஏ’ற்றமாகி
ஒளியிலும்
ஓசையிலும்
‘ஔ’தசியத்திலும்,

‘ இயற்கை ‘
அ’ஃ’தே
வடிவில்
‘ பரிணாமக் கொள்கை ‘
ஆகிறது.

இயல்பினில்
இயங்கும் இயக்கம்
இயற்கையின்
வெளிப்பாடு.

கைம்மாறு கருதாது
படைப்பினில்
இயங்கும் இயல்புகள்
அனைத்தும்
இயற்கையின் விந்தையே
ஆகும்.

இயல்பினில்
இயங்கும்
பொருட்கள்
முற்றிலும்
இணைந்து
இயக்கமாக
செயல்படுவது
இயற்கை
தன்மையின்
முக்கியத்துவம்
ஆகும்.

மனிதமும்
இயற்கையில்
ஒரு சிறு
துளியே.

மனிதனின்
செயல்கள்
அனைத்தும்
‘ இயற்கை ‘
பரிமாணங்களின்
பரிமாற்றம்.

முழு
முதல்
பொருட்களாகிய,
கல், மண், மலை,
என புவியில்
இயங்கும் சிறப்பினால்,
பொருட்களை கொண்டு
இயங்கும்
இயற்கையின்
தன்மைகள்
அனைத்தும்
இயற்கையின் கோட்பாடுகளே.

மறையும் பொருட்கள்,
அவற்றின் இயக்கம்,
அவை இயங்கும்
இடம்,
இயங்கும் காலம்
ஆகியவை
அனைத்தையும்
இணைத்து
இயற்கை
என்கின்றோம்.

உயிரினம்,
உயிரின அறிவு
போன்றவையும்
இயற்கையில் அடங்கும்.

இயற்கை
ஆய்வினில்
அறிவியலும்
மிகப்பெரிய
ஒரு பகுதியே
ஆகும்.

இயற்கை
என்ற சொல்லுக்கு
ஆங்கிலத்தில்
” நேச்சர் ”
என்ற சொல்
பயன்படுத்தப்படுகிறது.

‘ நேட்சுரா ‘
என்ற இலத்தீன்
சொல்லின்
‘ வேர் ‘ தான்
நேச்சர் என்ற
ஆங்கில சொல்லாகும்.

பொருள்களின்
தோன்றும்
விந்தையை
பிறவி,
பிறப்பு
என பொருள்படும்.

கிரேக்க சொல்
‘ பிசிசு ‘
என்பதும்
‘ நேச்சுரா ‘
என்ற லத்தின்
மொழி பெயர்ப்பு ஆகும்.

தாவரங்கள்,
விலங்குகள்,
மற்றும் உலகிலுள்ள
பிற உயிரினங்கள்
அனைத்தும்
தங்கள் சொந்த
இணக்கத்தில்
உருவாக்கிக் கொள்ளும்
உள்ளார்ந்த பண்புகளுடன்
இணைவது
அனைத்தும்
‘ இயற்கை ‘
என்ற
சொல்லின்
பொருளே ஆகும் .

‘ இயற்கை ‘
என அழைப்பது
அண்டத்தின்
இயல்பு இயலே.

அண்டத்தின்
இயற்பியல்
என்ற சொல்
பல்வேறு வகைகளில்
விரிவான
பொருள்களைக் கொண்டது
ஆகும்.

இவையாவும்
படிப்படியாக
வளர்ந்து
நன்மதிப்பையும்
நம்பகத்தன்மையையும்
பெற்று அழியாமல்
நிலைத்து இருக்கின்றன.

கடந்த பல
நூற்றாண்டுகளில்
நவீன அறிவியல்
முறைகளிலும்
அண்டத்தின் இயற்பியல்
என்ற பொருள்களின் பயன்பாடு
அதிகரித்தவண்ணம் உள்ளது.

‘ இயற்கை ‘
என்ற சொல்லின்
பெரும்பாலும்
நிலைக்கின்ற
நிலவியல்
மற்றும்
வனவியல்
என்ற பொருள்களையும்
குறிப்பதே ஆகும்.

தாவரங்கள்,
விலங்குகள்
வாழும் பொது
உலகத்தை
‘ இயற்கை ‘
என்ற சொல்லே
பொருள்படும்.

பல்வேறு
சந்தர்ப்பங்களில்
உயிரற்ற பொருட்களுடன்
தொடர்புடைய
செயல்முறைகளுக்கும்
புவியில் தோன்றும்
மாற்று செயல்முறைகளும்
‘ இயற்கை ‘
என்ற சொல்லில்
அடங்கும்.

மனிதர்களின்
செயலில்
தோற்றுவிக்கப்படும்
இயற்கை பொருட்களுக்கு
தமது கட்டுபாட்டில்
உள்ள செயல்பாடுகளின்
முயற்சியில்
தோன்றுகின்ற
அனைத்து செயல்பாடுகளும்,
தம் அறிவின்
செயல்பாடு,
‘ செயற்கை ‘
என புரிந்து
நிலைப்படுத்த
எத்தனிப்பதே
ஆகும்.

இயற்கைச் சூழலில்
காட்டு விலங்குகள்,
பாறைகள்,
காடு என்ற பொருளைக் குறிக்கும்.

இயந்திரங்கள்
மூலம்
இயற்கை சிதைவு
மனித செயல்பாடுகளுக்கே
உண்டான
தமக்கு அந்த பொருட்களை
எந்த அளவுக்கு
பயன்படுத்தி கொள்ளலாம்
என்ற சுயநலமே.

இயற்கையை
உணர்ந்தால்
சமயக் கருத்துக்களும்
ஒன்றுபடுமே.

பதிவர்,
செயல் மன்றம்.

09-01-2020

செயல் மன்றப் பதிவு :

புவி :

புதுமையின்
வியப்பு,
புதிராக
விளங்கும்
புவியின்
சிறப்பு.

உயிரின்
விந்தையை
தமது சூழற்சியிலும்
நிலைக்கச் செய்யும்
புதிய,
புதிய படைப்பை
தன்னகத்தே
தோற்றுவிக்கும்.

உயிரற்ற பொருட்களும்
உழன்று சுழலும்.

சுழலும்
ரிங்கார
யதார்த்தத்தில்
இயங்கும்
சூரிய
மண்டலத்தில்,
புவியும்
தமது சுழற்சி
பாதையை
நிர்ணயித்து
சுழல்கிறது.

சராசரியாக
கணக்கிட்டோம் எனில்,
4.1 – 3.8 பில்லியன் ஆண்டிற்கு இடையை
பலத்த தாக்குதலின் போது
விண்கற்களின் தாக்கம்
புவியின் சுற்றும் சூழலையும்
குறிப்பிடத்தக்க மாற்றத்தை
ஏற்படுத்தி இருக்கிறது.

கால வரிசையில்
புவியின் தோற்றம்
பதிவில்
நிலைப்பட்டு இருப்பது
4.5 பில்லியன் ஆண்டிற்கு
தோராயமாக
கணிக்கப்படுகிறது.

இயற்கையின்
சேர்மானத்தில்,
10-20 மில்லியன்
வருடத்திற்கு
முன் புவியின்
பெரும்பான்மை பகுதி
‘ பரிதி ‘ எனப்படும்
பகலிரவு தோற்றுவிக்கும்,

‘ ஆதி ‘ என்றழைக்கும்
ஆற்றலின்
திசையாகிய
கதிரவனில்
இருந்து
உருவாகி,
மிஞ்சிய வாயு,
தூசுப் பொருள்களில்
புவியும்
மற்ற கோள்களும்
தோன்றுகிறது.

வளி(காற்று)
மண்டலத்தில்
நீர் சேர,
சேர
உருகிய நிலை
புவி மேற்பரப்பு
இறுக தொடங்கியது.

புதுப்புது விரிப்பு
புவியின் நிலைப்பு.

புவியில்
மோதிய
வால்
வெள்ளிகள்
மற்றும்
சிறுகோள்கள்
மூலமாக
மேகங்கள்
உருவாகி
பெருங்கடல்கள்
உருவாகின.

அதன்
பின்னரே
உயிர்கள்
வாழ தகுந்த சூழல்
உருவானது.

அடுத்து ” உயிரக காற்றும் ”
அதிகரிக்கத் தொடங்கியது.

வெறும்
நுண்ணுயிர்கள்
மற்றும்
மிகச்சிறிய உயிர்கள் மட்டும்
ஒரு பில்லியன்
ஆண்டுகள் வரை புவியில் இருந்துள்ளன.

580 மில்லியன்
ஆண்டுகளுக்கு
முன்
பலசெல்
உயிரினங்கள் தோன்றி
முக்கிய
பெருந்தொகுதிகள் பரிணமித்தது.

6 மில்லியன்
ஆண்டுகளுக்கு
முன்தான்
மனித இனத்தின்
நெருங்கிய
சிம்பன்சிகள் தோன்றின.

அதில் இருந்து
மனித
உறுப்புகளாக
பிரிந்து,
தற்கால
நவீன மனிதர்கள்
உருவானார்கள்.

தோன்றிய காலம்
தொட்டே
நமது புது புது உயிர்கள்,
உயிரியல்
வடிவில்,
நிலத்தில்
பல மாற்றங்கள்
நடந்தவண்ணமே உள்ளது.

உயிரினங்கள் படி
வளர்ச்சிக் கொள்கைப்படி
புதிது
புதிதாக
உருவாகிக்கொண்டே
மாற்றத்தை நிகழ்த்துகின்றன.

புவியின்
தற்போதைய
கண்டங்கள்
மற்றும்
பெருங்கடல்களின்
வடிவத்திற்கு
முக்கிய காரணம்
தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு ஆகும்.

கமழிப் படலத் தோற்றமும்,
உயிரக வாயுப் பெருக்கமும்,
மண் உருவாக்கமும்
செய்து
உயிரற்ற நிலையையும்,
காற்றுவெளியின்
கணிசமான
மாற்றத்தையும்
கொண்டுவந்தது
உயிர்க்கோளம்
ஆகும்.

காலத்தில் நிலைப் பெற்று,
ஒலியின் ஓசையிலே,
காற்றின் உயிரகத்தில்,
உயிரிலும்,
அன்பினிலும்
தொடர்செயல்.

10-01-2020

செயல் மன்றப் பதிவு :

உயிர் :

அன்பில் உள்ள அணு
ஆய்ந்து
இன்புற்று
ஈர்க்கப் பட்டு
உய்ய, உயர, உயிராகி
ஊறுகின்ற நிலையில்
எட்டி
ஏற்புடையவைகளில்
ஒன்றி
ஓராயிர நுண்ணியத்தில்
ஒளதாரியமாக மனிதமாக நிலைக்கப் பட்டு
அஃதே உயிராகிறது.

ஆம் நண்பர்களே!

அன் என்ற அன்பில்
அரும்பி, அரும்பி
அணுகி,
அணுக்களிலும்
அன்பு பெருகி,
அண்ட அண்ட
அணைத்து, பிரிந்து
அணைவாக
அருவாகி, உருவாகி
அன்பான அணுக்களாகி ‘ உயிர் ‘ நிலைக்கிறது.

ஆயிராமாயிரம் உன்னத உயிர்கள்
ஆராவார இல்லாமலும்,
ஆராவாரத்துடன்
ஆண்டுக்கு ஆண்டு,
ஆர்ப்பரித்து

இன்மையில்
இல்லாத பல

ஈர்ப்புடன்
ஈர்க்கப் பட்டு,

உன்னத
உயிராக
உயிரக காற்றிலும் நிலைத்து
உலகினில் தோன்றும் பல,

உயிர்த்து பன் மடங்காகி,

ஊர்ந்து உவப்பினில்
பெருகி,
மெய்யினில்
கலந்து
கடந்து,

நீவீர்,
நீரிலும் கலந்து
உறவாடி,
நீர்க்கப்பட்டு
நீடித்து இருக்கும்

உயிரே,
உய்ய, உய்ய
உவப்பினில் பெருகி
மகிழ்ந்து,

மண்ணிலும் நிலை பிரியா
உன்னத உயிரே,
உண்மையில்
ஊருக்கு அணியாகு,
உயிரற்றவைகளில்
இருந்து,
உயிராகு,
உயிராகிக் கொண்டே இரு.

ஓய்வு எடுக்கும் வரை
உயிராகு உயிரே.

உயிர் பற்றி,
பற்றி
வரையறை ஏதும் இன்றி,

உயிர்
இயல்பில் இயங்கும்
நடப்பு வரையறைகளே,

அனைத்து உயிரும்
விரிவாகும்
விவரிப்புகளே.

உயிர் அனைத்தும் பண்புகளில்

தன்நிலைப்பட்டு
மாறாத நிலையில்
அகச் சூழலில்
பேணி
ஒழுங்குமுறை ஆகிறது.

வெப்பநிலையைக் கட்டுபடுத்த
வியர்த்தலைக் கூறுவோம்.

உயிரின் ஒருங்கு அமைவு
அடிப்படை அலகுகளாகி,
உயிர்க்கலன்களின் ஒன்றி
மேலும் அலகுகள் இணைந்து
ஒரே கட்டமைப்பாக
ஒருங்கே அமைகிறது.

இயங்கி,
வளர்ந்து
சிதைகளில்
மாற்றம் பெற்று
வேதி இயல் மையங்களில்
ஆற்றலாக உருமாற்றி,
ஆற்றலை
உயிரக உறுப்புகளாக மாற்றுகிறது.

வளரும்
மாற்றம்

கரிமப் பொருள்களில்
இணைந்து,
சிதைத்து இயல்பில்
சிதைமாற்றம் அடைந்து
உயிரியல் செயலாக
நிலைக்கப் படுகிறது.

அக ஒருங்கு
அமைந்துப் பேணி
தன்நிலைப்பாட்டைக் காத்தும்
உயிர்,
சார்ந்த
பிற உயிர் சார்ந்த
நிகழ்வுகளையும்
பேணி,
உயிரிகளுக்கு
ஆற்றல் தேவைப்பட்டு,
உயிரிகள் வளர்கிறது.

வளர்கின்ற
மாற்றம்
சிதைகின்ற
மாற்றத்தை விட
ஓங்கியிருப்பதால்
வளர்ச்சியைத் தருகிறது.

வளரும் உயிரி,
தேவையான
பொருண்மத்தோடு திரட்டி,
அதன்
அனைத்துப் பகுதிகளிலும்
தன் உருவ
அளவைக் கூட்டுகிறது.

நமது உயிரக
இயக்கத்திற்கு
தேவை
மூச்சு,
ஆன்மா,
உயிரினம்,
வாழ்க்கை,
ஆர்வம்

என்று உயிர் அறிவோம்.

11-01-2020

செயல் மன்றப் பதிவு

நீர் :

நீர்,
நீராக
நீர் ஆவியாகி
நீராலும் நிலைக்கப்பட்ட

பூமி,
பூவில் மணம் கமழும்
பூத்து இருக்கும் செடி, கொடி, காய் பழங்கள்
பூமியில் மிஞ்சும் உயிரினமும் உயிரற்றவையும்

புதுப்புது
புதுமை மலர
புவியில் வியப்பூட்டும்
புதுப்புது ஆண்டுகள் நீரிலும் நிலைக்கிறது.

வேதிய பொருள்களாலே
வேற்றுமையை
தரமாக்கும்
ஓர் கனிமம்
நீரும் நிரம்பிய புவி இது.

ஓர் நீர் மூலக்கூற்றில்
ஓர் உயிரக காற்றுடன்
இரண்டு ஐதரச அணுக்களுடனே
இரண்டும் ஒன்றாகி,
நம் உயிரைக் காக்கிறது.

திட்ட வெப்ப அழுத்தத்திலே
ஒரு நீர்மமாக இருப்பினும்
திட நிலையில் பனிக்கட்டியாகவும்,
வாயு நிலையில்
நீராவியும் காணும்
நீராகிறது.

நீர், மழை வடிவில்
மனங்குளிர
பூமியில் வீழ்படிவமாகவும்,
மூடும் பனியாகிறது.

நீர்ம நிலைக்கும்,
திடநிலைக்கும்
இடை நிலையில்
நீர்த்துளிகள்
மேகங்களாக மாறுகிறது.

இறுதி நிலையிலே
பிரிந்து
படிகநிலைப் பனிக்கட்டி,
வெண்பனியாக
வீழ்ந்து படிவாகிறதே.

நீராகும்
செயலாக
தொடர்ந்து
நீராவிபோக்கு,
ஆவி ஒடுக்கம்,
வீழ்படிவு
போன்ற செயல்களுடன்
நீர்ச்சுழற்சிக்கு
இயங்கிக்கொண்டே
கடலைச் சென்றடைகிறதே.

நீரால்
71 சதவிதம்
பூவியில் சூழப்படுகிறது.

புவியில்
பெரும்பகுதி
சமுத்திரங்கள்,
பரந்த
நீர்நிலைகளிலும்,
கிட்டதட்ட
1.6% பகுதி
நிலத்தடி
நீர்கொள்
படுகைகளிலும் காணப்படுகிறது.

வளி மண்டல
நீரிலும் சற்று
ஏறக்குறைய
0.001
பகுதி சதவிதம்
வாயு வடிவிலும்,
காற்றில் மிதக்கும்
திட,
திரவ துகள்களால்
உருவாகும்
மேகங்களிலும்,
காற்றின் நீராவி குளிர்ந்து
சுருங்குவதால் ஏற்படும்
நீர்க்கோர்வைகளிலும்
காணப்படுகிறது.

நில மேலோட்ட
நீரின் 97
சதவிதமாக
பகுதி
உவர் நீர்ச் சமுத்திரங்களிலும்,
2.4% பனி ஆறுகள்
மற்றும் துருவ
பனிக்கவிகைகளிலும்,
௦0.6%பகுதி ஏனைய
நில மேலோட்ட
நீர் நிலைகளான
ஆறுகள், ஏரிகள், குளம் குட்டைகளிலும் காணப்படுகிறது.

புவியில்
நீரில் ஒரு சிறிய அளவு
உயிர்களின்
உடல்களிலும்,
உற்பத்தி செய்யப்படும்
பொருட்களிலும் காணப்படுகிறது.

மற்ற
நீர் துருவ பகுதியிலும்,
பனிக்கவிகைகளிலும்,
பனி ஆறுகளிலும்,
நீர் கொள் படுகைகளிலும்,
ஏரிகளிலும்
சிறிது அளவு இருக்கலாம்
என நம்ப படுகிறது.

புவியின்
உயிரினங்களுக்கான
நல்ல நீர் தான்
நமக்கு
ஆதாரம்.

நீரில் பெருமளவு
விண்மீன்கள்
உருவாதலின்
துணைப் பொருளோகுமோ
என
வியப்பு மேலும் பெருகுகிறது.

விண்மீன்களின்
தோற்றம்,
வலிமையான
வெளிநோக்கு
வளிக்காற்று
மற்றும்
புழுதிப் புயலால்
சூழப்பட்ட
வெளியேற்றம்
நாளடைவில் சூழ்ந்துள்ள
வாயுக்களைத் தாக்குவதில்
உருவாகி
அதிர்வலைகள்
வாயுக்களை அழுத்தி,

வெப்பம் ஏறச் செய்யும் சமயம்
தென்படுகிற
நீரானது
வெப்பச் செறிவின்
தன்மை உடைய
வாயுக்களால்
அதிவேகமாக
உற்பத்தி செய்யப்பட்டது
என்போம்.

பால்வெளி
எனும்
நமது விண்மீன்
மண்டலத்தினுள்
காணப்படும்
நட்சத்திரங்களுக்கு
இடையேயான
மேகங்களில்
தண்ணீர்
கண்டறியப்பட்டுள்ளது.

நீரின் கூறுகளான
ஐதரசன் மற்றும்
உயிரக காற்று ஆகியவை
பிரபஞ்சமாகிய
ஒரு பதத்தில்
மிகுதியாகக் காணப்படும்
என்ற நம்பிக்கை பிறக்கிறது.

தனிமங்கள் மற்ற
ஏனைய
விண்மீன் மண்டலங்களிலும்
தண்ணீர் மலிந்திருக்கும்
என நம்பிக்கை கொள்ளலாம்.

நட்சத்திரங்களுக்கு இடையேயான
மேகங்கள் நாளடைவில்
சூரிய ஒளிமுகிலாகவும்,
சூரிய மண்டலமாகவும்
சுருங்குகின்றன.

வளி மண்டலத்தில் உள்ள நீர்
புதன் கிரகத்தில் 3.4 சதவிதமாக
வெள்ளி கிரகத்தில் 0.002 சதவிதமாக
செவ்வாய் கிரகத்தில் 0.03 சதவிதமாக
வியாழன் கிரகத்தில் 0.0004 சதவிதமாக
சனி-சந்திரன் நீர் வெளிக்கோள்களில்
நிறைய
நீரின் அளவு இருக்கலாம்
என பதிவுகளில்
புலப்படுத்துகிறார்கள்.

புவி தள ஓட்டத்தில்
நீர்
சிறிதளவு
காலங்காலமாக
சேர்த்துக் கொள்கிறது.

ஏரிகளின் நீரில்,
குளிர் காலங்களில்
உயரமான இடங்களிலும்
மற்றும் பூமியின்
வட மற்றும்
தென் கோடியின்,
துருவ முகடுகள்,
பனிப்பாதைகள்
மற்றும்
பனியாறுகளில்
பனி மண்டுகிறது.

நீரானது நிலத்தினுள்
ஊடுருவி நிலத்தடி
நீர்கொள்
படுகைகளுக்குள் செல்லக் கூடியது.

இந்நிலத்தடி
நீர்,
பின்னர்
நீர் ஊற்றுக்கள்,
வெந்நீர் ஊற்றுக்கள்
மற்றும்
உஷ்ண ஊற்றுக்கள்
வாயிலாக மீண்டும்
கிளர்ந்தெழுந்து,
மேற்பரப்பிற்கு வரலாம்.

நிலத்தடி
நீரை
கிணறுகள்
மூலம் செயற்கையாகவும்
இறைத்துக் கொள்ளலாம்.

மனிதர்களுக்கும்,
நிலத்தில் வாழும் ஏனைய
உயிர்களுக்கும் நல்ல நீர்
இன்றியமையாதது.

எனவே
இவ்விதமான
நீர் சேகரிப்பு
மிக முக்கியமான ஒன்று.

ஆனால்,
உலகத்தின் பல பகுதிகளில்
தண்ணீர்ப் பற்றாக்குறையே நிலவுகிறது.

பதிவர்,
செயல் மன்றம்.
12-01-2020

செயல் மன்றப் பதிவு :

நிலம்:

நில, என
நிலவி
‘ நில (அ)ம் ‘
என்றாகிறது.

‘ நில் ‘ என நம்மை
நிற்க வைத்து,
நிலைத்து
நின்று

‘ நிலம் ‘
என்ற
பெயரை,

ஏந்துவது, நிலம்.

நிலைக்கின்ற
பெருமையை
யதார்த்தமாக,
ரிதமாக
நலமாகவும்,
வளமாகவும்
வடிவமைக்கும்
நிலப் பகுதி
இது.

நிலமே,

நிதமும் எம்
(இ)லக்கை
மேம்படுத்தும்
உம் சிறப்பே
எங்களது பிறப்பு.

நித்தம் எங்களை
நிலைக்க
உமது பரப்பே
எங்களது இருப்பு.

நீடித்த மலை,
நின்று காக்கும் மரம்,
காத்து நிற்கும்,
காடுகளின்
துணையோடு,

நீண்ட காலமாக
வாழும் உயிர்களின்
தொடர்ச்சிக்கு
நீங்கா வளமாக,

நிரந்தரமாக
நீரில்
மூழ்கியிராத
புவியின்
திண்ம மேற்பரப்பே
உமது பரந்த விரிப்பு.

நிலத்துக்கும்,
நீருக்கும்
இடையிலான
பிரிவினை
மனிதனுடைய
அன்றாட செயல்களாகிறது.

நிலம்,
நீர்
என்பவற்றின்
எல்லை இடையில்
உள்ள ஆட்சி
அதிகாரங்கள்,
வேறு பல
காரணிகளையும்
பொறுத்தே மாறுபடுகிறது.

கடல்சார் எல்லை,
அரசியல் எல்லை,
மனிதர்கள் வகுக்கும்
எல்லையிலும் இருந்தும்,
பரந்தும் இருக்கிறாய்.

நீரும், நீலமும்
சந்திக்கும் இடம்
அலைகளின் நிலைகளில்
வரையறுப்பதற்கான பல
இயற்கையான
எல்லைகளும் அடங்கும்.

பாறை நில
எல்லை வரையறுப்பது,
சதுப்பு நில எல்லையை
விட இலகுவாக
அமைகிறது.

சதுப்பு நில
பகுதிகளில்
பல நேரங்களில்
நிலம் எங்கே முடியும்,
நீர் எங்கே தொடங்கும்
என அறிவது
கடினம்.

நீர் வற்றப்பெருக்கத்தினாலும்,
காலநிலை பொறுத்தும் கூட
எல்லைக் கோடுகள்
வேறுபடக்கூடும்.

நிலம் மனித
இனம் இருக்கும்
வரை
பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிலம்
மனித இனமும்
நீண்டு வாழ
நிலையை ஏற்படுத்தும்.

‘ நுல் ‘
எனும் இரண்டு எழுத்து
வேர்ச் சொல்லில் தொக்கி,
நில் எனும் அடியில் இருந்து
நிலம் எனும் சொல்லில் இங்கு நிலைப்பட்டது.

பிற மொழிகளில் நிலம் எனும் சொல்:

மலையாளத்தில்-நிலம்
கன்னடம், துளு – நெல
தெலுங்கு – நேல

என வட்டார மொழிகளில் நிலைப்படுகிறது.

நுல் > நெல் >
நெள் > நெரு >
நெகிழ் {நெகிள்) >
நீள் > நிள் >
நில் = நிலம்
என
பலவாறு வெவ்வேறு
மொழிகளில்
‘ நிலம் ‘ என்ற
ஆதாரச் சொல்
நிலைப்படுகிறது
என அறிவோம்.

இயற்கையின் கொடையை
மனிதனால் உருவாக்க முடியாது.

நிலம் செயலற்றவை
மனிதமுயற்சியின்
இணைப்பினாலே
ஒரு சில,
சில
சிறிய செயல்களில்
நிலம்
செயல் உள்ளதாகும்.

பதிவர்,
செயல் மன்றம்.
13-01-2020

செயல் மன்றப் பதிவு

கல்வி

‘ கல ‘
என்ற
இரு மெய் எழுத்துக்களில்
உருவான
ஒரு சொல்லில் இருந்து,
‘ அ ‘ என்ற
இரு ‘அ ‘கரத்தில்
கலந்து,

எ.கா:
க(க்+அ),
ல(ல்+அ)

‘ கல ‘
என்ற
சொல்லாகி
ஓன்றாகி
‘கல’ ந்து
நிலையாகி,

மனித இனம்
தழைத்து அறிய
செயல்பட,

பலரும்
பின்பற்றிட
இணக்கமாக,

‘ கல ‘
என்ற
சொல்லுடன்
‘வி’ ழைந்த
சொல்
‘ கலவி, ‘

ஆகி

‘ கல்வி ‘
என்று
நிலைப்பட்டது.

இந்த
சொற்களின்
பதிவினை
‘கல்’ லில்
‘வி’ ளக்கமாக
பதிந்ததாலும்
‘ கல்வி ‘
என பெயரில்
அழைக்கப்படுகிறது.

‘கல்வி
மனிதனின் கலம்,
அடைக்கும் கலம்.’

‘ கல(அ)ம் ‘
மனித இன
உயிர்,
உடலையும்
பாதுகாக்கும்
‘ கலம்(பாத்திரம்) ‘ ஆகும்.

மனித இன
‘ கலம் ‘
உயிரில் கலந்து,

வினைகள்(செயல்கள்)
பல புரிந்து,

உடலில்
பல தகுதி பெற,

கலந்து
உறவாடும்
‘ கல்வி ‘ என்றும்
முக்கியமானது
ஆகிறது.

செவ்வனே
யதார்த்தமாக
லாவகமாக
கற்கும்

‘ செயலாக ‘
அமைவதே,
கல்வியின்
அடிப்படை நோக்கம் ஆகும்.

‘ கல்வி ‘ என்ற
சொல்
‘ எது ‘
என்று கேள்வி
கேட்கும் நிலைக்கு
உயர்த்தக்ககூடியது.

கல்வி,
மனித
இனத்தை சீராக்கி
நல் நிலைப்படுத்தும்.

‘ எது சீர், ‘
‘எது சீரகாகும் ‘ எனும்
சொல்,

கிரேக்க,
லத்தீன் மொழியில்
அடிப்படையில் இருக்கிறது.

‘ எதுசீர்,
எதுக்கு இது’

என
பல கேள்வி
கேட்கும்
சொல்களால்
அடிப்படையிலே
பழங்காலத்தில்
மனித
இனத்தால்
பழக்கப்பட்ட
மொழிகளால்
பலரால்
அறியப் படும்
சொல்லாகும்.

மனித
இனத்தை,

எது உள்ளத்தையும்,
உடலையும்
சீர்படுத்துமோ,
அது கல்விக்கு உரிய
சொல்லாக
பயன்படுத்தப்படுகிறது.

‘ எது ‘ என்றும்
‘ எழு ‘ என்றும்
தமிழ்
சொல்லிலும் நிலவுகிறது.

‘எது, கேள், செயாலாக்கு’ எனும் தமிழ்
கல்விக்கு உரிய சொல்,

‘ அறிவால், செயலால் ‘

ஆங்கில மொழி
நிலைப்பட்டவுடன்

‘ எதுக்கு வேண்டும், கவனம், செயல்
என்ற ஆங்கில சொல்லாகி,

‘எதுக்கு செயல்’

என்ற சொல்லால்
நிலைக்கப்பட்டு
‘எதுகேசன் ‘ (Education)
என்று
ஆகி இருக்கிறது.

‘ எடு ‘
என்று தமிழ்
சொல்லோடு
‘ எது (edu)’
என்று ஆங்கில
சொல்லோடு இணைப்போம்.

உனது-(உ)னது
என்பதுடன்,
உமது- (உ)மது யு(you)

என்ற
ஆங்கில ஒலியை இணைப்போம்.

சீர், சீராதல்,
எனும்
தமிழ் சொல்,
‘ கேர் ‘ எனும்
ஆங்கில
சொல் வளர்ப்பது,
எழுப்புவது,
கல்வி
அளிப்பது
எனப் பொருள்படும்.

எந்த நேரத்தில்
பெறும் நல்ல
பேறுகளையும்,

நாடி வரும்
மனிதர்களுக்கு,

உதவியாக
உண்மையான
தரமாக,

விவரமாக
யாவருக்கும்
கற்பதற்காக
அமைக்கப்படும்
உதவியாகவும்,

நாட்டின்
‘ பொருள் ஆதாரம் ‘
சீர் படுத்தவும்
கல்வி
என்றும் சிறந்து விளங்கும்.

தன்னை உணர்ந்து,
பரிபூரண கட்டுபாட்டுடன்
பெறும் கல்வி
பயனுள்ளதாக
அமைவதே கல்வி.

குழந்தை
பருவத்தில் இருந்து
உடல்,
மனம்,
நல் சிந்தனையுடன்
வளர்ப்பது கல்வியின்
சிறப்பு.

அவ்வாறு
கட்டுபாட்டுடன்
வளரும் குழந்தை
தன்னை சரியான
முறையில்
மனப்பூர்வமாக
லட்சியத்தை
பொருத்திக் கொள்ள வகை
செய்வது கல்வி.

இளமையில் கற்பது
ஆற்றலை பெருக்கும்.

சிந்தனை,
சீராக வளர்க்க, வளர,
ஆளும் வளர, வளர
முதுமை நிலை வரை
கற்பது
அந்தந்த கால வளர்ச்சிக்கு
ஏற்ப அமையும்.

முதுமை நிலை,

‘ முற்றிலும் துணையான மையமாக்க ‘
உதவும்

‘ கல்வி, கற்றலில் நிலையாக்கும் ‘

ஓர் தொடர் நிகழ்ச்சி ஆகும்.

கல்வி,
கற்கிறவர்களுக்கும்,
கற்பிப்பவர்களுக்கும் சிறந்த
ஆளுமை உடையதாக்கும்.

சகல மனித
இன ஆளுமைக்கும்,
உள்ளத்தின் நல்ல உணர்வுகளை
மேம்படுத்தவும்,

சமுதாயமாக

‘சகல மனித இன
முன்னேற்றத்திற்கும்
தாரளமாக,
யதார்த்தமான சூழ்நிலை அறிந்து,
மானிடர்களும்
கற்று, கடந்து’

நல்முறையில்,
ஆற்றலை ஏற்படுத்த
உதவுவதும்,
தேவைகளை நிறைவேற்றுவதும்
கல்வியே.

கல்வி
எக்காலத்திலும் முடிவற்றது.

குழந்தை வளர்ச்சி
முதல்,
முதுமை வரை
உண்மையான
உலக நிலைகளை
அறிந்து,
தன்னாலும்,
தரணியில் இருக்கும் வரை
‘ வளர்ச்சி பெறும் செயல்களுக்கு ‘
உதவுவது
கல்வியே.

கல்வியால்
மனிதனது
உள்ளார்ந்த அறிவு,
அனுபவம், நம்பிக்கை
என்றும் சிறக்கும்.

கல்வியால்,
மனித இனம்
பல்வேறு
ஏற்றத் தாழ்வுகளிலும்
நிலை பெறுகிறது.

கல்வி
அவரவர்களுக்கு
உரிய
எல்லையை
நிலைக்கச் செய்யும்.

பதிவர்,
செயல் மன்றம்.

14-01-2020

செயல் மன்றப் பதிவு :

‘ இயல் ‘

‘ அ ‘ என்ற வாய் திறந்து
ஒலிக்கும் நிலை
அனைத்து மொழியும்
அதே ஒலியில் ஓலிக்கும் இயல்பு.

‘ ஆ ‘ என ஒலி நீட்டலும்
ஆரவாரமின்றி இயங்கும்
ஆற்றலும்
ஆடிபாடி திறன் உடையோரின் இயல்பு.

‘இயங்கும் யாவும்
இயலே.’

இயற்கை எழிலும்,
இறைமை உணர்விலும்,
இயலும் தன்மை
இயங்குவதின் நிலைப்பாடு.

இருள் என
இருக்கும் கருமை
இயற்கையின் சுழற்சியிலே
இயல்பாய் சூரிய ஒளி.

இருப்பது
இயற்கை,

இறை மடி
என்போர்க்கும்,

இயங்கும்
யாவும் இயலே.

இலக்குகள் நோக்கி
இயங்கும்
இலக்கியமும்,
‘ இயல் ‘ என்போம்.

ஈர்ப்பு விசை
ஈர்க்கப்படும் பூமியிலே

உன்னதம் என
உணர்ந்தோர்க்கும் இயல்பே.

இலக்கியம்
ஒரு கலை என
சொல்வோர்க்கும்
இயல், இயல்பே.

இலக்கிய
இயல்பை
சொல்வதை
காண்போர்,
கேட்போர்,
படிப்போர்,
என்பதும்
மனித இன
இலக்கின்
இயல்.

‘ இயற்பியல் ‘
எனும் இயக்கம்
கைகளில் இயங்கி
‘ இயற்கை ‘
என்று ஆகிறது.

இயலும் நிலைகளில்
உன்னதமாக
இயங்கும் இயல்பு.

இயல்பில் பண் அமைத்து
இயல்பான மனித பண்பாட்டை காத்து
இயலான அறநெறி காத்து
இயல்பினில் தொகுத்துடுவோம்.

வேற்றுமையின்
இயல்பை
இணைக்கும்
வேதிஇயல்.

இயல்பை
இயலாக்கும்
இயல்பியல்.

உயிரிகளை
இயல்பாக்கும்
உயிரியல்.

மிக நுண்ணிய
மயிரிழையில்
இயங்கும்
நுண் இயல்பான
நிலைப்பகுதி.

15-01-2020

2020

” ஒலி ”

செயல் மன்றப் பதிவு :

” ஓலி ”
கேட்கும்
நிலை
அறிவோம்.

” ஒலி ”
என்ற சொல்
‘ ஒ ‘
என்ற
‘ உயிர் ‘ எழுத்தில்
‘ ஒ ‘ ன்றி இணையும்
நம்
உணர்வு
ஓருமைபட்டு
வளி
வரிசையில்
காற்று
ஏற்படுத்தி
‘ உயிரக காற்று ‘
அளவாக
நமது உட்பொருள்
எது
என அறிய
உள்
‘ ஒலி ‘ நிலை பெற

‘ ல ‘ என்ற ‘ மெய் ‘ எழுத்தில்
‘ ல ‘ யமாகி
‘ இ ‘ எனும்
‘ உயிர் ‘
எழுத்தோடு
இணைந்து
இயற்கையாக
இனிமை
பெற

‘ லி(ல+இ)

எனும் சொல்லில்
உருவாகி

ஒருமை
பெற்று

‘ ஒலி ‘

காற்றில் கேட்கிறது,
கலக்கிறது.

‘ஒலி’
ஓசையாகி
நமது
உள்
‘ ஒலிப்பில் ‘
சொற்களாக
ஓசை ஓலியாக
வெளிப் படுகிறது.

‘ ஒலி ‘
ஏற்படும் போது
நம்
நுனிநாக்கு
முன்
பல் வரிசைக்கு
உள்ள

‘ மேல் ‘

அண்ணத்தைத் தொட்டு
‘ ஒலி ‘ ஏற்படும்.

‘ ஒலி ‘

ஒருமையில்
ஒருங்கிணைந்து

அழுத்த
மாற்றத்தின்
அதிர்வுகளுடன்

வளிமத்தில்
நீர் ஊடகத்திலும்
காதுகளில்
பயணித்து,

‘ செயல்படக்கூடிய
எண்ணில்லா
நுண்ணிய நரம்பு ‘ (செ.எ.நு)

செல்கள் மூலம்,

ஒவ்வொரு
கணமும்
ஏற்படும்
தாக்கங்களை
மூளைக்கு
அனுப்ப பட்டு,

அதிர்வு
‘ ஒலி ‘
ஆக
உணரப்படுகிறது.

‘ செயல்படக்கூடிய
எண்ணில்லா
நுண்ணிய’ (செ.எ.நு)

நரம்பு
செல்கள் மூலம்
ஏற்படும்

‘ ஒலி ‘
காதுகளில்
கேட்டு உணரும்
அதிர்வுகளைக் குறிக்கும்.

உடல் இயங்கும்
இயலில்,

உள்ளத்து
இயல்பையும்,

காதுகளால்
கேட்டு,

உணரக் கூடிய
பொறிமுறை
அலைகளை,

உருவாக்கும்
அதிர்வுகளை
பெறுதலும்,

அவற்றை
மூளையினால்
உணர்தலுமே,

காதில்
‘ ஒலி ‘ என
கேட்கப்படுகிறது.

‘ ஒலி ‘

இயல்பும்,
திண்மம்,
நீர்மம்,
வளிமம்

ஆகியவற்றினுள்
கடத்தப்படும்
பொறிமுறை
அலை ‘ ஒலிகள் ‘
பற்றி
ஆய்வுசெய்யும்
பலதுறை
அறிவு
இயல்புகள் ஆகும்.

இது
இயல்பு
இயலின்
ஒரு துணைப்பிரிவு.

‘ ஒலி ‘
இயல்பின் வேகத்தை
ஒலி அலையாக
ஒரு இலக்கத்திற்கு
துல்லியமாக
பயணிக்கும்.

ஓலி பதத்தை காற்றில்
வெப்பத்தில் கடப்பதை
ஒலி வேகத்தை
துல்லியமாகவும்
அறியலாம்.

அகத்தில்
ஒலிப்பதை
‘ அக ஒலி ‘
என்போம்.

இயல்பில்,
இசையில்,
நாட்டின்
அகமாகிய
நல் மனம் நாடும்,
நாட்டினர்
அகங்களிலும்
‘ ஒலி ‘
சீர் அமையும்.

கேட்கும்
சீர் ‘ அக ஒலி ‘
சீராக
உடலிலும்,
உள்ளத்திலும்
பயன்படும்.

விலங்குகளும்
கேட்கும்
‘ ஒலி ‘ யில்
சீராக
அகத்தை
நிலைப் படுத்துமே.

பேச்சு
‘ ஓலி ‘
மனிதகுல வளர்ச்சி,
மனிதப் பண்பாட்டில்
குணங்கள் ஆக
சிறப்பு
இயல்புகளாக ஆகிறது.

‘ ஒலி ‘ வேக
இயலானது
‘ இசை ‘,

மருத்துவம்,
கட்டிடக்கலை,

கைத்தொழில்
உற்பத்தி,

போர்
போன்ற பல
துறைகளிலும்
பரவலாக
ஊடுருவியுள்ளது.

பேச்சு
‘ ஓலி ‘
ஆராயும்
ஒலி
இயல்பு
முறையில்
முக்கியமாக
‘ 3 ‘ கிளைகளாக
பிரிக்கப்படுகிறது.

ஒலிப் பிறப்பு :

இயல்,
‘பேச்சு ஒலி ‘
உருவாக்குவதில்
உதடுகள்,
நாக்கு,
மற்றம்
பேச்சு உறுப்புகளின்
அசைவுகளின்
நிலைகளிலும்
என்பன பற்றி
‘செ’யல் படக்கூடிய பல
‘எ’ண்ணில்லா
‘நு’ண் நரம்புகளின்(செ.எ.நு)
ஆய்வுகளும்
தொடர்கிறது.

‘ அலை ஒலி இயல் ‘
இயல்புகள் பற்றி
ஆராய்வதும்,

இயல்பு
இயல்
‘ அக ஒலி ‘
இயல்பினிலும்
நிலைப்படும்,

ஒலிகளை
ஆராய
அறிவியல்
கருவிகள்,
கணிதம்,
இயல்பு இயல்,
ஆகியன பயன்படுகிறது.

கேட்கும்
ஒலி இயல்:

பேச்சைக் கேட்டு
உணர்தலை
அடிப்படையாகக் கொண்டு
மொழி
இயல்பினை
ஆய்வு செய்வதும் நிலைப்படும்.

‘ ஒலி ‘
குறிப்பினால்
ஏற்படும்
அறிகுறிகள் யாவும்,
குறி
முறைமைகளில்
ஏற்படும்
கூட்டாக
ஆய்வு செய்யும்
ஒரு துறையாகும்.

குறி ஒலி:

ஓலி குறிகளில்
பொருள்
கடத்தப்படும்
உயிரினங்களும்
தமக்கே
உரிய குறியீடுகள்
தொடர்பினை
முன்னரே
அறிந்து
அதன்
ஒலி இசைவு
ஆக்க பூர்வ செயல்களின்
முறைமைகளையும்
ஒலி குறியீடுகளிலும்
தம் நிலையை
ஒலி ஓசையாக எழுப்புகிறது.

குறிகளின்
பொருள்
ஒலிக்கப்படும்
வழிமுறையும்,
சத்தங்கள்,
சொற்கள்
உருவாக்கும்
எழுத்துக்கள்,
உணர்வுகள், மனப்போக்கும்,
உடல் அசைவுகள்,
சில சமயங்களிலும்
உடுக்கும் உடை
போன்றவைகளிலும்
நல் ‘ ஒலி ‘
குறியீடுகளில்
நிலைக்கட்டுமே.

‘ ஒலி ‘
என்ற ஒரு
சொல்லை
உருவாக
சமூகம்,
சுமூகமாக
அமைய
சமமான
முன்னேற்ற தாக்கத்தை
யதார்த்த பொருள்களையும்,
சரியான
பொருள்
விளக்கத்துடன்
ஒலிக்கட்டுமே.

சொல்
ஒலி
உருவ மொழி
இலக்குகளும்
அக்கணமே
அமைய
குறியீட்டு
வரம்புகளும்
உள்ள பொருள்
விளக்க ஒலியிலும்
ஒலிக்கட்டுமே.

ஒலி
குறியீடுகளும்,
பண்பாட்டினை
குணமாக
ஒலிப்பதிவிலும்
அடங்கட்டுமே.

பதிவர்,
செயல் மன்றம்.

16-01-2020

2020

செயல் மன்றப் பதிவு

” நேரம் ” :

காலம்
கணிக்கப்படுகிறது,
நேரம்
நிர்ணயத்தில்
இயக்கப்படுகிறது.

நேரம்
மனித இனத்தின்
ஊகங்களால்
கணிக்கப்படுகிறது.

நேரம்,
நேர்த்தியாக
ரக வாரியாக
கடைபிடிக்கப்படும்
ஓர் அளவுகோல்.

காலமும்,
நேரமும்
எண்ணில்லா
அளவுகோலாக
இருந்தது,
எண்ணத்தில்
நிலைக்கப்படுகிறது.

நேரத்தை
அளப்பதால்
அனைத்தையும்
துல்லியமாக
மனித
இனம்
நிர்ணயம் செய்கிறது.

நேரத்தின்
அளவுகோல்,
நமது
எண்ணத்தில்
நிர்ணயிக்கும்
வாழும் உயிர்களுக்கான
சக பயணிகளின் செயல் இயல்பு.

காலத்தின்
வேக
அடிப்படையில்
‘ நேரம் ‘
வரையறை
செய்கிறது.

இருள் மறைந்து
சூரிய ஒளியில்
வெளிச்சம்
நேரத்தி்ன்
கணக்கீடாக இருந்தது.

சந்திரனின் தேய்மானம்,
ஊசல்களின் இயக்கம்
பல இடங்களில்
நிர்மாண
அளவீடாக இருந்தது.

சூரியனின் இயக்கத்தை
வைத்து நேரத்தை
கணக்கிடுவது
ஓர் குறியீடு.

உலக மக்கள்
நாட்கள்
நிர்ணயமாக
ஆறாயிரம்
ஆண்டுகளுக்கு
முன்னர்
தொடங்கப்பட்டது
என
பதிவில் நிலை
பெறுகிறது.

நேரடிப் பார்வையில்
சூரிய
ஒளி தோன்றி
மறைவதை
‘ நேரம் ‘
என
தொகுத்து உள்ளோம்.

பூமி
தன்னுடைய
அச்சில் தானே
சுழல்கிறது.

நம் உடலின்
உயிர்ப்பு
செல்கள்
இயங்கும் காலமே
நமது
நேரம்.

உயிர் செல்கள்,
உயிர்ப்பு நிலை வரை
நமது
காலத்தையும்
நேரத்தையும்
பயன் பெற செய்வோம்.

நமது தோற்றம்,
விரிவாக்கம்,
நிலைப் பெற்ற
செல்கள்
செயல்பட்டு
மறைந்து,
மறைந்த செல்கள்
நிலை
பெறும் வரை
உயிர்ப்பு செல்களும்
நீடிக்கும்.

சூரிய ஓளி
குறிப்பிட்ட
பகுதியில்
ஒளிரும்
காலத்தை
‘ பகல் ‘
என்றும்
சூரிய ஒளி படாத பகுதி,
‘ இரவு ‘ என நாம்
நிர்ணயம் செய்கிறோம்.

நமது
உயிர்ப்பு செல்கள்
நிலை பெறும் வரை,
அவரவர்களின்
நேரத்தை
சரியாக கணித்து
நல் நிலைப்படுத்தி
நிலைக்கச் செய்வோம்.

தற்பொழுதைய
நொடி கோட்பாடு,
ஐன்ஸ்டின் சார்பின்
இயல்பு
கோட்பாடு.

ஒரு நொடி
133 அணு ஆரம் இயல்
நிலை கொண்ட
சீசீயம் அணு என்கிறோம்.

அணு இயல்பு
இரு நிலைக்கு மாறும்
கதிர்வீச்சுக்கு
9,192,631,770 அணு
கதிர் வீச்சுக்கு இடையே
சுற்றுகின்ற
ஆரம்
இயக்கத்தில்
உரிய
‘ கால நேர ‘
அளவுகள்
ஆகும்.

தற்பொழுதைய
நேர
அளவாக
ஒரு நொடிக்கு
சூரிய
ஓளி ஆண்டுகள்
299,792 கி.மீ/ நொடி
கடக்கிறது.

ஒரு நொடிக்கு
பூமியை
ஒளி ஆண்டு
7.5
முறை கடக்கிறது
என்பது பதிவில் நிலைப்படுகிறது.

ஒரு ஒளி
ஆண்டு
9.4 நூறு
ஆயிரம்
கோடி(ஒன்றிற்கு பிறகு 12 சுழி வட்டஅளவு )

அலகு
என்பது ஒன்றன்
அளவைக் குறிக்கப் பயன்படும்
முறை ஆகும்.

நேரத்திற்கு
நிறைய அலகுகள்
உள்ளன.

நிமிடம்,
மாதம்,
நாள்,
வாரம்,
நூற்றாண்டு
என்பவை
நாம் நிர்ணயித்த
சில அலகுகள் ஆகும்.

அனைவர்க்கும்
24 மணி நேரம் தான்,
எந்த செயலில்
ஈடுபடுகிறோமோ,

அந்த செயல்
நம் வாழ்க்கையை
நிர்ணயிக்கும்.

நேரமே சுவாசமாகு

‘நே’ர்த்தியாக
‘ர’க வாரியாக
‘மே’ன்மைபடுத்த

‘சு’ற்றுச் சூழல்களும்
‘வா’ழ்க்கையின் தரத்தை
‘ச’கலமும்
‘மா’னிட
‘கு’ணங்களாக்குவோம்.

ஆம், நண்பர்களே !

இயற்கை முறையில்
நாம் கணித்த
பொது
முறைமைகளை
நேர்த்தியாக,
நேரத்தை
கடைபிடித்து
ரக வாரியாக,
நாம் வாழும்,
இடம், நாடு ஆகியவற்றை
மேன்மை படுத்த

நமது சுற்றுச் சூழல்களின்
செயல் முறைகளை அறிந்து,
வாழ்க்கையின் தரத்தை
சகல மனிதர்களுக்கும்
குணங்கள்,
நற் பண்புகளை
உருவாக்க
நமது நேரத்தை
பயனுறச் செய்வோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

17-01-2020

செயல் மன்றப் பதிவு:

ஒளி:

கண் மூலம்,
‘ ஒ’ ரு
பொருள்
‘எது’
என
வ ‘ ளி ‘
மண்டலத்தில்
அறியும்
ஆக்கம்
” ஒளி ”
ஆகும்.

‘சூரிய
வெளிச்சம்,’

வெப்பத்தின்
மூலம்
” ஒளி ”
வெளி வருவது
” கதிரக ஒளி ”
என்போம்.

நம் கண்
ஒளியை
உணர்வதற்கு
உதவும்
ஒரு உறுப்பு
ஆகும்.

வெளிப்புறத்தில்
உள்ள
பொருள்களின்
அமைப்பு,
நிறம்,
ஒளித்தன்மை
மற்றும் இயக்கம்
பார்வையில்
நம்
உறுப்புத் தொகுதியின்
மூலம் கண்கள்
உணர்த்துகின்றன.

வெவ்வேறு
விதமான
ஒளியை
உணரும்
உறுப்புகள்
பல
விலங்குகளிடையே
காணப்படுகின்றன.

பாலூட்டிகள்,
பறவைகள்,
ஊர்வன,
மீன்கள்
உட்பட்ட
பல மேல்நிலை
உயிரினங்களும்
இரு
கண்களைக் கொண்டுள்ளன.

இரண்டு
கண்களும்
ஒரே தளத்தில்
அமைந்து
ஒரு மனிதர்களின்
பார்வை
முப்பரிமாணப் படிமத்தை
காண உதவுகின்றன.

விலங்குகளும்
இரு கண்கள்
மூலம்,
வெவ்வேறு தளங்களில்
அமைந்து
இரு வேறு
படிமங்களை
காண உதவுகின்றன.

கண்ணின்
வழியே
ஒளி செல்லும்போது
ஒளிச் சிதறலும்
ஒளித்திசை மாறுதலும்
ஏற்படுகின்றன.

ஒளியானது,
விழித்திரையை
அடையும்
முன்
கார்னியா,
லென்சின்
முன்பகுதி,
லென்சின்
பின்பகுதி
ஆகிய
மூன்று
பரப்புகளில்
ஒளிச்சிதறல்
அடைகிறது.

கார்னியா
மற்றும்
லென்சுக்கு
இடையில்
‘ நீரக மைய ஊடக நீர் ‘
என்ற
‘ திரவ விழையம் ‘
உள்ளது
லென்சுக்கும்
விழித்திரைக்கும்
இடையில்
‘ விழிப் படக மைய நீர் ‘
என்ற திரவம் உள்ளது.

இது கூழ்
மயமான
சளி போன்ற
புரதத்தினாலானது.

இந்த திரவங்கள்
இரண்டும்
ஒளி ஊடுருவும்
தன்மை கொண்டதினால்
ஒளி கண்ணின்
விழித்திரையை
தடையில்லாமல்
அடைகிறது.

மனிதனின்
கண்ணில்
உள்ள
லென்சின்
குவிந்த பகுதி
பார்க்கும்
பொருளின்
தூரத்திற்கு
ஏற்ப
தானே
குவித்தன்மையை
மாற்றிக் கொள்ளும்
தன்மையை
கொண்டிருக்கிறது.

இத்தன்மையை
கண்
தக அமைதல்
அல்லது
‘ விழியின் ஏற்ப அமைவு ‘
என்பர்.

இந்த ஏற்ப அமைவு,
சிலியரி தசைகள்,
சிலியரி உறுப்புகள்,
மற்றும் தாங்கும்
இழைகளால்
நடைபெறுகிறது.

கண் தூரத்திலுள்ள
பொருளைப் பார்க்கும்போது
சிலியரித்தசைகள்
தளர்ந்து விடுகின்றன.

பொருளிகளில்
இருந்து
வரும்
இணையான
ஒளிக்கதிர்கள்
விழித்திரையின் மேல்
குவிக்கப்படுகின்றன.

எனவே
தெளிவான
பிம்பம் தெரிகின்றது.

பொருளை விழியின்
அருகில் கொண்டு
வரும்போது
விழியின் ஏற்ப
அமைவுத் தன்மை
அதிகரிப்பதில்லை.

ஒளியின் வேகத்தை
முதன்
முதலில் கண்டுபிடித்தவர்
கலீலியோ ஆவார்.

கி. பி. 1630
சோதனைகளில் ஈடுபட்டார்.

கையில்
ஒரு லாந்தர் விளக்கை
ஏந்திக்கொண்டு
ஒரு மலைக் குன்றை
அடைந்தார்.

கூட
வந்த
தன்னுடைய
உதவியாளரிடம்
ஒரு விளக்கைத் தந்து,
குன்றின் எதிர்
உச்சியில்
போய் நிற்குமாறு
பணித்தார்.

அந்த உதவியாளர்
விளக்கில் இருந்து
வெளிப்படும்
ஒளியைத் தூண்டிவிடும்
போது
கலீலியோவும்
விளக்கின்
ஒளியைத் தூண்டிவிடுவார்.

கலீலியோ
இந்த இரு செயல்களுக்கான
இடைவெளியைக் குறிப்பெடுத்தார்.

பரிசோதனையில்
சோதித்துப் பார்த்தார்.

அந்தக்காலத்தில்
ஒளியின் வேகத்தை
அளவிடும் துல்லியமான
கடிகாரங்களும் இல்லை.

எனினும் மனம்
தளரவில்லை.

பின்,
கலீலியோ ஒளி,
ஒலியைவிட அதிக
வேகத்தில் பயணிக்கும்
என்கிற முடிவை
உலகிற்கு அறிவித்தார்.

பூமிக்கு வரும்
ஒளி 44
சதவிதம் கண்களின்
புலனுக்கு
அறியும் ஒளி
என அறிவோம்.

கண்களுக்கு
புலப்படும்
அலைநீளம்
உடையவற்றை
மின் காந்த
அலைகள் என்போம்.

அகச்சிவப்புக் கதிர்களும்
புற ஊதா கதிர்களுக்கும்
இடைப்பட்ட
அலை நீளம்
மின் காந்தக் கதிர்
வீச்சுக்களின்
ஒளி என்போம்.

அலை-துகள்
இருமை
தன்மையின்
காரணமாக
ஒளி
அலை மற்றும்
துகள் இரண்டின்
பண்புகளையும்
ஒரே நேரத்தில்
வெளிப்படுத்துகிறது.

380 நானோமீட்டர்கள்
முதல்
740 நானோமீட்டர்கள்
வரையில்
அலைநீளத்தையுடைய
மின்காந்த
அலைகளாகும்.

பொதுவாக
மின்காந்த
கதிர்வீச்சு
அதன் அலைநீளத்திற்கு
ஏற்ப
வானொலி,
நுண்ணலை,
அகச்சிவப்பு,
புற ஊதா,
கண்ணினால் உணரக்ககூடிய ஒளி,
எக்ஸ் கதிர் வீச்சு
மற்றும்
காம்மா கதிர் வீச்சு
என வகைப்படுத்தப்படுகிறது.

மின்காந்த
கதிர்வீச்சின்
நடத்தை
அதன்
அலைநீளத்தை
சார்ந்து அமையும்.

உயர்
அதிர்வு
எண்களில்
குறுகிய அலைநீளத்தையும்,

தாழ்
அதிர்வு
எண்ணில்
நீண்ட அலை நீளத்தையும்
கொண்டிருக்கின்றன.

ஒளி
அணு,
ஒளிமம்,
என்று எடை
இல்லாதது
ஆகவும்,
ஆற்றலின்
திரட்சியாக கருதப் படும்.

கதிரின்
வீச்சினிலே
ஒளி அளவு
சிறு நானோ
துளி அளவே வெளிச்சம்
பாய்ந்து,
ஒளிக் கதிர்கள் நிலைப் பெற்று
அண்டம்,
குவாண்டம்
ஆக
ஓளி அளவு
நிலை பெறுவதை
மேலும்
அறிவோம்.

பதிவர்,
செயல் மன்றம்.
18-01-2020

வாய்மை :

2020 செயல் மன்றப் பதிவு :

‘வ ‘
எனும்
‘மெய்’ எழுத்து
துணையுடன்
‘ஆ’
எனும் உயிர் எழுத்தில்
நிலைப் பெற்று
‘ வா ‘
என்ற
‘ உயிர்மெய் ‘ எழுத்தாக
முழுமை பெறுகிறது.

‘ வா ‘ என்ற
எழுத்தும்
சொல்லாக
நம் ‘வாய்’
எனும்
வாயினில்
வருகின்ற
அனைவரையும்,
பொருளையும்
வரவேற்று,
‘ வருக ‘
சொல்லாகவும்
நிலை பெறுகிறது.

‘ வா ‘
எனும் சொல்
நம்
வரவை
குறிக்கும்
சொல்லாகவும்
நிலை பெறுகிறது.

நம்
உணர்வில்
பொருளாக
அறிகின்ற,
உணர்கின்ற
சொற்கள்
முழு வடிவம் பெறுகிறது.

நம்
முன்னோர்கள்
அறிந்து,
ஆய்ந்து
பொருள்
ஆக
அறிந்ததை,
உணர்ந்ததை
பல
சொற்களை
மகிழ்ந்து
தாங்கள்
உணர்ந்து ,
மற்றவர்களிடமும்
நம்
மையப்பகுதியாக
‘ வாய் ‘
எனும்
நம்
உடல் உறுப்பில்
பகிர்ந்தனர்.

வருக
வாயில்
இருந்து
அறிவாக,
வருக.

‘ வாய் ‘
எனும்
நமது
மெய்யில்,
உடம்பில்
அறிகிறோம்,
உணர்கிறோம்.

உணர்வாக
அறிந்ததை,
ஆய்ந்து
அறிவில்
மலர்ந்து
சொல்லாக
வாயில்
இருந்து
மலர்கிறது.

ஆய்ந்து அறிந்ததை
நாம்
வாழும்
உலகத்தை
நம் மெய்யால்
உணரப்படுகிறோம்.

நம் ‘ வாய் ‘
‘ உயிர் மெய் ‘ எழுத்தாக
நிலைப்பெற்று
நம் வாய்
எனும் மெய்
ஆகிய
உடம்பில்
அறிக்கையாக,
ஒலியில்,
வெளியில்
பரப்பபடுகிறது.

அந்த ஒலிக்குறிப்பு
வாயின்
மையப்பகுதியில்
‘ வாய்மை ‘
ஆக நிலை
பெறுகிறது

ஒலி பரப்பில்
சொற்களாக
முழு வடிவம்
பெறுகிறது.

நம்
உடம்பில்,
மெய்யில்
உணர்வதை
‘வாய்’
எனும்
‘மை’யப்பகுதியில்
ஒலிபரப்பு
பகுதியாக
அனைவருக்கும்
அறிவில்,
தெரிவிக்கப்படுகிறது.

நாம்
மெய்யால்
உணர்வதை
வாய் எனும்
மையப்பகுதி
மூலம்
பகிர்ந்து
கொள்வது
‘வாய்மை.’
என்று நிலைப்படுகிறது.

வாய்மையில்
நன்கு
அறிந்து
நிலைத்தது
‘ நன்று ‘ என
நிலைப்படுவது
‘உண்மை.’

நம் உணர்வின்
மையப்பகுதியாக
உணர்ந்ததை
‘உண்மை’
என பகிரப்படுகிறோம்.

மெய்யால்
உணரப்படுவது,
‘ மெய்மை.’

வாயால்
பகிர்ந்து கொள்வது,
‘ வாய்மை. ‘

உள்ளத்தில்
உண்டாகும்
நிலைப்பாட்டை
சொல்வது,
‘ உண்மை. ‘

நாளும்
மெய் ஆகிய
‘ மெய்மை ‘
என்றும்
நிலைப்பெறுகிறது.

மெய்
எனும்
உடம்பு,
நல்லதை நாடும்.

நம் மெய்யால்
உணர்வது,
ஒரு சில
நிலைப்பாட்டினை
நன்கு அறிந்து
நன்மை
உண்டாக்குவதை
உண்மையில் பகிர்வோம்.

சிறந்து
விளங்குவதை
மெய்யால்
உணரப்படுவோம்,
செயல்படுவோம்.

நம்
வாயில்
பேசும் பொருட்கள் அனைத்தும்
வாய்மை
எனும்
மெய்யான பொருட்களில்
நிலைபடட்டும்.

பதிவர்,
செயல் மன்றம்.

19-01-2020

2020

சமயம் :

செயல் மன்றப் பதிவு :

‘ ச ‘
எனும்
‘ மெய் ‘ எழுத்தில்
‘ ச ‘கல ‘ ச ‘ம அளவு
அறிவினை
நிலை நிறுத்தும்
பொருள் குறிக்கும்.

‘ ம ‘ எனும்
மெய் எழுத்து
‘ம’னித மனங்களைக் குறிக்கும்
சொல் என அறிவோம்.

‘ ய ‘ என்ற
மெய் எழுத்து
‘ ய ‘ தார்த்த ,
‘ ய ‘வன
நடைமுறை இயல்புகளை
விவரிப்பது
என அறிவோம்.

‘ ம ‘
எனும்
மெய்
எழுத்து
ம் (ம+்) எனும்
எழுத்தாகி
மக்களி்ன் மனத்தில்,

செயலில்,

அன்றாட
நடைமுறையில்,

குணங்களில்
தினமும்,

‘ பண்பு ‘

என நிலைக்கப்பட்டு
மனித மனங்களில்
பண்பாடு,
கலைகள்
என
பல
வடிவில்
நிலையில்

‘ அறம் ‘

சார்ந்த நெறிமுறைகளை
பெறுகிறது
என அறிவோம்.

‘ சமயம் ‘
என்பது
சம கால
மனிதர்களின்
மனங்களில்,

நடைமுறை
இயல்பினை,

அறம் சார்ந்த
நெறிமுறைகளை,

கலைகளின்
வடிவிலும்,

கடைபிடித்து வாழ்வது
சமய நெறிமுறைகள்
என்போம்.

புத்தம் புதியவராக
‘புத்தர்’
எனும்
மனிதர்
சுமார் ‘ 2483 ‘ ஆண்டுகளுக்கு
பல சமய
கருத்து
ஆள்வோர்களின்
மனங்களில்
விதைக்கப்பட்டு
புத்த வடிவில்
‘ சமயம் ‘ ஆக
வணங்கும்
மனிதராக,

ஒரு
இடத்தில்
இருந்து,
பல இடங்களுக்கும்
சென்று,
ஒரு
காலத்தில்,

வாழ்ந்து
மனிதரின்
மனித
அறநெறிகளை
மக்களுக்கு
போதித்து,

புத்த சமய
அறநெறிகளாக
புத்த சமய
கலை,
கலாச்சாரங்களை
காலந்தோறும்
சமய சடங்குகளாக
கடைபிடித்து

‘ புத்த சமயம் ‘

என உருவெடுத்து
உள்ளது
என
அறிவோம்.

மகேசன் :

மக்களில்
மனித
வடிவத்தினில்,

‘ அறநெறி ‘
சார்ந்த
மனிதர்களை,

காலந்தோறும்
பேச்சில்,

கதைகளில்
உருவ வடிவமாக,

சித்தரித்து,

நிலையாக,

‘ அனைத்தும் அதுவே ‘

என
வடிவமைத்து,

மனிதர்களின் மனங்களிலும்
தொடர்ந்து
நிலைப்படுத்தி,

நல்ல செயல்கள்,
நன்மை உண்டாகும்
என்று,

தங்களது பகுதிகளில்,

உலகை
ஆளும்
ஆள்வோர்களாகவும்,

காலந்தோறும்
பாக்களிலும்,

அறம் சார்ந்த
நெறிமுறைகளை
தொடர்ந்து
பரப்பி ஒரு இடத்தில்,

அனைவரும் இணைந்து
கும்பிட்டு
வழிபடும் மகேசனாக,

பல பல பெயர்களில்
கற்பனையில்
பதிந்ததை,

ஒரு பிரமிக்க தக்க
வகையில்
வழிபட
மக்கள்,
கேட்டு
சகல நன்மை
வழங்கும்
‘ கடவுள் ‘ ஆக,
‘ தெய்வம் ‘ ஆக
வழிபடுகிறது
எனும்
‘ அனைத்தும் ஒன்றே ‘
எனும் ஒரு
சமய நெறி
முறை என்போம்.

எல்லா
மக்களின்
ஏற்புடைய
சுக வாழ்வு
அமைக்கும்
‘ ஏசு ‘ என
பரவலாக,
பல மொழிகள்,
நாடுகள் தோறும்
பல்வேறு
இடங்களில்
அந்தந்த
கலை,
கலாச்சாரத்திற்கு ஏற்ப,

ஒவ்வோருவரின்
சிரமத்தையும்,
பாவத்தையும்
தாமே
ஏற்றுக் கொண்டு
எல்லாம்
அவன்
செயல் என ‘ ஏசு ‘
என்பவரே
ஏற்றுக் கொண்டார்,

என பல உருவ
வடிவமைப்புகளை,
அவரது
தாய்,
தந்தை,
சீடர்கள் வழிபடும்
கடவுளர்களாக
உருவத்திலும்,
உருவமின்றியும்
கடைபிடித்து
தொடர் நடைமுறையாக,

நிலை
நிறுத்தி
வேத
ஆகம
கருத்துக்களை
நல் முறையில்
‘ திருச்சபை ‘
என
மக்களை
கூட்டமாக
குறிப்பிட்ட
நேரத்தில் வரச்செய்து,
குருமார்களின்
போதனையுடன்
‘ அறநெறிகள் ‘
கடைபிடிக்கப் படுகிறது
என
அறிவோம்.

நம்பிக்கை
பின்புலமாக விளங்கும்
‘ நபி ‘,
நாயகமாக
உலகெங்கும்
நல் முறையில்
நடைமுறைபடுத்துவதற்கு
தரமான தரவுகள்,
குர் ஆன் அறிவின் இயல்புகளை
நிலை நிறுத்த,
தொழுவதை
ஒவ்வொரு நாளும்
உண்மையை நிலைநாட்டும்,

‘ நபி ‘
எனும்,
மனித தூதராக,

நம்பிக்கையின்
பின்புலத்தில்,

நாயகமாக
அவர் வகுத்த
அறநெறிகளை,

நம்பிக்கையாக
பின்பற்றுவோம்

என
நிலைப்படுத்தும்
பண்புகளாக பின்பற்றுவது
தொடர்ந்து
எங்கும் வலியுறுத்தும்
‘ சமய நெறிகள் ‘
என
அறிவோம்.

ஆகம
சமய கருத்துக்கள்,
ஆங்காங்கு
கடவுளாக
மனிதர்களிடையே,

ஒரு சிலர் கடைபிடிப்பதை,

பலரது
கருவாக

‘ அறம் ‘
ஆக பல
‘ சமயம் ‘
ஆக

என நிலைப்படுகிறது.

‘ சமயம் ‘
காலத்தோடு
தொடர்பும் உடையது
என்பதையும்
அறிவோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

20-01-2020

2020

குறி- செயல் மன்றப் பதிவு :

‘ க ‘ எனும் மெய் எழுத்து
‘ உ ‘ எனும் உயிர் எழுத்தில்
புணரும் பொழுது கு(க+உ)
‘ கு ‘
எனும்
எழுத்து உருவாகி,

குணங்களின்
குன்றாகிறது.

‘ ற ‘ எனும் மெய் எழுத்து
‘ இ ‘ எனும் உயிர் எழுத்தில்
புணரும் பொழுது றி=(ற+இ)
‘ றி ‘ என்ற எழுத்து உருவாகி
அறி, குறி,
எனும்
போன்ற
சொற்கள் உருவாகிறது.

‘ குறி
பல குறிகளாக உருவெடுக்கிறது.

‘ குறி ‘
எனும் சொல்
பல நம்
அடிப்படைச் சொற்களுக்கு
முன்னோட்ட சொல்
விரிவாக்கத்திற்கு அமையும்.

குறிப்பு,
குறியீடு,
குறிப்பான்,
குறிக்கோள்,
குறிப்புரை,
குறிப்பாக

என விரிவாக்கம்
ஆகி
நம் மொழி
பழக்கத்தில் உள்ளன.

‘குறிக்கோள்
உள்ள பாதை
குறிப்பிட்ட
இடத்திற்கு
போய் சேரும்.’

நம் வாழ்வின்
இலக்கு
பாதை
குறிப்பு
குறியீடு,
நம் வாழ்வின்
லட்சியத்தை
அடையும்.

நம் வாழ்வில்
பயன்படும்
பொருட்கள்
அனைத்தும்
குறியீடுகளில்
முழு வடிவம்
பெறுகின்றன.

குறிகளில்,
ஒவ்வொரு பொருட்களின்
உண்மையின்
உணர்வினை
வெளிப்படுத்தினர்.

குறிகள்
அனைத்திலும்
உள்ள வேறுபாட்டு
நிலைகளை
எது
என அறிவோம்.

‘ குறி ‘
என்ற சொல்லும்
குறிப்பில்
ஒவ்வொரு
பொருளின் உள்ள
உண்மையை உணர்த்தும்
சொல்லாகும்.

ஒரு எழுத்து மற்றும்
ஒரு எழுத்துடன்
சேர,
மெய்
பொருட்களின்
இணைப்புக்கு
எழுத்து
குறியீடுகளில்
நிலை பெறும்.

குறியீடுகள்
பொருட்களில்
நிலை பெற்று
அந்தக்குறியீடுகள்
பெயரில்
நிலைத்து நிற்கிறது.

முதலில்
மனித இனம் இயல்பான
குறிகளில் சரியான நிலையை
தெரிவிக்கும்.

குறியீடுகளில்,
பொருட்களின்
உண்மை நிலையை
புலப்படுத்துவது ஆகும்.

குறியீடுகள்
இயல்பின்
அடிப்படை
லட்சியத்தை
குறிப்புகளால்
உணர்த்தும்
சொல்
என்போம்.

குறி,
மனித இன
தேவைகளை
அறியும்
அலகுகளினால்
தெரிவிக்கிறோம்.

குறிகள்
ஆரம்ப காலத்தில்
இருந்தே
புதுப்புது
பொருள்களின்
நிலையை கண்டு
ஆய்ந்து,
அறிந்து
அப்பொருளின்
நிலைத்த தன்மையை
குறிப்பிடுவது ஆகும்.

ஒரு பொருளின்
உண்மை
தன்மையை
விளக்குவது
உருவக் குறிகள்
என்போம்.

உ.ம்: ‘ மல்லிகை என்ற பூ, ‘
குறிப்பால் அறிந்து,
ஒரு வகையான
‘ பூ ‘ என குறிப்பீட்டால்
அறிகிறோம்.

ஒரு பொருளை
சுட்டி,
இந்த பொருள்
எது என
அறிந்து சுட்டி
நிலைக்கச் செய்யும்
பொருள் ஆகும்.

மேல் வளைவு _ வளைவுடன்
சுழி குறிகள் :

‘இ’ கர ,
‘ஈ’ கார வரிசையிலுள்ள
உயிர்மெய் எழுத்துக்களுடன்
(ி) (ீ)
என்ற குறிகள்
சேர்ந்துவரும் .

‘ க ‘ முதல் ‘ னா ‘
வரையுள்ள
மெய்
எழுத்துக்களின்
மேல்வளைவாக
( ி) என்ற குறி சேர்ந்து
‘ கி ‘ முதல் ‘ னி ‘ வரையுள்ள
‘ 18 குறில் உயிர்மெய் ‘
எழுத்துக்கள் உருவாகின்றன.

இதே போல ,
‘ க ‘ முதல் ‘ ன ‘
வரையுள்ள எழுத்துகளின்
மேல் வலைவுடன்
சுழி ( ீ )
சேர்ந்து
‘ கீ ‘ முதல்
‘ னீ ‘
வரையிலான
‘ 18 நெடில் உயிர்மெய் ‘
எழுத்துக்கள் உருவாகின்றன.

ஒவ்வொரு நாடும்
அதனதன் பொருட்களின்
மதிப்பை
குறியீடுகளில்
மதிப்பீடு
செய்யப் படுகின்றன.

நம் நாட்டின்
நாணய குறியீடு
ரூபாய் ஆகும்.

தற்போது ரிசர்வ் வங்கியால்
₹5, ₹10, ₹20, ₹50, ₹100, ₹500
மற்றும் ₹2000
வரையிலான
ரூபாய் தாள்கள்
அச்சடிக்கப்படுகின்றன.

பொருட்களின் மதிப்பை,
ரூபாய் தாள்களில்
உள்ள
குறியீடுகளாக
மாற்றி
ஒவ்வொரு பொருட்களின்
குறியீடுகள் நாணய
எண்ணிக்கையில்
நிர்ணயிக்கப்படுகின்றன.

இயற்கை குகையில்
வாழ்ந்த
இனக் குழு மக்கள்,
நாகரிக வாழ்க்கையை
நோக்கி வரலாற்றுக் காலத்தில்
குடியிருப்புகளை
அமைத்துக்கொண்டு வாழ்ந்தனர்.

அப்போது
அவர்கள்
சுடு
மண்கலையைக் கண்டறிந்து,
மண்பாண்டங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

எழுத்து தோன்றுவதற்கு முன்பு,
தங்கள் குழுக்களின்
அடையாளங்களாக
சில குறியீடுகளை
அவற்றில்
அமைத்துக்கொண்டனர்.

இனக் குழு மனிதர்களின்
குழுக் குறியீடுகள்
கிடைத்திருப்பதால்,
நம் நாட்டுபகுதியிலும்
2,500 ஆண்டுகளுக்கு
முன்பே,
ஒரே ரத்த
உறவு கொண்ட
மனிதர்கள்
வாழ்ந்ததற்கு
உரிய
முக்கியத் தரவாக
இக்குழு குறியீடு
கிடைத்திருப்பது
சிறப்புக்குரியது.

குறியீடு,
புதுப்புது
கண்டுபிடிப்புகளில்
உறுதியாக பயன்
அடையும்
நிலை பெற்று,
பொருட்களின்
பெயர்களில்
நிலைப் பெறுகின்றன.

பதிவர்,
செயல் மன்றம்
21-01-2020

2020 – செயல் மன்றப் பதிவு

‘ தீ ‘

த்=’ (த+அ)’= எனும் மெய் எழுத்து
‘த ‘ எனும் மனித இன உயிரில் மெய் எழுத்து
ஆக
உருவெடுத்து,
தமது,
தமது பிரபஞ்சம்
தத்தமது என அனைவர்களின்
ஒரு பதம் ஆக
என நிலைப் பெற்று

‘ ஈ ‘
எனும் உயிர் எழுத்தில்
ஈடுபாட்டுடன்
ஈர்க்கப்பட்டு
‘ தீ ‘ =(த+ஈ)
என
ஒரு பதம் ஆக
நிலைப்பட்டு
‘ தீ ‘ எனும்
பொருள்படுகிறது.

‘ தீவு, ‘
‘ தீர் ‘
எனும் இரு சொற்களில்
முன் ஓட்ட சொல்
ஆக நிலைப்படுத்தபடுகிறது.

‘ தீ ‘
திரியில்
ஒளிர் விடுவது
வெப்பத்தின் நிலையை
சம அளவில்
சீராக (ச+ஈ=சீ)
ஈர்க்கப்பட்டு
இருட்டில் இருந்த
வெளிச்சம்
நம் வளர் நிலையை
என்றும் நிலைப்படுத்தும்.

‘ தீ ‘ அல்லது ‘ நெருப்பு ‘
எனும் சொல்
கால மாற்றத்திற்கு
ஏற்ப
நெருப்பு எனும் சொல்லில்
‘ எரி பொருள் ‘ ஆகும்
திறன் ஆக்கம் ஆக
ஆற்றலை மனித இன
பயன் ஈட்டும் பொருள்
ஆக நிலைப்பெற்று உள்ளது.

தீ,
வெப்பத்தை நிலைப்பட,
வெளியிட
‘ உயிரக காற்று ‘
தேவைப் படுகிறது.

அனைத்து
உயிரினமும்
கட்டுப்பாட்டுடன்
இயங்க
கட்டுப்பாட்டு
உடைய
‘ தீ ‘
என்றும்
பயன் பெறும்.

கட்டுப்பாடு
அற்ற ‘ தீ ‘
பெரு சேதம்
விளைவிக்கும்
என
உயிர் இனங்கள்
தமது
நிலைப்பாட்டில் தெரியும்.

சூரியன்
ஒளிக் கதிர்கள்,
காட்டில்
மரங்களின்
உராய்வினால்
ஏற்படுவது
இயற்கை
‘ தீ. ‘
கட்டுபாட்டு
ஆற்றல்
பெற உதவும்
‘ தீ ‘
ஆகும்.

செயற்கை
‘ தீ ‘
நமது
முறையான
பயன்பாட்டிற்கு
என
பயன்படுத்துவோம்.

‘ தீ ‘
கண்டுபிடித்திதனால்,

மனித குலம் பல
கருவிகள்
உருவாக்க முடிந்தது.

‘ தீ ‘
கண்டு பிடித்ததால்
சுமார்
3,00,000 முதல்
4,00,000 ஆண்டுகளுக்கு
முன் தான்
உலோகத்தை
பயன்படுத்தி இருக்கின்றனர்.

அறிவியல்
வரையறைப்படி
ஒரு பொருள்
வேகமாக
ஆக்சிஜனேற்றம்
அடைவதே தீ
என உருவெடுக்கும்.

தீ,
வெப்பத்தை
வெளி ஏற்றும்
போது
வேதிய இயல்பு
செயல்பாடு ஆகி,
ஒரு சில பொருளிட்களில்
சேமிக்கப்பட்ட
பொருள்
கரியாகி
மீண்டும் சுருங்கும் நிலை
அடைகிறது.

இன்றைக்கு
ஒரு தீக்குச்சி போதும்,
அறிவார்ந்த செயலுக்கு
உரிய பொருள்
ஆக உருவாகும்.

அன்று
தீக்குச்சி
கண்டுபிடிப்பதற்கு
எவ்வுளவு
ஆண்டுகள் எடுத்துக்
கொண்டனர் எனும்
நிலையை
அறிவோம்.

மனித இனம்
தோன்றியதில்
இருந்து
இன்று வரை
பயன்படுத்தப்படும்
ஆற்றல் வரை,
சூரிய ஒளி ஆற்றலை
ஒரு நொடியில் உற்பத்தி செய்கிறது.

ஆழ்ந்த தீ எனக் கருதப்படுவது
600-800 டிகிரி
செல்சியஸ் வெப்பமானி
ஆக உள்ளது என
அறிவோம்.

‘ தீ ‘
எனும்
பொருள்
அளவுகளில்,
நம் ஐந்து பொறிகளின்
இயல்பு அறிந்து
பழக்கப்படுத்துவோம்.

நீர்,
நிலம்,
தீ,
காற்று,
விண் எனும்
ஐந்து பொருட்களும்
நம் மெய்ப் பொருளை
அறிவினில்,
செயல்படுத்தும்
கருவி ஆகும்.

‘ தீ ‘
முதன்மைப்படுத்தி,
வழிபட்டு,
வாழ்த்திப் பயன்படுத்தும்
மெய் இயல்
பேரறிவு கொண்ட
மனித
இன மட்டுமே.

‘ தீ ‘
மனிதனின்
பதிவுகளில்
பல கற்பனைக் கதைகளில்,
பல அறிவார்ந்த கதைகளாக
உயர் சிந்தனைத் தளத்தில்
நிறுத்தி செயல்படுத்தி இருப்பது
மனித இனத்தின் வரலாறு ஆகும்.

‘ தீ ‘

‘ தீ ‘ ஒரு தீமை !

தீமையா ?

தீ-தீர்ப்பின்
மை-மையமாக
யா-யாவருக்குமிருக்கட்டும்.

தீ -ஆற்றல் உள்ள எரிபொருளாக
மை-மையமாக
யா-யாவருக்கும் அமைப்போம்.

தீ,
உலகமெல்லாம்
உணர்ந்து
சொல்வதற்கு
அரிதான
அறிவுள்ள,
மையமான
பயன் உள்ள
பொருளாக
அமைப்போம்.

“சோதி”
எனும்
பொருளாக
சோதனைச் சாலைகளிலும்
திறம்படும்
எரி பொருளாக
அமைப்போம்.

பதிவர்,
செயல் மன்றம்.

22-01-2020

2020-செயல் மன்றப் பதிவு.

இசை :

‘ இ ‘ எனும் உயிர் எழுத்தில்
‘ இ’ னிமையில்
‘இ’ ன்னிசை பாடி

‘ ச ‘ எனும் மெய் எழுத்தில்
‘ ஐ ‘ எனும் உயிர் எழுத்தைக்கூட்டி
‘ சை ‘ (ச+ஐ) எனும்
உயிர் மெய்எழுத்தாக
நிலைக்கப்பட்டு

‘ இ ‘ எனும் எழுத்தோடு
இணைந்து
‘ இசை’ யில்
இயல்பாகி
இணைகிறது.

உயிர்கள் அனைத்தும்
இன்பத்தின்
ஓசை, ஆகி
‘ இசை ‘
என
அறிவோம்.

மனித இனம்
ஒருங்கிணைக்க,
இசை
‘ இ ‘யற்கையின்
‘ சை ‘கையே.

தினமும்,
நம்மை
தரமாக்கும்,
‘ இசை ‘
அடிப்படை
‘ ஓசை ‘ என்போம்.

படித்தவரோ,
பாமரரோ
இன்னிசை போல்
ஒருங்கிணைப்புக்கு
பூமிதனில்
வேறு ஏது ஒலி?

இயல்பின்
மொழி அறிந்து
இருக்கின்ற
ஒலியில்

இயற்கையின்
சைகையை
இன்ப நாத
‘ இசை ‘
என்போம்.

‘ இன்ப நாதம்,’
‘ தேன் மொழி,’
‘ அழகின் சிரிப்பு, ‘
‘ உடலின் ஆட்டம் ‘
எது,

என அறிந்து
இன்ப
இசையில்
பாடுவோம்.

தொன்மை காலம்
தொட்டு
ஆய்வு பல
செய்து
இணைந்து
இணைக்கின்ற
சைகையாக,

ஏழு துளையினில்,
‘ புல்லாங்குழல் ‘
என்றும்,

துளையினிலை
ஓசை கேட்கும்
விந்தையினையும்
அறிந்து,

க-கனி மொழியில்
ரு-ருதுவாகி

‘ கரு ‘ கொண்ட

அவரவர்
மொழிதனிலே,
இன்னிசை ராகம்
பாடி,

இயங்கும் ஏற்பு உடைய
மனித இனமும்,

இசையில்
‘ ஒருமையை பாடு ‘
என

கண்
உறங்கும்
தளத்திலும்
ஒன்றி இணைக்கும்
இமையாக,
ஒற்றுமையாக
குரல் கொடுக்கும்.

ஏழிசை
இது என
பிஞ்சு மனத்திலும்,
ஓலியின் ‘ உரத்த சத்தம் ‘
இது என
ஆரோசையாக,
‘ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ‘
உயிர் நீட்ட வேண்டும் என்று
உயிர் எழுத்திலும்,
இசைபாடி
இசை ஒலியை ஏற்றிச் சொல்லி,

‘ உறங்க வேண்டும் ‘ என

‘ அமரோசை ‘ ஆக
அதே உயிர் நீட்டு
எழுத்துக்களை இசைதனில்
‘ ஔ, ஓ, ஏ, ஐ, ஊ, ஈ, ஆ ‘
என்று நிலைக்கு திரும்ப
ஒலிக்கும்
ஓசையினை
‘ அமரோசை ‘ என்போம்.

அமர்த்து என்று சொல்லி
ஆரோசையில் தொடங்கி,
ஈர்க்கின்ற முறைதனில்
உலகம் இது என்று
ஊறுகின்ற பிள்ளைக்கும்
என்னென்ன என்று
ஏட்டுதனில் அறிந்திட
ஐயமின்றி வாழ
ஒற்றுமையில்
ஓயாமல் இன்பம் பெற
ஔவை மூதுரை பாடலினையும்

பண்ணிசையாக
இனிய இசை தரும்
என பாடம் சொல்லி
புகட்டிடுவோம்.

‘ இசை ‘ யில்
வியப்பினை
அறிந்திடுவோம்,
பழகிடுவோம்,
பயிற்றிடுவோம்.

‘குரல்’
‘துத்தம்’
‘கைக்கிளை’
‘உழை’
‘இளி’
‘விளரி’
‘தாரம்’

எனும்

இசையை
‘ ஆரோசை ‘ என்போம்.

‘தாரம்,’
‘விளரி,’
‘இளி’
‘உழை’,
‘கைக்கிளை,’
‘துத்தம்,’
‘குரல் ‘

என்று அதே சொல்
திரும்பும் நிலை பெறுவதற்கு

‘ அமரோசை ‘ என அறிவோம்.

உயிர் எழுத்து
ஓசையிலும்
ஒன்றி
ஏழு
இசையிலும் பாடுவோம்.

‘ பண் பாடு ‘
என
பண்
இசைத்து
ஏழு இரண்டு
இசையினை
அழகான ஒலியுடன்
ஒவ்வொரு
உயிரையும்
தனியே
இசைய வைத்து,
நமது ‘ பண்பாடு ‘
நிலைத்து நிற்கிறது.

தொல்காப்பிய காலத்திலும்,

மிடற்றிசை(குரல்)
நரம்புக்கருவி இசை(யாழ்)
காற்றுக் கருவி இசை(குழல்)

ஆகிய கருவிகளின்
மூலமும்
பண் வகைகளில்
திறமைகளை
ஆராய்ந்து
பாடி மகிழ்ந்தனர்.

பறை
எனும்
இசை தாளக் கருவிகளின்
முறைகளின்
மூலமும்
மக்களின் மரபு
இசையை
பறை
சாற்றுவது ஆகும்.

மரபு இசை,
‘ம’க்களின்
‘ர’சனையை
‘பு’ரிய வைக்கும்

‘மரபு’ இசையாக
ஏறத்தாழ
3,000 ஆண்டுகளுக்கு
முன்பு இருந்தே
கலை நுட்பங்களையும்
மகிழ்ச்சியுடன்
‘ பண் பாடு ‘ என பாடி
இருக்கின்றனர்.

பாடல்களை
கருத்தில்
இசைத்தன்மையை
பகுத்து
பண் இசைப்பாடல்களையும்,
இசையிலும்,
கூத்திலும்
இலக்கிய குறிப்புகளிலும்
அறியலாம்.

ஓலிகள்
இலகுவாகி
பலரும்
மெய்தனில்
பண் இசைத்து
ச,ரி,க,ம,ப,த,நி
என தினமும்
‘ இசை ‘
பயிற்றுவிப்போர்
பழக்கமாக ஆகி
பண்பாட்டு
இசை,
கர்நாடக
இசை
மக்களின் ரசனை என
புரிதலாகி நின்று,
இன்று
இசை
இனிய
இசைவான
இசையாக
திகழ்கிறது.

கிராமங்களின்
பண் இசை
கிராமிய இசை என,

பயின்ற இசை
பழக்கமாகி இருக்கும்
இந்நிலையில்
இனிய
இசை எங்கும்
தமிழ் இசையோடும்
ஒலிக்கட்டும்.

தரணி எங்கும்
பயில
தரமான இசையினையும்
தாரளமாக
கற்போம்,
இசைப்போம்.

பதிவர்,
செயல் மன்றம்.

23-01-2020

2020 – செயல் மன்றப் பதிவு:

மனிதம் :

‘ம’=என்ற எழுத்து
‘ ம ‘ கத்துவம் பெற்று
‘ ம ‘ ண்ணில் நல் வண்ணமாக
‘ ம ‘ மலரும் பூமியில்

‘ னி ‘=(ன்+இ)
‘ த ‘ =(த்+அ)

எனும் எழுத்துடன் கூடி

ம(ம+்) ‘ ம் ‘)
என்ற புள்ளியில்
‘ மனிதம் ‘ என ஆகி
மண்ணிலேயே
நல் எண்ணத்தை
எந்த நிலையிலும்
நிலைத்திருக்கத்
தொடர்வோம்.

உயிரக இணைப்பில்
அன்பில் பிணைப்பில்

க-கனியில்
ரு-ருதுவாகி

‘ கரு ‘
பகுதியில்
உருவாகும்
மனித இனம்
தழைக்க
பல் வேறு
உயி்ர் அணுக்கள்
ஓரே
வகையில்
உருவாகும்
இழையங்கள்,

இழையப் பகுதியில்
பெருகுகின்ற
மண்டலங்களின்
தொகுதியாக
இணைந்து
செயல்படுவதன்
மனித உயிர்
சீராக
ஒவ்வொரு
உடல் உறுப்புகளாக
நிலை பெறும் என்பதை
அறிவோம்.

மனித
அக அமைப்பு
ஒத்துழைப்புடன்
வெளிப்புற அமைப்பில்
பெருகும்
உயிர் அணுக்கள்
தலை,
கழுத்து,
மார்பு, வயிறு
என
முழு
பகுதிகளை
மனித குல
வளர்ச்சி
என்போம்.

கைகள்,
கால்கள் போன்ற
அங்க
அசைவுகளும்
இணைந்த
செயல்கள்
மனித உடலை
ஒருங்கி
இணைத்து
உருவாக்கும்
மிக முக்கிய
உயிர் அணுக்களின்
தொகுப்பு என்போம்.

இப்பகுதிகளுடன்
உட்புறமாகக் காணப்படும்
பல்வேறுபட்ட
இழையங்களிலும்
உள்ளுறுப்புக்களிலும்
இணைந்து
உடல் இயங்கச் செய்கிறது
என அறிவோம்.

மனித இன வளர்ச்சி
உயிர் அணுக்களின்
நிலைப்பாடு
என
மகிழ்வுடனே
மனித உயிர் நிலை
தொடர்வோம்.

இயற்கையில்
நிலைத்த
மனித உயிர்
மனிதம் எனும்
சொல்லினிலே
ஒருவரோடு ஒருவர்
இணைக்கப்பட்டு
உலக அளவில்
அனைவருக்கும்
இயற்கை வழங்கும்
நீர், நிலம், காற்று,
நெருப்பு வெளி
சமம்
எனும்
உண்மையில்
ரிங்காரமிடும்
மையமே,
உரிமை பெறும்
இந்த மனிதமும்
என்போம்.

சமம் என
நிலைத்து
இருக்கும்
சமயமும்,
சாதனை புரியும்
திசை நோக்கும்
சாதியும்,
அங்கு அங்கு
என தோன்றிடும்
ஓர் அங்கம்
என்போம்.

அங்கங்கே என்று
ஒவ்வொரு பிரிவும்
கூடி,
ஒழுங்கு
கூட்டாண்மையை
உரிமை இது என
பல
சமயங்களில்
நிலைபெறுகிறது.

ஊகத்தில் உதிக்கின்ற
யுகங்களும்,
கால நேர கணக்கிடும்
மனிதம் குறிக்கப்பட்ட
குறி என்போம்.

மனிதம்

மனிதம்,
உலகில்,
உயிர்களின்
தொகுப்பில்
ஓர் அடையாளம்.

ஒவ்வொரு கால கட்டத்திலும்,
மனிதர்களின்
சிந்தனையின் மூலம்,
அறிவைக் கொண்டு
மேன்மை படுத்தி,
சொல்லால்,
செயலால்
பூமியில் வாழ்கிறோம்.

மனிதர்கள்,
ஒவ்வொரு தோல்வியிலும்
தமது நிலையை
உணர்ந்து, நாகரிகம்,
கலாச்சாரம்,
பண்பாட்டை
வளர்த்துக் கொள்கிறோம்.

அந்தந்த
உயிர்களின்
இனப் பெருக்கம்,
உணர்வின் அடிப்படையில்
தமது பெருக்கத்தை தம்மால்
அறியாமலே விரிவாக்கமாகிறது.

மனித இனம் மட்டுமே
அறிவும்,
உணர்வும்
சேர்ந்தே செயல்படும்
உருவாகுகின்ற
ஓர் இனம்.

மனித சிந்தையின்
மூலம் ஒரு சில
அறிவின்
துணை கொண்டும்,
செயலின் நிலை அறிந்தும்
மனித வளர்ச்சி
இது என
உருவாக்கிக் கொள்கிறோம்.

மனித இனம்
பல ஏற்றத் தாழ்வுகளை கண்டு,
அதில் எவை சிறந்தவை என
ஒவ்வொரு காலப்
பதிவிலும் தம்மை
மேம்படுத்திக் கொண்டு உள்ளது.

மனிதம் மலர
அற வாழ்க்கை
நெறிகளை
வகுத்துக் கொண்டு
வாழும் பொழுது,
பற்பல
ஏற்றத்தாழ்வுகளும் கடந்து,
அனைவரும் சமமே
என சமய
நெறிக் கோட்பாடுகளை
வகுத்துக் கொள்கிறோம்.

மனிதம்
மலர்ந்து
செழிக்க,
அன்பும், அறமும்
சிறந்து விளங்க வேண்டும்.

அன்பு,
பண்பையும்,
அறத்தினால்
பயனையும்
மனித இல்வாழ்க்கை
செழிக்க உதவும்
சிறப்பு நெறிகளாகும்.

சுவாசி, நேசி
என்ற சொற்கள்
மனிதம்
வளர்க்க
உதவும் பண்பாக கருதலாம்.

‘ சுவாசி ‘ , ‘ நேசி ‘ ,
என்ற சொல்லை
‘ கரந்துறை பா ‘ வில்
விவரிக்க வேண்டுமெனில்,

சு-சுகாதாரத்துடன்

வா-வாழ்வதற்கு உண்டான

சி-சிறப்பே மேற்கொள்வதே

நமது
வாழ்வின்
சுவாசமாகக் கொள்வோம்.

நே-நேயமுள்ள

சி-சிநேகத்தை

வளர்ப்போம்.

மனிதம்,
சுவாசிப்பதையும்,
நேசிப்பதையும்
மனதார உறவுகளாக,
விரிவாக்கிக் கொள்வோம்.

பதிவர்,
செயல்மன்றம்.

24-01-2020

2020: செயல் மன்றப் பதிவு

மூளை:

‘ ம ‘னித
‘ ம ‘னத்தினுடனே
‘ ம ‘ எனும் எழுத்து
மூ(ம+ஊ) எனும்
‘ மூ’ ல
உயிர் மெய் எழுத்தோடு
இயங்க

‘ ள ‘ – எனும் எழுத்தில்
ளை-(ள+ஐ)
ஐவகை
புலன்களுடனும்
இழைந்து

‘ மூளை ‘ என்னும்
பொறி,
இயந்திரத்தில்
தொடர்ந்து
இயங்கி

மனித
‘மூளை’ யினுள்
வரையறைக்குள்,
இழைந்து
இயக்குகிறது
என்போம்.

கால நேரத்தில்
காற்றின் துணை கொண்டு
உயிர்ப்புடன்
விளங்கும்
மனித இனம்,

அன்பையும்
பண்பையும்
தவழும்
இயல்பினது
மனித
உறுப்புகளின்
துணையுடனும்,

‘மூளை’
எனும்
விந்தை
இழைகளுடன்
கூடிய,

கைம்மாறு
கருதாத
‘ உழைப்பே உறுதி ‘
என்று போராடி,

தொழில்
பல புரிந்து
நிலைக்கும்
செயல்களில்
பயன்களை அறிந்து,

மூளை எனும்
மனித உறுப்புகளில்
இயலும்
தொடர்
செயல்களுடன்
இயங்கும்
இயக்கம்
என அறிவோம்,
செயல்படுவோம்.

மனித
‘ மூளை ‘
நரம்பு மண்டலத்தின்
தலைமை
பொறுப்பில் ,
ஒரு
வலைப்பின்னலின்
மனித
உறுப்புகளில்
சிகரமாக
பிணைந்து
நல்இருப்பு
இயந்திரம்
ஆகும்.

மனித மூளை,
விழிப்புணர்வு
இன்றியும் இயங்கும்.

இச்சை
இன்றி
இயங்கும்
செயற்பாடு
மூச்சுவிடுதல்,

குறிக்கோளுடன் இயங்கும்
சமிபாட்டுச்சுரப்பி,
இதயத்துடிப்பு,
கொட்டாவி
போன்ற செயற்பாடுகளுக்கும்
இயக்க வைக்கும் என்போம்.

விழிப்புணர்வுடன்
நிகழும் சிந்தனை,
புரிதல்,
ஏரணம்
என அறிவு
அடிப்படையில்
ஓர் உண்மை
உயர்நிலை
செயற்பாடுகளையும்
கட்டுப்படுத்தும்
என்போம்.

மனிதனின் மூளை,
பாலூட்டிகளிலும்
ஒன்றி,
ஒன்று
என காணப்படினும்,

மனித
உடல்
எடை-மூளை
மற்ற வகை உயிரின
விலங்கு
அளவு விகிதத்தில்
சராசரியாக
5மடங்கு பெரியது
என்போம்.

மனித
மூளையின் நன்கு
விரிவடைந்த
பெருமூளைப் புறணிப் பகுதியாகும்.

நரம்பிழையத்தால்
உருவாகி,
பல
தொடர் மடிப்புகளை
கொண்ட இப்பகுதி
மனிதனின்
முன்மூளையில்
அமைந்துள்ளது.

மனிதனைப் பிரித்துக்காட்டும்
சிறப்பு செயல்பாடுகளான,
தற்கட்டுப்பாடு, திட்டமிடல்,
பகுத்தறிதல்,
கற்றறிதல்
ஆகியவற்றிக்குக் காரணமான
மூளையின்
முன் மடல்கள்
மனித மூளையில்
நன்கு விரிவடைந்து
காணப்படுகின்றன.

கண்
பார்வைக்குக் காரணமான
பகுதியும்
மனித மூளையில்
நன்கு வளர்ச்சி
பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

மூளையின்
படிவளர்ச்சியில்,
மிக முந்திய
சிறிய பாலுட்டியான
மூஞ்சூறில்
இருந்து
மனிதக் குரங்கு வழியாக
உயர்நிலை
விலங்கினங்களில்
ஒன்றான
மனிதன்
வரை
மூளை-உடல்
அளவு விகிதம்
படிப்படியாக உயர்ந்துள்ளது;

இதை
மூளைப் பருமனாக்கம்
என்று அழைக்கிறோம்.

மனித மூளையில்
உள்ள
சுமார் 50–100 பில்லியன் நரம்பணுக்களில்,
சுமார் 10 பில்லியன் நரம்பணுக்களுள்
10ல்10 மடங்கு
புறணிக் கோபுர உயிரணுக்கள்
ஆகும்.

இவ்வுயிரணுக்கள்
தமக்குள்
குறிகைகளை
அனுப்பி
கொள்ள ஏறத்தாழ
100 டிரிலியனில்
கிட்டதட்ட
10ல்14 மடங்கு
நரம்பிணைப்புகளைப் பயன்படுத்துகின்றன.

மூளையின்
எந்த உறுப்பின்
செயல் புரிய வேண்டும்
என இடம் அறிந்து,
அந்த உறுப்பு
செயல்பாடுகளை
இயக்கி அவற்றின்
ஒன்றுடன் ஒன்று
பொருந்தி தொடர் செயல்புரிவதாகும்.

பெருமூளையின்
ஒவ்வொரு
அரைக் கோளமும்,
உடம்பின் ஒரு பாகத்தை
கட்டுப்படுத்துகிறது.

வலது பக்க மூளை
உடம்பின்
இடப்பக்க உறுப்புகளையும்,
இடப்பக்க மூளை
உடம்பின் வலப்பக்க உறுப்புகளையும்
கட்டுப்படுத்தும் என்பதை
அறிவோம்.

இதே
முறையில்,
மூளைக்கும்,
முதுகுத் தண்டுக்கும்
இடையே உள்ள
இயக்க இணைப்புகளும்,
புலன் இணைப்புகளும்,
மூளைத்தண்டின்
நடுப்பகுதியில்,
வலது இடதாகவும்,
இடது வலமாகவும்
இடம் மாறி செயல் புரியும்
என்று அறிவோம்.

ஒவ்வொருவரின்
மனித
மூளை உயிரகபகுதியில்
ஒன்றி இணைந்து
ஓராயிரம் இயக்கங்களும்
இயங்கும் வரை ஏற்கும்.

அண்டத்தில் இயங்கும்
பல எண்ணில்லா இயக்கங்களின்
நிலை போல
மனித
மூளை
நமது உடலின்
பல இயக்கங்களில்
செயல்களை
ஒருமைபடுத்துகிறது.

பதிவர்,
செயல் மன்றம்.

25-01-2020

2020 செயல் மன்றப் பதிவு

” அமை: ”

” அ “எனும் உயிர் எழுத்து

‘அ’கிலத்தில்
‘அ’ண்டத்தில் நிலைத்து

” ம ” எனும் எழுத்துடனும்
” ஐ ” எனும் எழுத்துடனும் இணையும்
பொழுது
” மை ” (ம+ஐ)
என
மையமாக அமைந்து

அகிலத்தின்,
அண்டத்தின்
மையமாகி

‘ அமை ‘
என்று
அண்டத்தின்
செயல்முறையாக
‘ அமைப்பு ‘
எனும்
செயல் முறையில்
நிலை பெறுகிறது.

” அ-அகிலத்தின்
மை-மையம். ”

‘ அமை ‘

என்ற
சொல்லை
அமைப்போம்.

உலக
அமைவாக
இரு.

” உலகமே ”

” உ-உருவ வடிவ பூகோளத்தின்
ல-லட்சிய கோட்டி்ல்
க-கடந்து வட்ட பாதையில்
மே-மேலும் உருண்டு செல்லும் முறை. ”

என்போம்.

உலக உருவம்
லட்சியக் கோடுகளில்
கடந்து செல்கிறது

என அறிவோம்.

உலக
மைய
உருவகமான
அமைப்பு,

தொடர்
செயல்முறையில்
புவியின் இயக்கம்
“அமை”ப்பு நிலை ஆகிறது
என அறிவோம்.

வளர்ச்சி
பரிணாமத்தின்
நிலைபாடு.

உயிர்களின்
செயல்பாடு
“அமை”ப்பு
பரிணாமத்தின் தோற்றத்தில்
நிலை பெறுகிறது.

கிரக,
நட்சத்திர
மண்டலங்களின்
நிலையான நடைமுறை
ஒவ்வொன்றின்
உயிர்செயல்களின்
செயல்முறைகளில்
உருவாகிறது என
அறிவோம்.

உயிரணுக்கள்
கருவின் நிலைப்பாடு
என்பதையும் அறிவோம்.

கருமை துளையில்
அகண்ட ஓளிகற்றை
நிகழ்வின் எல்லையை
பூமியில் இருந்து,
நிகழ்படம் எடுக்கும்
நம் அறிவின் இயல்பில்
“அமை”வது
தான்
என்பதை அறிவோம்.

கருந்துளை
அமைப்பின்
ஈர்ப்பு விசை
எந்த பொருளின்
அமைவிலும் உள்ளது
என அறிவோம்.

பேரொலி
மெய்
இயல்பு
“அமை”ப்பு,

அண்ட நுண் அலை
பிண்
அணி ஆய்வின்

செயல்பாடுகளில்
உறுதி
செய்முறை
“அமை”ப்பில்
நிலைப்பட்டது
என அறிவோம்.

ஒரு பத விரிவாக்கம்
ஏற்படும் போது,

தற்போதைய
விஞ்ஞான
புரிதலின் படி,

வேதிய இயல்பு பொருட்கள்
மேகங்களில் அமுக்கப்பட்டு,

விண்மீன் திரள்களாக
முன் ஓடிகளில்
பால் வழி மண்டலங்களில்
நட்சத்திரங்களின்
கூட்டங்களின்
“அமை”வுகளுடன்
சுழன்று உள்ளது

என
அறிவோம்.

நட்சத்திரங்களில்
ஒரு
சில,

நமது சூரியன் உள்பட
பொருளின் தட்டை
சூழல்,
வட்டத்தில்
“அமை”ந்து சுழல்கிறது
என அறிவோம்.

நமது சூரியன்
வாயுவும்,
தூசியும் சுழன்று இருக்கும்
இந்த சுழல் வட்டுக்குள்
மோதி,

சிறு துகள்கள்
ஒன்றி இணைந்து
மிகப் பெரிய “அமை”ப்பே
சிறிய கிரக “அமை”ப்பு,

பல கி.மீ விட்ட அளவில்
செல்லக் கூடியதாக
அமைகிறது.

மிகப் பெரிய
9 கிரகங்கள்
பாறை வடிவில்
“அமை”பவை
சூரியன் அருகிலும்,

வெகு தூரம் வாயுக்களால்
கிரக வடிவ
“அமை”ப்பு கொண்டவை

தொலை தூர
சுற்றுப்பாதைகளில்
சுழன்று “அமை”வில் உள்ளது
என அறிவோம்.

ஒரு பதத்தின்
வயது,

வெளி மண்டலம்,
சூரிய அமைப்பு,

புவியின்
அகவைகளை

நவீன விஞ்ஞான
முறைகளில்
தெரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு
வெளி மண்டலங்களின்
இடையே பிரிந்து
இருக்கும்
உள்ள திசை
வேகங்களின்
அளவை மட்டும்
அறிந்து விட முடியும்.

ஆனால் சரியான
இரு வெளி
மண்டலங்களின்
இடையே
சுழன்று கொண்டே
இருப்பதால்
தூரத்தின்
அளவு
நிச்சயமற்றது,

திசையின்
வேகத்தை
கணக்கிடலாம்
என அறிவோம்.

கடந்த சில
பத்தாண்டுகளின்
ஆராய்ச்சியில் கூட,

‘ஒரு பதம்’ என்ற
நமது அண்டத்தின் அகவையை
7 லட்சம் கோடி
ஆண்டுகளாகளில்
இருந்து 20 லட்சம்
ஆண்டுகளாக இருந்தது,

அண்மை கால
கணக்கெடுப்பில்
10 லட்சம் கோடி
ஆண்டுகளில்
இருந்து 15 ஆண்டுகள்
என கணக்கெடுப்பில்
உள்ளது என அறிவோம்.

அண்டத்தின்
அமைவதும்
பிண்டத்தின்
“அமை”வதும்

நம் அமைவின்
சூழல் நிலை
என்பதை
அறிவோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

26-01-2020

2020 செயல் மன்றப் பதிவு

ஒருமை–>ஒற்றுமை

‘ ஒ ‘ என்ற உயிர் எழுத்தில்
ஒன்றாகி நின்று
ஒன்றி இணைந்து
ஒற்றுமையுடன் இருப்போம்.

‘ ர ‘ என்ற எழுத்துரு
‘ உ ‘ என்ற உயிர் எழுத்தில்
‘ ரு’ (ர+உ) என்ற
உயிர் மெய்
எழுத்துருவுடன் சேர்ந்து,

‘ ஒரு ‘ என்று
‘ ஒரு ‘ பொருளில்
‘ ஒரு ‘ பதத்தில்
‘ ஒரு ‘ உருவத்திலும்

‘ஒற்றுமை’க்கு குரல் கொடுப்போம்.

‘ ம ‘ எனும் எழுத்துரு
‘ ஐ ‘ எனும் உயிர் எழுத்தில்
‘ மை ‘ (ம+ஐ) எனும்
‘ மை ‘ யம் ஆகி

‘ ஒருமை ‘ என
‘ ஒருமை ‘ யிலும்
ஒன்றி இணைந்து
‘ ஒற்றுமை ‘யை
என்றும் பாடுவோம்.

‘ ஒருமை ‘ என்ற
அமைப்பு நிலை
உண்மையை
உரக்கச் சொல்லும்
ஒற்றுமையை கடைபிடிப்போம்

‘ ஒருமை ‘ தன்மை எனும்
இலக்கு நிலை
அக்கணத்தே
நிலைத்து நிற்கும்
இலக்கணம் எனும்
மொழி பிரவாகத்திலும்
ஒரு பொருள் என நின்று
அறிந்து
உணர்த்தும்.

‘ ஒருமை ‘
ஒரு சொல்லின்
மையம்.

‘ ஒருமை, ‘
ஒரு பொருளின்
தனித்தன்மையைக்குறிக்கும்.

‘ ப் ‘ எனும் எழுத்துருவில்
‘ ஆ ‘எனும் உயிர் எழுத்துருவில்
‘ஆ’யிரம்
‘ஆ’யிரம்
என உயிர்ப்புடன்
ஓங்காரமாக
ஒலித்து
பா(ப+ஆ)
பா என
பாக்களை
மனதார
மனித இனம்
பாடும் இயல்பினை
நாமும் அறிவோம்,
பாடுவோம்.

‘ பா ‘வில்
‘ பா ‘ டும்
பண்பினை
பல நிலைகளில்
அறிந்து
உணர்த்தும்
பக்குவத்தை
நாம் அறிவோம்.

ஒன்றி இணைந்து
‘பா’வை இணைக்க

‘ ட ‘ என்ற எழுத்துருவில்
‘ உ ‘ எனும் உயிர் எழுத்தில் கலந்து
‘ டு ‘ (ட+உ) எனும் உயிர் மெய் எழுத்துரு
‘ பா ‘ வில்
‘ பா ‘ட்டினில்
பாட்டை
இணைக்கும்
‘ பாடு ‘ என
இணைக்கும்
பாங்கினை
அறிந்து
கொள்வோம்.

ஒருமையில்
ஒன்றி
பாடி
பாவினிலும்
ஒன்றே,

*ஒருமைப்பாடு*
என
‘ பா ‘ ட்டினிலும்
அறிந்து
உணர்ந்து
ஒருமைப்பாட்டினை
மேம்படுத்துவோம்.

*ஒருமைப்பாடு*
என
சொல்வதையும்

*செயலாக*

செ-செவ்வனே
ய-யதார்த்தத்தை
லா-லாவகமாக
க-கடைபிடிப்போம்.

‘ செயல் ‘
ஒவ்வொருவரது
வாழ்வில்
நிலைப்படும் தன்மை
என்போம்.

ஒன்றி
நமது
செயலாக்கமாக
இருத்தல்
அவரவரது வாழ்வின்
செயல்பாட்டிற்கு ஒற்றுமை புரியும்.

‘ அருமையாக ‘

அ-அன்பின்
ரு-ருசியை
மை-மையமாகக் கருதி,
யா-யாவரும்
க-கற்றுணர்வோம்.

மனித குல ஒற்றுமை நோக்கி
நமது பயணத்தை தொடர்வோம்.

கருமையில்,
காலத்தே,
நேரம்,
இடம்,
வெளிச்சம்
எங்கே என
மனித நிலை அடைவோம்.

கதை,
கவிதை
கட்டுரைகளில்
‘ஒற்றுமை’யை என்றும் நிலை நாட்டுவோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

27-01-2020

2020-செயல் மன்றப் பதிவு

மொழி:

மனித அறிவும்,
உணர்வும்
‘ ஐவகை ‘
‘ தலைமை ‘
அகத்தின்
செயல்பாட்டில்
உள்ளது என அறிவோம்.

‘ மொழி ‘

‘ ஒலியை எழுப்பி
மனித அறிவுநிலையில்
‘கரு’த்தை தெரிவிக்கிறது ‘

என அறிவோம்.

‘ மொழி ‘

‘ ம ‘ எனும் எழுத்துரு
‘ ஒ ‘ எனும் உயிர் எழுத்தில்
ஒலி வடிவம் பெற்று,
‘மொ'(ம+ஒ) என சேர்ந்து
‘மொ’ட்டாக உருவ வடிவில்
நிலை பெறுகிறது,

என அறிவோம்.

மொட்டுகளாக,

மெட்டுகளாக
பெறும் ஒலி நிலை,

வழி, வழியாக
ஒவ்வொருவரும்
பின்பற்றும் நிலையில்,

‘மொ’ட்டு
உருவ வடிவம்
வ’ழி’, ‘வ’ழி’யாகி
‘மொழி’ என
ஒவ்வோரு எழுத்துருவும்
பெறுகிறது என அறிவோம்.

ஒவ்வொரு
மனிதர்களும்
இயற்கை நிலையில் நின்று
‘ மொ ‘த்தமாக
வ’ ழி ‘,
வழியாக இயற்கை நிலையில்
பின்பற்றுவதை
‘ இயற்கை மொழி ‘ என்போம்.

‘ ம ‘ க்கள்
‘ ர ‘ க வாரியாக
‘ பு ‘ ரிதலை

‘ மரபு ‘ என்போம்.

ஒலி எழுப்பி,
உதடு,
நாக்கு
உதவியுடன்,
காது மூலம்
கேட்கும் நிலை
அறிந்து,

பல
நுண்ணிய எண்ணில்லா நரம்புகளின் (நு.எ.ந)
துணையுடன்,

‘ மூளை ‘
எனும் தலைமை செயலகத்தில்
இருந்து
இடும் கட்டளையை,
ஓலியாக எழுப்பி,
வாய் மூலம்
எழுப்புகின்ற
ஒலி
அந்தந்த பகுதிகளில்
வாழும் மக்களில்
நிலைப் பெறுகிறது,

என அறிவோம்.

எழுப்பும் ஒலி,

எங்கெங்கு பதியப் படுகிறதோ,
அந்த பதிவுகள் நிலைப் பெறுவது,

ஒலிகள்
வரி வடிவமாகி,

வரி வடிவம்
எழுத்துருவில்
ஆங்காங்கே
நிலைப் பெறுவதே
‘ இயற்கை மொழி ‘
என்போம்.

மனிதருடைய
இயற்கை
‘ மொழி’ களில்,
ஒலியும்,
கை அசைவுகளும்,
குறியீடுகளாகப் பயன்படுகின்றன.

இவ்வாறு எழுப்பபடும்
ஒலிகளை
எழுத்து வடிவமாக மாற்றி
‘ எழுத்துரு ‘
நிலை பெற
அமைக்க முடியும்
என அறிவோம்.

சைகைகள்,
மனிதருடைய
மொழிகளில் இயங்கும்
மற்ற குறியீடுகள்,

சொற்கள் என்றும்,

அச்சொற்களின் விதிகள்
இலக்குகள் நோக்கி,
அந்தந்த கணமே
குறியீடுகளில் தோன்றும்
வேற்றுமை இலக்குகளையும்
நிர்ணயித்து,

இலக்கணங்கள் என
அழைக்கிறோம்.

மொழி,
ஒரு
கருத்துப் பரிமாற்றக் கருவி.

முழுமையாக அறிவினாலும்,
செயல்பாடுகளிலும்,
அந்தந்த கால,
இடத்தின் பதிவிற்கு ஏற்ப
இயற்கை மொழியாக உருவாகிறது.

இயற்கை கூறுகளின்
விளக்கமே மொழி ஆகும்.

இயற்கை ‘ மொழி ‘
பேசும் இனத்தின்
அரசு இயல்,
கலை,
வரலாறு,
சமூகநிலை,

பழக்கவழக்கம்,
ஒழுக்கநெறிகள்
மற்றும் எண்ணங்களில் தோன்றும்
பல வாழ்வியல் கூறுகளையும்,

பண்பாட்டு நிலைகளையும்
வெளிப்படை விளக்கமாகவும்,
உள்முகச் செய்திகளாகவும்
செயல்பாடுகள்
கொண்டு விளங்கி கொள்கிறோம்
என அறிவோம்.

மனித மொழியானது
இயற்கையான மொழியாகும்.

மொழியினை கற்க
முற்படும் அறிவு இயலுக்கு
மொழி இயல்பு என்போம்.

மொழியின்
வளர்ச்சிப்பாதையாக
பேச்சு,
எழுத்து,
புரிதல், மற்றும்
விளக்கம் எனும்
படிகளைக்கொண்டது.

மனிதர்களின்
பயன்பாட்டுக்காக
இயற்கை மொழிகளின்
இலக்கணங்களாக அமைகிறது.

மொழி
மனித இன பிறப்பு,
இறப்பு,
வளர்ச்சி,
இடம்பெயர்தல்,
மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம்
என பன்முகம் கொண்டது.

எந்த ஒரு மொழி
மாற்றத்திற்கோ
அல்லது
மேன்மையுறுதலுக்கோ
இடங்கொடாமல்
இருக்கிறதோ
அம்மொழி
‘ இறந்தமொழி ‘ எனப்படும்.

மாறாக,
எந்த ஒரு
மொழி தொடர்ந்து
காலத்திற்கேற்றாற்போல்
தனக்குள்
மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ
அம்மொழி வாழும்
மொழியாக கருதப்படும்.

ஆடலினாலோ
பாடலாலோ உணர்த்தப்படும்
‘ மொழி ‘
பேச்சொலி
வகைக்குள் அடங்குகின்றது.

மேலும்
இலக்கணம்
என்பது
ஒரு மொழியில்
சொற்களின் உற்பத்தி
மற்றும் பயன்பாட்டை
அந்த சொற்களை இலக்கை
அக்கணமே
நிர்வகிக்கும் விதிமுறைகள்
தொடர்பான நடைமுறை ஆகும்.
இந்த விதிமுறைகள் ஒலிகளுக்கும்,
அந்த சொற்கள் தரும்
பொருளுக்கும் பொருந்தும்.

ஒலிக்கும்
ஒலி அமைப்புகளின்
அமைப்பு சார்ந்த
குரல் இயல்,

சொற்களின் அமைப்பு
மற்றும் உருவாக்கம்
சார்ந்த உருபனியல்,

சொற்றொடர்கள் உருவாக்கம்
மற்றும்
அமைப்பு சார்ந்த
தொடர்ந்து இயல்பு
ஆன உட்கூறுகள்
சார்ந்த துணைவிதிகளையும்,

இலக்குகளை
அந்த கணமே
இலக்கணம்
வரையறை செய்கிறது.

பேச்சு,
மனித இனம்
எளிதில் பின்பற்றலாம்.

மனித இன மூளையில்
உள்ளார்ந்த அறிவாக
“மொழிப் பிரிவு”
ஒன்று உள்ளதாகவும்,

அதற்கான அறிவு,
எழுத்தைவிடப் பேச்சைக் கற்பதன்
மூலமாகவே கிடைக்கிறது
என்றும் அறிவு
இயல்பாளர்கள் கருதுகின்றனர்.

எழுத்து
‘ மொழி’ யைப் பயில்வது
கடினமானது.

எழுத்தை கற்றுக் கொள்வதே

‘ம-மக்களின்
தி-திருப்புமுனை ‘ ஆகக் கூடிய

‘ மதி ‘ஆகும்.

பெருமளவு
மக்கள் பேசும் பேச்சு,
மொழித் தரவுகளை உருவாக்குவதும், கண்டுபிடிப்பதும்
கடினமாகும்.

எழுத்து முறைமை
ஆக ஆய்வுக்கும் பயன்பாட்டிற்க்கும்
என்றும் உட்பட்டதே ஆகும்.

பதிவர்,
செயல் மன்றம்

30-1-2020

2020 – செயல் மன்றப் பதிவு :

பொருள் :

‘ ப ‘ எனும் எழுத்து உருவில்
‘ ப ‘ல வாறு
‘ ப ‘லவற்றிற்கு
‘ ப ‘ல நிலைகளிலும்
பயனுற,

‘ ஒ ‘ எனும் உயிர் எழுத்தில்
‘ ஒ ‘ ன்றுடன்
‘ ஒ ‘ன்றாகி
‘ பொ(ப+ஒ) ‘ என்ற
எழுத்து உருவில்
உயிர்மெய் எழுத்தில் நிலைப் பெற்று,

‘ ர ‘ என்ற எழுத்து உரு
‘ உ ‘ எனும் உயிர் எழுத்தில் சேர்ந்து
‘ ரு (ர+உ) ‘ என உருப் பெற்று
‘ பொ ‘ எனும் எழுத்தாகி
‘ பொரு ‘ என நிலையாக பொருந்த

‘ ள ‘ என்ற எழுத்து உரு
‘ ள்(ள+்) ‘ எனும் மெய் எழுத்துடன்
‘ பொரு ‘ எனும் சொல் ‘ ள் ‘ எழுத்து உருவில்
‘ பொருள் ‘ ஆக நிலை பெறுகிறது.

‘ பொருள் ‘ என்ற சொல்
பொருட்களாக
உலகில் நிலை பெற
‘ பொருள் ‘ பயனுறும்
நிலையில்
பல காலம் பயன் பெறும்
பொருட்கள்,

மனித இனம்
நிலைப்படும் என்பதை
அறிந்து,

தமது தொடர்
செயல்களால்
நிலை பெறச் செய்கிறது
என்பதனை
அறிவோம்.

வாழ்விற்கு
பொருள் தரும்
கூறுகளை விளக்கிக் காட்டுவது
பொருள் இலக்கணம்,

இலக்கு
அக்கணமே
ஆகும்.

‘ பொருள் ‘
இலக்கணம்
தமிழ் மொழியில் உள்ளது.

பாடல்களில்
வரும் பொருள்
எப்படி எல்லாம்
இருக்கும் என்று
எடுத்துக் கூறும்
‘ பொருள் ‘
இலக்கணம்
தமிழுக்கு சிறப்பு ஆகும்.

பொருள் இலக்கணம்
அகப்பொருள்,
புறப்பொருள் என்று அறிவோம்.

அகப்பொருள்
என்பது
மனித இனத்தில்
ஓர் ஆணுக்கும்
ஒருபெண்ணுக்கும்
இடையில்
ஏற்படும்
காதல்
உணர்ச்சியைப் பற்றிக்கூறுவதாகும்.

அகப்பொருள்
பாடல்களில்,
தலைவன்,
தலைவி,
காதலன்,
காதலி
என அகப்பொருள்கள்

திணை,
பாடல்,
நாடகம்,
கதை,
திரைத்துறை
என
நிலைப்படுக்கப்படுகிறது.

புறப்பொருள் என்பது
வீரம்,
போர்,
வெற்றி,
கொடை,
நிலையாமை
அறிவியல் பொருள்
போன்ற
புறப்பொருள்களைக் கூறுவதாகும்.

ஒரு ‘ பொருள் ‘
தாமே தனித்து நிற்பதை
‘ தனி உருபன்கள் ‘ என்போம்.

ஒரு
பொருளுடன்
‘ ஐ, ஆன், கண் ‘
எனும் வேற்றுமை
உருபுகள்
‘ கட்டு உருபன்கள் ‘
என்போம்.

பயன் பெறும்
பொருட்களே
நிலை பெறுகின்றன.

நிலை பெறும் சொற்கள்,
வழி,
வழியாக
மக்களின் பழக்கத்தில்
சொல்வதே நிலைத்து நிற்கும்.

மனிதர்களின்
பழக்கத்தில் உள்ள
சொற்களே
தேர்ச்சிப் பெற்று
பேச்சிலும்
சொற்களிலும்
எழுத்திலும் நிலை பெறுகிறது
என அறிவோம்.

வணிக உற்பத்திக்கு
பயனுறும் போது
பொருட்கள்,

பழைய
பழக்கத்தில் உள்ளது
மறைந்து,

வெவ்வேறு
சொற்கள்
வணிக,
வியாபாரத்திலும்
நிலை பெறுகிறது.

மனித இனத்தில்
இயற்கையின்
சூழலால்
நிலைக்கப்படும் பொருட்கள்,

அறிவாற்றலின்
செயலினால் பெறப்படும்
பொருட்கள்,

காலத்திற்கு
ஏற்ப
பயனுறும் பொருட்களாக
நிலைக்கப் பெறுகின்றன.

பொருட்களை
அறிவதற்கு

‘ பொருள் ‘ அறிவியல் என்போம்.

அணுக்கருப் பொருள்கள்,

அயமின் பொருட்கள்,

ஆவணப் பொருட்கள்,

இயற்கை பொருட்கள்,

உலோகப் பொருட்கள்,

உற்பத்திப் பொருட்கள்,

ஊர்தி பொருட்கள்,

எழுது பொருட்கள்,

கருத்தியல் பொருட்கள்,

கலைப் பொருட்கள்,

கைவினைப் பொருட்கள்

செயற்கைப் பொருட்கள்,

தொல்பொருட்கள்,

மீக்கடினப் பொருட்கள்,

வானியல் சார் பொருட்கள்,

வேதிப் பொருட்கள்

என கண்டு பிடிப்பாளர்கள்

பொருட்களின்
நிலைப்புத் தன்மை அறிந்து,

பயன்பாட்டிற்கு
தக்க வாறு
நிலைக்கப்படுகிறது
என அறிவோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

31-01-2020

2020 : செயல் மன்றப் பதிவு :

அறிவு :

‘ அறி ‘ என்ற சொல்
ஒரு செயலைக் குறிக்கிறது.

‘ அறிவு ‘ என்ற சொல்
ஒரு நிலையைக் குறிக்கிறது.

‘ அறி ‘
என்ற சொல்,

கற்றுணர்ந்த செயல்
அனுபவத்தில்
பெறப்பட்ட
உண்மைகள்,

தகவல்களை
சேகரித்து
தொடர் செயல்களில்
ஈடுபடுவதே
ஆகும்.

‘ அறி ‘
என்ற சொல்லில்
‘ வ ‘ எழுத்து உருவில்

‘வ’ந்து
‘உ’யிரில் உணர்ந்து
வு (வ+உ)
என்ற வடிவத்தில்,

‘ அறிவு ‘

என்ற சொல்லாக
ஒரு கருத்தை
நடைமுறை படுத்துகிறது
என்போம்.

‘ அறிவு ‘

பொருள்
சார்ந்தோ,

கருத்து
சார்ந்தோ
இருக்கலாம்.

அதிகமாகவதோ
அல்லது குறைவதோ
அறிவை பயன்படுத்தும்
கால அளவை பொறுத்தது.

மெய் அறிவு புரிதலின்
நிலையில்
நன்கு விளங்கும்.

நியாயப்படுத்தப்பட்ட
உண்மையான
நம்பிக்கை
அறிவினால்
ஏற்றுக் கொள்ளப்படும்.

‘அறிவு ஒரு
கருவி,
துன்பத்திலிருந்து
மக்களைப் பாதுகாக்கும்
கருவி.

செவி
வழிக்கேட்கும்
செய்திகளை,

அவற்றில்
உள்ள நன்மை,
தீமைகளை ஆய்வு
செய்வது அறிவு.

ஏற்றுக் கொள்ளக் கூடிய
நன்மைகளை
மட்டும்
ஏற்பது
அறிவுடைமை.

அறிவு, ‘
செவி
வழி கேட்டு
நன்மை,
தீமைகளை
உணர்ந்து
ஆராய்ந்து,

நன்மைகளை செயலாற்றும்
தன்மை கொண்டது.

அறிவு என்பது
மனித இனத்தில்
அனைவராலும்
பகுத்து
அறிந்து கொள்ளக்கூடிய
ஒன்று.

அறிவு செயலாக
மாறுவது,
ஒவ்வொருவரின்
நிலைப்பாடே.

அறிவை,
இயற்கையறிவு,
உணர்வறிவு,
படிப்பறிவு,
பட்டறிவு,
கல்வியறிவு,
தொழில்சார் அறிவு,
துறைச்சார் அறிவு,
அனுபவ அறிவு,
பொது அறிவு,
ஆள்மனப்பதிவறிவு

என
பல்வேறு
வகைகளாகப் பிரிக்கலாம்.

இந்தப்பிரிவுகளில்
மேலும்
பல்வேறு
உட்பிரிவுகளும் அடங்கும்.

மனிதன்
பிறக்கும் போது
தம் உடலில் உள்ள அடிப்படை
செல்களில் இருந்து பெற்று
இருப்பதை,

மேலும் நிலைப் பெற
உலகளாவிய
நிலைகளை
அறிந்து செயல்படுவதே
‘ இயற்கை நிலை அறிவு ‘
ஆகும்.

கற்கும்போது
ஒவ்வொரு பொருட்களில்
உள்ள
சுற்றுப் புறச்சூழலில்
உள்ளார்ந்த
செயல்பாடுகளை
அறிவது
நூலின்
அறிவின்
மூலமும் நிலைப்படும்.

அறிவில் நிலைப்படுவது
ஓவ்வொருவரின்
தொடர் செயல்களை
ஆராய்ந்து,

ஆய்வில்
அறிந்ததை
இயல்பின் அறிவில்
உருப்பெறும்.

பொருட்களின்
நுட்பம்,
அதன் இயல்பான
வடிவமைப்பு
செயல்கள் ஆகும்.

நுண்ணறிவில்,
அந்தந்த
பொருட்களின் செயல்பாடு
எப்படி
என்பது தொடர்
செயல்களில்
அறிந்து கொள்ளலாம்.

தொடர்ந்த செயல்கள்,
ஒவ்வொருவரின்
அனுபவத்தில் பட்டறிவு
துணை கொண்டு,

எல்லா
பருவங்களிலும்
அறிவுடன்,
உணர்வோடும் நிலைப்படும்.

வாழ்வின்
வாயில்தோறும்
மனிதனை மாட்சிமைப்படுத்துவது
அறிவே ஆகும்.

அறிவில்
இயல்பாவது,
நம் செயல்களின் தொடர்ச்சியே.

ஒவ்வொருவரின்
அறிவின்
தொடர்
செயல்களிலேயே
நிலை பெறுகிறது.

பொருட்களின்
நிலைப்புத்தன்மை
அவரவர்களின்
நல்ல செயல்பாட்டிலேயே
வாய்ப்புகள் உருவாகும்.

பதிவர்,
செயல் மன்றம்.

Featured

தொல்காப்பியம் –எழுத்து அதிகாரம்- கரந்துறையில்

மெய்ப் பொருள் காண்- தொல்காப்பியம்

1. எழுத்துக்களின் வகை:

‘ தொல் ‘ என்ற சொல்லுக்கு ‘ தொன்மை ‘
என்ற பொருளாகும்.

‘ காப்பு ‘ என்ற சொல்லுக்கு ‘ காப்பு, காத்து ‘ நிற்கும் எனப் பொருள்படும்.

‘ இயம்பு, இயல்பு ‘ என கருத்தோடு
‘இயம் ‘ என்றாகும்.

‘ தொல் ‘ என்ற சொல்லோடு ‘ காப்பு ‘ என்று
சொல்லை இயல்பாக சேர்த்தால் ‘ தொல்காப்பியம் ‘
என உருப் பெறுகிறது.

தொன்மை காலத்தில் இருந்து தமிழ் மொழியை எழுத்துருவில் மரபு உருவில் காத்து நிற்பது தொல்காப்பியம் ஆகும்.

‘ தமிழ்த் தானே வரும் ‘ தமிழர்களாகிய நாமறிவோம்.’
குழந்தைப் பருவத்திலிருந்தே நம் தாய் மொழி தமிழில் பேசும் பழக்கத்தில் இருப்பதால் பேச்சைத்தான் நாம் முதலில் அறிவோம்.

எழுத்தை பின்பு முறைப்படி படிக்கும்
பொழுதுதான் அறிவோம்.

தொல்காப்பியம் 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதியுடன் பதிந்ததை இங்கு பகிர்கிறேன்.

சைகையின் மூலமும், வரிகளின் மூலமும் உருவான தமிழ் எழுத்துக்களை, தொகையும் வகைப்படுத்தி முறைப்படுத்தி பெயரையும் கூறும் நூல்,
‘ தொல்காப்பியம் ‘.

வாயில் உச்சரித்து உயிர்ப்புத் தன்மை கொண்ட எழுத்துக்களை உயிர் எழுத்துக்களாக பகிர்கிறோம்.

உயிர் எழுத்துக்களைக் சொல்லும் பொழுது வாயில் இருந்து சொற்கள் எழும். உதடுகள் ஒட்டாது.

உயிரின் ஓசையாக மலரும்.

‘ அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஒ,ஓ,ஔ,ஃ’ என்றாகும்.

மெய் எழுத்துக்களைச் சொல்லும் பொழுது
வாய் இதழ்கள் ஒன்றொடு ஒன்று கூடி,
உதடுகள் ஒட்டும்.

மெய் எழுத்துக்களைக் கூறும் பொழுது
நம் உடம்பு ஒட்டும்.

‘க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன ‘

1. எழுத்தெனப் படு(ப)வ
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.

எழுத்து எனப்படுவது என்னவென்றால்
‘அ ‘ முதல் ‘ ன ‘ வரை உள்ள முப்பது எழுத்துக்களும் சார்ந்து வரும்.

‘அ ‘ முதல் ‘ ஃ ‘ வரை உள்ள 12 உயிர் எழுத்துக்களும்,

‘ குறில் ‘ எழுத்தாக அ,இ,உ,எ,ஒ என ‘ 5 ‘ எழுத்தும்
‘ நெடில் ‘ எழுத்தாக ஆ,ஈ,ஊ, ஏ, ஐ,ஓ,ஔ ‘ 7 ‘ எழுத்தும்
‘ ஃ ‘ என்று ஆயுத்த நிலையில் உள்ள
ஆயுத எழுத்துக்களாகும்.

‘க ‘ முதல் ‘ ன ‘ வரை உள்ள 18 மெய் எழுத்துக்களுடன் க், ங் என்று ‘ அனுகரண ‘ ஓசையை என்று நம் மெய்யாகிய உடம்போடு உருவ வடிவம் பெற்று நம் பிறப்பு இயல்போடு சேரும்.

எழுத்து என்பது சொல்லில் முடியும் இலக்கு அக்கணத்திலேயே நிற்கும்.

இக்கூற்று தொன்று தொட்டு வரும் மரபாகும்.

‘ மரபு ‘ என்ற சொல்லை நாம் கரந்துறையில்

‘ ம-மக்களின்
ர-ரசனையைப்
பு-புரிதல் ‘
எனப் பகிர்வோம்.

எழுத்துக்களின் இலக்கை அக்கணமே நிர்ணயித்து
மக்களின் புரிதலோடு விளங்கச் செய்வது
நமது தமிழ் மொழியின் தொன்மை கால மொழியான
தொல்காப்பியம் ஆகும்.

மொழி முதலாக ‘ வரி ‘வடிவத்திலும்
பின்னர் ‘ ஒலி ‘ உருவத்தையும் பெற்று இருக்கிறோம்.

மெய்ப் பொருள் காண் : 2. ‘ மரபாக, நூலாக ‘

தொல் காப்பியம் 2 – எழுத்ததிகாரம்

‘ மரபாக நூலாக ‘ எப்படி பயன்படுத்துவோம் என
இச்சொற்களின் எழுத்ததிகாரப் பதிவில் காண்போம்.

‘ நூலாக, மரபாக, கரமாக, அதிகாரமாக மற்றும்
அகராதியாக ‘ என்ற சொற்களையும்
கரந்துறையிலும் பயன்படுத்தலாம்.

தொல்காப்பியம் – 2

2. ‘ அவைதாம்
குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்தோ ரன்ன ‘

என்ற சொல்லதிகார தொல்காப்பிய
பதிவும் எவ்வாறு வடிவ எழுத்துக்களை
பெறுவதற்கு துணை புரியும் என்று பார்ப்போம்.

‘ அவை ‘ சொற்களுக்குரிய நூலாக தொல்காப்பியத்தில் பகிர்ந்து உள்ளார்.

‘ அ-அனைவருக்கும் உரிய
வை-வையகப் பயன்பாட்டிற்கு ‘ என்று

‘ அவை ‘ என்று சொல்லுக்கு கரந்துறையில் அழைப்போம்.

அரசவை, மாநிலங்களவை என்று குறிப்பிடுகிறோம்.

பின்னர் தாமாக அவைக் குறிப்பில் உபயோகபடுத்துகிறோம்.

‘ நூல் ‘ என்ற எழுத்துக்கு மற்றொரு
அர்த்தம் உண்டு என்று நாம் அறிவோம்.

நூல், துணி தைப்பதற்கு பயன்படுத்தும் சொல்லாகும்.

‘ நூலாக ‘ என்ற சொல்லை கரந்துறையில்

‘ நூ-நூற்பதை
லா-லாவகமாக
க-கற்பதற்கு பயன் படுத்தும் சொல்லாகும்.

தொல்காப்பியத்தில் இது போன்ற
பல சொற்களை உயிரும், மெய்யும்
கலந்த 30 எழுத்துக்களையுடையவாக
அதிகாரமாக தொகுக்கப்பட்டு நூலாக,
மரபாக தொகுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த எழுத்துக்களோடு சார்ந்து கரமாக,
‘ லி ‘, ‘ லு ‘ என்ற எழுத்துக்களை பயன்படுத்தி,
மரபாக, சொற்களுக்கு பயன்படும்
கரமாக பயன்படுத்தி உள்ளனர்.

இந்த சொற்கள் குறுகிய, நெடிய குறியீடுகளை குறிப்பதாக அறிவோம்.

ஆயுத்தமாக ஆயுத எழுத்தாகிய ‘ ஃ ‘ ம்
என்ற சொல்லை பயன்படுத்தி மேலும் நம்
தொடர் செயலுக்காக பயன்படுத்துகிறோம்.

ஆயுத என்ற சொல்லுக்கு கரந்துறையில்

‘ஆ-ஆக்கபூர்வ செயலுக்கு
யு-யுத்த
த-தரத்திற்கு ‘

கொண்டு சொற்களை
தயார்படுத்தும் எழுத்து உச்சரிப்பு.

‘ கரமாக ‘ என்ற சொல் கரந்துறையில்

‘க-கனிவுடன்
ர-ரகவாரியாகப் பிரித்து
மா- மானிடர்களுக்கு
க-கற்றலில்’

பயன்படுகிறது.

இவ்வாறு எழுத்தை, சொல்லாக சைகையில் இருந்து
சொல்லுக்கு பல காலமாக புரிந்துணர்ந்து தொல்காப்பியத்தை நடைமுறைப் படுத்தி இருக்கிறோம்.

‘ மரபு ‘ என்றச் சொல்லை கரந்துறையில்
பதியலாம், பகிரலாம்.

‘ ம-மக்களின்
ர-ரக வாரியான
பு-புரிதலாக ‘

எழுத்துக்களின் பயன்பாடு, உச்சரிப்பு மக்களின் சிந்தனையை, ஒலி வடிவின் சார்புடன், ரசனையுடன்
புரிந்து செயல்பாட்டிற்கு கொணர்ந்து உள்ளோம்.

தொல்காப்பியம் – 3- குறிலாக,

3. ‘ அ இ உ
எ ஒ வென்னும் அப்பால் ஐந்தும்
ஓரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப ‘

இந்த 5 எழுத்து குறியுடைய குறுகிய
கூற்றை உடைய ‘ ஒலி ‘ பகுத்துணரலாம்.

‘ குறிலாக ‘ என்ற சொல்லை கரந்துறையில்

‘ குறி ‘ என்ற சொல்லுடன்
‘லா’ லாகவமாக
‘க’ கற்பதற்கு

பயன்படுத்துவோம்.

இக் ‘குறி’ யீடுகள் குறுகிய
‘ ஓசை ‘ யை கொண்டு இருக்கும்.

‘ ஓ-ஓர்
சை-சைகை ‘ என்று கரந்துறையில் பதியலாம்.

இந்த ஓரளவு ஓசை உடைய சைகை
பிசைந்து குறுகிய ஓசையாக
மக்கள் ரசனையோடு பயன்படுத்துகிறோம்.

இந்த ஓசையை மா திரையாக ஓசை மறைந்து உள்ளது.
இதனை ஒரு குறுகிய அளவு ஓசையில்,
ம(காப்பெரிய)த் திரையாக மறைந்து, மா(த்)திரையாக அமைந்து உள்ளதால், ஒரு மாத்திரை என்கிறோம்.

நமது பயன்பாட்டிற்கும் மிகப் பெரிய ‘ஒரு மாத்திரை’ என்ற சொல்லளவு குறுகிய அளவு உடைய குறில் எழுத்திற்குப் பயன்படுகிறது.

எடுத்துக் காட்டு:

அணி, அணியாகச் சேர்ந்து
இல்லத்தை நடத்துகிறது, அணில்.

அணி(+அணி+இ)ல், அணியில், ஒருமைபடுத்தி,
‘ அணில் ‘ என்ற சொல் குறிலாக பழக்கப்பட்டு இருக்கிறது.

மெய்ப் பொருள் காண் – தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் : 4 , 5.

இசை, பிசை, ஓசை, பகுதி

போன்ற சொற்களை கரந்துறையில்வ

தொல்காப்பிய எழுத்து அதிகாரம் எண்: 4, 5

எண்ணில் அறவோம்.

‘ இசை ‘ என்ற சொல்லை

இ-இனிமையின்
சை-சைகை இசையாகும்.

‘ இசை ‘ என்ற சொல்லை கரந்துறையில்

‘ இ-இயற்கையின்
சை-சைகை ‘

எனவும் கூறலாம்.

‘ பிசை ‘

‘ பி-பின்பும் ஒலித்த, அதே எழுத்தை செயலுக்காக
சை-சைகை மூலம் தெரிவித்தல் ‘

என கரந்துறை சொல்லாக பயன்படுத்தலாம்.

ஓரளவு ஓசை இரண்டு மடங்கு ஒலிக்கும் உயிர்
சொற்களை கீழ்க்கண்ட நெடிய ஓசை மூலம்
தொல்காப்பியத்தில் தெரிவிக்கிறார்.

4. ‘ ஆ, ஈ, ஊ, ஏ, ஜ, ஓ,
ஓ, ஔ என்னும் அப்பால் ஏழும்
ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப ‘

மேற்க் கண்ட பகுதி எழுத்துக்களை நெடிய
ஓசை மூலம் தெரிவிக்கலாம்.

பகுதி எழுத்துக்கள் நீண்ட ஓசையை குறிக்கும்.

‘ பகுதி ‘ சொல்லை, கரந்துறையில் கூறலாம்.

‘ பக்குவமான
குறியை
திக்கெட்டும் ‘

நீண்ட ஒசையுடன் குறிக்கும்.

நமது வாயின் ‘ அசை ‘ வும் மிகவும்
நீண்டு ஒலிக்கும்.
வாயால் உச்சரிக்கப் படும் ‘ ஓசை ‘ யும்

‘ ஒ-ஓங்கார
சை-சைகையுடன் ‘

ஓங்கி இந்த ஏழு எழுத்துக்களும் பயன்படும்.

இரண்டு மா(பெரும்)த்திரை அளவு
நீட்டி ஒலிக்கும்.

5. ‘ மூவள பிசைத்தல் ஓரெழுத் தின்றே. ‘

ஒரெழுத்தில் இருந்து கொண்டு மூன்று மாத்திரை அளவு ஒலித்தல் இல்லை.

விகார அளவு மூன்று அளவு இயல்பாக மா(பெரும்)த்திரையை விளக்க இயலாது

மூன்று மாத்திரை இருக்கின்ற
ஒரெழுத்துக்கள் கிடையாது.

இரண்டு அல்லது அதற்கு மேல் உள்ள எழுத்துக்களைக் கூட்டி அதற்கு மேற்பட்ட
மா(பெரும்)த்திரையின் அளவைக் குறிக்கலாம்.

மெய்ப் பொருள் காண்: ‘ பா, நீ, புலமை ‘

தொல்காப்பியம் – எழுத்து அதிகாரம் – நூற்பா எண்6.
கரந்துறையில் –

‘ பா ‘ , என்ற சொல் பலரும் அறிவோம்.
‘ பாமர ‘ நிலையும் அறிவோம்.
‘ நீ ‘ ‘ புலவராகு ‘
‘ பலமாகு ‘
‘ புலமை ‘ நிலை பெறு.

‘ ப ‘ என்ற மெய் எழுத்தில்
‘ ஆ ‘ என்ற உயிர் எழுத்தை சேர்

‘ பா ‘ என்ற சொல் அறிவாய்.
அறிந்த’ பா ‘ வை வாயில் சொல்வாய்.

‘பா’ க்களில், ‘ பா’ டங்களில்
‘பா’ க்களை, ‘பா’ டங்களை அறிந்துணர்.

‘ பாவலராக ‘ நிலை உயர்வாய்.
‘ நீ புலவராகு ‘
‘ பலமாகு ‘
‘புலமை ‘ நிலை பெறு.

‘ பலமாகு ‘ கரந்துறையில்

ப-பக்கத்தில் உள்ளவைகளை அறியும்
ல-லட்சியத்துடன்
மா-மானிடப் பண்புகள் எது என்று அறிந்து
கு-குணமும் அறிந்து, கற்றுணர்.

‘ புலமை ‘ நிலை பெறு.

‘ பு-புது
ல-லட்சியத்தை
மை-மையகப் படுத்து ‘

‘ ந’ என்ற மெய்யாகிய (உடம்பு) எழுத்தில்
‘ ஈ ‘ என்ற உயிரெழுத்தை நீட்டு.

‘ நீ ‘ ஆவாய்.

நீ அகத்தில் அளப்பதை அறிவாய்.
நீ நாட்டத்துடன் வேண்டுபவை அடைவாய்.
நீ வேண்டிய அளவு பெறுவாய்.

‘கூட்டி எழுது
நீட்டி உரை
ஊரை கூட்டி சொல்
உண்மை தரமென
நீ அறிவாய்
புலவா ‘

தொல்காப்பியம் நூற்பா எண்-6

‘ நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
கூட்டி யெழூஉதல் என்மனார் புலவர் ‘

எழுத்தை நீட்டி எழுதுகிறாய்.
வேண்டி எழுதுகிறாய்.
எது எவ்வளவு என அளந்து எழுதுகிறாய்.
உடைமையை கூட்டுகிறாய்.
இரண்டு மா(பெரும்)த் திரையில்
ஊரறிய உண்மையே
தரம், தளம், என்று எழுதுதலை புலமையுடன்
பகிர்கிறாய், புலவா !

‘ கரந்துறை பா’க்களில்
பாடத்தையும் பாக்களையும் அறிவோம்.

எடுத்துக் காட்டுவோம்.

நற்றாள் ‘ தொழாஅர் ‘ என்ற எழுத்தில் மூன்று
மா(பெறும்)த்திரை மறைக்கப் பட்டு உள்ளது.

‘ தொழு ‘
‘ஆ’
‘அ ‘
‘ ர்’

‘ ஆ ‘ என்ற நீண்டு நெடிய எழுத்துடன் ‘ அ ‘
எனத் தேவையான குறில் என்ற அளவோடு
நீட்டி ஓலிக்கிறது.

ஒசை குன்றிய
‘ ர ‘ மெய் எழுத்துடன்
‘ அர் ‘ என்று

திருக்குறளிலும் மூன்று மா(பெரும்)த்திரையை விவரிக்கிறார்.

மெய்ப் பொருள் காண்: எமது, இமை, மையமாகு.

மெய்ப் பொருள் காண்: ‘ பா, நீ, புலமை ‘

தொல்காப்பியம் – எழுத்து அதிகாரம் – நூற்பா எண்6.
கரந்துறையில் –

‘ பா ‘ , என்ற சொல் பலரும் அறிவோம்.
‘ பாமர ‘ நிலையும் அறிவோம்.
‘ நீ ‘ ‘ புலவராகு ‘
‘ பலமாகு ‘
‘ புலமை ‘ நிலை பெறு.

‘ ப ‘ என்ற மெய் எழுத்தில்
‘ ஆ ‘ என்ற உயிர் எழுத்தை சேர்

‘ பா ‘ என்ற சொல் அறிவாய்.
அறிந்த’ பா ‘ வை வாயில் சொல்வாய்.

‘பா’ க்களில், ‘ பா’ டங்களில்
‘பா’ க்களை, ‘பா’ டங்களை அறிந்துணர்.

‘ பாவலராக ‘ நிலை உயர்வாய்.
‘ நீ புலவராகு ‘
‘ பலமாகு ‘
‘புலமை ‘ நிலை பெறு.

‘ பலமாகு ‘ கரந்துறையில்

ப-பக்கத்தில் உள்ளவைகளை அறியும்
ல-லட்சியத்துடன்
மா-மானிடப் பண்புகள் எது என்று அறிந்து
கு-குணமும் அறிந்து, கற்றுணர்.

‘ புலமை ‘ நிலை பெறு.

‘ பு-புது
ல-லட்சியத்தை
மை-மையகப் படுத்து ‘

‘ ந’ என்ற மெய்யாகிய (உடம்பு) எழுத்தில்
‘ ஈ ‘ என்ற உயிரெழுத்தை நீட்டு.

‘ நீ ‘ ஆவாய்.

நீ அகத்தில் அளப்பதை அறிவாய்.
நீ நாட்டத்துடன் வேண்டுபவை அடைவாய்.
நீ வேண்டிய அளவு பெறுவாய்.

‘கூட்டி எழுது
நீட்டி உரை
ஊரை கூட்டி சொல்
உண்மை தரமென
நீ அறிவாய்
புலவா ‘

தொல்காப்பியம் நூற்பா எண்-6

‘ நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
கூட்டி யெழூஉதல் என்மனார் புலவர் ‘

எழுத்தை நீட்டி எழுதுகிறாய்.
வேண்டி எழுதுகிறாய்.
எது எவ்வளவு என அளந்து எழுதுகிறாய்.
உடைமையை கூட்டுகிறாய்.
இரண்டு மா(பெரும்)த் திரையில்
ஊரறிய உண்மையே
தரம், தளம், என்று எழுதுதலை புலமையுடன்
பகிர்கிறாய், புலவா !

‘ கரந்துறை பா’க்களில்
பாடத்தையும் பாக்களையும் அறிவோம்.

எடுத்துக் காட்டுவோம்.

நற்றாள் ‘ தொழாஅர் ‘ என்ற எழுத்தில் மூன்று
மா(பெறும்)த்திரை மறைக்கப் பட்டு உள்ளது.

‘ தொழு ‘
‘ஆ’
‘அ ‘
‘ ர்’

‘ ஆ ‘ என்ற நீண்டு நெடிய எழுத்துடன் ‘ அ ‘
எனத் தேவையான குறில் என்ற அளவோடு
நீட்டி ஓலிக்கிறது.

ஒசை குன்றிய
‘ ர ‘ மெய் எழுத்துடன்
‘ அர் ‘ என்று

திருக்குறளிலும் மூன்று மா(பெரும்)த்திரையை விவரிக்கிறார்.

தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் –
நூ. எண்.7-கரந்துறையில்.

எமது -கரந்துறையில்

எ-எம் கண்ணே
ம-மனித இனம் நல்காட்சியை காண
து-துணை புரிவாய்.

இ- இனி எம்மை
மை – மையகப்படுத்து.

மை – மையகத்தே
ய – யவனியில்
மா – மானிட இனத்தையும்
கு – குதூகலமாக்கு.

கண்ணே கனியமுதே
எமை காப்பாய் இமையே!

கண்ணிமையே
கணப் பொழுதும் எமை காப்பாய்!!

நொடிப் பொழுது அளவேனும்
மகாத் திரையாக, மா(பெரும)த்திரையாக
எமை காப்பாய்!!!

நுண்ணியது எது என உணர்ந்த
எம்கண் இமையை மையமாக்கு.

அளக்கும் எடையை
அளவு(பு+எ=பு)எடை என்போம்.

நிறுத்தி அளப்பதை
நிறுத்தல் அள(பு)வு
எடையில் நிறுப்போம்.

பெய்து, விளைந்து
படியில் நிறுப்பதை
பெய்தளவு எடை என்போம்.

சார்ந்து மற்றொன்றை
ஒப்பிட்டு அளத்தலை
சார்பு எடை என்போம்.

நீட்டி நாடாக் கொண்ட
அளவுக் கோலை
நீட்டியளவு என்போம்.

நெறியுடன் தெறிதனை
கருவியின் ஒலியை
ஒலி அளவு என்போம்.

தேங்கிய பொருள்தனை
முகந்து விளிம்புக்கு மேல்
அளவையை தேக்க அளவு என்போம்.

ஒன்று எண்ணில்
தொடங்கி தேவையானவரை
அளப்பதை எண்ணளவு என்போம்.

நுண்ணியது எது என
அளப்பது அவையே.

இயல்பென என்பதை
மா(பெரும்)த்திரையில்
நுண்ணிய அளவு என்போம்.

கால், அரை
ஒன்றிரண்டு
அளவேத் தவிர
மாத்திரையின் மடங்கில்
தனிப் பெயரில்லை.

நூ.எண்.7.
‘கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே.’

இயற்கைதனை அனைத்தையும்
கால அளவில் கொள்.

செய்யும் நம் கொள் அளவை
ஓசை தரும் அளவில்
இசையாக்கு உம்
மாபெரும்திரையில்.

கண் இமைக்கும் பொழுதினிலும்,
காணும் பொருள் யாவையும்,
மகாப் பெரியத் திரையில் இட்டு
அளந்து நுண்ணியது
எது என உணர்ந்து
கண்டெடுத்து
சரியாகப் பயன்படுத்து.

கால எல்லையை கண் இமைக்கும்
நேரத்திலும் அளக்கலாம்.

நொடிப் பொழுதும் எண்ணுக
நல் எண்ணத்தை.

அந்த நல் எண்ணத்தையும்
மகாப் பெரியத்திரையிலிடு.

ஓங்கி ஒலிக்கும் சைகையிலும்
ஓசையை நுட்பமாக உணர்ந்து கொள்.

கண்டு உரை,
எவை எவை நெறியென
கூறு புலவா!

கண் இமைக்கும் நொடியிலும்
காண்போம் கால எல்லையை!

எண்ணமதை உணர்ந்து நின்று
ஆற்றலை ஆக்குக! பெயராக்கு.

உருவாக்குகின்ற பெயரதனை
அதிகரிக்கும் நிலையாக்கு.

ஏழு வகைதனிலே
நிறுத்தி, படி அளந்து,
நீட்டிய அளவை
இது என உணர்ந்து,
காதொலி அளந்து,
தேங்கிய பொருளையும்
எண்ணிய எண்களிலேயும்
அளவு எடை உணர்வாய்.

இமைப்போம்! இசைப்போம்!!
நம் செயலையும் மையமாக்குவோம்.

தொல்காப்பியம் : கரந்துறையில் – ‘ உயர திரியாது ‘

மெய்பொருள் காண்:
ஔகாரமே(உயிர்), மிகுமே(மெய்)
எழுத்ததிகாரம் நூ.எண்: 8,9

ஔகாரமே – கரந்துறையில்

ஔ – ‘ ஔ ‘ எழுத்து வரை , ‘ அகர ‘ முதலாக
க – காப்போம்
ர – ரகவாரியான உயிரெழுத்தை
மே – மேலும்,

மி- மிதமென வரும் மெய்யே
கு – குணம் பெறும் ‘ க ‘ முதல் ‘ ன ‘ வரை
மே – மேலும், மேலும் எழுத்துக்களை

மெய் உணர வருமே, வருமே, வருமே.

‘ ஔ ‘ காரம் இறுதி எழுத்து
என ‘ அ ‘ கரம் முதலெழுத்தென
பன்னிரண்டெழுத்தையும் தமிழ் மொழி
உயிர் எழுத்து என அறிவோம். ‘

எழுத்ததிகாரம் நூ.எண் : 8

‘ ஔகார இறுவாய்ப்
பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப ‘

உயிரையே எழுத்தாக்கும்
உம் சரீர உச்சரிப்பில்

‘ அ ‘ கர எழுத்தில் தொடங்கி
‘ ஔ ‘ கரம் வரையிலும் உயிர் பெற்று
தமிழ் மொழியில் பவனி வருவாய்.

ஔகாரமாய் விளங்கும் :

‘அகர முதல் பொருளே
ஆம் என உணர வைத்தாய்.
இயற்கை தனை
ஈன்றெடுத்த
உன்னதமே
ஊர்
எங்கும்
ஏழ்மைதனை போக்கி
ஐயமின்றி
ஒரு பதத்தில்
ஓராயிரமாயிரம் நற்செயல்களை வழங்கிடு
ஔகார உயிர் எழுத்து வரை
ஃதை ஆயுதமாகக் கொள்.’

எழுத்ததிகாரம் நூ.எண்: 9

‘ னகார இறுவாய்ப்
பதினென் எழுத்தும் மெய்யென மொழிப ‘

எம் உடலினை உயிர் தாங்கும்.
எம் உயிரினில் மெய் சிலிர்க்கும்.

எம் மெய்யினத்தை அறிய :

வல்லிய இனத்தைக் கொண்டேன்.
மெல்லிய இன்பமும் அடைந்தேன்.
இடையிடை இயல்பிலும் வலுப்பெற்றேன்.

கற்பனை கதை படிக்க
சகலமும் கற்கும் மொழிதனிலே
எம் மெய்யோடு உயிரும் கலந்து
எம் இனத்தை வகைப்படித்தி
மெய் எழுத்தின் கரத்தை
களிப்போடு பற்றினோம்.

எம் உடலுடன், உடம்பையும்,
எமது உறுப்புகளுடன் சேர்த்தழைப்பீர்.
உற்று நோக்குங்கால்
முற்றுப் புள்ளியிலும்
எனை அறியலாம்.

எழுத்ததிகாரம்: நூ.எண்.10

10.’ மெய்யொ டி(டு+இ)யையினும் உயிரியல் திரியா ‘

பன்னிரண்டு உயிர் எழுத்தும்
பதினெட்டு மெய் எழுத்தோடு
இயல்பாக இணையும்.

ஆனால், உயிர் மட்டும்
உயிரோடு திரியாது.

உயிர், உடலின்
மெய்யாகிய உறுப்புக்களுடனே
இயங்கும்.

உயிர், உயர்திணை
எனிலும் உயிர் மட்டும்
உயிரோடு சேராது.

‘ உயர ‘ கரந்துறையில் :

உ- உயிரெழுத்து ‘ அ ‘ என்ற குறில் எழுத்து
ய- யவனியில் மெய் எழுத்தான ய(ய்+அ) என பல
ர – ர(ர்+அ)கப் பொருளாக உயரும்.

திரியாது :

தி – திசை யெங்கும்
ரி – ரி(ர+இ)ங்காரமிட்டு,
யா- யா(ய+ஆ)தொரு
உயிர்மெய் எழுத்தில் நெடிலுக்கு
து – துணையாக நிற்கும்.

‘ கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ‘.

‘ மெய் உணர்வைக் கண்டவர்
விண்ணுலகை
கற்பனையிலே
காண்பர்,
கண்டும், காணாமலும் ‘

‘ கண் இமை பேசும்.
ஆனால் கண்ணில் பேச்சு வராது,
கண்ணால் பேசுவதும்,
காதில் கேட்காது.’

(க+அ)= ‘ க’ இவ்வெழுத்தின் உச்சரிப்பில்
‘ க ‘ என்ற மெய்யும் ‘ அ ‘ என்ற உயிரும் சேர்ந்து
ஒரு ‘ உயிர்மெய் ‘ சொல்லாகிறது.

‘ ண ‘ என்ற மெய் எழுத்து
‘ இ ‘ என்ற உயிர் எழுத்துடன்
ஒரு புள்ளியில் முற்றுப் பெற்று,
‘ ண் ‘ என்ற சொல்லாகிறது.

‘ கண் ‘ என்ற சொல்லாகி,
உயிர் பெற்று உடம்பில் உருப்பெறுகிறது.

கண் :

‘ க் ‘ என்ற மெய் எழுத்தோடு (க்+அ)
‘ அ ‘ என்ற உயிர் குற்றெழுத்துடன்
‘க ‘ என்ற உயிர்மெய் எழுத்தாகப் பிறக்கிறது.
‘ க ‘ என்ற உயிர் மெய் எழுத்து
ஒன்றரை மா(பெரும்)த்திரை பெறாமல்,
உயிரின் அளவாகிய மெய்யுடன் சேர்ந்து
ஒரு மா(பெரும்)த்திரையே பெறும்.

கண்ணோடு கண்ணோடு
கண் பேசும்.
சைகையில் மட்டும்
அறிவோம்.
மொழியில் கூறினால்
உருப் பெறும்.

தமிழ் மொழியில்
‘ கண் ‘ எனக் கூறி
தரணிக்கு
உயிரோடு
உடம்பை
உருப் பெற்றிட செய்வோம்.

‘ கண்ணான கண்ணே!
கண்ணான கண்ணே !! ‘

என்று பாடுவோம்.

‘ வாய் பேசும், ஆனால் பார்க்காது,
பேசினால் காதில் கேட்கும் .

வாய் :

‘ வ ‘ என்ற ‘ மெய் ‘ எழுத்தில்
‘ ஆ ‘ என்ற உயிர் எழுத்து நெடிலாகி
‘ ய ‘ என்ற மெய் எழுத்தில் ‘ ய் ‘ இல் முற்றுப் பெற்று
வாய்யால்(வாய் +ஆல்) பேசுகிறோம்.

காது :

‘ க ‘ என்ற ‘ மெய் ‘ என்ற எழுத்தில்
‘ ஆ ‘ என்ற ‘ உயிர் ‘ எழுத்தில் நெடிலாகிய,
‘ த ‘ என்ற ‘ மெய் ‘ எழுத்திலும்
‘ உ ‘ உயிர் ‘ எழுத்தும் சேர்ந்து
‘ து (த+உ) ‘ என்ற
உயிர்மெய் எழுத்தாகி காதோடு கேட்கிறது.

ஆம், கண், வாய் போன்ற
சில எழுத்துக்கள்
நமது உடல் உறுப்புகளில்
உயிரோடு மெய்யும்
சேர்ந்து செயலில்
முற்று பெறும்.

ஆம், நண்பர்களே!
கண் குறியுடன் அமையும்.
காது, வாய், துணைக் காலுடன்,
நெடில் எழுத்தாகும்.

உயிரோடு
உடம்பு இயங்கிடிலும்
உயிர் மட்டும்
தனியாகத் திரியாது.

உயிர் மெய்யோடு பொருந்துவதும்.
மெய்யோடு உயிரினைவதும்
பிறப்பில் தானே அமைகிறது.

பன்னிரண்டு உயிரும்
பதினெட்டு மெய்உறுப்பும்
இசைந்து, இணையினும்
உயிருடன் உயிர்
இயங்கா
உயிர் இயல்பாகவும்
திரிந்து விளங்காது.

ஒவ்வொரு உயிரும்
மெய்யுடனே சேரும்.

மெய்உறுப்பு
இயங்கும் வரை
உயிரும் இயங்கும்.

அந்த உயிர்மெய்
ம(கா)த்திரையில் அளவோடு
உயிரின் இயல்பில்
திரியாது.

‘ மெய்யோடு இணைந்திடிலும்
உயிரின் இயல்பில் திரியாது. ‘

என்று அறிவோம்.

தொல்காப்பியம் :

‘ மகா இயலாக ‘ – கரந்துறையில்
நூ.எண் : 11, 12

‘ மகா இயலாக ‘

‘ மகா ‘ என்ற சொல்லை கரந்துறையில்

ம-மக்கள்
கா-காண்பது

‘ இயலாக ‘ என்ற சொல்லை கரந்துறையில்

இ-இயற்கையின்
ய-யதார்த்த நிலையும்
லா-லாவகமாக
க-கற்றுணர்தலே.

இச்சொல்லதிகாரத்தில்
கூறுகிறோம்.

‘ மக்கள் காண்கின்ற
இயற்கையாகினும்
யதார்த்த நிலையில்
லாவகமறிந்து
உயிருடன் மெய்
எழுத்துக்களை
கற்றுணர்தலே தமிழ் மொழி
அறிவிற்குரிய பண்பாடாகும்.’

11. ‘ மெய்யின் அளபே அரையென மொழிப ‘.

மெய்யும் செய்யும்
நிலையே சக்தி.

சக்தி தனை
நன்கு உணர்ந்து
செய்யப்படும் நற்செயல்களில்
தரத்துடன் தரணியும்
செழிக்கும்.

உயிரோடு உயிர்
இணைவதில்லை
என அறிந்தோம்.

உயிர், மெய் எழுத்தில்
சார்பு பெறுவதாலே
உயிர்மெய்யாக
ஒலிக்கிறது.

‘ அன்பு, ஊக்கம்,
ஆண், காண்
ஏர், நீர் ‘ என்ற சொற்களில்

இடையில்
‘ அன்பு ஊக்கம் ‘
என்ற சொல்லும்,

‘ ஆண்,காண்,ஏர்,நீர் ‘
என்ற சொல்லின்
இறுதியிலும்

என்ற உயிர்–
உயிர்மெய்களை சார்ந்த
புள்ளி உற்று நோக்கிடில்

அரை மாத்திரை
ஒலிக்குமாறு உச்சரிப்போம்.

மெய்யின் இயக்கம்
அகரமோடு இயங்கி
உயிர் பெறும்.

மெய் எழுத்துக்கள்
ஒரு பத ‘அ’கரத்துடன்
சேர்ந்திடினும்
அரை மா(பெரும்)த்திரை
ஒலிக்கும் என்பதை அறிவோம்.

12. ‘ அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே’ .

உயிர், உயிர்மெய்யோடு ஒன்றி
ஒலிக்கும் என்று அறிவோம்.
ஒலிப்புநிலை எய்தாத
மெய் எழுத்துக்களைப் போல,
தனித்து வரினும்
மரபுடைய எழுத்துக்களை
சார்ந்து இருக்கிறது என்போம்.
இம்மொழியின் கண்
உறுப்பாக வருதல்லாதது
தனித்து வாராத
சார்பெழுத்துக்கட்குட்பட்டது.

உயிர்மெய் எழுத்தினை பகிர்வோம்.

ஒரு ம(கா)த்திரையில்
குன்றிய, குறுகிய
குறில் ஒலியில்
க(க+அ), கி(க+இ), கு(க+உ), கெ(க+எ), கொ(க+ஒ)
என்று அறிவோம்.

இரு ம(கா)த்திரையில்
நெடிய, நீட்டிய
நெடில் ஒலியில்
க(கா), கீ(க+ஈ), கூ(க+ஊ), கே(க+ஏ), கோ(க+ஓ),கௌ(க+ஔ)
என்று அறிவோம்.

சரியான ஒரு பதமாகிய
‘ க ‘ என்ற மெய் எழுத்தில்
‘ க் ‘ என முற்றுப்புள்ளியை
தலையில் வைத்து
அளவைக் குறைத்தால்
அரை ம(கா)த்திரையில்
அச்சொல்லை மெய்யென்று உணர்வோம்.

அனைத்து உயிர்களையும்
அகர வரிசையில் தோன்றிடினும்,
இயற்கையின் படைப்புகளும் அனைத்தும்
மெய்யான இயல்புகளே எனினும்
கற்றலில் சி ‘ க் ‘ கென ‘ க் ‘ கின்
ஓலியின் அளவை அரை ம(கா)த்திரை என
படிப்போம்.

இந்நிலையுடய ஏனைய
கரத்தையும்
குற்றியலிகரம்
குற்றியலுகரமாக்கி,
ஆயுத்தமாகும் ஆய்தப் ஃ புள்ளியிலும்
அரை ம(கா)த்திரையில்
அழைக்கப்படுவோம்.

தொல்காப்பியம் : ‘ மகர திசை உருவாகுமே ‘ -கரந்துறையில்
எழுத்து அதிகாரம் – நூல் மரபு

நூற்பா. எண்: 13, 14

‘ அரையளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியுங் காலை ‘

‘ மகர திசை ‘ கரந்துறையில்

‘ மகர ‘

ம-மத்திய அளவின் மகர ஓசை
க-கரமாக ஒலிக்கும் அரை மா(பெரும்)த்திரையின்
ர -ரகத்தில்

‘ திசை ‘

தி-திக்கெட்டும் கால் ம(கா)த்திரையில்
சை-சைகை ஒலி ஓசை சிறுபான்மையில் கேட்கும்.

பதினெட்டு மெய் எழுத்தினில்
வாய் இதழில் மொழிந்து
மூக்கின் வழியாக ஓலிப் பிறக்கும்.

‘ பயில்வோம் மகர குறுக்கம் ‘

‘ ம ‘ என்ற மெய் எழுத்து
‘ ம் ‘ எனும் கரமாகி
தமக்கே உரிய
அரை மா(பெரும்)த்திரையில்
குறுகி, மூக்கினில் ஒலிப்பதேயாகும்.

அதனை மேலும்
ஆராயுமிடத்து
அங்ஙனம்
ஒலிக்குமிடம் ‘ ம் ‘
சிறுபான்மையாகும்.

‘ இசை என்பதை

‘ இ-இன்பத்தின்
சை-சைகை ‘

என்போம்.

இ-இயற்கையின்
சை-சைகையும் ‘ ம் ‘

என்ற மகரத்திலும்
கரந்துறையில் அறியலாம்.

இசை என்பது ‘ ஈ–ண்டு
ஒலி கேட்கும் திறனுடையது.

அரை அளவு மாத்திரையில்
குறுகிக் கால் அளவு மாத்திரை
அளவில்வருதலை
மகர மெய் எழுத்தில
உடைத்து ஆராயும் பொழுது
அந்த ‘ ம ‘ கரமாகிய குறுக்கே
வேறோர் எழுத்தினது
ஓசையின் கண்
சிறுபான்மையாகி வருமே.

அரை ம(கா)த்திரையில் காண்பிக்கப்பட
வேண்டுமெனில்

‘ போன்ம் ‘, என்ற அக் கால எழுத்து
தற்பொழுது ‘ போலும் ‘, என்று பொருள்படும்.

‘ போலும் ‘ என்ற சொல்லில் ‘ ம ‘கரமாகிய
‘ ன ‘ கரமான மெய் எழுத்து
‘ன்’ என்றாகி
‘ லு ‘ னகரமாகி
ஒற்றாகித் திரிந்து
‘ போலும் ‘
என நிற்றலுண்டு.

‘ பதிற்றுப் பத்து 51 செய்யுளில் ‘
‘ போன்ம் ‘
என்ற சொல்லுக்கு
தேசிகன் ‘ போலும் ‘
என்று விளக்கம் தந்து உள்ளார்.

14. உருவாகுமே

எழுத்து அதிகாரம் நூ.பா எண்.14:

‘ உட்பெறு புள்ளி உருவா கும்மே ‘

‘ உருகுதே ‘ ம ‘ ருகுதே ‘ என்ற
திரைப் பட பாடல்களுக்கேற்ப

சொற்கள் உள்ளே
புகுந்து ‘ உருகி ,மருகி ‘

நாம் பயன்படும்
சொற்களுக்கேற்ப
கால ‘ இலக்கு ‘ இடும்
கட்டளைக்கேற்ப
அக்கணமே உருவாகிறது.

‘ உருவாகுமே ‘ என்ற சொல்
கரந்துறையில்.

உ-உட்பெறும்
ரு-ருசிகரத் தகவல்கள்
வா-வார்த்தையில்
கு-குறிப்பறிந்து
மே-மேம்பட உருவாகும்.

உட்பெரும் அரை அளவு
மா(பெரும்)த்திரை
ம கரமாக குறுகி
இதழுடன் இயைந்து
பிறவாமல் இதழ்
சிறிது உள்வாங்க
ஒடுங்கிப் பெறும்
ஒலியளவிற்கேற்ப
உருவாகி நிற்கும்.

அரை மா(பெரும்)த்திரை
இல்லாமல் வரும்
ம கரம் வாய் இதழ்கள்
நன்கு இயைய உருவாகும்.

குறுகிய மகரம்
இதழ் இயையாமல்
சிறிது உள் மடங்கி நிற்க
உருவாகும் என்போம்.

இதனால் அதன்
ஒலிப்பு அளவும்
தோன்ற வைப்போம்.

புறத்து’ ப் ‘ பெறும் புள்ளியோடு
உள்ளாற் பெறும் புள்ளி
மகரத்திற்கு வடிவ’ ம் ‘ ஆகும்.

க’ப்’பி, க’ம்’பி என சொற்கள்
‘ ப் ‘ என்ற சொல்லில் இருந்து
‘ ம் ‘ என்ற
பல சொற்கள்
உருவாவதை
அறிவோம்.

தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-கரந்துறையில்
நூ.பா எண்: 15, 16 ‘ ஆகுவது போல ‘

15.’ மெய்யின் இயற்கை புள்ளியொடு
பெற்று நிற்றலாகும். ‘

ஆ-ஆக்கப் பூர்வ
கு-குறிக்கோள்களுக்கு
வ-வழிவகுக்க
து-துணை செய்யும் மெய் எழுத்து .

இயற்கை இயல்பில்
புள்ளியில் தொடக்கம்.

மெய்யோடு அவரவர்
வாழ்வும் முற்று
புள்ளி பெறும்.

முடிந்தவரை
முயற்சியில்
முழுமை பெறுவோம்.

இயற்கையில்
அமைவது உடம்பும்
என உணர்வோம்.

ஆக்கச் செயல்களுக்கு
ஊக்கமதை கைவிடோம்.

மெய்யுடன் நின்
கதி கைப்பிடிப்போடு
சேரட்டும்.

மெய் எழுத்துக்களின்
இயல்பு
புள்ளி பெற்று
நிற்றலாகும்.

புள்ளி, ஓலி
அணுக்களை
குறிக்கும்
மற்றுமொரு பெயர்
என்பதனையும்
அறிவோம்.

புள்ளி வரி
வடிவத்திற்கு
பொருந்த
அமைந்தது
என்பது என்றும்
அறிவோம்.

பிறப்பு, இயல்புகளில்
பெறும் முறைமையான
நுண் அணுக்களில்
உருவாகி வளரும்
நம் உடம்பின் வடிவம்.

மெய் எழுத்துக்களின்
தன்மையும்
உற்ற உறுப்புக்களும்
ஒலிப்பு உடையனவாகவே
அமையும்.

புணர்ச்சி விகாரத்தில்
குறுகிய ‘ புள்ளியோடும் ‘
அமைத்த உம்மை
எந்த ஒரு புள்ளியோடு
நில்லாமல்,

‘உயிரோடு இயைந்த
உயிர் மெய்யாக
அமையும் ‘

என்ற ‘ உயிர் மெய் ‘

உயிர்க்கும் மெய்யாக
ஆக்கம் பெறுமே.

உயிர் எழுத்துக்களை
அவற்றின் அளவு
கூறிய வழி
ஓரளவு படை இசைக்கும்,
ஈரளவு படை இசைக்கும்
கேட்கும் தன்மையே
உடைமையது என்போம்.

ஒலிப்பின்றி
உருவாகும்
மெய் எழுத்தினை
அவ்வாறு கூறாமல்
‘ மெய் ‘ ஓலித்தற்குரியது
என்பது தோன்ற
‘ மெய்யின் அளபே
அரையென மொழிப ‘
என்று தோற்றுவாய்
செய்து இந்த நூற்பாக்களின்
விதியில்
அதன் ஒலிக்கும் இயல்பினை
சுட்டி காட்டி

‘ மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலைப்படும் ‘

என்கிறோம்.

16. எகர ஒகரத்து இயற்கையும் அற்றே.
‘எ’ கரமாகிய ‘எ என்ற உயிர் எழுத்து ‘ எ் ‘ எனவும்
‘ஒ’ கரமாகிய ‘ஒ’ என்ற உயிர் எழுத்து ‘ ஒ் ‘ எனவும்

மெய் எழுத்துக்கள் போல புள்ளியைப் பெற்று பிற்காலத்தில் நிறுத்தப் பட்டு விட்டது.

போல என்ற சொல்லுக்கு கரந்துறையில்

‘ போ-போக்கின்
ல-லட்சியக் குறியீடு ‘

உயிர் எழுத்து புள்ளிகளற்றவை.
காலபோக்கில் அதன் இலக்கு குறியீடு
தேவைப் படாததால்
‘எ’ந்த, ‘ஒ’ரு
உயிர் எழுத்திலும்
புள்ளி அற்றே
தமிழ் மொழியில்
விளங்கும்.

தொல்காப்பியம்:

எழுத்ததிகாரம் நூ.பா.எண் : 17,18

‘ அகரமோ அது ‘ கரந்துறையில்

நூ.பா.எண்: 17, 18

அ-அ என்ற உயிர் சொல்லில்
க-க என்ற மெய் சொல்லில் பல
ர-ரக வரிசையாகி
மோ-மோகம் கொண்டு

அ-அன்பின்
து-துணையில் நிலை பெறுகிறது.

நூ.பா.எண்: 17

‘ புள்ளி யில்லா எல்லா மெய்யும்
உருவுருவாகி அகரமோ டுயிர்த்தலும்
ஏனை உயிரோடு உருவுதிரிந் துயிர்த்தலும்
ஆயீ ரியல் உயிர்த்த லாறே. ‘

புள்ளிகள் இல்லாத
எல்லா மெய் எழுத்துக்களும்
அகரத்துடன் இணையும்
பொழுது,
மெய் எழுத்துக்கள்
புள்ளியை மட்டும் இழந்து
முன் வடிவை இழக்காமல்
தோன்றும்.

உரு, உருவாகி
அகரமோடு உயிர்த்தல்
க்+அ=க
என்போம்.

ஆம் நண்பர்களே’

‘ உயிர் உருவாய்
கருவில் தோன்றினாலும்
உடம்பின் விரிவாக்கம்
உருவத்தில் தான்
தெரிகிறோம். ‘

என்பதனை நாம் அறிவோம்.

நம் உயிர் எழுத்தும்
மெய் எழுத்துக்கு
உருவம் கொடுக்கிறது
என்பதைனையும் நாம்
அறியத்தான் வேண்டும்.

உடம்பில் இயங்கும்
உயிர்
உருவில் உருவாகிறது.

உருவம் திரிந்து
அகர உருவில் உயிர்த்து எழுந்து
மெய் எழுத்துருவில்
சொல்லை வடித்து
உயிர் மெய் சொல்லை
பல உருவில் தெரிவதை எப்படி என்பது
கீழ் வருமாறு காண்போம்:

அறிவில் உருவாகி
வில(கி) (இ)ங்கு
‘க’ற்றல் நிலையில்
உருவம் பெற்று
‘ க் ‘ என்ற மெய் எழுத்து + ‘ அ ‘ என்ற அகர எழுத்தில்
உயிர் எழுத்தில் உருவாகி= ‘ க ‘ என்று உருவாகி
உயிர்ப்புத் தன்மை பெற்று
அறிவுடைய விலங்காக
உயிர்த்து எழுகிறது.

மேலே திரிவதால் க+இ=கி ஆக என்ற எழுத்தாகிறது.
க+ஈ=கீ ஆக உருவெடுக்கிறது.
இவ்வாறாக உயிர் மெய்யுடன் பல வடிவில் உயிர்த்தெழுகிறது.

18. ‘ மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே. ‘

‘ கருவில் வருவது
உருவில் தெரியும். ‘

‘ கரு, உரு, ஒரு ‘

‘ க ‘ என்ற உயிர் மெய் எழுத்து
‘ ரு ‘ என்ற உயிர் மெய் எழுத்தின்
‘ கரு ‘ வின்

வழியாக ‘ உரு ‘வாகி
தோன்றி ‘ ஒரு’ மையப் பொருளாக
நிலைப் பெறுகிறது.

உயிர் ஒரு
‘ சாதகப் பறவை ‘
சாதிக்கத் துடிக்கும்

சா-சாதனையின்
தி-திசை அறியும்.

சாதிக்கும் திக்கும்
நன்கு தெரியும்.

சாதனைகள்
பல புரிய
மனித இன
அறிவை பாங்காக
ஒலித்திடுவோம்.

தொல்காப்பியம்: வலிமை, இதுவமது, இதுவமதே.
எழுத்ததிகாரம் : நூற்பா எண்: 19,20,21

‘ வல்லின உயிர்மெய்ப் பொருள்
மெல்லின உயிர்மெய்யுடனும் இணைந்து
இடையின உயிர்ப் பொருளாகுமே.

வல்லினம்- கரந்துறையில்-வலிமை

வ-வல்லிய
லி-லிங்கம்
மை-மையமாகும்.

மெல்லினம்-கரந்துறையில்-இதுவமது

இ-இன்னிய
து-துயில் ஒலி
வ-வண்ண
ம-மலரில்
து-துணையினை பெறுமே.

இடையினம்-கரந்துறையில்-இதுவமதே

இ-இடையிடேயே
து-துவண்டு
வ-வண்ண
ம-மலரினில்
தே-தேனுண்டு மகிழும்.

19,20,21

வல்லெழுத் தென்ப ‘ கசட தபற ‘
மெல்லெழுத் தென்ப ‘ ஙஞண நமன ‘
இடையெழுத் தென்ப ‘ யரல வழள ‘.

ஒலியின் ஓசை
ஓங்கின பொருள்படும்.

ஓசையை எழுப்பி
விசையையும் பெறலாம்.

ஓசை-கரந்துறையில்

ஓ-ஓங்கிய
சை-சைகையொலி.

விசை-கரந்துறையில்

வி-விந்தையான
சை-சைகையொலி.

ஓசையும், விசையும்
ஒரு அரும் பொருளே.

பொருளும்,
உயிர் பெற்று
வலிமை மெய்யுடன்
மெல்லிய மெய்உடம்புடன்
இடையிடை இடையிடை
ஓர் அரும்பொருளாகுமே.

‘ கசடதபற ‘ வல்லினமாம்.

‘ க ‘ற்பதை
‘ ச ‘ஞ்சலமில்லாத(இடையறாத)
‘ த ‘ரமிகு விசையு’ ட ‘ன்
அ ‘ ற ‘மென பயில்வோம்.

வலிமையும், திண்மையும்
இவ்வின மெய்எழுத்துக்களில்
வாயில் எழும் ஓசையோடு
நன்கு ஊன்றி நிற்கும்.

வல்லின எழுத்துக்கள்
நெஞ்சினில்
வலிமையுடனே வெளிப்படுமே.

வலிமை எழுத்துக்கள்
நல்ல திடம் பெற்று
தனித்தும் இணைந்தும்
வருவதன் காரணமாக
வல்லிய கணம் எனக் கூறலாம்.

வல்லின மெய் தலையில்
தங்கிய காற்றினால் பிறக்கின்றன.

‘ஙஞணநமன’ மெல்லினமாம்.

எ’ங்’கும்
ச’ஞ்’சாரமிடும்
வ’ண்’ணத்துப் பூச்சி
‘ந’ம்
‘ம’த்தியில் கீதமாக
ஒலிக்கின்ற’ன’.

வல்லிய வலிமை
பெற்று, மூக்கும்
வாயிலும் மெல்லியதாக
எழும்பி மெல்லிய இனமாக
மிளிர்கிறது.

மெல்லின மெய்கள்
மூக்கில் தங்கிய காற்றினால்
பிறக்கின்றன.

‘யரலவழள’ இடையினமாம்.

‘ய’வனியில்
‘ர’கவாரியாக
‘ல’ட்சியக் கோடுகள்
‘வ’ரலாற்று
நி’ழ’லாகி ஒரு
கோ’ள்’களாகட்டுமே.

மெய் உறுப்பு
இடையிடையே
உயிர்ப்பு சிறியதாக
பெற்று வெளிப் படையாக
நின்று இடையினில்
பெறும் என அறிவோம்

இடையின மெய் எழுத்துக்கள்
கழுத்தில் தங்கிய காற்றினால்
பிறக்கின்றன.

அதனால் உரசும் ஒலியல்லாத
‘ய’வனக் கரமுடன்
‘வ’ல்லியக் கரத்தில் அரை உயிராக
குறுகிய லி கரமும்
குறுகிய லு கரமுமாய்
ஒவ்வொரு அடியாக நிற்குமே.

தொல்காப்பியம்: சுதி, மதி கரந்துறையில்

சொல்லதிகாரம்: நூ.பா.எண்: 22

சுதி:

சு-சுற்றி எல்லா
தி-திக்குகளிலும் நயமான ஒலி எழுப்பச் செய்தல்.

மதி:
ம-மக்களின்
தி-திசைக்கு வழிகாட்டுதல்.

நூ.பா.எண்.22

22. ‘அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின்
மெய்ம்மயங் குடனிலை தெரியுங்காலை’

‘அம்மூவாறு வயதினிலே
‘மெய்யின் மயக்கத்தில்
பதினெட்டில்
தேர்ச்சி யாகின்ற
தோற்றுவாய்
உள் உறுப்பிலும்
இயல்பு பெற்று
உடன்நிலையும்
மயக்கம் பெறுமே.’

மெய்யோடு கூடி சொல்லில்
வருதல் ‘மெய்ம்மயக்கம்’
என்போம்.

உயிர் மெய்யில்
ஒன்றெனக் கலந்திடினும்
உயிர் உயிருடன்
இணையாது.

உடம்போடு பொருந்தி
ஒத்தாசை புரிந்து
உடம்பின் மெய்யாலேயே
இணையும்.

உயிர் மெய்யில்
முன்கூடி
வருவதற்கு
வரையறை இல்லை
என்பதனையும்
அறிவோம்.

‘பொருள் தருதலுக்கு
ஏற்ப மயங்கும் நிலை.

மெய்யுடன் மெய்யொலி
சேரும் போது,
தம்மெய்யோடு
தம்நிலையும் ஒலிக்கும்.
தம்மோடு பிறர் மெய்நிலையும்
ஒலிக்கும்.’

என அறிவோம்.

தம்மோடு தம் நிலை
மெய் உறுப்புகள்
மயங்கும் மயக்கம்
‘உடன் நிலை ‘
மெய்ம்மயக்கமாகும்.

க், ச், த், ப் என்பது
உடன் நிலை இயக்கம் எழுத்துக்கள்
என்பதை அறிவோம்.

‘ பணம் பத்தும் செய்யும் ‘
‘த்’ என்ற மெய் ‘த’ என்ற
மெய் எழுத்தோடு மயங்கி ஒலிக்கும்.

மெய் உறுப்புகள்
தம்மோடு பிறமெய்
உறுப்புகள் கூடிவருதல்
‘வேற்றுநிலை’
மெய்ம்மயக்கமாகும்.

வேற்று நிலை மயக்கம் பாட்டு

‘கலக்கமா! மயக்கமா!!
மனதிலே கலக்கமா!!’

‘ அச்சம் என்பது மடைமையடா ‘ !

இவை வேற்றுநிலை
மயக்கமாகும்.

ஒரு மொழி,
ஒரு மொழியினுள்
உயிரோடு மெய் கலந்து
துணை செய்யும்.

தொடர்மொழியினுள்ளும்
மெய்ம் மயங்கும்.

தனிமெய்,
தனிமெய் உறுப்பில்
முன் நிற்பின்,
இரு ஒத்த மெய் உறுப்புகள்
ஒன்றுடன் ஒன்று
ஈர்க்கப்பட்டு,
ஈரப் பதமாகி
பசுமை பெற்று
இறகு எனும் சிறகில்
பறந்து, இனிமை
எனும் இதத்தைத் தேடி
ஈரொற்று உடன் நிலையாகுமே!

‘ *அங்கம் * புதுவிதம்
அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு’

என்ற பாடலை குறிப்பிடலாம்.

‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா’

என்ற பாடல் போல

மெய் மயக்கத்தை அறிவோம்.

தொல்காப்பியம்:

மெய்ப்பொருள் காண்

‘ இலசு பலமே.’ கரந்துறையில்

எழுத்து அதிகாரம்:
நூ.பா.எண். 23

இ-இடையில் வரும்
ல-லட்சியக் கோடுகளையும்
சு-சுகமான கடமைகளாக

ப-பத்திரமாக பாதுகாக்கப் பட்டு
ல-லட்சியக் கோட்டிலிருந்து
மே-மேன்மைபடுத்துவதேயாகும்.

நூ.பா.எண்: 23.

‘டறலள’ வென்னும் புள்ளி முன்னர்க்
‘கசப’ வென்னும் மூவெழுத்த துரிய’

‘கசப’ என்ற
(உயிர்)மெய் எழுத்து
புள்ளிகளுடன்
‘டற’ என்ற வல்லினத்துடன்
‘லள’ என்ற இடையினத்துடன்
மெய்ம்மயக்கத்துடன் உறுப்புகளில்
பொருளாகி ஒலி வடிவமாகிறது.

” ‘க’ற்பதை
‘ச’ளைக்காமல்
‘ப’ற்றிக் கொள்பவன்

ஒன்றுபட்’ட’
உ’ற’வோடும்
இல்’ல’றக் களிப்பினிலும்
வள்’ள’ல் குணத்துடன்
மயங்கி நிற்பர். ”

இடையில் வரும்
உறவுகளும் இ’ட’மறிந்து
உன்னதமாக
உ’ற’வாட,
நல்ல ப’ல’ லட்சியத்துடன்
பொரு’ள’றிந்து
வளமான வாழ்வுடனே
மூவேழு பதினெட்டுக்குள்ளும்
மயங்கி நிற்கிறதே.

மெய் மயங்கிய
உறுப்புடனே
உன்னத நிலையறிந்து
வல்லின உறுப்புடனே
வ’ல’மே வ’ள’முடன் இருந்து
வனப்பு இடையுடனே
பெரும் புள்ளியாக
நிற்கிறது.

வண்ண இடை
முன் தொடர
‘க’ளிப்புடன்
‘ச’ரசமாடும்
‘ப’திகளின் உயிர் மெய்யினத்தின்
ஒலியோடு
மயங்கி
வனப்பு உருவாகி
உரியதாக நிலைக்கிறதே.

‘வலிமை பொருந்திய
உறுப்போடு
மயங்கும் பொழுது
வன்மம் திரியாமல்
இடையோடு மயங்கி
திரிந்து இன்பம் ஊற்றம்
எடுக்கும்.’

என்பதனை அறிவோம்.

‘மெய், புள்ளி, உயிர்மெய்
என்பவற்றையும்
மெய்யின் நிலைகளே
ஆதலின், ஈ–ண்டு வரும்
உயிர் மெய்யெழுத்து
கொண்டு வந்த மெய் உறுப்பையும்
உயிர் மெய்’

என்று அறிவோம்.

24. ‘அவற்றுள்
லளஃகான் முன்னர் யவவ்வும் தோன்றும்’

காத’ல’ர்களின்
உள்’ள’ப் பார்வை
‘யவ’ன பருவத்தில்,
‘வடிவம்’ உருப் பெற்று
யவ்வன கரங்களில்
வடிவாகி மலர்கிறது.

‘ல’,ள’ என்னும் இடைஎழுத்தின் முன்,
‘ய’வ’ என்னும் இயங்கும் மெய் எழுத்துக்களும்
வந்து மயங்கும் என இந்த தொல் நூல் கூறுகிறது.

தொல்காப்பியம் : மெய்ப் பொருள் காண்: ‘இசை மலர’

எழுத்ததிகாரம் நூ.பா.எண்: 25, 26

‘இசை மலர’

இ-இந்தியா எங்கும் ஒலி
சை-சைகையிலிருந்து

ம-மண்ணில் நல்ல வண்ணம் வாழவும்
ல-லட்சிய எல்லைகள் மக்களிடம்
ர-ரக வாரியாக விரிந்து இன்பமும் பெருகட்டுமே.

25,26
‘ஙஞண நமன வெனும்புள்ளி முன்னர்த்
தத்த மிசைகள் ஒத்தன நிலையே.’

மெல்லின
‘ஙஞண நமன’
என்ற மெய்எழுத்து
ஆறு எண்
முன்,
எம்மை
வல்லின மெய்எழுத்து
‘கசட தபற’
ஆறு எண்ணுடனும்
மயங்கச் செய்கின்றதே!

மெல்லின மொழியாளே
மெய்யினத்தினையிடையே
புள்ளிமானாகத் திகழும்
எம்மை பள்ளியிலே
பயில வைத்தாய்!!

பொ’ங்க’ல், ப’ஞ்ச’மின்றி
கொ’ண்ட’லுடன்
ப’ந்த’ பாசங்களுடன்
ஆ’ம்ப’ல் மலருடன்
பட்டிம’ன்ற’ பேச்சாளர்களுடன்
பாங்காய் ஆண்டுதோறும்
பவனி வருகிறது.

26. ‘ அவற்றுள்
ணனஃகான் முன்னர்க்
கசஞபமயவவ் வேழு முரிய’

மயக்க வைக்கும்
தமிழ் மொழியினிலே
வண்’ண’ மலர்களில்
வண்டுகள் ரிங்காரமி’ட’
மயில்களின் இ’ன’ம்
வெண்சாமரம் வீச

வண்’ண’
மயிலி’ன’ம்
முன்னே(இந்திய தேசிய பறவை)

‘க’ன்னித்தமிழ் மொழியில்
‘ச’த்தமின்றி மலரும்
‘ஞா’யிறு ஒளியில்
‘ப’க்க பலமாக மக்களின்
‘ம’த்தியில்
‘ய’தேச்சையாக
‘வ’ந்து உலவும்.

மெல்லிய
இசையே
இமயம் முதல்
குமரி வரை
இசை மூலம்
மக்களை ஒன்றுபட
வைக்கட்டுமே.

தொல்காப்பியம்: எழுத்ததிகாரம்: நூ.பா.எண்:27,28,29

மெய்ப்பொருள் காண்: ‘ யாது வலிமை? நிலமே. ‘ கரந்துறையில்.

யாது-
யா-யாவும்
து-துணைபெறும்

வலிமை-
வ-வண்ணமிகு
லி-லிங்கத்தின்
மை-மையத்தில்
(பூமி-
பூ-பூவுலகின்
மி-மிடுக்கு)?

நிலமே-
நி-நின்
ல-லட்சியக் கோடு
மே-மேன்மேலும் நிலை பெறும் நீரின் பலத்துடனே.

27
‘ஞநமவ வென்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே.’

‘ ஞநமவ’ என்ற புள்ளி
முன்னே ‘ ய’கரமாகி மயங்கி கூறுகின்றது.

‘ஞநம’ எனும்
மெல்லின எழுத்தின் முன்
‘வ’ எனும்
இடையினத்தின் முன்னும்
ய கரமாகி ( உயிர் )மெய்
வந்து அவற்றின் ஓசையோடு
மயக்கம் பொருளைடையதாகும்.

‘ஞா’யிறு ஒளி
‘ந’ம்
‘ம’னதை
‘வ’ரும் திங்களின் திசைகளிலும்,
யாவற்றின் செயல்களிலும்
ஒளிரச் செய்யும்.’
மயக்கும் பொருளுடையதாகுமே!

உ.ம்:
‘உரிஞ்’யாது, ‘பொருந்’யாது, ‘திரும்’யாது, ‘தெவ்’யாது.

நிலமே,

உரிநு(உறி’ஞ்’சும்) நீரை
உள்ளடக்கி வைக்கும்
பண்பே உமது
அடக்கத்தின் சிறப்பு.

பொருநு(உடன்பாடு) இன்றி
திரும்(திரும்ப)த்தரும்
உம் பண்பு
தெவ்(பகை)வரையும்
பக்குவமாக
கையாள எம்மை
பழக்குகின்றாயே!

28.
‘ மஃகான் புள்ளி முன் வவ்வுந் தோன்றும். ‘

ம கரத்தின் முன்
வ கரமும் மயங்கும்
என்கிறது
இந்த சொல்லதிகார
நூற்பா எண்.

‘ம’ கரமாகிய மெய்எழுத்துக்களின்
முன்னர்,’வ’ கரமும் வந்து தோன்றும்.
(‘ப’கர ‘ய’கரங்கள் அன்றி)

உ.ம்:

‘நிலம் வலிது’
‘ம’ண்ணின் வலிமையை
நிலமே நீ அறிவாய்.
மெய்யாகிய எமது உறுப்பும்
உந்தன் முன்
‘வ’ந்து மயங்கி தோன்றுகிறோம்.
(‘ப’ல உயிர்கள் ‘ய’வனியில்
கரங்களேயன்றி தோன்றுகின்றன)

‘நி’ன்
தடம்
யாமறிய
முயற்சிக்கிறோம்!

‘ல’ட்சியம் யாவற்றிலும்
மயக்கமுற்ற
எம் மக்களை
யவ்வனத்தில்
‘ம’கரமாகி
வந்து மயங்கி
லிங்கமது துணை கொண்டு
பூமிதனில் மலரச்செய்கின்றாயே.

வண்ணத்தின் வகரம்
வந்து மகரம் தன் ஒலி குன்றி
உட்பெறுபுள்ளி
மயங்கும் பொழுது என்பதனை
வ காரமிகையில் ம காரம் குறுகும்
என்பதனையும் அறிவோம்.

உம்.
திரும்வாழ்வு(திரும்பும் வாழ்வு)
‘ம்’ என்றும் மகரம் தன் ஒலி குன்றி
உட்பெறுபுள்ளி ‘வா’ என்று
காரமிகையில்
என்பது வினைத்தொகை
தமிழ் மொழியாகும்.

29.
‘யரழ’ என்னும் புள்ளி முன்னர்
முதலா கெழுத்து ஙகரமோடு தோன்றும்.’

‘யரழ’ என்னும்
மூன்று மெய்எழுத்துக்களின்
முன்னர், மொழிக்கு முதலாக வரும்
‘கசதப’ எனும் வல்லினமும்
‘ஞநம’ எனும் மெல்லினமும்
‘யவ’ எனும் இடையினமும்
கொண்ட ஒன்பது மெய் எழுத்துக்களும்
ங கரமும் தோன்றி மயங்கும்.

ஆ’ய்க’,ஆ’ர்க’,ஆ’ழ்க’
எனும் சொற்களில்,
மூன்று மெய்எழுத்துக்களாகிய
ய’கர’, ‘ர’கர, ‘ழ’கர
வடிவத்தினுள்ளே
‘க’கரம் பற்றி மொழி
எழுத்துருவாகிறது.

இது போல

‘வேய்ங்ஙனம், வேர்ஙனம், வேழ்ங்ஙனம்’
என்ற சொற்கள் அக்காலத்தில்
‘ங’ கரத்தோடு தோன்றி மயங்கி நின்றன
எழுத்துருவாகின என அறிவோம்.

‘ஙனம்’ என்ற சொல்
இங்’ஙனம்’ என மருவி
‘இடம்’ என அறிவோம்.

தொல்காப்பியம்: எழுத்ததிகாரம்: நூ.எண்.30:

மெய்ப் பொருள் காண் : ‘தமது ஓசை’ கரந்துறையில்.

த-தமிழ் மொழியில்
ம-மக்களை
து-துதி பாடி

ஓ-ஓங்கிய ஒலியின்
சை-சைகையை பாடுவோமே.

30.
‘ மெய்நிலை சுட்டின் எல்லா வெழுத்தும்
தம்முன் தாம்வரூஉம் ‘ரழ’ அலங்கடையே.’

உண்மையில் தமிழ் மொழியில்
தம் நிலையைச் சுட்டினால்
எல்லா மெய் எழுத்துக்களும்
தம்முன் வந்து எழுத்துக்கள்
உருவாகும் என்பதை அறிவோம்;

அவ்வெழுத்துக்களும்
‘ர’ கர ‘ழ’ கரங்கள் அல்லாத
எழுத்துக்களில்
என்பதனையும் அறிவோம்.

ஒத்த எழுத்துக்கள்
மயங்கும் எனக் தொல்காப்பியம் கூறுகின்றது.

ஒத்த எழுத்துக்கள்
இணைந்து வருங்கால் நின்ற
எழுத்தின் முன் வரும் எழுத்தின்
திண்ணியதாய் அழுத்தம் பெறுதலின்,
“மெய்நிலை” சுட்டின் தம் முன்
தாம் வருதல் என்று உணர்வோம்.

மெய்நிலை என்பது
பொருள்நிலையேயாகும்.

நீண்ட ஓசையை
சுட்டிக் காட்டுதலில்
ஒலி அழுத்தத்தைக் கருதுவோம்.

‘ரழ’ என்னும் இரண்டும்
அல்லாத மற்றைய
பதினாறு புள்ளி எழுத்துக்களும்
தத்தமக்கு முன்னர்த் தாம்
வந்து ‘தமது ஓசை’
திண்ணமாக புலப்படும்
என்பதனையும் அறிவோம்.

‘பொருள் நிலை’
இப்பிறப்பில் ஓசைப்பட
ஒலி அழுத்தத்தை கருதுகிறது
என்பதனை தமிழ் எழுத்தில்
அறிவோம்.

” ‘மக்கள்’ உணர
‘இங்ஙனம்’ என்றுரைத்திட
‘நொச்சி’ இலையில் சளி நீங்கிட
‘மஞ்ஞை’ என்பதை மயில் என்றறிந்திட
‘வட்ட’ வடிவம், கணித அரசி எனக் கண்டிட
‘அண்ணல்’ காந்தியின் கருத்து நல்
‘தித்தன்'(கருத்துக்கள் உடையவர்) என்று பாராட்டிட”

போன்ற பல மெய்யெழுத்து
சொற்றொடர்களில்,

ஓவ்வொர் மெய் எழுத்துக்களில்
பின் வரும் அதே மெய்எழுத்துக்களிலும்
தம்முன் தாமே வரும் என
வரையறையுடன்
வந்தனவாகக்கொண்டு,
வேற்றுநிலை
மெய்ம்மயக்கம்
எனத்தாமே கூறுகின்றன என்பதை
தொல்காப்பியத் தமிழில்
வகுத்ததென உணர்வோம்.

தொல்காப்பியம்: சொல்லதிகாரம் நூ.பா.எண்: 31, 32

மெய்ப்பொருள் காண்: ‘ அகமே அது, இது, உமது’ .

31. ‘ அ, இ, உ அம்மூன்றும் சுட்டு ‘.

‘அகமே அது, இது, உமது’ கரந்துறையில்

‘அ, இ, உ, ‘என்னும்
மூன்று
உயிர் எழுத்துக்கள்
சுட்டுதற்குரியவை
ஆதலின் சுட்டு
என்ற பெயரிட்டு
வழங்குதல் ஆகும்.

அ-அகத்தின் உள்ளே
க-கரம் என உணர்ந்து
மே-மேலும் தம் சுடரினை சுட்டும்.

அ-அறத்தை
து-துன்பமின்றி

இ-இகபர சுகங்களை நல்
து-துணையுடன் தேடு.

உ-உனதருமை
ம-மக்கள் பண்புடன்
து-துன்பமற்ற நல்வழி பயிலுவோம்.

அகமே
ஆயிரமாயிரம்
சுடரினை உருவாக்கும்.

‘அ’து,
‘இ’து என உணர்த்தி
‘உ’மது எழிலுருவை மேம்படுத்தும்.

அகத்தில் தோன்றும்
பல்வேறு
‘அ’வர’து’ நல் இன்பங்களை
‘இ’வள’து’ இனிய சுகங்களில்
மலரச் செய்து
‘உமது’
வாழ்த்துக்களுடன்
களிப்படைவோம்.

அகத்தில் சொல்வதை
‘அகச்சுட்டு’ என்போம்.

அகச்சுட்டு
அகத்துக்குரியதாகும்.
அகத்தினிலிருந்து
பிரிக்க இயலாது.

புறச்சுட்டு
புறத்தோற்றத்தைக் குறிக்கும்,
பிரிக்க இயலும்.

‘அ’ங்ஙனம்’ கவி பாடும் உம்மை
‘இ’ங்ஙனம்’ இருந்து பாராட்டுகின்றேன்
‘உ’ங்ஙனம்’ யாமறிந்ததாலே.

32. ‘ஆ,ஏ,ஓ அம்மூன்றும் வினா’.

ஆ, ஏ, ஓ என்னும் அம்மூன்று
எழுத்துக்களும்
வினா எழுத்துக்களின்
சிறப்புக் குறியீடு என
தொல்காப்பியம் கூறுகின்றது.

ஆ,ஏ,ஓ என்னும்
மூன்று
எழுத்துக்களும்
‘வினா’ என
வழங்கப்பெறும்.

‘ஆ’தரவு தருகின்ற
‘ஏ’ழை குடில் மக்கள்
‘ஓ’ங்கி உணர்ந்து
நல்நிலை அடைவர்.

இந்த உயிர் நீட்டெழுத்தும்
மூன்றும்
ஆட்சிப் பொருட்டு
ஆயப்படும்
இலக்கண குறியீடே ஆகும்.

உன’க்’கா’,(ஆ)
உன’க்கே’, (ஏ)
என்று ஒலிக்கும்
தேனினும்
இனிய பாடல்
உங்களு’க்கோ’ (ஓ)
ஓர் இன்னிசை
விருந்தாகும்.

தன் இன முடித்தல்
கொண்ட
‘எது’ என்ற
‘எ’கரமும்
‘யாது’ என்ற
‘யா ‘ என்ற யகர
ஆகாரமும்
வினா எழுத்துக்கள்
பெறும் என்பதனை
அறிவோம்.

இக்குறிகளும் குறில், நெடில்
கூறிய வழி என
தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில்
அறிவோம்.

தொல்காப்பியம்: எழுத்ததிகாரம்

மெய்ப் பொருள் காண்: ‘ஆரோசை, அமரோசை’

நூ.பா.எண்: 33. ‘குரலாக நீ’ கரந்துறையில்

‘கு-குறுகிய ஓசை
ர-ரகத்தினில், ராகத்துடன்
லா-லாவகமாக இசை எழுத்துக்களை
க-கற்றுணர்ந்து

நீ-நீட்டிய ‘தமிழ் இசை’

மொழியாக அமையும்.’

நூற்பா எண்: 33

‘ அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலுமு
உளவென மொழிப இசையோடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர் ‘

உயிர் எழுத்துக்கள்
எல்லாம்
தத்தமக்குரிய
அளவினை
கடந்து ஒலித்தலும்,
ஒற்றெழுத்துக்கள்
அரைமாத்திரையில்
நின்று
இயற்றும்
தமிழின் கண்
எழுத்துக்கள்
ஒ’ரோ’ வழி
நீண்டு இசைப்பதற்கு
இசை நூல்
முறைமை பற்றி
இந்த நூல் எண் கூறுகின்றது.

‘பண் இசைப் பாடலும்,
தேவ இசை பாடலும்,
பாடலாக
எழுத்து வடிவம்
பெற்று
இயல் தமிழ்
செய்யுளுள்
உயிர் எழுத்துக்களில்
ஒலியினை
கடந்து இசைத்தலும்
ஒற்றெழுத்துக்களாக
அளவின் ஓசையும்
கடந்து
இசைத்தலும்
உண்டு’.

என்று தமிழ் மொழியில்
கூறுவோம்.

ஏழிசையோடு பொருந்திய
நரம்பினை உடைய யாழ்
நூலிடத்தினவாம் என்று
தமிழ் இயல் ஆசிரியர்
கூறுவர்.

‘இசைப்பாட்டு அமைப்பதற்கும்
தேவ கான பாடலமைப்பதற்கும்
சங்கீத பாடலாக
வருவதற்கும்
இயல் தமிழ் செய்யுள் உள்ளே
உயிர் எழுத்துக்களில்
எல்லாம் கடந்து இசைத்து
ஒற்றெழுத்துக்கள் அளவினையும்
கடத்து இசைத்தலும் உண்டு.’
எனக் கூறுவர்.

‘ச,ரி,க,ம,ப,த,நி’
எனும் ஏழு இசையோடு
பொருந்திய நரம்பினை உடைய
யாழ் இசை நூலிலும்
தமிழ் எழுத்தில்
‘குரலாக நீ’ என
இசையை அமைத்து
தொல்காப்பிய தொகுப்பினில்
தமிழ் மொழியில் அறிவோம்.

என்பர் புலவர்.

அளவு கடந்து இசைக்கும்
பொழுது உயிர்
பன்னிரண்டு மா(பெரும்)த்திரை
வரையும்
ஒற்றெழுத்துப் பதினொரு
மா(பெரும்)த்திரை
வரையும் இசைக்கும்.

தமிழிசை ‘ ஏழிசையாக ‘

‘குரல்,
துத்தம்,
கைக்கிளை
உழை,
இளி,
விளரி
தாரம் ‘

என்பது இசை நூலார் கருத்தாகும்.

இதனை ‘ ஆரோசை ‘ என அழைப்பர்.

பண் இசைகள் :

குரல் ‘ ஆ’ எனவும்

துத்தம் ‘ ஈ ‘ எனவும்

கைக்கிளை ‘ ஊ ‘ எனவும்

உழை ‘ ஏ ‘ எனவும்

இளி ‘ ஐ ‘ எனவும்

விளரி ‘ ஓ ‘ எனவும்

தாரம் ‘ ஔ ‘ எனவும்

மேலே கூறிய

உயிர் எழுத்துக்களில்

இசை ஒலிகளாக பாடப்படும்.

இவற்றினை தமிழ் இசையில்

‘அமரோசை’ என்று அழைக்கப்படும்.

ஒலி கூட்டி

‘ ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ‘

‘ ஆரோசை ‘ யாக இசைக்கப்படும்.

ஒலி குறைத்து

‘ ஔ, ஓ, ஐ, ஏ, ஊ, ஈ, ஆ ‘ என

ஒலிப்பது ‘ அமரோசை ‘ ஆகும்.

தமிழிசை ‘ ஆரோசை அமரோசை’

‘கரந்துறை’ பாவில்

‘ஆரோசை’

‘ஆ-‘ஆ’ராரோ’ வில் ஆரம்பித்து, ஆரி

ரோ-‘ரோ’ வரிசையில்

சை-‘சை’கை மூலம் இசையில் பாடும்

‘ஆரோசை’ யில் ஒற்றெழுத்தில்

நீட்டிப் பாடி உளமாற சிவ

‘சி-சிறிய
வ-வரிகளில்

‘ஔ-ஔ’வை எழுத்தில் நீட்டி

தொடங்கிய ‘அமரோசை’

அ-‘அ’கிலத்தில்

ம-‘ம’னிதர்கள் ‘ஆ’ வென்ற ஒசை வரை குறைத்து ‘ஆ’

ரோ-‘ரோ’வில் முடிக்கும் இசையில் ஒலித்து

சை-‘சை’கையில் முடியும்.

ஆரோசை, அமரோசை அகிலம் போற்றும்

அற்புத தமிழ் குரல் இசை, ‘தமிழிசை. ‘

குரலாக நீட்டி குறைத்து

இன்னிசை எழுத்தில்

அதிகார நூற்பாவிலும்

தொல்காப்பியத் தமிழிலும் தொகுப்போம்.

இத்துடன் ‘ நூல் மரபு ‘

‘நூலாக மரபாக’

எழுத்து அதிகாரம்

கரந்துறையில் முற்றுப் பெற்றது.

தொல்காப்பியம்: எழுத்ததிகாரம்

2. மொழி மரபு:

நூ.பா.எண்.34. ‘பூமியா’ கரந்துறையில்

‘பூ-பூமியில்
மி-மிஞ்சும்(இருப்பதை)
யா-யாவும்’

ஆம், தமிழ் மொழியில்
பூமியில்
இருப்பதையும்
எழுத்தில், சொல்லில், பொருளில்
பதிவதை
அறிவோம்.

தமிழ் எழுத்தில்
கூற்று, சொல், பேச்சு,
அதே எழுத்துக்களிலே
கரந்துறையில் பதிவதையும்
அறிவோம்.

‘உரை’க்காக வாயில்
‘அசை’க்கப்படும்
ஒலியை
‘உரைஅசை’
என்பதையும் அறிவோம்.

‘மொ’ட்டு போன்ற நம் வாயின் இத’ழி’ல்
இருந்து ஒலி வருவதனால் ‘ மொழி ‘
என்கிறோம்.

நம் வாய் ஒரு பூவில் உள்ள
ஒரு ‘மொ’ ட்டு போல
மலர்ந்து வாயின் இத’ழி’ல்
சொற்களாக உருவெடுக்கிறது.

நம் தமிழ் மொழியும்
வாயில் இருந்து
‘மொ’ ட்டாக,
ஒலி,
தத்(”த(ம் + இ)’த” ))ழ்’கள்
வ ‘ழி’ யே வருவதை
‘ மொழி ‘ என்று வழக்கத்துடன்
‘தமிழ் மொழி’ ஆக வியாபித்து உள்ளது.

‘தமிழ் இது ‘தமிழ் இது’ என
எழுப்ப படும் ஓசையில் இருந்து
‘தமிழ் மொழி’
ஒலிப்பானாக மலரும்.

தத்தமது
வாயின் இதழ்களில்
‘மொ’ட்டு
மலருவது போல
ஓசை, இத(ழி)ல்
ஒலிப்பானாக
வருவதை
தமிழ் ‘மொழி’
என அறிந்தோம்.

எழுத்து அதிகாரத்தில்
‘மொழி மரபு ‘ தொகுப்பில்
காண்போம்.

மொழிக்கு எழுத்தால்
வரும் இலக்கை
அக்கணமே அடையும்
என்பதை
இலக்((கு)+(அக்))கணம்
என்கிறோம்.

இலக்கணத்தை
‘மரபு ‘ ஆகி
‘எழுத்து’ உருவாகிறது.

‘மரபு’ கரந்துறையில்

‘ம-மக்களின்
ர-ரசனையை
பு-புரிதல்’

தமிழ் மொழியில்
மக்களின்
ரசனைக்கு தக்கவாறு
உணர்த்தப்படுவதால்
‘மொழி மரபு’ என்கிறோம்.

வாய்
‘மொ’ட்டின்
வ’ழி’யில்,
‘மொழி’ ஓலியாகி
ரசனையுடன்
தத்தம் இதழ்களில் எழுத்தின்
மரபாக கூறப்படுகிறது.

சார்பு எழுத்துக்கள்
மொழிகளில்
பயிலுமாறு இந்த
நூற்பா
எண்களில் அறிவோம்.

34. ‘குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
‘யா’ என் சினைமிசை உரையசைக் கிளவிக்கு
ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே.’

“‘குறுகிய’ ஓசையுடைய
‘இயல்’ ஆன சொற்கள்
‘இகரம்’ ஆக
‘குற்றியலிகரம் ‘
தமிழ் மொழியில்
சார்ந்து நிற்றல் வேண்டும்”
என
இந்த நூ.பா.எண்: 34
வரும் எனத் தொல்காப்பியம்
கூறுகின்றது.

ஆம், நண்பர்களே,

குற்றியலிகரம் ஒரு சொல்லில்
வரும் வகை என அறிந்தோம்.

சார்ந்து வரும் மரபு
எனப் பெற்ற
மூன்றனுள்
குற்றியிலிகரம்
‘மியா’ என்னும்
உரையசை இடைச்சொல்லின்
உறுப்பாக நின்று ‘யா’
என்னும் எழுத்திற்கு மேல்,
அவ்விடத்து
வரும் மகர மெய்யை
ஊர்ந்து நிற்கும்
எனக் கூறுவர் பலர்.

எழுத்தை ஒலிக்கும்போது
ஓசை இனிமைக்காகவும்
எளிமைக்காகவும்
சாரியை சேர்த்து
ஒலிக்கப்படும்.

எழுத்துச் சாரியைகளாக
‘கரம்’, ‘காரம்’, ‘அ’
ஆகிய மூன்றும்
பயன்படுத்தப்படுகின்றன.

குறில் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்குக் ‘கரம்’ என்பதையும்
நெடில் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்குக் ‘காரம்’ என்பதையும்
மெய் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு ‘அ’ என்பதையும் பயன்படுத்தவேண்டும்.

குறில் : அகரம், உகரம், சகரம், மகரம்

நெடில் : ஆகாரம், ஊகாரம், ஐகாரம், ஔகாரம்

மெய் : க, ச, ட, த, ப, ற…

குறிய ஓசை உடைய
இயல்பைக் கொண்ட ‘லி’கரம்
இயல்பான ‘உ’கரம்,
‘குற்றியலுகரம் ‘ ஆகும்.

குற்றியலுகர எழுத்துக்களோடு
யகரத்தை முதலிலே உடைய
சொல் வந்து சேரும்போது
குற்றியலுகரத்தில் உள்ள ‘உ’கரம்
திரிந்து ‘இ’கரமாக மாறும்.

இது ‘குற்றியலிகரம்’ என்று
நிற்றல் வேண்டும் என இந்த
நூற்பா எண்ணில் ஆரம்பிக்கிறது.

‘நாடு’ எனும்
தமிழ்ச் சொல்லில்,
கடைசியில் வரும் ‘டு’
என்னும் எழுத்து
உகரம் ஏறிய எழுத்து ‘ ட் ‘
தன் இயல்பான ஓரு
மாத்திரை அளவு நீட்டிக்காமல்
அரை மாத்திரை அளவே
ஒலிக்கும்.

‘கேண்மியா’ எனும்
சொல்லை எடுத்துக்காட்டாக
கொண்டு
‘உரை அசை’ சொல்லான
பொருள் உணர்வோம்.

‘கேண்’ என்பதன் சொல்
கேள் என்றாகும்.

‘மியா’ உரைக்கு அசை
சொல்லாகும்.

இந்த ‘கேண்மியா’
சொல்லின் பற்றுக் கோடு
மகர ஒற்றாகும்.

உரையசை என்பது
வழக்கில் வரும் அசைச் சொல்.

உரை அசைச் சொல்லானது
சிறிது பொருள் உணர்த்தும்.

அ’சை’நிலை என்பது
உரையின் ‘சைகை’ நிலையிலும்
சொற்களை சார்ந்து நிற்கும்.

கிளவி என்பதன் பொருள்
பேச்சு, சொல் என்று அறிவோம்.

தொல்காப்பியம்-எழுத்து அதிகாரம்- 35

2. மொழிமரபு : கரந்துறையில்

‘ மரபு யாதுமாகி ‘

‘ம-மக்களை
ர-ரகவாரியாக
பு-புரிதலுக்கு

யா-யாவும்
து-துணையாக
மா-மாந்தர்க்கு
கி-கிட்டும் ‘

ஆம் நண்பர்களே,

ம-மக்களை
ர-ரகவாரியாக
பு-புரிதலுக்கு

யா-யாவருக்கும்
து-துணையாக
மா-மானிடர்களுக்கு எம்மொழியிலும்
கி-கிட்டும்

என்ற சொல் அமைப்பை
தமிழ் மொழியின் மரபினில்
அறிவோம்.

தமிழ் மொழி தரணி போற்றும்

‘உயர் மொழி, உயிர் மொழி,
செம்மொழி’
என்றும் சொல்வோம்.

கரந்துறையில்
‘ மரபு யாதுமாகி ‘
மேற்கொண்ட சொல்லின்
எழுத்தின் அடிப்படையிலே
அமையும்.

யாவும்
மனிதர்களுக்கு
கிட்டுவதாக அமைவது
தமிழ் மொழி மரபுக்கு
உண்டான
சிறப்பாகும்.

35. ‘புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே
உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்.’

புணரியல் என்பது மொழியில்
வழங்கும் ஒலியன்களாகும்.

புணர்ச்சி என்றால்
‘ சேர்க்கை ‘
என்று பொருளாகும்.

இரு மொழி எழுத்துக்கள்
சேரும் இயல்பை
புணரியல்
என அறிவோம்.

இவ்வாறான புணரும்
நிலையில்
குறுகி அவ்விகரம்
ஒலித்தலை
குற்றியலிகரத்தின் இடத்தையும்
பின்னர்
குற்றியலுகரப்
புணரியலுள்ளும் தோன்றும்.

குற்றியலிகரம்
புணர்மொழி
இடத்து வருதலும்
வருங்கால்
ஒரோவழிக்
குறுகுதலும் உண்டு
என
அதன் மா(பெரும்)த்திரை
அளவிற்கு
சொற்களின் மரபு
அடை என்று
கூறுகின்றது.

மேற்கூறிய குற்றியலிகரம்
சொற்கள் புணர்ந்தியலும்
நிலைமையின் கண் தனக்கு
உரிய அரைமாத்திரையினும்
குறுகி ஒலிக்கும் இடத்தினை
உணரக்கூறின் அவ்விளக்கம்
குற்றியலுகரப் புணரியலுள்
விளக்கம் ஆகும்.

குற்றியலிகரம் என்பது
அதிகாரத்தான் வந்தது.

உம்மை எதிர்மறை
ஏகாரம் ஈ–ற்றசை

முன்னர் என்றது
குற்றியலுகரப் புணரியல்.

தமிழ் அகத்தில் புகுந்து
தத்தம் வசிக்கும் இடங்களில்
பேசும் ‘மொழி மரபு’
தமிழ் மொழியாகி
தமிழ் பேசும் மக்களை
ஓர் இடத்தில் நிலைப் பெற்றது.

‘ஆடு யாது’ என்ற
குற்றியலுகரம்
குற்றியலிகரமாக
‘ஆடியாது’
என்றானது.

‘கவடு யாது’ என்ற குறுகிய
ஓசை உடைய லுகரம்
குற்றியலிகரமாக
‘கவடியாது’ என்று
ஆகியது.

இது போல,
‘தொண்டு யாது-தொண்டியாது’
என வரும்.

முன்னவை குறுகும்
என்பதற்கும் காரணம்,
ஆடி(திங்கள்)
கவடி(வெள்வரகு)
தொண்டி(ஊர்)
என்னும் பெயர்கள்
யாது என்னும் சொல்லொடு
புணருங்கால்

‘ஆடு+யாது=ஆடியாது’
‘கவடு+யாது=கவடியாது’
‘தொண்டு+யாது=தொண்டியாது’

என மேலே சொற்கள் மரபு மொழியாக
தமிழ் எழுத்துக்களில் சேர்க்கப் படுகிறது.

இரண்டிற்கும் வேற்றுமை
தெரியக் குற்றியலுகரத்தின்
திரிபாகிய ஆடு, ஆடி என்பதன்
மா(பெரும்)த்திரையை
அரை மா(பெரும்)த்திரையினும்
குறுக்கி ஒலிக்க வேண்டும்
ஆயிற்று
என அறிவோம்.

திங்களின் பெயராய் வரும்
ஆடி மாதம்
என்னும்
இயல்பு
ஈற்றினே பெற்று
ஒரு மா(பெரும்)த்திரையளவிற்கு
இசைத்தல் வேண்டும்
என்று அறிவோம்.”

தொல்காப்பியம் எழுத்ததிகாரம்:
நூ.பா.எண்: 36,37,38,39

2. மொழி மரபு: 36, 37, 38, 39

‘இகரமாக உகரமாக’ கரந்துறையில்

குறுகிய ஓலி உடைய ‘இ’கரத்தை ‘ இகரமாக ‘

‘இ -‘இ’ என்ற எழுத்தின்
க -கரத்தைப் பற்றி
ர-ரக வரிசையில்
மா-மாண்புற
க-கற்போம்’

என கரந்துறையில் அறிவோம்.

குறுகிய ஒலி உடைய ‘உ’கரத்தை ‘உகரமாக’

‘உ-‘உ’ என்ற எழுத்தின்
க-கரத்தைப் பற்றி
ர-ரக வரிசையில்
மா-மாண்புற
க-கற்போம்.

என கரந்துறையில் அறிவோம்.

இகர, உகர ஒலியை
‘இகரமாக’
‘உகரமாக ‘
என்ற சொற்களின்
ஒவ்வொரு
எழுத்திலும்
‘கரந்து உறை’க்குள்
வைப்பது போல
கரந்துறையில்
‘குற்றியலிகரத்திலும்
குற்றியலுகரத்திலும்’
அறிவோம்.

ஒரு மொழிக் குற்றியலுகரம்:

36. ‘நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி ஈற்றும்
குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே.’

இது ஒரு மொழிக்
குற்றியலுகரத்துக்கு வரும்
இடமும்
அதனையொட்டி
தொடரும்
பற்றுக்கோடும்
உணர்த்துகின்றது.

நெட்டெழுத்தின் பின்னும்,
தொடர்மொழியினது
இறுதியிலும்
குற்றியலுகரம்
வல்லின எழுத்து
ஆறினையும்
ஊர்ந்து நிற்கும்.

தனியாக உள்ள
நெடில்
எழுத்தைத் தொடர்ந்து
வல்லின எழுத்துக்களாகிய

‘கு, சு,டு, து, பு, று’
என்ற எழுத்துக்கள்
ஊர்ந்து வருமெனில்

நெடில் தொடர் குற்றியலுகரம் ஆகும்.

‘நெடில் தொடர் குற்றியலுகரம்’-‘கரந்துறை பா’வில்

பா’கு’பாடுடைய பாங்’கு’டையோர்
‘சு’க வாழ்வு அடைய ‘சு’ற்றத்தாரும்
பா’டு’பட்’டு’ உயர்வோ’டு’ வாழ
காத்’து’ காத்’து’
‘பு’ த்துணர்ச்சியை ‘பு’ரிவோராக
ஆ’று’தலுடன் கூ’று’வோம்.

புணர்மொழிக் குற்றியலுகரம்:

37. இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே
கடப்பா டறிந்த புணரிய லான.

ஒரு மொழிக் குற்றியலுகரம்
புணர்மொழி எதிர்படின்
குறுகும் இடமும் உண்டு.

அவ்விடம் குற்றிலகரப் புணரியலும் உண்டு.

‘குற்றியலுகரம்
புணர்மொழிக்கண்
வருதலும்,
வருங்கால்
ஓரோவிடத்தில்
குறுகி நிற்றலும்
உண்டு’

எனக் குற்றியலுகரத்தின்
மா(பெரும்)த்திரைக்கு
புறனடை கூறுகின்றது.

‘சுக்கு+கோடு=சுக்கோடு’
என்று புணரியலில் அறிவோம்.

38. ‘குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரோடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே.’

ஆய்த எழுத்து மொழிக்கண்
சார்ந்து வருமாறு கூறுகின்றது.

முப்பாற்புள்ளி என்ற
ஆய்த எழுத்து;
குற்றெழுத்தின்
முன்னர் உயிரொடு
புணர்ந்த
வல்லின எழுத்து
ஆறின்
மேலதாக வரும்.

எ.கா:
எஃகு, கஃசு
எஃகு-வேல் கஃசு-காற்பலம்
(பலம் என்பது முற்கால நிறைப் பெயர்)
ஆய்த எழுத்திற்கு
செய்யுளால் வழங்கும்
பெயர் ‘ நலிபு ‘என்பதாகும்.

புணர்மொழி ஆய்தம்:

39. ‘ ஈரியல் மருங்கினும் இசைமை தோன்றும்.’

இது ஆய்தக் குறுக்கம் என்று பெயர்.

இஃது அவ்வாய் தம்
புணர்மொழி
அகத்தும் வருமாறு
கூறுகின்றது.

முப்பாற்புள்ளியாகிய
அந்த ஆய்த எழுத்து
இசைமை, எழுத்தாக
இசைக்குந்தன்மையும்,
உயிரியல் இயல்பு ஆவது
இசைத்து செய்யுளில் வருதல்
அலகு பெற்று வரும்.

ஒற்றியல்பு ஆவது ஒலித்து
அலகு பெறாது அசைக்கு
ஒற்றினது உறுப்பாகி வரும்.

நிலைமொழி ஈறு
வருமொழி
முதலோடு புணரும்
இடங்களிலும்
ஆய்த ஒலி தோன்றும்.

ஆய்த எழுத்து தன்
அரை மா(பெரும்)த்திரை
அளவில்
இருந்து
கால் மாத்திரையாக
குறுகி ஒலிக்கும்.

‘கல்+தீது=கஃறீது; முள்+தீது=முஃடிது’

”கல் தீது’ எனும் எழுத்து
அரை மாத்திரை அளவு
‘கஃறீது’ என்று
கால் மாத்திரையாக
குறுகி ஒலிக்கும்’

என வரும்.

தொல்காப்பியம் : எழுத்து அதிகாரம் : மொழி மரபு
நூ.பா.எண்: 40, 41

‘மதி ஓசை’ : கரந்துறையில்

ம-மக்களின் பேசும்
தி-திறனை

ஓ – ஓங்கி ஒலிக்கும் அளவை ஆயுத்த
சை-சைகை (ஆய்தஃஎழுத்து) மூலமும் உணர்வோம்.

‘மக்கள் பேசும் ஒரு மொழியில்
ஓசையுடன் இயலிசை பாடி
இன்ப தமிழ் இது என
உணர்ந்து இனிய கீதமாக
காற்றினிலே பவனி வர
ஆயுத்த நிலையிலே
அஃது எந்நிலையிலே
பாடுவது என உணர்வோம்.’

ஒலியே மொழிக்கு
முதற்காரணமாகும்.

காற்று அணுத்திரளின்
செயல்பாடு முயற்சியால்
உண்டாகும்
ஒலியே எழுத்தாகும்.

ஆய்தம் சில இடங்களில்
முற்று ஆய்தமாகவும்,
குறுக்கமாகவும்
அளபெடையாகவும்
குறிப்பு மொழியிலும்
தோன்றும்.

ஒரு மொழி ஆய்தத்திற்கு ஓர் இலக்கணம்.

40. ‘உருவிலும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தி னியலா
ஆய்தம் அஃகாக் காலை யான்.’

உருவத்தை குறிப்பிடும் இடத்தும்,
ஓசையை குறிப்பிடும் இடத்தும்
சிறுபான்மையாய் வரும்
மொழிக்குறிப்புகள் எல்லாம்
ஆய்த எழுத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள்
போன்று இல்லாமல், நீண்டு ஓலிக்கும் பொழுது,
அந்த ஆய்தெழுத்து தன் அரை மாத்திரையில்
குறைந்து ஒலிக்காது.

கஃறு என்பது வடிவைச் சுட்டும் குறிப்புமொழி.
சுஃறு என்பது ஓசையைச் சுட்டும் குறிப்புமொழி.

இவ்விரண்டு சொற்களையும்
ஓசைநீட்டிச் சொல்ல வேண்டும்.

அவ்வாறு ஆய்த
எழுத்தின்ஒலியை
மிகுத்துச் சொன்னாலும்
அவ்வொலி மிகுதியைக் குறிப்பதற்கு
ஆய்த எழுத்தை மிகுத்து எழுதுவது இன்று.

“ஆய்த எழுத்து தனக்குள்ள
அரைமாத்திரையினும் மிகுந்து ஒலிக்குமிடம்
குறிப்பு மொழிகளில் சிறுபான்மைதோன்றும்.

அவ்வாறு தோன்றுவதை
எழுத்தான் எழுதிக்காட்டுவது இன்று”
என்பது இந்நூற்பாவால் அறிவிக்கப்பட்டது.

ஒரு பொருளினில் தோற்றத்திலும்,
ஒசையிலும்
சிறுபான்மை
ஆகத் தோன்றும்
குறிப்பு மொழிகள் எல்லாம்
ஆய்த எழுத்து தன்
அரை மா(பெரும்)த்திரை அளவாக
நில்லாது நீண்டு
ஒலித்த பொழுது,
அந்நீட்சியைக் குறிக்கத்
தனி எழுத்தால்
எழுதப்பட்டு வழங்காது.

எ.டு:
‘ கஃறென்றது ‘ என்பது உருவு.
கஃறு – நிறத்தை உணர்த்தும் குறிப்பு
‘ சுஃறென்றது ‘ என்பது ஓசை.
சுஃறு – ஒலிக்குறிப்பு மொழி.

நிறத்தின் மிகுதியையும்,
ஓசையின் நுணுக்கத்தையும்
குறிக்கும் பொழுது
அங்கு வரும்
ஆய்தம்
தமது
அரை மா(பெரும்)த்திரையிலும்
மிகுந்து ஒலிக்கும்.

உயிரின் எழுத்தும்,
மெய்யின் எழுத்தும்
அளபு எடுக்கும் பொழுது,
அந்த நீண்டு குறிக்கும் முறையை
தமிழ் எழுத்தின் இனமான
உயிர் குறுகிய எழுத்தோ
மெய் எழுத்தோ எழுதப் பெறும்.

ஏனை எழுத்துக்களைப் போல
நடவாத தனித்தன்மையுடைய
ஆய்தம்,
தனக்குரிய
அரை மா(பெரும்)த்திரை
அளவில் ஒடுங்கி நில்லாமல்
சிறிது மிகுந்து
ஒலிக்குங்கால்,
நிறம் பற்றியும் ஓசை பற்றியும்
வரும் சொல்
அகத்துச் சிறுபான்மையாகத் தோன்றி
வரும்;
அவை
எல்லாம்
குறிப்பு மொழிகளாம்
எனக் கூறுவோம்.

ஆய்தத்திற்குக் கூறிய
அளவாகிய
அரை மா(பெரும்)த்திரையினும்
மிகுதியையும்
அந்நீட்சியைக் குறிக்கத்
தனி எழுத்தால்
எழுதப்பட்டு
வழங்காது.

உயிரளபெடை

41. ‘குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே.’

(திம்பர்-பின்னர் )
போதிய ஒலியில்லாது குறைந்து ஒலிக்கும் சொல்லினடத்து நெட்டெழுத்துக்களின் பின்னர் குற்றெழுத்து தோன்றி குறைந்துள்ள ஒலியை நிறைவு செய்யும்.

எ.கா:

மாஅல் :
‘மால்’ எனும்போது
‘மா’ வுக்குரிய
இரண்டு மாத்திரை
ஒலி போதவில்லை.

‘ஆ’ வினுக்கு இனமான ‘அ’ தோன்றி
அதன் இரண்டு மாத்திரை
ஓசையை
மூன்று மாத்திரையாக்கியுள்ளது.

இசை குன்று வதற்கென
மொழிக்கண்,
நெட்டெழுத்தின் பின்னர்
ஓசையை நிறைத்து
நிற்பன அவற்றின் இன
மொத்த குற்றெழுத்துக்களே.

‘ஆஅ , ஈஇ, ஊஉ, ஏஎ, ஓஒ’ எனவரும்
குன்றிசை மொழி
என்றதற்கு
இசைகுன்று
மொழி
என்று சொல்லுவோம்.

‘ஆ’றா ‘அ’வனியிலே
‘ஈ’தல் ‘இ’சைபட வாழ்ந்து
‘ஊ’ர்ந்து ‘உ’யிரெள
‘ஏ’ற்றம் ‘எ’து என அறிவதற்குள்
‘ஓ’ராயிரம் ‘ஒ’லி
‘ஓ ஒ’தல் வேண்டும் ஒலித்திடுமே.

இவ்வாறு உயிர் எழுத்துக்களின்
அளவை எடையாகக் கொண்டு
நீட்டி குறைத்து ஒலிக்கும்
முறையை அறிவோம்.

தொல்காப்பியம்-எழுத்து அதிகாரம்-
மொழி மரபு நூ.பா.எண்-42,43, 44

‘வை ‘, ‘ஔவை’ – கரந்துறையில்

‘ வை ‘-வை அகத்தில்
‘ ஔவை ‘-ஔவையின் கருத்தையும்

கரந்துறையில்
தமிழ் மொழியில்
அறிவோம்.

வை:
—–
‘வை அகமே ‘

வைகை
ஆற்றில் உள்ளது!

வைகை ஆற்றில்
கை வைத்தல்
வையகத்தை கைக்குள்
வைப்பதோ !

வைகை ஆற்றில் கை
வைத்தாலும் கையளவு
நீர் கூட அள்ளிக் குடிப்பதற்கு
இல்லை.’

ஔவை:
——-
‘ஆதியில் இருந்து
அந்தம் வரை அகம் புறம்
நிறைவு பெற
ஆத்திசூடியில்
அந்தாதி பாடி உகந்த நிலை
அடைவோம்.’

ஓர் எழுத்து ஒரு மொழி:

42. ‘ஐ ஔ என்னும் ஆயீ ரெழுத்திற்று
இகர உகரம் இசை நிறைவாகும்.’

தமக்கென இனம் இல்லாத
‘ஐ’,
‘ஔ’
எனும் இரண்டெழுத்திற்கும்
முன்
‘ஈ’ கார, ‘ஊ’ காரங்களுக்கு
இனமாகிய
‘இ’கர, ‘உ’கர ஓசை
குறைந்து வரும் அளபெடை
மொழிக்கண் நின்று
ஓசையை நிறைக்கும்.

எ.கா: ஐஇ, ஔஉ.

ஐஇ-கைஇ எனவும்,
ஔஉ-வௌஉ எனவும் வரும்.

‘ஐ, ஔ’ என்று சொல்லப்படும்
அந்த இரண்டு எழுத்துக்களுக்கும்
‘இ’ கரம் ‘உ’ கரம்
என்ற இரண்டு
குற்றெழுத்துக்களும் வந்து
ஓசை நிறைக்கும்.

‘ஐ’, ‘ஔ’ எனும்
இரண்டு நெடில்களுக்கும்
அதே இனமான
குற்றெழுத்துகள் இல்லாமையால்,
அவற்றுக்கு உரிய
குற்றெழுத்துகள்
இவையென இந்நூற்பாவில்
அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஐ’க்கு
‘இ’ கரமும்

‘ஔ’க்கு
‘உ’ கரமும் ஆகும்.

எ.கா : தைய ; கௌஉ

ஒரெழுத்தொரு மொழி

43. ‘நெட்டெழுத் தேழே ஒரெழுத் தொருமொழி’.

நெட்டெழுத்துகள்
ஏழும்
ஒரெழுத்து
ஒருமொழியாய் வரும்.

தனித்து ஒரு
எழுத்து ஒரு மொழியாகி
வருவன
நெடில் எழுத்து
ஏழுமே ஆகும்.

நெடில் எழுத்துக்கள்
ஏழும்
தனியே நின்று
பொருள் தரும்.

கீழ்க்கண்ட எழுத்துக்கள்
தனி நெடில் எழுத்துக்கள்
எனிலும் அந்த எழுத்துக்கள்
பொருள் குறிப்பால்
அறிந்து கொள்ளலாம்.

எ.கா: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ

‘ஆ என்பதை பசு ‘ எனவும்
‘ஈ் மொய்க்கும் பூச்சி ‘ எனவும்
‘ஊ என்பதை இறைச்சி’ எனவும்
‘ஏ என்றதனை அம்பு ‘ எனவும்
‘ஐ என்றொர் எழுத்தை அழகு’ எனவும்
‘ஓ என்றெழுத்தை ஒழிவு ‘ எனவும்
‘ஔ என்பது விழித்தல்’ எனவும்

ஓர் எழுத்தில்
தமிழ் மொழி பொருள்
அறிவோம்.

ஓர் எழுத்தே
தனியாக நின்று
பொருள் தருமாயின்
அவை ‘சொல்’ எனப்படும்.

ஆ-கா எனவும்
ஈ-நீ எனவும்
ஊ-பூ எனவும்
ஏ-பே எனவும்
ஐ-கை எனவும்
ஔ-வௌ எனவும் வரும்.

‘மெய்யோடு இயையினும்
உயிர் இயல் திரியாது’.

மெய்யோடு உயிர் இணைந்திடினும்
உயிர் இயல்பாக பொருள் தராது.

‘உயிர்மெய் அல்லாது
மொழி முதலாகா. ‘

அதே போல,

‘உயிர்மெய் எழுத்துக்கள்
அல்லாமல்
தமிழ் மொழியில்
உயிர் எழுத்துக்கள் மட்டும் பொருள்
முதலாகாது.’

என்பதனை நினைவில்
கொள்வோம்.

44. ‘குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே.’

குறில் எழுத்துகளாக
வரும்
‘அ,இ,உ,எ,ஒ’
ஆகிய இந்த ஐந்து
ஓரெழுத்தும்
மொழியாக அமையாது.

குற்றெழுத்து ஐந்தும்
ஒரெழுத்தில் ஒரு
மொழியாய்
நின்று பொருள்
தருதல் இல்லை.

குற்றெழுத்து
ஐந்தனுள்
உ, ஒ என்னும்
உயிரெழுத்துக்கள்
மட்டும்
மெய்யுடன்
கூடிப் பொருள் தரும்.

எ.கா: து, நொ.

து-உண், கெடுத்தல்.
நொ-துன்பம்.
என்று அறிவோம்.

இச்சொற்கள்
மொழி இயல்பில்
நிறைந்து உரிய பொருள் தரும்.

தொல்காப்பியம் எழுத்து அதிகாரம்
மொழி மரபு நூ.பா.எண்:45,46,47

‘ பகு பதமாக ‘ கரந்துறை பா வில்

ப-பழக்கத்தை நல்
கு-குணமாக்கி

ப-பதத்தை(சொற்களை)
த-தரமாக கற்றுணர்ந்து
மா-மானிடர்களாக
க-கடமை புரிவோம்.

மூவகை மொழிகள்:

45:

‘ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி
இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே.’

‘ஓரெழுத்தில் ஒருமொழியும்,
ஈரெழுத்தில் ஒருமொழியும்,
இரண்டிற்கும் மேற்பட்ட
எழுத்துக்களால் இசைக்கும்
தொடர்பு மொழியும் உள்பட
மூன்று மொழிகளாகும.’

என்று
தொல்காப்பியர்
பகுத்து கூறுகிறார்.

ஓர் எழுத்து ஒரு மொழி:

உயிர் மெய் எழுத்துக்களில் அறிவோம்.
‘ ம ‘ என்ற ஒரு எழுத்து வருக்கத்தில்
உருவாகி இருக்கிற
கீழ்க்கண்ட சொற்களுக்கு உரிய
அர்த்தங்களைக் காண்போம்.

‘மா-பெரியது எனவும்
மீ-மேல் எனவும்
மூ-மூப்பு எனவும்
மே-மேல் எனவும்
மை-மசி எனவும்
மோ-மோத்தல், முகத்தல்’ என்று அறிவோம்.

”ம ‘ வருக்க எழுத்துக்களில்
வடித்த கரந்துறை பா

மா- பெரியவர் எவரெனில்
மீ-மீண்டும் வயதினால்
மூ-மூப்படையும் பொழுதும்
மே-மேலும்
மை-மைய நினைவகம்
மோ-மோதித் தானே புள்ளியாக அமையும்.’

ஈர்எழுத்து ஒருமொழி:

தொல்காப்பியர் சொல்
முறையில் அடுத்து
ஈரெழுத்து ஒருமொழி ஆகும்.

இரண்டு எழுத்துகள்
சேர்ந்து வந்து பொருள்
தருமானால்,
அது ஈர்எழுத்து
ஒருமொழி எனப்படும்.

‘அணி,
மணி,
கல்,
நெல் ‘

என வரும் சொற்களில்
இரண்டு எழுத்துகள்
இணைந்து வந்து பொருள்
தருவதைக் காணலாம்.

இவை ஈர்எழுத்து
ஒருமொழிக்கு
எடுத்துக்காட்டுகள்.

‘அணி’ அணியாய்
‘மணி’ மணியாய்
‘கல்’, கல்பாறையாய் இருப்பினும்
‘நெல்’ கதிரும் வளர்ச்சியுற
‘ஈர்’ எழுத்திலும்

பொருள்
கொள்வோம்.

ஓரெழுத்து, ஈரெழுத்தாலாய
சொற்களே மிகுதியானவை.

மூவெழுத்துச் சொற்கள்
சிறுபான்மையே.

மூவெழுத்துச் சொற்கள்:

‘மரம்
தரம்’

இவற்றுள்
தொடர்மொழி என்பது
பெரும்பாலும்
மூவெழுத்து மொழிகளையும்,
சிறுபான்மை நான்கெழுத்து
மொழி களையும் குறிக்கும்.

தனி மெய்கள் இயங்கும் முறை:

46. மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்.

தனி மெய்களின் இயக்கம் அகரத்தோடு பொருந்தும்.

தனிமெய்களினது நடப்பு,
அகரத்தோடு பொருந்தி நடக்கும்.

தனி மெய்களைச் சொல்லுங்கால்
க, ச, த, ப எனக் கூறுவது எளிதாகும்.

க்,ங்,ச்,ஞ் …….. மெய்யெழுத்துகள்
அகரம் சேர்த்து
க,ங,ச,ஞ
என்று சொல்லப்படும்.

47.

‘தம் இயல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை.’

எல்லா எழுத்துக்களும்
தம் இயல்பை
சொல்லுமிடத்து
இந்த எழுத்தோடு
இந்த எழுத்து
பொருந்தி வரும்
எனும் நிலையில்
இருந்து மாறுபட்டு
வருதல் குற்றம் இல்லை.

உயிர் எழுத்துகள்
மெய்யெழுத்துகளோடு
சேர்ந்து
மெய்யெழுத்துகளின்
தன்மையான
வல்லினம்,மெல்லினம்,இடையினம்
என்று அறிவோம் .

அவ்வாறு மயங்குவது குற்றம் இல்லை.

‘க’ என்ற எழுத்தில் ‘க்’
என்ற
மெய்யும் ‘அ’
உயிரும் உள்ளது.

‘க’ எழுத்தை வல்லினமாக
சொல்லும்போது
அதோடு சேர்ந்த ‘அ ‘ வும்
வல்லின தன்மையை அடைவது
குற்றம் இல்லை.

தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் :2. மொழி மரபு

நூ.பா.எண்: 48, 49, 50.

தகுதியாக-யாது தகுதி மரபு
————————–

த-தன்மை
கு-குணம்
தி-திடம்
யா-யாவருக்கும் அமைவது
க-கற்றுணர்தலே.

யாது தகுதி மரபு.
—————-

யா-யாவற்றின்
து-துணையும்

த-தன்மையும், நிலையை அறிவதும்
கு-குணம் எனும் குன்றேறி
தி-திடமான மனத்துடன் செயல்படுதலே

ம-மனித வாழ்வின்
ர-ரகசியத்தை அறிதலே
பு-புரிதலாகுமே.

ஈரொற்று உடனிலை
——————–
48.
‘ யரழ என்னும் மூன்றுமுன் னொற்றக்
கசதப ஙஞநம ஈரொற் றாகும்.’

‘ யரழ ‘ என்னும்
மூன்றனுள் ஒன்று
(குறிற்கீழும் நெடிற்கீழும் )
முன்னே ஒற்றாய் நின்று,
அவற்றின் பின்
‘ கசதப ஙஞநப ‘ என்னும்
இவற்றில் ஒன்று
ஒற்றாய் வந்தால்
அவை ‘ ஈரொற்றுடனிலை ‘
ஆகும்.

‘யரழ’ என்னும்
மூன்று மெய் எழுத்துகளை
அடுத்து
‘கசதப ஙஞநம ‘
என்னும் எட்டு
மெய் எழுத்துகளும்
இரட்டை எழுத்துகளாக வரும்.

ய முன்
‘கசதப ஙஞநம’

வே’ய்க்க’,ஆ’ய்ச்சி’,வா’ய்த்து’ ,வா’ய்ப்பு’,
காய்ங்கனி,சாய்ஞ்சாடு ,சாய்ந்து,மெய்ம்முறை

ஏய்க்கலையும் ‘வேய்க்க’லாக நோக்கி
ஏய்ச்சினியையும் ‘ஆய்ச்சி'(வளர்ச்சி)நல்வினையாக்கி
தோய்த்து துவண்டாலும் ‘வாய்த்து’ ஆக்கி
சாய்ப்பையும் ‘வாய்ப்பு’ ஆக்குவோம்.

‘கா’ய்ங்க’னி’யும் உண்டு
‘சா’ய்ஞ்சா’டு’ம் மரத்தினைப் பற்றி
‘சா’ய்ந்து’
‘மெ’ய்ம்மு’றை’யில் உயர்வோம்.

ர முன்
‘கசதப ஙஞநம’

யா’ர்க்கு’ ,நே’ர்ச்சி'(பிரதிநிதி,தகுதி),வே’ர்த்து’,ஆ’ர்ப்பு’,
ஆ’ர்ங்கோ’டு,கூ’ர்ஞ்சி’றை,நே’ர்ந்த’, ஈ’ர்ம்ப’னை.

ழ முன்
‘கசதப ஙஞநம’

வா’ழ்க்கை’,தா’ழ்ச்சி’,வா’ழ்த்து’,கா’ழ்ப்பு’,
பா’ழ்ங்கி’ணறு,பா’ழ்ஞ்சு’னை,வா’ழ்ந்து’ பா’ழ்ம்ப’தி

எ.கா:
வே’ய்க்கு’றை, வே’ய்ங்கு’றை
வே’ர்க்கு’றை, வே’ர்ங்கு’றை
வீ’ழ்க்கு’றை, வீ’ழ்ங்கு’றை;

சிறை,
தலை,
புறமெ என ஒட்டுக.

49.
‘அவற்றுள்
ரகார ழகாரங் குற்றொ றாகா.’

மேற்கூறப்பட்ட ‘ய,ர,ழ ‘ க்களுள்
‘ர’ காரமும் ‘ழ’ காராமும்
குறிற்கீழ் ஒற்றாக வராது;
நெடிற்கீழ் ஒற்றாகும்.
குறிற்கீழ் உயிர் மெய்யாகும்.

மேற்கூறிய நூற்பாவில்
ர என்னும் மெய்யும்
ழ என்னும் மெய்யும்
குறில் எழுத்தை அடுத்து
தனித்து வராது.

கார்,காழ்,பார்,பாழ் என்று நெடிற்கீழ் ஒற்றாக வரும்.
கர்மம் ,புழ்பம் என்றோ வராது.

குறிப்பு; கர்மம்,புழ்பம் -வடமொழி சொற்கள்.

எ.கா:
தார், தாழ் -நெடிற்கீழ் ஒற்றாயின.
கரு, மழு- குறிற்கீழ் உயிர்மெய்யாய் நின்றன.
பொய், நோய்-யகரம் குறிற்கீழும் நெடிற்கீழும் வந்தது.

50. குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின்
தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத் தியல.

உயிரெழுத்திற்குக் குறுமையும்
நெடுமையும்
அளவிற் கொள்ளப்படுவதலால்,

தொடர்மொழியின்
ஈற்றில் நின்ற
‘ர ‘ கார ‘ழ ‘ காரங்களெல்லாம்
நெடிற்கீழ் நின்ற
‘ர ‘ கார ‘ ழ ‘காரங்களின்
இயல்புடையவனாகக் கொள்ளப்பட வேண்டும்.

குறில்,நெடில் என்ற
வேறுபாடு
மாத்திரையின் அளவால்
சொல்லப்படுகிறது.

எனவே, தொடர்மொழியில்
தனி குறிலை அடுத்து ஒற்று வராது .

ஆனால் அந்த தொடர் மொழியை
நோக்கும் போது அம்மொழியின்
மெய்யின் முன்னால் இரு குறில் இருக்கும்.

எனவே, அதை நெடிலாக கொள்ள வேண்டும்.

எ.கா;
புகர்,தகர்-இத்தொடர் மொழியில்
தனி குறிலை அடுத்து ரகரம் வந்தது.

ஆனால்,மெய்யின்
முன்னால் உள்ள
இரு குறிலை நெடிலாக கொள்க.

புலவர்-மூன்று குறில்கள்.

எ.கா: அகர், புகர், அகழ், புகழ்.
(அகிரு-அகில், புகர்-குற்றம்)

தொல்காப்பியம் எழுத்து அதிகாரம்
நூ.பா.எண்: 51 கரந்துறை

‘ அகிலமே ஆதி ‘

அ-அந்தந்த
கி-கிரகங்களின்
ல-லட்சிய சுழற்சி
மே-மேலும்

ஆ-ஆண்டாண்டு காலம்
தி-திக்கெங்கும் பரவுமே.

செய்யிளில் ஈரொற்றுடனிலை

51. செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
ணகார மகாரம் ஈரொற்றாகும்.

உரை செய்யளில் வரும்
போலும்(போன்ம்)
என்னும்
சொல்லின்
இறுதியில் வரும்
‘ன’காரமும் ‘ம’காரமும்
ஈரொற்றுடனிலையாகும்.

பாடல்களின் முடிவில்
‘போலும்’ என்று வரும்
சொல்லில்
‘ன’கரமும் ‘ம’கரமும்
ஒன்றாகி ‘ போன்ம் ‘
என்று ஈரொற்றாக நிற்கும்.

இந்நிலையில்
மகரம் தன்
ஒலிப்பளவிலிருந்து
குறைந்து ஒலிக்கும்.

இது ஒரு வகை மகரக்குறுக்கம் ஆகும்.

எ.கா:
1.
“எம்மொடு தம்மைப் பொரூஉங்காற் பொன்னோடு
கூவிளம் பூத்தது போன்ம்”.
2.
மழையுள் மாமதி போன்ம் எனத்தோன்றுமே.

தமிழில் ‘மெய்யொலிக் கூட்டம்’
என்பது தமிழ் இலக்கணத்தில்
ஒருசொல்லில்
மெய்எழுத்துக்கள்
அடுத்தடுத்து
வருவதைக் குறிக்கும்.

இரண்டு மெய்கள்
இணைந்து வருவதே அரிது.

சில எழுத்தொடர்களில்
மூன்று மெய்கள்
இணைந்து வருவதும் உண்டு.

இரு மெய்கள் இணைந்து வருவது
‘இரு மெய்ம் மயக்கம்’ என்றும்,

மூன்று மெய்கள் இணைந்து
வருவதை ‘மூன்று மெய்ம் மயக்கம்’
என்றும் கூறுவர்.

‘போன்ம்’ என்ற சொல்லை ‘மீம்ஸ்’
என்று ஆவதை அறிவோம்.

52. ‘னகாரை முன்னர் மகாரங் குறுகும்’

மேற்கூறப்பட்ட ‘ன’ காரத்தின்
முன்னர் வரும்
‘ம’ காரம்
அரை மாத்திரையிலும்
குறைந்து ஒலிக்கும்.

எ.கா: ‘போன்ம்’
‘மருண்ம்’ என்ற சொல்லில்
ணகாரத்தின் முன்னர் வரும்
மகாரமும் குறுகி ஒலித்தல் உண்டு.

“மருளினும் எல்லாம் மருண்ம்”

53.
‘மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்துவே றிசைப்பினும்
எழுத்தியல் திரியா என்மனார் புலவர்.’

மொழிக்கண் படுத்துச் சொல்லினும்,
தெரிந்து கொண்டு வேறே சொல்லினும்
எழுத்தின் மாத்திரை இயல்பு திரியாது.

உயிர் எழுத்து ,
ஒரு சொல்லில் ,
அதன் வடிவு மாறாமல் வந்தாலும்,
அந்த உயிரனாது
பிற மெய்களுடன் சேர்ந்து
வேறு வடிவில் வந்தாலும்
அப்போதும்
அதற்கென்று இருக்கும்
மாத்திரை மாறாது !

இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை
வருமாறு தரலாம் ! –

1 . ‘அஃகல் ‘ என்ற சொல்லில் உள்ள
‘அ’ ஃகல் ‘அ’ என்ற உயிர் எழுத்துக்கு மாத்திரை – 1

2 . ‘ கடல்’ என்ற சொல்லில்
உள்ள ‘க்+அ’ , ‘க்’
மீது ஏறி நிற்கிறது ;

வெறும் ‘அ’ வுக்குத்தானே
மாத்திரை ஒன்று,
இது ‘க்’ மீது ஏறிக் ‘க’ என்று நிற்கிறதே ,

அப்போது அதன் ‘ க ‘ என்ற உயிர்
எழுத்தில் மாத்திரை ஒன்றுதானா ?
வேறா?
அப்போதும் ‘க’ என்ற குறில் உயிர் எழுத்தின்
மா(பெறும்)த்திரை ‘ஒன்றுதான்’ என்பதே
தொல்காப்பியர் இங்கு கூறும் விடை !

3 . ‘ஆல்’ என்ற எழுத்திலுள்ள
‘ஆ’ வுக்கு மாத்திரை – 2

4 . ‘கால்’ என்ற எழுத்தில்
உள்ள ‘(க்+ஆ)’ ,
மீது ஏறி நிற்கிறது ;
வெறும் ‘ஆ’ என்ற
உயிர் எழுத்துக்கு மாத்திரை இரண்டு,
இது ‘க்’ மீது ஏறி நிற்கிறதே ,
அப்போது ‘கா’வின்
மா(பெரும்)த்திரை
இரண்டுதானா ? வேறா?

அப்போதும் ‘கா’ (க+ஆ) என்ற
மா(பெரும்)த்திரைக்கும்
நெடில் உயிர் எழுத்துக்கு
இரண்டுதான் என்பதே
தொல்காப்பியர் இங்கு கூறும் விடை !

‘அஃகல்’ – என்ற எழுத்தில் உள்ள
‘அ’ = மொழிப்படுத் திசைத்தல்
அஃதாவது , சொல்லில்
வைத்து (படுத்து) உச்சரித்தல்.

‘கடல்’ – இதிலுள்ள ‘க்’ மீது உள்ள
‘அ’ = தெரிந்து வேறு இசைத்தல்
அஃதாவது , வேறு எழுத்தோடு
சேர்த்து வைத்துக் ‘க’ என உச்சரித்தல்.

இளம்பூரணர் கூறும் இன்னொரு நுட்பமும் !

‘அன்பு’ – என எவ்வளவு
மெதுவாக உச்சரித்தாலும்
அதன் மாத்திரை
ஒன்றுதான் !

‘அது’ – என எவ்வளவு கத்தி
உச்சரித்தாலும்
அதன் மாத்திரையும்
ஒன்றுதான் !

‘ஆடு’ – என எவ்வளவு
மெதுவாக உச்சரித்தாலும்
‘ஆ’ உயிர்நெடில்
எழுத்துக்கு
மாத்திரை இரண்டுதான் !

‘ஆடி’ – என எவ்வளவு கத்தி உச்சரித்தாலும்
‘ஆ’வின் மாத்திரை இரண்டுதான் !

கீழ்வரும் இளம்பூரணர்
உரைக்கு இதுவே பொருள் !-
“வேறு என்றதனான் , எடுத்தல் ,
படுத்தல் முதலிய ஓசை
வேற்றுமைக் கண்ணும்
எழுத்தியல் திரியாது
என்பது அறிவோம்.

” இங்கே தமிழர் இசை நுணுக்கம் உள்ளது !

அஃதாவது –கீழ்த் தொனி(தாயி) ,
மத்திமத் தொனி (தாயி) ,
உச்சத் (தொனி)தாயி
என மூன்று
தாயிகளில்
‘அ’ வை உச்சரித்தாலும்
அதன் மாத்திரை ஒன்றுதான் !

இசை நூற்களுக்கு
ஏற்புடைய கருத்துதான் இது !

இந்த இடம், ‘கர்நாடக’ இசை
தமிழர் கண்டது எனக் கூறப் போதுமானது !

54. ‘அகரம் இகரம் ஐகாரம் ஆகும்’
அகரம் இகரமும் கூட்டிச் சொல்ல
ஐகார ஓசை எழும்.
எ.கா: அஇயர்=ஐயர்; அஇவனம்=ஐவனம்.

55. ‘அகர வுகரம் ஔகாம் ஆகும்.’
அகரமும் உகரமும் கூட்டி ஔ
காரத்துடன் சொல்ல ஔகார ஓசை எழும்.

அஉவை-ஔவை.

தொல்காப்பியம் எழுத்து அதிகாரம்

கரந்துறை பா : அ, ஆ, இ,. . . ஔஃ. வரிசையில்

நூ.பா.எண்: 56-59

‘அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’

அகரத்தின் பின் வரும்
இகரமேயன்றி,
யகர மெய்யும்
ஐ என்னும் ஓசையைத் தரும்.

அவ்வாறே அகரத்தின்
பின் வரும்
உகரமேயன்றி
வகர மெய்யும் ‘ஔ’
என்னும் ஓசையைத் தரும்.

எ.கா: ஔவை=அவ்வை
அய்வனம்=ஐவனம்

ஐகாரத்திற்கு மாத்திரைச் சுருக்கம் :
———————————

57. ‘ஓரள பாகும் இடனுமா ருண்டே
தேருங் காலை மொழிவயி னான.’

‘ஐ’ காரம் மொழி முதற்கண்
மாத்திரையளவிற்கு
சுருங்காது.

இடையிலும், கடையிலும்
ஒரு மா(பெரும்)த்திரை
சுருங்கி ஒலிக்கும்
சிறு பான்மை என்பர்.
மொழிக்கண் ஒரு
மாத்திரை
ஒலிக்கும்
இடமும் உண்டு.

எ.கா: இடையன்

இடையிடையை வரும்
உயிர்ப்பு குறுகி நிற்பது
ஒரு சிறு பான்மைத்தனம்
‘இடையன்’ இடைச்சியின்
இடையைப் பார்த்து
ஒரு மா(பெரும்)த்திரை
ஒலிக்கும் ஒலி
குன்றுவதும் உண்டு.

இறுதிப்போலி

58. ‘இகர யகரம் இறுதி விரவும்’.

இகர ஈற்று மொழிக்கண் ‘ய’கரமும்
‘இ’கரமும் விரவி வரும்.
‘எழுத்தின் இறுதியில் ‘ய’கரமும் இகரமும்
தமிழ் மொழியில் ய்(ய+்) ஒலிக்கும் பொழுது
விரவி(நீண்ட ஒலியில்)வரும்.

எ.கா:

தாய்,தாஇ
நாய்,நாஇ

மொழிமுதலாகும் எழுத்துகள்:
—————————–

59. ‘பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்.’

பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும்
மொழிக்கு முதலாக வரும்.

உயிர் எழுத்துக்களில் ‘கரந்துறைப் பா’


‘அ’ன்பின்
‘ஆ’ரமுதம்
‘இ’ங்கு
‘ஈ’ருயுரும்
‘உ’யிர்மெய்யெழுத்துடன்
‘ஊ’ரெங்கும்
‘எ’ழுவாயில்(பெயரெழுத்து)
‘ஏ’ற்புடைத்து
‘ஐ’ஞ்சீரடிகளாலும்(அழகுறும் சொற்களால்)
‘ஒ’லிப்பெற்று
‘ஓ’ங்கி
‘ஔ’தாரியத்துடன்(பெருந்தன்மையுடன்)
‘ ஃ ‘தே’

நிலைப் பெறுவோம்.

(இதைப் பார்க்கும் தமிழ் அறிஞர்கள், மேல் பகிர்ந்தச்
சொற்களில் திருத்தம் செய்ய வேண்டுமெனில்
தெரிவிக்கவும்.)

Featured

திருக்குறள்-கரந்துறையில்

கரந்துறையில்

திருக்குறள் – கடவுள் வாழ்த்து – 1-5

கரந்துறையில்

குறள் கருத்துச் செறிவு உடையது.

கருத்துக்கள் காலத்தைத் தழுவியது.

கரந்துறை, சொற்களின் பொருளை உள்ளடக்கியது.

குறளில், கடவுள் வாழ்த்து அதிகாரம்

இயற்கையில், இறைவனை போற்றுவது.

கரந்துறைச் சொல்லில், இயற்கையில்

இறைவனை வாழ்த்தக் கூடியச் சொற்களை

இந்தப் பதிவில் பொருந்தி உள்ளது. இது

தமிழ் மொழியின் சிறப்பினை அறிவோம்.

இயற்கையும், இறைவனும் ஒன்றென அறிவோம்.

முதலில் ஓன்று முதல் பத்து எண் வரை உள்ள கடவுள்
வாழ்த்து குறள், கரந்துறைச் சொற்களில் பதிந்து
உள்ளது

1. வாசி, ஒரு பதமே
—————-
வா-வாழ்வதும்
சி -சிந்திப்பதும்,

ஒ – ஒவ்வொருவரின்
ரு – ருசிகரத் தன்மையை

ப – பக்தியுடன்
த – தரணியில் பதத்துடன்
மே- மேம்பாட்டுடனும் செயல்படுவதேயாகும்.

மேற்கூறிய கரந்துறை பாக்களுக்குரிய விளக்கம்

வாழ்வது, உயிரின் செயல்.
சிந்திப்பது, மனித பரிமாணத்தின் வளர்ச்சி.
அவரவர்களின் வாழ்வு, ஒருமைபாட்டுடன் தரணியில் நிலைக்கும். ஒருமைபாட்டின் செயல் நம் கையை கும்பிட்டு வணங்குதலை குறிக்கும்.
மேம்பாட்டின் செயல், இயற்கைத் தன்மையுடனே வளரும்.
ஒரு பதம் என்பது பிரபஞ்சம் என
நாம் அறிவோம்.

அகர முதல எழுத்துஎல்லாம் ஆதி
பகவன் முதற்றை உலகு.

2. தெரிவது, அரிது! -கரந்துறையில்

தெ – தெளிவுடன்
ரி – ரிதமாக
வ – வருவதையுணர்ந்து
து – துணை புரிந்து செயலாற்றுவதுடன்,

அ – அறியாததையும்
ரி – ரிதமென ஒத்துக் கொண்டு
து – துதிப்போம்.

சொற்களை தெளிவுடன் கற்பதும்,

மற்றவர்களுக்கு புரியுமாறு உணர்த்துவதோடு,

தெரியாததை அறிந்து கொள்ள வேண்டும்

என துதிப்பதும் மிகச் சிறந்த பழக்கமாகும்.

2. கற்றதனால் ஆய பயன்என்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

3 . நிலமிசை மலராக

நி – நிதமும்
ல – லட்சியத்தை
மி- மிடுக்குடன்
சை – சைகையினையும் கொள்கையாக

ம – மரிசிதமாக (பொறுமை)
ல – லட்சணத்துடன்
ரா- ராஜ பக்தியை
க – கடைபிடிப்போமே.

தினமும் ஒருங்கிணைந்த உணர்வுடன், பொறுமையும் நிதானத்தையும் கடை பிடிப்பவர்கள், நிலத்தில்
நீண்ட காலம் வாழும் தகுதியை அடைவார்கள்.

3. மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

4. இல சில

இ – இல்லாமையிலிருந்து மலரும்
ல – லட்சியம்

சி – சிறப்பான
ல – லட்சியத்துடன் கூடிய வாழ்க்கை உருவாகும்.

விருப்பு வெறுப்பு இல்லாமல் இருக்கும்
லட்சியம் சிறப்பை அடையும்.

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

5. சேராது இரு

சே- சேர்ந்து
ரா – ராசியான
து- துணையுடன்

இ – இயற்கையை
ரு -ருசிப்போம்.

இயற்கை/இறைமைத் தன்மையை

அறிந்துணர்ந்தவர்கள் எல்லாச் செயல்களும்

ஒன்றென கருதுவார்கள்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

திருக்குறள் – கடவுள் வாழ்த்து -6-10

கரந்துறையில்

6. ஐவகை போகாதே

ஐ – ஐம்பொறிகளை
வ – வகையாக
கை – கையகப்படுத்தி

போ – போதுமென்று
கா – காத்து
தே – தேர்ச்சி கொள்.

ஐம்பொறிகள் ஒழுக்க நல் நிலையை
காக்கும் தேர்ச்சி மையம்.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்ஒழக
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

7. அமைதி அரிது

அ – அன்பினை
மை – மையமாக வைத்து
தி – தினமும் வழிபடுவோர்

அ – அனைத்தும் வாழ்வில்
ரி – ரிதமாக
து – துன்பமின்றி அமையும்.

அன்பு நிலையில் நின்று வழிபடுபவர்களுக்கு
ரிதமாக வாழ்வு துன்பமின்றி அமையும்.

7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

8. அகமே சரி

அ – அறத்தை இடைவிடாது
க – கடைபிடித்து
மே – மேலான கடவுளே

ச- சகலமென வணங்குபவர்கள்
ரி – ரிதத்துடன் வாழ்வர்

அறத்தை கடைபிடித்து மேலான கடவுளே
சகலமும் என வணங்குபவர்கள் அமைதியுடன் வாழ்வா்.

8 . அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

9. ஐவகை இல

ஐ – ஐம்பொறிகளின்
வ – வகையறிந்து
கை – கைம்மாறு கருதாது

இ – இறைவனை/இயற்கையை வணங்குவதை
ல – லட்சியமாக கொள்வோம்.

நம் உடலின் ஐம்பொறிகளையும் ஒருங்கிணைத்து
வணங்குவதை லட்சியமாக கொள்வோம்.

9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

10. பெரியதாக இரு

பெ- பெற்றவை யாவையும்
ரி – ரிதமாக
ய – யவனியில்
தா – தாம் தம் செயல்களுடன்
க – கடமையாற்றி

இ – இயற்கை/இறைவனின் கரங்களில்
ரு – ருசிகரமாக வாழ்வோம்.

பெற்றவைகளுடன், யவனியில் தத்தம் கடமையோடு இயற்கையில்/இறைமையில் வாழ்வோம்.

10.பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.

வான் சிறப்பு திருக்குறள்- கரந்துறையில்

வானில் இருந்து பொழியும் மழை:

நமக்கு அமிழ்தமாக, இன்றியமையாத உணவு
உப பொருளாக, நல்வாழ்வு அமைந்திட பயன்படுகிறது.
புல் பூண்டுகளை நிலை பெறச் செய்து,
மற்ற உயிர்களையும் வாழ வைக்கிறது.
பூமியை வளம் கொழிக்கச் செய்கிறது.
தானம், தவம் ஆகியவற்றை நிலை பெறச் செய்கிறது.
உலகத்தையே அமைக்க உதவுகிறது.

11. அமுது அது

அ – அனைத்திற்கும் மழை
மு – முற்றிலுமாக
து – துணையாக அமைந்து

அ- அனைத்து உயிரையும்
து – துளிர் விடச் செய்யும்.

அனைத்து உயிர்களுக்கும் மழை நீர் அமிழ்து
என உணர்வோம்.
11. வான்நின்று உலகம் வழங்கி வருதலான்
தான்அமிழ்தம் என்றுணரல் பாற்று.

12. சமையலாக ஆகுக

ச – சகல உயிர்களுக்கும்
மை – மையமாக மழை
ய – யதாரத்தமாக
லா – லாவகமாக பெய்து
க – கடந்தெங்கும் சென்று

ஆ – ஆக்கமான உணவை
கு – குதூகலமாக சமைக்க
க – கருத்துடன் பயன்படுகிறது.

சகல உயிர்களுக்கும் மழை எங்கும் பெய்து உணவாக பயன்படுகிறது.

12.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

13
விரி நீராக

வி – விண்ணில் இருந்து
ரி – ரிங்காரமாக மழை உயிர்களின் பசியை போக்க

நீ – நீரின் துளியாக
ரா – ராஜ்ஜியமெங்கும்
க – கடல், நிலத்தில் பெய்கிறது.

விண்ணிலிருந்து மழை, நீராக அனைத்து
உயிர்களின் பசியைப் போக்குகிறது.
13.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.

14 –

விவசாயமே விரிவாக

வி -விளைபொருள்களில்
வ – வரும்
சா- சாகுபடி
ய – யதார்த்தமாக
மே -மேன்மையடையவும்

வி – விண்ணிலிருந்து
ரி – ரிங்காரமாக பெய்யும் மழை
வா – வாரி வழங்கச் செய்யும்
க – கருதுகோலாகும் விவசாயிகளுக்கு.

மழை, விளை பொருள்களில் மூலம் வளமாக்கி
விவசாயிகளை மேன்மையடையச் செய்யும்.

14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றி்க் கால்

15. பருவகால சாராக

ப – பலருக்கும் மழை
ரு- ருசுப்படுத்தி
வ -வருடக்கணக்கில்
கா -காத்து
ல – லயத்துடன் வாழவும் வைக்கும்

சா – சார்பின்றி மழை
ரா – ராஜ்ஜியம் எங்கும்
க – கடக்காமல் கெடுக்கவும் செய்யும்.

மழை, பெய்யும் இடத்தை காக்கும்; பெய்யாத இடம் வளம் குன்றி விடும்.

15
கொடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

16- வான் சிறப்பு – திருக்குறள் கரந்துறையில்

பசுமை உயர

ப – பசும்புல்லும் மழைத் துளியால்
சு – சூழல் அழகை மேம்படுத்தும்
மை – மையமாகவும்

உ – உயிரை
ய – யதார்த்தமாக வளர்க்கும்
ர – ரகத்திலும் பயன்பாட்டுக்குரியதாகிறது.

பசும்புல்லும் ஒர் அறிவு உயிராக
வளர்வதற்கு மழை பயன்படுகிறது.

16. விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே
பசும்புல் தலைகாண் பரிது.

17 வான்சிறப்பு – திருக்குறள் – கரந்துறையில்

மேகமாக ஆகி

மே – மேலே உள்ள
க – கருவானம்
மா – மாகாணத்தில் நிலமெங்கும்
க – கடலிலும் மழை பெய்தால்

ஆ – ஆக்கபூர்வமான வளம் எங்கும்
கி – கிட்டும்.

மேகம் நிலத்திலும், கடலிலும் மழை பெய்தால்
ஆக்கப்பூர்வமாக எங்கும் வளம் பெருகும்.

17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்.

18 வான்சிறப்பு -திருக்குறள்- கரந்துறையில்

தேவராகி வசி

தே – தேர்ந்தெடுத்து
வ – வரும் மழையை
ரா – ராஜ்ஜியமெங்கும்
கி – கிட்டுமாறு செயல்படுவது

வ – வசிக்கும் உயிர்களை
சி – சிறப்புடன் வளமாக்கும்.

பெய்யும் மழையை மண்ணில் சிறப்புடன் செயல்படுத்துவோம்.

18 – சிறப்போடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

19 வான் சிறப்பு – திருக்குறள்- கரந்துறையில்

உலகே தவமாக

உ-யிர்கள் அனைத்திற்கும்
ல-லகுவான மழை பெய்வது
கே-கேடு எதனையும் தராமல்

த-தரணியில் நற் பொருட்களை
வ-வழங்கி
மா-மாதவமாக
க – கருத்துள்ள வாழ்வு அமையும்.

மழை பெய்வதால் தானமும் தவத்துடன் உலகில்
உயிர்களை நிலைக்கச் செய்யும்.

19
தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.

20 வான் சிறப்பு- திருக்குறள் – கரந்துறையில்

உலகு அமையாது.

உ – உயரத்தில் உள்ள வானம்
ல – லகுவாக
கு – குறைவில்லாமல் மழைநீராக பொழிந்து

அ – அனைத்து இடத்திலும்
மை – மையமாகி
யா – யாவற்றுக்கும்
து – துணையாக அமையும்.

வானத்திலிருந்து மழைநீர் குறைவில்லாமல் மையமாக பொழிந்து அனைவருக்கும் துணை புரியும்.

20
நீர் இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு.

21 . நீத்தார் பெருமை – திருக்குறள் – கரந்துறையில்

21. பெருமை நூலாக

பெ – பெயர் சொல்லில்
ரு – ருசிபட வினைச் சொல்லுடன்
மை – மையமாக விளக்கி

நூ – நூலில்
லா- லாவகமாக அறிந்து கொள்வது
க – கடமையென நீத்தார் பதிவிடுவர்.

பெயர் சொல்லில் வினைச்சொல்லை நூலாக்கி பதிவதே நீத்தாரின் ஒழுக்கமாகும்.

21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

22-நீத்தார் பெருமை-திருக்குறள்-கரந்துறை

22.வையக பெருமை

வை -வையக துறவிகளின் பெருமையை
ய – யதார்த்தமாக
க – கணக்கிடுவது

பெ -பெரும்பாலோர்
ரு -ருசிபட வாழ்ந்து மறைந்தோரை
மை – மையமாக அளவிடாதது போன்றது.

துறவிகளின் பெருமையை கணக்கிடுவது பிறந்து
இறந்தோரை அளவிட இயலாதது போன்றது.

22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

23. நீத்தார் பெருமை – திருக்குறள் – கரந்துறையில்

இருமை உலகு

இ – இங்கு வாழும் துறவியர்கள்
ரு – ருசிகரமாக ஆராய்ந்து
மை -மையமாக இருந்து

உ- உண்மையை
ல-லயக்குமாறு உள்ள
கு-குணங்களோடு பாராட்டி மகிழ்வர்.

துறவியர்கள் நன்கு ஆராய்ந்து உண்மையிது
என உலகறிந்து பாராட்டுவார்.

23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

24
நீத்தார் பெருமை – திருக்குறள்- கரந்துறையில்

ஐவகை விதை

ஐ – ஐம்பொறிகளிலும் அறிவை
வ – வழிப்படுத்தி காத்து
கை – கையகப்படுத்தி

வி – வினையை உறுதியுடன்
தை – தைப்பவன் உயர்வினை வி்த்திடுவான்.

ஐம்புலன்களையும் அறிவுடன் காப்பவன் உறுதியோடு உயர்வாக விதைப்பவன் ஆவான்.

24
உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து.

நீத்தார் பெருமை – திருக்குறள் – கரந்துறையில்

25 .சமயமே சரியாக

ச – சகல ஆசையையும்
ம – மதியினால் ஐம்புலன்களையும் அடக்கி
ய – யதார்த்தமாக
மே – மேன்மைபடுத்துவதே

சரி – சரிவர
யா – யாவற்றையும்
க – கடந்து செல்லும் செயலாகும்.

ஐம்புலன்களின் ஆசையை அடக்கி வலிமையுடன்
யாவற்றையும் கடந்து செல்லுதலேயாகும்.

25
ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

26
நீத்தார் பெருமை – திருக்குறள் – கரந்துறையில்

பெரியது அரிது

பெ – பெரிய
ரி – ரிதமான செயல்களையறிந்து
ய – யதார்த்தமாக
து – துணை நிற்பார், பெரியர்.

அ – அருமைக்குரிய
ரி – ரிங்காரமான செயல்களுக்கும்
து – துணை நிற்கமாட்டார், சிறியர்.

பெரிய செயல்களையறிந்து செய்வர் பெரியர்
உரியவற்றையும் செய்யார் சிறியர்

26
செயற்குஅரிய செய்யார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

நீத்தார் பெருமை – திருக்குறள் – கரந்துறையில்

27
ஓசை வகை

ஓ – ஓங்காரத்தின் ஒசை, ஓளி
சை – சைகையுடன் உணர்வு

வ – வரும் மணம்,சுவை ஐந்தையும்
கை – கையகப்படுத்தி ஆராய்ந்தறிவதே உலகு.

ஓசைஒளி, மணம், சுவையுணர்வு என ஐந்தையும் ஆராய்ந்து அறிவது உலகு.

27
சுவைஒளி ஊறுஒசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

28 நீத்தார் பெருமை – திருக்குறள் – கரந்துறையில்

28. பெருமை மிகு

பெ-பெயருடன் ஆற்றலையும்
ர – ருசிகரமான மொழியையும்
மை-மைய நிலையில் பயன்படுத்தியோர்

மி-மிகு நிலை பெற்றதை
கு-குறிச்சொல் மொழி காட்டிவிடும்

பெயரும் பேராற்றலும் நிறையாக பெற்ற
குணத்தை ஆக்கப்பூர்வமொழி காட்டும்.

28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

29 நீத்தார் பெருமை – திருக்குறள்- கரந்துறையில்

29. வெகு அரிது

வெ -வெகுண்டு எழும் சினம்
கு – குணமுடையோர்க்கு

அ – அதிலிருந்து கணநேரமும்
ரி – ரிதமாக காப்பாற்ற
து – துணை நிற்காது.

நற்குணமுடையோரின் வெகுண்டு எழும் சினம்
கணநேரமும் காத்துநிற்க துணைஇருக்காது.

29
குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

30. நீத்தார்பெருமை- திருக்குறள்-கரந்துறயில்
30
உயர கருது

உ-உலக நன்மைக்கு
ய-யதார்த்தமாக அறநிலை புரிவோர்
ர-ரகவாரியாக

க-கருணையுடன்
ரு-ருதுவாகவும்
து-துணை நிற்பர்.

உலக நன்மைக்கு கருணையுடன் எவ்வுயிர்க்கும் அறநெறியுடையோர் துணை நிற்பர்.

30
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்.

.

31. அறன்வலியுறுத்தல்-திருக்குறள் -கரந்துறையில்

31 . யாதுமாகி உயர

யா-யாவும்
து -துணையாக
மா-மாந்தர்க்கு
கி -கிடைக்க

உ-உயிர்க்கு சிறப்பான செல்வமும்
ய-யதார்த்தமாக
ர-ரசிக்கக்கூடிய அறமேயாகும்.

உயிர்க்கு யாவும் கிடைக்க அறத்துடன்
கூடிய செல்வமே சிறப்பாகும்.

31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு?

32. அறன் வலியுறுத்தல்-திருக்குறள்-கரந்துறையில்

32. பெரியவை யாது

பெ-பெயரின் பேறு
ரி-ரிங்காரத்துடன்
ய-யதார்த்தமாக
வை-வையகத்தில்

யா-யாவும் கிடைக்க
து-துணை செய்வது அறமே.

உயர்வான பெரும்பேறு அறத்தின் மூலம்
கிடைப்பதைவிட வேறு ஏதுமில்லை.

32
அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.

33. அறன் வலியுறுத்தல்-திருக்குறள்-கரந்துறையில்

33. செயலாக ஆகு

செ-செய்யும் செயல்
ய-யவனியில்
லா-லாவகமான சிந்தனையுடன்
க -கடமையுணர்ந்த

ஆ-ஆக்கப்பூர்வமான சொல்லுடன்
கு – குணம் வாய்ந்த செயல் அறமாகும்.

சிந்தனை, சொல், செயல் இடைவிடாத
அறத்துடன் கூடியசெயலே சிறப்பாகும்.

33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.

34.அறன் வலியுறுத்தல்-திருக்குறள்-கரந்துறையில்

34 . மாசு அதோ

மா- மாசற்ற மனமே
சு – சுத்தமான அறமாக

அ – அறிவார்ந்த செயலாக
தோ – தோன்றி உறுதியாகும்.

மாசற்று இருக்கும் அறத்துடன்கூடிய
செயலே தன்மை உடையதாகும்.

34.
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்அனைத்து அறன்
ஆகுல நீர பிற.

35 அறன் வலியுறுத்தல்-திருக்குறள்-கரந்துறையில்

35. விலகி இரு.

வி-வி்ண்முட்டும் பேராசை,
ல-லட்சிய நிறைவேறா கடும் சொல்லும்
கி-கிடைக்காத வேகமும்,

இ-இறுமாப்பு,
ரு-ருத்ரம் ஆகிய நான்கையும் விலக்குவதே அறம்.

பொறாமை, பேராசை, கடும்சொல், சினம்
ஆகியவற்றை தவிர்ப்பதே அறம்.

35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

36 அறன் வலியுறுத்தல்-கரந்துறையில்

36- செயலாக அது

செ-செவ்வனே
ய-யதார்த்தமாக
லா-லாவகமாக அறத்தை
க-கடமை என

அ-அன்றாடம் செய்வது
து-துணையாக உயிர்க்கு என்றும் இருக்கும்.

அன்றாடம் செய்யப்படும் அறம் உயிர்க்கு
என்றும் துணை நிற்கும்.

36
“அன்று அறிவாம்” என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

37 அறன் வலியுறுத்தல் – திருக்குறள்-கரந்துறையில்

37.சுமையாக கருதாதே

சு -சுமப்பவனும்
மை-மையமாக பல்லக்கிலிருப்பவனும்
யா-யாதும்
க-கருதாமல்

க-கடமை
ரு-ருசிகர வாழ்வு என்பதையும்
தா-தாண்டி
தே-தேர்ந்தெடுப்பதே அறமாகும்.

பல்லக்கை சுமப்பவனும் அமர்ந்திருப்பவனும்
ஏற்றத் தாழ்வுகளை கடந்தவைகளையே அறமெனப்படும்.

37
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை.

38 அறன் வலியுறுத்தல்- திருக்குறள்- கரந்துறையில்

38 . பாதை சீராக

பா – பாரமாக வாழ்நாளை
தை- தையலை(தொடர் செயலை) கருதாமல்

சீ – சீரான அறத்துடன்
ரா – ராத்திரி பகலென
க – கற்பதுடன் செயல்படுவதேயாகும்.

அறத்தை பாரமாக வாழ்நாளை கருதாமல்
தினமும் கற்பதுடன் செயல்படுவதேயாகும்.

38. வீழ்நாள் படாமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.

39. அறன் வலியுறுத்தல்-திருக்குறள்-கரந்துறையில்

39 . வருமே அது

வ – வரும் துன்பமும்
ரு – ருசிகரமான புகழும் மற்ற செயல்களால்
மே – மேன்மை தராது

அ – அறமே இன்பத்துடன் என்றும்
து – துணை நிற்கும்

அறமே நிலையான இன்பமாகும் மற்ற
செயல்கள் துன்பமே தரும்.

39
அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்
புறத்த புகழும் இல.

40. அறன் வலியுறுத்தல்-திருக்குறள்-கரந்துறையில்

40. உயர அது

உ-உண்மையான செயல்
ய-யதார்த்தமாக
ர-ரகவாரியாக

அ-அறத்துடனே
து -துணை நிற்கும்.

உண்மையான செயல் ஒருவற்கு பழிவராமல்
உயர்வுக்கு துணை நிற்கும்.

40. செயற்பாலது ஒரும் அறனே ஒருவற்கு
உயற்பாலது ஒரும் பழி.

41 .இல்வாழ்க்கை-திருக்குறள்-கரந்துறையில்

41. தாயாக இயலாக

தா-தாய், தந்தை, தாரம்
யா-யாவர்க்கும்
க – களிப்புடன் குழந்தை பேறும்

இ – இல்வாழ்வு நெறியுடன் அமைவது
ய – யதார்த்தமாக
லா – லாவகமாக
க – கடந்துநின்று நல்ல துணையாக அமையாகும்.

பெற்றோர், இல்லாள் குழந்தை யாவும்
நெறியுடன் அமைவது நற்துணையாகும்.

41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

42 இல்வாழ்க்கை திருக்குறள்- கரந்துறையில்

42 . தவமே ஆதரவாக

த-தவத்துடன்
வ-வறியவர்கள்
மே-மேன்மையுடன் இறநந்தோர்க்கும்

ஆ-ஆதரவளித்து
த – தவமாக
ர- ரம்மியமாக
வா-வாழ்வமைத்து
க-களிப்புடன் துணை இருப்பதேயாகும்.

இல்வாழ்வென்பது துறவி, வறியவர் ஆதரவின்றி இறந்தோர்க்கும் துணை இருப்பதேயாகும்.

42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

43. இல்வாழ்க்கை-திருக்குறள்-கரந்துறையில்

ஐவகை ஆசி

ஐ – வாழ்ந்தோர், சுற்றம், விருந்தோம்பல்,
தெய்வம், தான் என
வ – வகைப்படுத்தி, ஆராந்து, வாழ்ந்து
கை- கைமாறு கருதாது அறத்துடன்

ஆ -ஆசி பெற்று வாழ்வது
சி – சிறப்பாகும்.

ஐவகையின ஆசிகளுடன் வாழ்ந்து உபசரித்து
அறத்துடன் வாழ்வது சிறப்பு.

43
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஜம்புலத்து ஓம்பல் தலை.

44 . இல்வாழ்க்கை-திருக்குறள்-கரந்துறையில்

44 பகீரத உதவி

ப-பழிஇல்லாமல்
கீ-கீர்த்தியுடன் அறத்தை
ர-ரகவாரியாக அமைத்து
த-தரமான பொருட்களை உபயோகித்து

உ-உண்பதை
த-தரத்துடன் பகிர்ந்தளிப்பது இல்வாழ்வு சிறந்து
வி-விளங்கும்.

பழிஇல்லாமல் அறவழியில் கிடைக்கும் பொருட்களை
பகிர்ந்துண்பது சிறப்பு இல்வாழ்க்கையாகும்.

44.
பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் இல்வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

45. இல்வாழ்க்கை- திருக்குறள்-கரந்துறையி்ல்

45. பலமே, இது

ப-பண்பின்
ல-லட்சியமும்
மே-மேன்மையான அறமும்

இ-இல்வாழ்க்கையின் பண்பும்
து-துணையான பயனுமேயாகும்.

அன்புடன் கூடிய இல்வாழ்க்கை பண்பாகவும்
அறத்தின் பயனாகவே அமையும்.

45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.

46 இல்வாழ்க்கை-திருக்குறள்-கரந்துறையில்

46. யாதுமா எது?

யா- யாவையும் அறத்தின்
து- துணையான இல்வாழ்க்கையில்
மா-மானிடர்களுக்கு அமைவது நலம்.

எ- எந்த புற வழியிலும்
து-துணையாக பெறமுடியுமோ?

அறத்தின் துணையோடு இல்வாழ்க்கை அமைவது நலம். வேறு எந்தவழியிலும் பெறமுடியுமோ?

46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்
புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?

47 இல்வாழ்க்கை-திருக்குறள்-கரந்துறையில்

47 முயலாக இரு

மு-முயற்சியுடன்
ய -யவனியில்
லா-லாவகமாக
க-கண்காணித்து

இ -இயல்பான வாழ்க்கையே
ரு-ருசிகரமான முன்னேறமாகும்.

இயல்பான முயற்சியில் இல்வாழ்க்கை
அமைதலே எல்லாவகையிலும் தலைசிறந்ததாகும்.

47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

48 . இல்வாழ்க்கை – திருக்குறள்-கரந்துறையில்

48 நலமே அது

ந-நம்பிக்கையுடன்
ல-லட்சியத்துடன்
மே-மேன்மையுடன்

அ-அற வாழ்வுடன் மற்றவர்க்கும் வழிகாட்டியாக
து-துணை புரிவது.

அறவாழ்வுடன் மற்றவர்க்கும் வழிகாட்டியான
இல்வாழ்க்கையே மேன்மையாகும்.

48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மைஉடைத்து.

49- இல்வாழ்க்கை-திருக்குறள்

49. நலமே தவமே

ந-நம் இல்லற வாழ்வு
ல-லட்சியத்துடன் நல்ல அறத்துடன்
மே-மேன்மை தருதல் சிறப்பு.

த-தன்னல பழியுடன்
வ-வரும் வாழ்வு
மே-மேன்மையுராது.

நல்அறத்துடன் கூடிய இல்வாழ்வு சிறப்புறும்.
பழியுறும் வாழ்வு மேன்மையுராது.

49
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.

50. இல்வாழ்க்கை – திருக்குறள்- கரந்துறையில்

50. வையக தகுதி

வை – வையகத்தில்
ய – யதார்த்த
க – கடமையுடன்

த -தன்னிலை அறிந்து
கு -குடும்பத்தையும் மேம்படுத்தும்
தி -திறமை உள்ளோர் தெய்வமாக கருதபடுவார்.

உலக வாழ்க்கைமுறை அறிந்து வாழ்பவன்
தெய்வமாக கருதப் படுவான்.

50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

51
வாழ்க்கைத்துணை நலம் – திருக்குறள்-கரந்துறையில்

51. உரியவராகி இரு.

உ-உயரிய குணங்களுடன்
ரி-ரிதமாக
ய-யதார்த்தமாக
வ-வருவாய்க்கு தகுந்தவாறு
ரா-ராசியாக
கி-கிடைத்த இல்வாழ்க்கைத் துணை

இ-இப்பிறப்பின்
ரு-ருசிகர வாழ்வாகும்.

மாண்புறுகுணத்துடன் வருவாய்க்கு தக்க வாழ்வது
வளமான இல்வாழ்க்கைத் துணை

51
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

52.
வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறையில்

52 உரியதாக அது

உ-உயரிய குணமுடன்
ரி-ரிதமாக
ய-யதார்த்தமாக
தா-தானும்
க-கடைபிடித்து மகிழ்ச்சியுடன்

அ-அற்புத இல்லாளாக
து-துணை கொள்வது நல்லது.

உயரிய குணமுடன் இல்லாள் இல்லையெனில்
எப்பெருமையும் இருந்தும் பயனில்லை.

52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.

53.
இல்வாழ்க்கைத்துணை – திருக்குறள் – கரந்துறையில்

53. பெருமை அது

பெ – பெரும்பாலும் பெருமையான
ரு – ருசிகரமான வாழ்வும்
மை – மையமான மாண்புடைய இல்வாழ்க்கைக்கு

அ – அன்பும் பண்புள்ள இல்லாளின்
து – துணையுடனே ஆகும்.

மனைவியின் மாண்பே இல்லத்தின் பெருமையும்
வாழ்வின் துணையுமாகும்.

53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.

54
வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறையில்

54. பெரியவை யாது?

பெ-பெண்ணின் கற்பு
ரி- ரிதமான உறுதியுடன்
ய-யதார்த்தமாக
வை-வைபோகத்துடன்

யா-யாவருக்கும்
து-துணையாக இருப்பதைத் தவிர வேறு எது?

பெண்ணின் கற்பைத் தவிர வேறு
பெருந்தன்மையான துணை யாது?

54
பெண்ணின் பெருந்தக்க யாவுள? கற்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

55
வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறை

55 . அருமையாக வருமே

அ-அனைத்தும்
ரு-ருசிகரமாக
மை-மையமாக
யா-யாவும் பெற
க-கணவனை தொழுவது

வ-வந்து அமையும் வாழ்வும்
ரு-ருதுவாக
மே-மேன்மைப்படுத்தும்.

கணவனை துயில் எழுந்ததும் தொழுதால்
மழைபெய் என்றால் பெய்யும்.

55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

55
வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறை

55 . அருமையாக வருமே

அ-அனைத்தும்
ரு-ருசிகரமாக
மை-மையமாக
யா-யாவும் பெற
க-கணவனை தொழுவது

வ-வந்து அமையும் வாழ்வும்
ரு-ருதுவாக
மே-மேன்மைப்படுத்தும்.

கணவனை துயில் எழுந்ததும் தொழுதால்
மழைபெய் என்றால் பெய்யும்.

55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

56. வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறை

56 . தகை அவா

த-தம் குடும்பத்தை காத்து
கை-கைமாறு கருதாமல்

அ-அனைத்து பாங்கினையும் ஏற்று
வா-வாழ்பவளே, பெண்.

தம் நெறி, கணவன், குடும்பத்தையும்
காப்பவளே சிறப்பான பெண்.

56
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துத் சோர்விலாள் பெண்.

57.
வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறையில்

57. குலமே யாது ?

கு-குணமும்
ல-லட்சியமும் கொண்ட மகளிர்க்கு
மே-மேலும் நெறியுடன் காப்பதற்கு

யா-யாவும் சிறக்க கட்டுப்பாடை தவிர வேறென்ன
து-துணை செய்யும்?

மகளிர் சிறந்த விளங்க குணமும்
நெறியுமே காத்து நிற்கும்.

57
சிறைக்காக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

58
வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறை

58. அவரது இதயமே

அ – அன்புடன் கணவனை
வ – வணங்கி
ர – ரம்மியமான
து – துணையுடன் மனைவி

இ- இடம் பெற்றால்
த – தரமாக
ய – யவனியில் பெரிதும்
மே- மேன்மையுடைய வாழ்வு பெறலாம்.

உலகில் கணவனை பெருஞ்சிறப்புடன் காப்பது
பெண்டிர் மேன்மையுடைய வாழ்வடையலாம்

58
பெற்றான் பெரின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு.

59.
வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறையில்

59 . பெருமிதமே இல

பெ-பெண்ணின்
ரு-ருதுவான
மி-மிருதுவான
த-தரமான
மே-மேன்மையான வாழ்வு

இ-இருப்பதே
ல-லட்சியப் புகழை காப்பதாகும்.

வாழும் இல்லாள் என்றும் லட்சிய
புகழை காப்பதே சிறப்பு.

59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

60.
வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறையில்

60. குலமே, மதி

கு -குடும்பத்தையும் காத்து, நல்
ல-லட்சியத்துடன் பிள்ளைகளை வளர்ப்பதே
மே-மேன்மையுடைய

ம-மனையாளுக்கான
தி -திண்மையான அணிகலனாகும்.

நற் குணம் உள்ள மனைவி பிள்ளைகளை
நன்றாக வளர்ப்பதே நற்பேறாகும்.

60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

61 மக்கட் பேறு – திருக்குறள் – கரந்துறையில்

61. மக மவ

மக்கட் பேறுகளில் மகளோ மகனோ
கற்றறிந்து இருப்பது

மனித இனத்திற்கு
வளரும் சிறப்பு பேறுகளாகும்.

அறிவு அறிந்த மக்கட்பேறு மனித
இனத்தின் சிறப்பான பேறுகளாகும்.

61. பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

62 மக்கட் பேறு – திருக்குறள் – கரந்துறையில்

62. தீயவை அரிது

தீ – தீர்க்கமான நல்ல பிள்ளைகள்
ய – யதார்த்தமான நல்ல பண்புகளுடன்
வை-வையகத்தில்

அ – அன்புடன்
ரி – தரமாக பெறுவது
து – துன்பங்கள் தீண்டுவதில்லை.

பண்புடைய மக்களைப் பெற்றால் வையகத்தில்
பழிச் சொற்கள் தீண்டுவதில்லை.

62
எழுபிறப்பும் தீயவை தீண்டா; பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

63. மக்கட்பேறு – திருக்குறள்- கரந்துறையில்

63. தமதே நமது

த-தம் பொருட்கள் என்றும்
ம-மனித இனத்திற்கு
தே-தேர்ச்சி பெற

ந – நற்செயல்கள் புரியும்
ம – மக்கட்பேற்றின்
து – துணையே நாளும் நன்மையாகும்.

நற்செயல்கள் புரியும் நன் மக்களாலே
மனித இனம் தழைக்கும்.

63 தம்பொருள் என்பதம் மக்கள்; அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

64 . மக்கட் பேறு – திருக்குறள் – கரந்துறையில்

64. அமுது, எமது

அ – அமிழ்து அது,
மு – முழு மனதுடன் தம் குழந்தைகள்
து – துடிப்பாக உணவை ஊட்டிவிடுவது,

எ – என்றும் தம்
ம – மக்கள் அன்புடன்
து – துணையாக இருக்கும் குணத்தைக் குறிக்கும்.

தம் மக்கள் உணவை ஊட்டிவிடுவது
அமிழ்தை விட இனியதாகும்.

64 . அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

65. மக்கட் பேறு – திருக்குறள் – கரந்துறையில்

65. தமது செவியாக

த – தம் குழந்தையின்
ம – மழலையுடன்
து – துள்ளித் ததும்பும் பேச்சும்

செ – செம்மையான உடலை தொட்டு
வி – விளையாடுதல்
யா – யாவும் இன்பமாக
க – கடந்து செல்லும் வாழ்வாகும்.

தம் குழந்தையின் மழலைப் பேச்சும்
தொட்டு விளையாடுதலும் இன்பமாகும்.

65.
மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

66. மக்கட் பேறு – திருக்குறள் – கரந்துறையில்

66 – ஓசை யாது

ஓ – ஓசைபடும்
சை – சைகை இனிமை என்பர்

யா – யாழிசையான குழந்தையின்
து – துதி பாடும் பேச்சை கேட்காதவர்கள்.

யாழிசை குழலிசை இனிது என்பர்
மழலை பேச்சை கேட்காதவர்கள்.

66 . குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்.
67 மக்கட் பேறு – திருக்குறள் – கரந்துறையில்

67. அவை செயலாக

அ – அன்புடன் தந்தை மகனை நன்கு படிக்க
வை – வைத்து

செ – செவ்வனே அவையில்
ய: – யதர்த்தமாக
லா – லாவகமாக
க – கற்றலின் படி செயல்பட
வைப்பது தந்தை மகனுக்கு
செய்யும் நன்றியாகும்.

தந்தை மகனுக்குதவும் நன்றி அவையில்
முன்இருக்க வைக்கும் செயலாகும்

67
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

68. மக்கட் பேறு – திருக்குறள் – கரந்துறையில்

68 . மிகுதி தருவதாக

மி – மிகுந்த இன்பம் தருவது,
கு – குணமாக
தி – திறமையாக

த – தம் மக்களை
ரு – ருசிகரமான உலகில்
வ – வளரச் செய்வது
தா – தாம் பெறும் இன்பத்தையே
க – கடந்து இனிமை தருவதாகும்.

தம்மக்களின் அறிவுடைமை உலகத்து
உயிர்களில் அனைத்தையும்விட இனிது.

68
தம்மின் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.

69. மக்கட் பேறு – திருக்குறள் – கரந்துறையில்

69. பெரியது

பெ – பெற்றெடுத்த அன்னை
ரி – ரிதமாக வளர்க்கும் காலத்தை விட
தம் பிள்ளைகள்
ய – யவனியில் உயர் குணமுடையோர்
எனக் கேட்பது
து – துயரம் எல்லாம் மறைந்து இன்பம் காண்பர்.

தாய்தன் மகனை சான்றோன் எனக்கேட்பது
பெற்றெடுத்து வளர்ப்பதைவிட இன்பமாகும்.

69
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

70. மக்கட் பேறு திருக்குறள் கரந்துறையில்

70. தவ உதவி

த – தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி
வ – வண்ணமயமான

உ- உலகில்
த – தரமான மனிதனாக, அறிவுடையவனாக
வி – விளங்குதலே ஆகும்.

தந்தைக்கு மகன் செய்யும் உதவி
அறிவுடையவனாக இருத்தலே ஆகும்.

70. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

71. அன்புஉடைமை – திருக்குறள் – கரந்துறையில்

71 . அவரவராக

அ – அன்பினால்
வ – வரும்
ர – ரம்மிய
வ – வரவு
ரா – ராசியான மகிழ்வுடன்
க – கனிவுடன் நற்குணத்தை தரும்.

அவரவரின் அன்பு நிலை நற்குணத்தை
என்றும் பறை சாற்றும்.

71
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.

72 அன்புஉடைமை-திருக்குறள் – கரந்துறையில்

72. உரிய உரிமை

உ – உள்ளன்போடு அன்புடையோர்
ரி – ரிதமாக
ய – யவனியில் தம்

உ- உடல், பொருள் அனைத்தையும்
ரி – ரிங்காரமாக அன்புடன்
மை – மையமாக வழங்கி மகிழ்வர்.

அன்புடையோர் தம் உடமையையும் வழங்கி மகிழ்வர்
அன்பிலார் அனைத்தும் தமதென்பர்.

72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

73. உரியதாக

உ- உன்னதமான ஆருயிர்
ரி – ரிதமாக கலந்த உறவுடன்,
ய – யதார்த்தமாக பிற உயிர்களின் தொடர்புடன்,
தா – தாரணியில் அன்புடன்,
க – கடந்து வாழ்வதே சிறப்பு.

ஆருயிர் கலந்த உறவு பிற உயிரின் மேல் அன்பு
கொண்டு வாழ்வதே சிறப்பு .

73.
அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

74. அன்புஉடைமை -திருக்குறள் – கரந்துறையில்

74. நேயமாக தருமே

நே – நேசத்துடன்
ய – யதார்த்தமாக
மா – மாந்தர்களிடம்
க – கலந்து கூடிய அன்பும், நட்பும்

த – தளர்வில்லா ஆர்வமும்
ரு – ருசியாக நம்மை
மே – மேம்படுத்துவோம்.

அன்பு தரும் ஆர்வமும், நேசமும் கூடிய
நட்பு சிறப்பைத் தரும்.

74
அன்புஈனும் ஆர்வம் உடைமைஅதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

75. அன்புடைமை திருக்குறள் கரந்துறையில்

75. வையக மரபு

வையகத்தில் இன்புற்று
யதார்த்தத்துடன்
கடந்து சென்று என்றும்

மக்களிடம் அன்புடனும்
ரசனையுடன்
புரிந்து வாழ்தலே சிறப்பு

வையகத்தில் அன்புடன் மக்களிடம் இன்புற்று
வாழ்தலே என்றும் சிறப்பு

75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

76. அன்பு உடைமை – திருக்குறள் -கரந்துறையில்

76. அது அதே

அ – அறம் அன்பிற்கு மட்டும்
து – துணை என்பர் அறியார்.

அ – அனைத்து நல் ஆற்றலுக்கும் அஃதே
தே – தேயாத செயலாக துணை நிற்கும்.

அன்பு அறம் செய்பவர்க்கு மட்டுமல்ல
அனைத்து நல்ஆற்றலுக்கும் துணை நிற்கும்.

76
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை .

77. எசகு பிசகாக

எ- எலும்பு இல்லாத புழுவை வெயில்
ச-சடலமாக்கி
கு-குறுக்கி சுட்டு விடும், அதுபோல

பி – பின்பு , அன்பு இல்லாதோர் உயிரை அறம்
ச – சருகு போல
கா – காக்காமல் சுட்டு
க – கருக்கி விடும்.

வெயில் எழும்பில்லா உயிரை சுடுவது போல
அன்பில்லா உயிரை அறம் சுடும்.

77.
என்புஇல் அதனை வெயில்போலக் காயுமே
அன்புஇல் அதனை அறம்.

78. அன்புஉடைமை திருக்குறள் கரந்துறையில்

78. உயர அகமே

உ – உயிர் வாழ்க்கை
ய – யதார்த்த
ர – ரகமாக

அ – அன்பு அகத்தின்
க – கண் ஒளிர்தலே
மே – மேன்மையாகும்.
அன்பு அகத்தில் இல்லையெனில் வாழ்க்கை பாலைவனத்தில்
மரம்தளிர் விடுவதுபோலாகும்.

78
அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

79. அன்புஉடைமை – திருக்குறள் – கரந்துறை

79. அமைவது யாது?

அ – அகத்தில் அன்பு
மை – மையமாக
வ – வலிமையுடன்
து – துணை புரியவில்லையெனில்

யா- யாக்கை (உடம்பு) அழகு
து – துணை புரிந்து என்ன பயனை தரமுடியும்?

அகஅன்பு இல்லையெனில் புற அழகிருந்து
என்ன பயனைத்தர முடியும்?

79.
புறத்துஉறுப்பு எல்லாம் எவன் செய்யும்? யாக்கை
அகத்துஉறுப்பு அன்புஇல் அவர்க்கு.

80. அன்புஉடைமை – திருக்குறள் – கரந்துறையில்

80.உயரிது

உ – உண்மையில் அன்பு மட்டும்தான்
ய – யதார்த்தமாக
ரி – ரிங்காரமிடும் உயிர்நிலையின்
து – துணையாகும்.

அன்பு வழியே உயிர்நிலை அஃதில்லாதவர்க்கு
எலும்பு போர்த்திய உடம்பேயாகும்.

80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

81. விருந்துஒம்பல் – திருக்குறள் – கரந்துறையில்

இரு, உதவியாக.

இ – இல்வாழ்க்கையின் சிறப்பே
ரு – ருசிகரமான

உ- உணவை
த – தரமாக சமைத்து
வி – விருந்து
யா- யாவருக்கும்
க – கவனித்து வழங்குவதேயாகும்.

இல் வாழ்க்கையில் பொருள் சேர்ப்பதே
விருந்து உபசரிப்பதன் பொருட்டேயாகும் .

81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

82 விருந்துஓம்பல் – திருக்குறள் – கரந்துறையில்

82 . இரு சாகாம

இ-இனிய உணவை
ரு-ருசிபட சமைத்து

சா-சார்ந்தோரை
கா-காக்க வைத்துவிட்டு சாகா
ம -மருந்தெனினும் சாப்பிடுவது நல்லதல்ல.

விருந்தினரை காக்கவைத்துவிட்டு சாகா
மருந்தெனினும் சாப்பிடுவது நல்லதல்ல.

82
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டாற்பாற்று அன்று.

83. விருந்துஓம்பல் – திருக்குறள் – கரந்துறையில்

83. நலமே ‘ வருக ‘

ந – நல்ல
ல – லட்சியம்
மே- மேற்கொள்ள

வ – ‘ வருபவர்களுக்கு தினமும் விருந்தளித்து
ரு – ருசிபட காப்பவன் வறுமையில்
க – கஷ்டபடுவதில்லை ‘.

வரும் விருந்தினர்களை தினமும் காப்பவனின்
வாழ்க்கை வறுமையில் பாழ்படுவதில்லை

83
வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

84. விருந்துஒம்பல் திருக்குறள் கரந்துறையில்

84. திருமுகமே வருக

தி – தினமும்
ரு – ருசியுடன்
மு – முகமலர்ச்சியுடன்
க – கறிகாய்களுடன்
மே – மேன்மேலும்

வ – வரும் விருந்தினர்க்கு
ரு – ருசிபட சமைப்பவர்கள் வீட்டில்
க – களிப்புடன் திருமகள் குடியிருப்பாள்.

அகமகிழ்வுடன் வருவோருக்கு விருந்தளிப்போர் வீட்டில் திருமகள் குடியிருப்பாள்.

84
அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஒம்புவான் இல்.

85. விருந்து ஒம்பல் திருக்குறள் கரந்துறையில்

85. விரு(ந்து) விருது

வி ருந்தை மகிழ்ச்சியாக
ருசியாக வழங்குவோரின்

விளைநிலங்களில்
ருசிகரமான பொருட்கள் விளைந்து
துணை புரியும்.

விருந்தை மகிழ்ச்சியாக ருசியுடன் வழங்குவோரிடம்
நல்விளைபொருட்கள் தானே வரும்.

85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்ப
மிச்சின் மிசைவான் புலம்.

86. விருந்துஓம்பல் – திருக்குறள் – கரந்துறையில்

86. வரவாக இரு

வ – வரும் விருந்தினருக்கு
ர – ரக
வா- வாரியாக விருந்து படைத்து
க – கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள்

இ – இனி வரும் காலங்களிலும்
ரு – ருசிபட உணவு வழங்குவோராவர்கள்.

86
செவ்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

87. விருந்து ஓம்பல் திருக்குறள் கரந்துறையில்

87. வகை யாது

வ – வகை வகையாக விருந்து படைத்து
கை – கைமாறு கருதாது உதவி செய்வது

யா – யாவருக்கும் பயனாகும் என்பதை பொறுத்தே
து – துணையாக அமையும்.

விருந்தினரி்ன் தகுதியை பொறுத்தே விருந்தின்
வேள்விப் பயன் அமையும்.

87
இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

விருந்தோம்பல் – திருக்குறள் கரந்துறையில்

88 .விதியாவது

வி-விருந்தோம்பலில்
தி-தினமும்
யா-யாவருக்கும் தராதவர்களின் பொருட்கள்
வ-வருந்தி இழந்து இறுதியில்
து-துன்புறுவர்.

விருந்தினர்க்கு வழங்காமல் காப்பவர்களின் பொருட்கள் இழந்து வருந்தி இறுதியில் துன்புறுவர்.

88
பரிந்துஓம்பி பற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பி
வேள்வி தலைப்படா தார்.

89. விருந்துஓம்பல் திருக்குறள் கரந்துறையில்

89 . பேதமை

பே- பேரன்புடன் வளமைக் காலத்தில்
த – தரமாக விருந்தினரைப் போற்றாமல் இருப்பது
மை-மைய மடமையை உருவாக்கும்.

உடைமையுடன் இருக்கும்பொழுது விருந்தினரை
போற்றுவதே சாலச் சிறந்தது.

89
உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

90

கரு முகமாக

க – கனிவுடன்
ரு – ருசிபட விருந்தினரை கவனிக்கவில்லையெனில்

மு-முகம்
க -கருப்பாக
மா-மாறி, அனிச்சப்பூ மோந்தால் வாடுவது போல
க -கருப்பாகி வாடி விடுவர்.

அனிச்சப்பூ மோந்தால் வாடும் விருந்தினரை
முகந்திரிந்து நோக்கினால் வாடிவிடுவர்.

90
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

91. இனியவை கூறல் திருக்குறள் கரந்துறையில்

தீயவை அகல

தீய சொற்களை அகற்றி
யதார்த்தத்துடன்
வையகத்தில்

அன்பு சொற்களைப் பேசி
கனிவுடன் செம்பொருள்(மெய்ப் பொருள்) பட
லட்சிய வாழ்க்கையில் பயணிப்போம்.

இன்சொல்லில் பேசி, தீயவற்றை அகற்றி
மெய்பொருளுடன் நற்செயல்களை புரிவோம்.

91
இன்சொலால் ஈரம்அளைஇ படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

92. இனியவை கூறல் – திருக்குறள் – கரந்துறையில்

முகமது நலமே

மு-முகம் மலர்ந்து
க-கனிவுடன் பேசுவது
ம-மனமுவந்து பொருள் வழங்குவதைவிட
து-துணை புரிந்து நன்கு மதிக்கப்படும்.

ந-நல் மதிப்புடன் கூடிய
ல-லட்சிய வாழ்வுடன்
மே-மேன்மை தரும்.

அகம் மலர்ந்து இன்சொல்லில் கூறுவது
பொருள் வழங்குவதை விடச் சிறந்தது.

92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

93. இனியவை கூறல் திருக்குறள் கரந்துறையில்

93. அதுவே அகமே

அ-அகமலர்ச்சியுடன்
து-துணைபுரிந்து
வே-வேற்றுமை இல்லாமல்

அ-அன்பு கலந்த
க-கனிவான இன் சொல்லுடன் கூறுவதே
மே-மேன்மையான அறமாகும்.

முகமலர்ச்சியுடன் அன்பு கலந்த இன்
சொல்லே உயர்ந்த அறமாகும்.

93
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

94. இனியவை கூறல் – திருக்குறள்-கரந்துறையில்

94. யாவருமே இயலாக

யா-யாவரும்
வ-வறுமையின்றி
ரு-ருசிபட வாழ,
மே-மேன்மை தர,

இ-இன் சொல்லை
ய-யதார்த்தமாக
லா-லாவகமாக
க-கனிவுடன் சொன்னால் இன்பமே தரும்.

யாவரிடமும் இன்சொல்லை வழங்கினால்
வறுமையின்றி இன்பமே தரும்.

94.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

95 இனியவை கூறல் திருக்குறள் கரந்துறையில்

95. பதவி ஆகுமே

ப-பணிவுடன் கூடிய
த-தரமான இன் சொல்
வி-விருப்பமுள்ள

ஆ – ஆற்றலாகி
கு – குன்றாமல்
மே-மேன்மையாக விளங்கும்.

பணிவு உடையவனின் இன்சொல் பல
அணிகலன்களை விட சிறந்ததாகும்.

95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற.

96. இனியவை கூறல் – திருக்குறள் – கரந்துறையில்

தேயாது அவை

தே-தேடி நன்மை தரும் சொற்களை
யா-யாவரிடமும் கலந்து பேசினால்,
து-துணை புரியும் புண்ணியம்.

அ-அறம் பெருகும்
வை-வையகத்தில்.

நல்லவற்றை நாடி இனிய சொற்களை
சொன்னால் அறம் பெருகும்

96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

97. இனியவை கூறல் திருக்குறள் – கரந்துறை

97. நயமாக பேசு

ந-நன்மை தரும் சொற்களை
ய-யதார்த்தமாக பண்பின்
மா-மாண்போடு
க-கனிவுடன்

பே-பேசுவது
சு-சுகமான இன்பமாகும்.

பயன் தரும் இன்பமான சொற்களை
பேசுவது நன்மை அளிக்கும்.

97
பயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

98. இனியவை கூறல்-திருக்குறள்-கரந்துறையில்

98. சில தருமே

சிறப்பான
லட்சிய மனப்பான்மை கொண்ட

தரமான இன்சொல்
ருசிகர வாழ்வையும்
மேன்மையும் என்றும் தரும்.

இன்சொல் சிறுமை கலவாமல் இருந்தால்
என்றும் இன்பம் தரும்.

98
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

99. இனியவை கூறல்-திருக்குறள்-கரந்துறையில்

99. இலகுவாகுமே

இ – இன்சொல்லில் கூறுவதை
ல – லட்சியமாக்கிக் கொண்டு,
கு – குற்றமுள்ள வன்சொற்களை தம்
வா- வாயால் கூறாமல் , நன்கு
கு – குதூகூலத்துடன்
மே -மேன்மையடையலாம்.

பிறரின் இன்சொற்கள் உணர்ந்து இனிமை காணலாமே
வன்சொல் கூறுவதால் பயனாகுமா?

99
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?

100. இனியவை கூறல் -திருக்குறள் – கரந்துறையில்

100. காயாக இலமே

கா-காய்
யா-யாரையும்
க-கவர்ந்திழுப்பதில்லை

இ-இனிய சொற்களை கூறி
ல-லட்சிய வாழ்க்கை
மே-மேற்கொள்வதே சிறப்பாகும்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருக்க காய்கவராதது போலாகும்.

100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்ப காய்கவர்ந் தற்று.

101.
செய்ந்நன்றி அறிதல்-திருக்குறள்-கரந்துறையில்

101. வையக உதவி

வை-வையகத்தில்
ய – யதார்த்தமான
க – கடமையுடன் பிரதிபலன் கருதாது

உ- உண்மையாக செயலாற்றி
த- தரமாக உதவுவது
வி-விண்ணுலகத்தையும்
உலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.

பிரதிபலன் பாராமல் பிறருக்கு உதவிசெய்வது
எந்த உலக ஆற்றலையும் விட அரிது.

101.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

102.
செய்ந்நன்றி அறிதல் – திருக்குறள் – கரந்துறையில்

102. பெரிய உதவி

பெ-பெரிதாக கருதப் படுவது
ரி – ரிதமாக
ய – யவனியில்

உ-உற்ற நேரத்தில்
த-தரமான சிறு உதவியை ஆபத்தான சமயங்களில்
வி-விருப்பமுடன் செய்வது, உலகை
விட மிகப் பெரியது.

தக்க காலத்தில் செய்யும் சிறு உதவி
இவ்வுலகை விட மிகப் பெரியது.

102
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

103. செய்ந்நன்றி அறிதல் திருக்குறள் கரந்துறையில்

103. நயமாகுமே!

ந-நல் உறவுடன்
ய-யதேச்சையாக
மா-மாற்றாக பயன் ஏதும் கிடைக்கும் என கருதாமல்
கு-குன்றா பெருமையுடன் செய்யும் உதவி
மே-மேதினியில் கடலைவிட பெரிதாக விளங்கும்.

பயனை எதிர்பாராது செய்யும் உதவி
மாபெரும் கடலைவிட பெரிதாகும்.

103.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

104.
செய்ந்நன்றி அறிதல்-திருக்குறள்-கரந்துறையில்.

104. தகுதி கருது

த-தரமான உதவி
கு-குணத்துடன்
தி-திணை அளவு

கரு – கருதி செய்தாலும் அச்செயலை பெரிய
து – துணை என கருதுவர்.

சிறு அளவு உதவி செய்தாலும்
பெரியதுணை எனக் கருதுவர்.

104
தினைத்துணை நன்றி செயினும்பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

105.செய்ந்நன்றி அறிதல்-திருக்குறள்-கரந்துறையில்.

105. மதி உதவி

ம-மனமுவந்து
தி-திடமாக

உ-உள்ளன்போடு உதவுவது
த-தரமான பொருள் வரம்பில் மதிக்கப்படுவதில்லை
வி-விரும்பி பெறுபவரின் பண்பில் மதிப்பிடப்படும்.

உதவி பொருட்களில் அளவிடப்படுவதல்ல பெறுபவரின் பண்பினாலே அமையும்.

105
உதவி வரைத்துஅன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

106.செய்ந்நன்றி அறிதல்-திருக்குறள்-கரந்துறையில்.

106. மாசிலா உதவி

மாசிலா அறிவோரிடமும்
சிந்தனையில் குற்றமற்று
லாவகமாக உள்ளோரிடமும் நட்புடன் இரு.

உண்மையில் துன்பப்படும்பொழுது
தம்மீது நட்பு பாராட்டி
விரும்பியோரையும் மறவாதே.

துன்பத்தில் துணை நின்றவரிடமும் அறிவில் குற்றமற்றவரின் நட்பையும் மறவாதே.

106.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்புஆயார் நட்பு.

107.செய்ந்நன்றி-திருக்குறள்-கரந்துறையில்

நலமே அது

ந-நட்புடன் பிறரின் துன்பத்தை
ல-லட்சியமாக கொண்டு துடைப்பவரின்
மே-மேன்மை எழு பிறப்பிலும்

அ-அறத்தோடு என்றும்
து-துணை நிற்கும்.

துன்பம் துடைத்தவரது நட்பை நல்லவர்கள்
எப்பிறப்பிலும் நினைப்பர்.

107.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.

108.செய்ந்நன்றி அறிதல்-திருக்குறள்-கரந்துறையில்

நமது நலமே

ந-நன்றி
ம-மறப்பது நல்லது அல்ல
து-துன்பம் வரினும்

ந – நல்லது அல்லாதவைகளை மறப்பதையே நம்
ல -லட்சியமாகக் கொண்டு
மே-மேலும் பல நற்செயல்கள் புரிவோம்.

நன்றி மறப்பது நல்லதல்ல நல்லதல்லாதவைகளை
அன்றே மறப்பது நல்லது.

108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

109
தீமை செயலா

தீ-தீமையை ஓருவர் நிறைய செய்தாலும்
மை-மையமான ஒரு நல்ல

செ-செயலை இயல்பாக
ய-யதார்த்தாமாக கொண்டால்
லா-லாவகமாகி தீமை நினைவு போகும்.

கொல்வதைபோன்ற தீங்கு பலசெய்தாலும் அவரின்
ஒருநன்மை தீமையின்நினைவை மறைத்துவிடும்.

109
கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

110.செய்ந்நன்றி அறிதல்-திருக்குறள்-கரந்துறையில்

110. பாவமே இல

பா-பாவம் அனைத்திற்க்கும்
வ-வழி உண்டு
மே-மேன்மை அடைய

இ-இப்பிறப்பில் செய்த நன்றியை மறந்தோர்க்கு
ல-லகுவான வாழ்வில்லை.

எந்நன்றியை சிதைத்தவர்க்கு பாவம் நீங்கிவிடும்.
செய்நன்றி சிதைத்தோர்க்கு வாழ்வில்லை.

110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் உய்வுஇல்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.

111. நடுவு நிலைமை – திருக்குறள் – கரந்துறையில்

111. பகுதி வகை

ப-பக்குவமாக தகுதியை
கு-குணத்தோடும்
தி-திறமையோடும் நடுவு நிலைமையோடு

வ – வழி முறையாக கடைபிடித்தால்
கை – கைமாறு கருதாத நன்மையுண்டாகும்.

தகுதியான நடுவு நிலைமையை கடைபிடித்தால்
ஒப்பற்ற நன்மை உண்டாகும்.

111
தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

112-நடுவு நிலைமை திருக்குறள் கரந்துறையில்

112. நயமாகு

ந-நடுவு நிலைமை உடையவர்கள்
ய-யதார்த்த ஆக்கம் பெற்று
மா-மாபெரும் புகழுடன் வலிமையான
கு-குணமுடைய தலைமுறையாக அமையும்.

நடுவு நிலைமை உடையவர்கள் ஆக்கத்துடன்
வழித் தோன்றல்களுக்கும் வலிமை உடைமையாகும்.

112
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

113 நடுவு நிலைமை திருக்குறள் கரந்துறையில்

113. சமமாக

ச-சகல நன்மை
ம-மதிப்பும் தரும் செல்வம் வரினும்
மா-மாண்புறும் செயல்களோடு நடுநிலைமையாக
க-கடமையாற்றுவதே ஆக்கம் தரும்.

நன்றை வரினும் நடுவு நிலைமை இழந்தால்
அன்றே விட்டுவிட வேண்டும்.

113.
நன்றே தரினும் நடுவுஇகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

114. நடுவு நிலைமை- திருக்குறள் – கரந்துறையில்

114. அவரது

அ-அவரவது புகழ்
வ-வளர்ந்து நடுவுநிலைமையில் உள்ளனரா என்பதை
ர-ரசிப்புடன் கூடிய பிள்ளைகளின் பண்பில்
து-துடிப்பில் அறிய முடியும்.

நடுவு நிலைமையுடையவரா என்பதை அவரவர்களின்
பிள்ளைகளால் காணப் படும்.

114. தக்கார் தகவிலர் என்பது அவர்அவர்
எச்சத்தால் காணப்படும்.

115. நடுவுநிலமை- திருக்குறள்-கரந்துறையில்

விதி அமைவது

வி-விழுதலும், எழுதலும்
தி-தினமும் இல்லாததல்ல

அ-அன்பினால் நெஞ்சார
மை-மையமாக வாழ்த்தி
வ-வளர்ச்சியை போற்றுதலே சான்றோர்க்கு என்றும்
து-துணையாக அமையும்.

அழிவும் ஆக்கமும் இல்லாதாதல்ல நெஞ்சத்தின்
நீதியே சான்றோர்க்கு அழகு.

115
கேடும் பெருக்கமும் இல்அல்லநெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.
116. நடுவுநிலைமை-திருக்குறள்-கரந்துறையில்

116. தீய

தீ-தீய விளைவு நடுவுநிலையிலிருந்தால் பிசகினால்
ய-யதார்த்தமாக உள்மனம் அறியும்.

நடுவுநிலையிலிருந்து தவறி காரியம் செய்தால்
தம் நெஞ்சம் அறியும்

116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவுஒரிஇ அல்ல செயின்.

117- நடுவு நிலைமை – திருக்குறள் – கரந்துறையில்

117.சமமாக

ச-சரியாக நடுநிலையில் உள்ளோர்
ம-மக்களில் உயர்ந்தோர் பொருள் இழந்தாலும்
மா-மானிட பண்பெனக் கருதி தாழ்வாக
க-கருதமாட்டார்கள்

நடுநிலையில் உள்ளோர் பொருள் இழந்தாலும்
உலகோர் குறைவாக கருதமாட்டார்கள்.

117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

118. நடுவுநிலைமை திருக்குறள்-கரந்துறையில்
118. நீதி சமமாக

நீ-நீதியின்
தி-திசை எப்பொழுதும்

ச- சரி சம நிலை நாட்டி
ம – மக்களுக்கு தீர்ப்பை ஒரு பக்கமாக சாயாமல்
மா- மாண்புற்ற சான்றோர்கள்
க – கற்றலுடன் அமைக்கும் அழகாகும்.

தராசு போல ஒருபக்கம் சாயாமல்
நடுவுநிலைமையே சான்றோர்க்கு அழகாகும்.

118
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

119. நடுவுநிலைமை திருக்குறள்-கரந்துறையில்

119. பேசுவது

பே-பேசும் சொற்கள்
சு-சுகமாக உறுதிப் பட நின்று
வ-வரும் சொற்களும் நடுநிலை எனில், என்றும்
து-துணையாக நிற்கும்.

சொற்கள் ஒரு தலைப்பட்சமாக இல்லாமல்
நடுநிலைமையானால் நல்நிலை உண்டாகும்.

119.
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

120. நடுவுநிலைமை-திருக்குறள்-கரந்துறையில்

120. அது போல

அ-அடுத்தடுத்தது வாணிகம் செய்வோர் நல்
து-துணையாக கருதி பிற பொருளையும்

போ-போதுமான அளவு தம் பொருள் போல
ல-லட்சிய வணிகம் செய்வது நல் முறையாகும்.

வாணிகம் செய்வோர் பிறர் பொருளை
தம்பொருள் செய்தல் நலமாகும்.

120.
வாணிகம் செய்வோர்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம்போல் செயின்.

121 அடக்கம் உடைமை திருக்குறள்- கரந்துறையில்

பாவமாக

பா-பார்த்து பக்குவமாக பழக்கமாக
வ-வரும் அடக்கம்
மா-னிடப் பண்பின் உயர் அறமாகும்; அடங்காமை
க-கடந்து இருளுக்குள் தள்ளிவிடும்.

அடக்கம் உயர் அறமாகும் அடங்காமை
பாவமாகி இருளுக்குள் தள்ளிவிடும்.

121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

122. அடக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

பெரியது அது

பெ-பெரும் பொருளாக
ரி-ரிதமான
ய-யதார்த்தமான அடக்கமே
து-துணை புரியும் செல்வம்.

அ-அடக்கத்தை விட
து-துணைபுரிவது எதுவுமில்லை.

அடக்கத்தை விட பொருளை காப்பது
வேறெந்த செல்வமும் இல்லை.

122
காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம்
அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு.

123. அடக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

123. சீரமை

சீ-சீராக அறிந்து அடக்கத்துடன்
ர-ரக வாரியாக என்றும்
மை-மையமாக இருப்பது நன்மை விளைவிக்கும்.

அறியவேண்டியவற்றை அறிந்து அடக்கத்துடன்
இருப்பது நற்பலனைத் தரும்.

123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

124. அடக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

பெரிது அமை

பெ-ரிய அளவு
ரி-ரிங்காரமாக
து-துணிவோடும் உயர்வோடும் வாழ

அ-அடக்கத்துடன் நிலை திரியாது
மை-மையமாக வாழ்வோரேயாகும்.

அடக்கத்துடன் நிலை திரியாது உள்ளோரின்
வாழ்வு மலையினும் பெரிதாகும்.
124.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

125.அடக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

யாவருமே

யா-யாவரிடமும்
வ-வணங்கி அடக்கத்துடன்
(இ)ரு-ருப்பது
மே-மேன்மை தரும் செல்வமாகும்.

அனைவரிடமும் அடக்கத்துடன் இருப்பது செல்வர்க்கும் செல்வமாகும்.

125.
எல்லோர்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

126. அடக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

ஆமை போல

ஆ – ஆக்க பூர்வமாக ஐம்புலன்களையும்
மை- மையப்படுத்துகின்ற செயல், ஆமை

போ- போல அடக்கம் உள்ள மனிதனின்
ல- லட்சியப் பிறப்பில் காவலாக அமையும்.

ஒருவரின் ஐம்புலன்களின் அடக்கமான
மையச்செயல்கள் பலகாலத்துக்கும் பாதுகாவலாகும்.

126.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

127. அடக்கம் உடைமை-கரந்துறையில்

யாகாவாக

யா-யாவற்றையும்
கா-காக்க இயலாமல் போனாலும்
வா-வாயில் நற் சொற்களை சொல்லி வாழ்வில்
க-கற்றுணர்ந்து செல்ல வேண்டும்.

வாயில் கூறும் சொற்களை காக்கப்படவேண்டும்
அவ்வாறில்லையெனில் துயரடைய நேரும்.

127.
யாகாவா் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு.

128 . அடக்கம் உடைமை – திருக்குறள்- கரந்துறையில்

128. ஆகாது

ஆ-ஆயிரமாயிரம் நன்மையும் நாவை
கா-காக்காவிடில் நன்மைகள் தீமையாக மாறி
து-துணை நிற்காது, தீய சொல் ஓன்றினால்.

ஒரு தீச்சொல்லாயினும் பொருட்களின்பயன் அனைத்தும் நன்றல்லாது ஆகி விடும்.

128
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றுஆகாது ஆகி விடும்.

129. அடக்கம் உடைமை-திருக்குறள்- கரந்துறையில்

தீயா! நாவிலா!!

தீ – தீயினால் சுட்ட புண்
யா – யாவருக்கும் உள்ளத்தால் ஆறிவிடும்.

நா – நாவினால் சொல்லும்
வி – விபரித சொற்கள் உள்ளத்தில்
லா – லாவகமின்றி என்றும் நீடித்து இருக்கும்.

தீயின் புண் ஆறிவிடும். நாவில்கூறும்
கடுஞ்சொற்கள் உள்ளத்தினில் ஆறாது.

129.
தீயானால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

130. அடக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

கலமாக

க-கல்வி கற்று, சினத்தைக் காத்து
ல-லயம்பட, அடக்கத்துடன்
மா-மானிட பண்புகளுடன் இருப்பவரை
க-கலமாக காலமே காத்திருக்கும்.

சினம்காத்து கற்று அடக்கத்துடன் இருப்பவனை நன்மை செய்ய முறையாக காலமே காத்திருக்கும்.

130
கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

131
மதி ஓயாது.

ம-மக்களின் உயிரை விட ஒழுக்கம் உயர்ந்த
தி-திறமையாக சிறப்பாக கருதப்படுவதால்

ஒ- ஒழுக்கத்தை
யா- யாவரும் கடைபிடித்து
து – துவர(மிக நன்கு) மதிக்கப்பட வேண்டும்.

ஒழுக்கம் அனைவருக்கும் மேன்மை தருவதால் உயிரைவிட உயர்வாக கருதப்படும்.

131
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்.

132. ஒழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

கருதுவது அது

க – கண்ணும்
(க)ரு-ருத்துமாக ஒழுக்கத்தின்
து-துணையுடன் அறத்தை கடைபிடித்து
வ-வளர்வதும்
து-துவண்டு விழாமல்

அ-அதையே சிறந்தது என ஆராய்ந்து
து-துணை கொள்வோம்.

ஒழுக்கத்தை காத்து எது சிறந்ததென ஆராய்ந்து
அதையே சிறந்ததென துணைக்கொள்வோம்.

132.
பரிந்துஒம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை.

133. ஓழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

ஆகுக

ஆ-ஆக்கபூர்வ ஓழுக்கம்
கு-குடிபெருமையை காத்து அறங்களில் சிறந்தென
க-கடைபிடிக்கும் அறமாக விளங்கும்.

ஓழுக்கம் குடிப் பெருமையை உயர்த்தும்
இழுக்கம் தவறுதலுக்கு இட்டுச்செல்லும்.

133.
ஓழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

134. ஓழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

134. குலமது

கு-குன்றாப் பண்புகளுடன்
ல-லட்சியத்துடன்
ம-மனிதர்கள் ஒழுக்கத்தின்
து-துணையுடன் இருப்பதே சிறந்தது.

பார்த்து நடப்பவன் கற்றதை மறந்தாலும்
ஒழுக்கம் குன்றாமல் இருப்பதே சிறந்தது.

134.
மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும்.

135. ஒழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

இல ஆக

இ-இருக்கும் வரை ஒழுக்கத்தை
ல-லட்சியமாக கொண்டவர்கள்

ஆ – ஆக்கம் பூர்வ வாழ்வு வாழ்ந்து தன்
க – கடமையாற்றுவார்கள்.

பொறாமை உடையோர் ஆக்கமிலாததாகி விடும்
ஒழுக்கம் இல்லாதோரிடம் உயர்விலாது.

135.
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

136. ஒழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

136. விலகா

வி-விரும்பி ஒழுக்க நெறியை
ல-லட்சியமாகக் கொண்டு
கா-காப்பவர்கள் மனவலிமையுடைய நல்லோராவார்.

ஓழுக்கத்தை மனவலிமையுடையோர் கடைபிடிப்பர்
தவறினால் குற்றமாகும் என்றறிவர்.

136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

137. ஒழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

தகாது வருமே

த-தரமான ஒழுக்கம்
கா-காக்கும் மேம்பாட்டின்
து-துணையினால்.

வரு-வருமே பழி
மே-மேம்பாடும் அடையாது இழுக்கத்தினால்.

நல்ஒழுக்கம் மேன்மை தரும்; இழுக்கத்தினால்
பழியே பெருகும்.

137.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

138. ஒழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

138. நல விதை

ந-நல்ல ஒழுக்கம்
ல-லட்சியத்துடன்

விதை-விதைக்கப்படும் பொழுது
நல்லுறவாகும் நன்றியுடன்.

நல்ல ஒழுக்கம் நல்விதையாகும் தீயொழுக்கம்
பாவமாகி துன்பம் தரும்.

138
நன்றிக்கு வித்துஆகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

139. ஒழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

139.சொலலாகாது

சொ-சொற்களிலும் தம் ஒழுக்கத்தை
ல-லட்சியமாக் கொண்டவர்களுக்கு
லா-லாவகமாக தம் வாய் சொல்லும்
கா-காத்து
து-துணை நிற்கும்.

ஒழுக்கம் உடையவர்கள் தவறியும் தீய
சொல்லை தம்வாயால் சொல்லமாட்டார்கள்.

139.
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.

140. ஒழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

140.
கருதுபவராக

க-கற்றலை
ரு-ருசிபட வாழ்தலின்
து-துணைக் கொண்டு
ப-பல நூல்களை கற்று
வ-வந்த போதிலும்
ரா-ராஜ்ஜயத்தில் ஒழுக்க நெறியற்றவர்
க-கல்லாதவராகவே கருதபடுவார்.

பல நூல்களை ஒழுக்கநெறியற்றவர் கற்றபோதிலும்
அறிவில்லாதவராகவே கருதப்படுவார்.

140.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

141. பிறன்இல் விழையாமை- திருக்குறள்-கரந்துறை

141. மதி இல

ம-மக்களில் பிறர் மனைவியை விரும்புவது
தி-திருட்டுத் தனமாக ரசிப்பது என்பது

இ-இவ்வுலகில் அறநெறி காப்பவரின்
ல-லட்சியமாக இராது.

பிறர் மனைவியை அறநெறி காக்கும்
நல்லோர் விரும்பமாட்டார்கள்.

141
பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார் இல்.

142.
பிறன்இல் விழையாமை-திருக்குறள்-கரந்துறையில்

142. பேதமாக

பே-பேறு பெற்ற அறம் பொருளுடையோர்
த-தரம் குறைந்து அடுத்தவர் மேல் காமமுற்றால்
மா-மானிட பண்புகளற்று பேதையராக
க-கயவராக இருப்பர்.

அறத்திறன் உடையோர் அடுத்தவர் மேல்
காமமுற்றால் பேதையுடையோராக இருப்பர்.

142.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

143.
பிறன்இல் விழையாமை-திருக்குறள்-கரந்துறையில்

143. தீமையாகுமே

தீ-தீமை எண்ணத்துடன்
யா-யாதொரு இல்லாள்
கு-குடும்பத்திற்குள் சென்றால்
மே-மேன்மையுராத இறந்தவராகவே கருதப்படுவர்.

அடுத்தவரின் வீட்டில் சென்று தீமை புரிந்தால்
விளிந்தாராகவே (இறந்தவராக) கருதப்படுவார்.

143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்தொழுகு வார்.
144.
பிறன்இல் விழையாமை திருக்குறள் கரந்துறையில்

144. புகாதே

பு-புண்ணியத்தை
கா-காத்து நல்நெறியுடைவராக
தே-தேறி இருந்தாலும் காமுகர் நல்நெறியை இழப்பர்.

எந்த நல்நெறியுடையவராயினும் தினையளவு
காமமுடையோர் நன்னெறியாகாது.

எனைத்துணையர் ஆயினும் என்னாம்? தினைத்துணையும்
தேரான் பிறன்இல் புகல்.

145. ஆகாதெது -திருக்குறள்- கரந்துறையில்

ஆ-ஆகிற காரியம் என
கா-காக்காது, மற்றவரின் இல்லத்தில்
தெ-தெகட்டாது நெறிகளை மீறி நுழைவது
து-துன்பமும் பழியுமே நிற்கும்.

எளிதென எண்ணி நல்நெறியை கடைபிடிக்காதவர்கள்
என்றும் அழியாப்பழியே நிற்கும்.

145
எளிதுஎன இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

146.
பிறன்இல் விழையாமை திருக்குறள் கரந்துறையி்ல்

146. இகவா (நீங்கமாட்டா)

இ- இந்த பகை,பாவம்,பயம் பழி என நான்கு உடைய
க- கயவர்கள் நெறி தவறி பிற இல்லாளிடம்
வா-வாழ்பவர்களின் குற்றங்கள் நீங்காது.

பகை, பாவம், பயம், பழி என நான்கு
குற்றங்களும் நெறிகெட்டோரிடமிருந்து நீங்காது.

146
பகை, பாவம், பயம், பழி எனநான்கும்
இகவாவாம் இல்இறப்பான்கண்.

147.
பிறன்இல் விழையாமை-திருக்குறள்-கரந்துறையில்

147. நயவா (விரும்பாத)

ந – நல் அறநெறியுடையவர்
ய- யதார்த்தமாக பழகி பிற இல்லாளை விரும்பாது
வா- வாழ்பவரே ஆவர்.

அறநெறியுடையோன் பிறனியலான் பெண்மையை
விரும்பாதவரே ஆவார்.

147.

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்.

148
பிறன்இல் விழையாமை-திருக்குறள்-கரந்துறையில

148. அதுவே

அ-அறனாவது பிறன் மனை நோக்கா
து-துணை நின்று பேராண்மையுடன்
வே-வேண்டி விரும்பி நிற்கும் ஒழுக்கமாகும்.

பிறன்மனை நோக்கா பேராண்மை சான்றோருக்கான
நிறைந்த ஒழுக்கமாகும்.

148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன் ஒன்றோ? ஆன்ற ஒழுக்கு.

149
பிறன்இல் விழையாமை திருக்குறள் கரந்துறையில்

149. தோயாத(சேராத)

தோ-தோளுடன் மாற்றான் மனைவியுடன்
யா-யாரொருவர் துய்க்க விரும்பாதவரோ அவரே
த-தரமான பல நன்மைகளை பெறமுடியும்.

நலமுடையார் யாரெனில் பிறரில்லாளை
தோள்நலம் துய்க்காதவரே ஆவார்.

149. நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பில்
பிறற்குஉரியாள் தோள்தோயா தார்.

150.
பிறன்இல் விழையாமை திருக்குறள் கரந்துறையில்.

150. நயவாமை( விரும்பாமை )

ந-நயமுடன்
ய-யதார்த்தமாக பிறர்மனைவி விரும்பினாலும்
வா-வாழும் காலத்தில் அறவழியில்லாதோரும் கூட
மை-மையமாக விலகி இருப்பதே உத்தமம்.

அறவழியில்லாதோரும் பிறன்வரையாள் விரும்பினும் விலகியிருப்பதே நல்லது.

150.

151. பொறை உடைமை திருக்குறள் கரந்துறையில்

151. நிலமாக

நி-நின்று நிலைத்து தன்னை இகழ்வாரைப் பொறுக்கும்
ல-லட்சியமாகக் கொண்டு
மா-மானிடர்களின் பண்புகள் நிலம் போல
க-கண்ணியமான மனித குணமாகும்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை
இகழ்வோரையும் பொறுப்பது தலையேயாகும்.

151.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

152. பொறை உடைமை – திருக்குறள்- கரந்துறையில்
152. தீமையா அலசாதே

தீ – தீமையை பொறுத்து
மை-மையப்படுத்தி
யா-யாவற்றையும்

அ-அகற்றி மறந்து
ல-லட்சியக் கோட்டைச்
சா-சார்ந்து
தே-தேர்ச்சி பெறுவது நன்று.

தீமையை பொறுத்தல் நன்று அத்தீமையை
மறத்தல் அதனினும் நல்லது.

152.
பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனை
மறத்தல் அதனினும் நன்று.

153. பொறை உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

153. அவமதி

அ-அன்பு இருந்தும்
வ-வரும் விருந்தினரை இல்லாமையால்
ம-மதிக்காமலும் அறியாமையால் மற்றவர்
தி-திட்டுவதை பொறுத்துக் கொள்ளுதலும் நன்று.

இன்மையால் விருந்தோம்பலை விடுதலும் அறிவிலிகளை பொறுத்தலும் வலிமையாகும்.

153
இன்மையுள் இன்மை விருந்துஓரால் வன்மையுள்
வன்மை மடவாப் பொறை.

154. பொறை உடைமை- திருக்குறள்- கரந்துறையில்

154. பொதுவாக

பொ-பொறுமையுடைய
து-துவளாத நிறைந்த பண்புடையோர்
வா-வாழும் காலங்களில் நீங்காமல்
க-கடமையுடன் பாதுகாத்து இருக்க வேண்டும்.

நீங்காத நிறையுடைய பொறுமையுடையோர்
போற்றி பாதுகாக்க வேண்டும்.

154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும்.

155. பொறை உடைமை – திருக்குறள்- கரந்துறையில்

155. மதியாதே

ம-மற்றவர்களை
தி-திட்டுபவரையும்
யா-யாதொருவர் மதிக்கிறாரோ அவரை
தே-தேர்ந்தெடுத்து பொன் போல மதிப்போம்.

தீயாரை மதியாதே தீயோரை பொறுப்போரை
பொன் போல மதிப்போம்.

155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.

156

உமதாகுமே

உ-உமக்கு தீங்கு செய்பவரின்
ம-மனதுக்கு ஒரு நாள் இன்பம்.
தா-தாங்குகின்றவர்களின்
கு-குணநலன்கள் என்றும் புகழும்
மே-மேன்மை தரும்.

தீங்கு செய்பவருக்கு ஒரு நாளின்பம். பொறுமையுடையோர்க்கு
புகழ் என்றும் துணையாகும்.

156.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு
பொன்றும் துணையும் புகழ்.

157.பொறை உடைமை-திருக்குறள்-கரந்துறையில்

157.நோகாத

நோ-நோநொந்து பிறர் தீங்கிடினும் அவரையும்
கா-காத்து அறன் அல்லாத
த-தரமற்ற செயல்களை செய்யாமை நன்று.

தகாத செயல்களை பிறர் செய்யினும்
அறமற்ற செயல்களை செய்யாதது நன்று.

157
திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று.

158. பொறை உடைமை – திருக்குறள் -கரந்துறை

158.மிகுதியாக

மி-மிகுதியான அளவு தீய
கு-குணங்களுடன் செய்தாருக்கும்
தி-திறமையான தம் தகுதியால்
யா-யாவற்றையும் பொறுமையாக
க-கடந்து வென்றிட வேண்டும்.

தம்முடைய தகுதியால் தீயோரையும்
கடந்து வென்றிட வேண்டும்.

158.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தம்
தகுதியான் வென்று விடல்.

159. பொறை உடைமை – திருக்குறள்- கரந்துறையில்

159. தூயவராக

தூ-தூய சொற்களை காக்கும்
ய-யதார்த்தவாதிகள்
வ-வரம்பு கடந்து சொற்களாற்றும்
ரா-ராசியற்ற துறவியரை விட
க-கடந்து தூய்மையுடையவராக இருப்பர்.

நெறிகடந்த சொற்களை பொறுத்துக் கொள்பவர்கள்
துறவியரை விட தூய்மையுடையவரவார்.

159.
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

160. பொறை உடைமை-திருக்குறள் – கரந்துறையில்.

160. உயராத

உ-உண்ணாமல் தவ வாழ்வில்
ய-யதார்த்தமான பெரியவரை
ரா-ராஜ்ஜியம் எங்கும் கூறிடினும்
த-தரமற்ற சொற்களை பொறுப்பவரே உயர்ந்தவர்.

உண்ணாநோன்புடையோரே பெரியவர் எனினும் பிறரின் உன்னதமற்றவைகளை பொறுப்பவரே உயர்ந்தவர்.

160.
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

161.அழுக்காறு-திருக்குறள்-கரந்துறையில்

161. இலாத

இ-இயல்புடன்
லா-லாவகமாக ஒழுக்கத்தை
த-தன் நெஞ்சில் அழுக்காறின்றி இருத்தல் நலம்.

அழுக்காறு இல்லாத ஒழுக்க நெறியை
தன்னில் இயல்பாக்க வேண்டும்.

161.
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

162. அழுக்காறாமை-திருக்குறள்-கரந்துறையில்

162. நிகராக

நி- நிம்மதியாக
க- கற்றுணர்ந்து
ரா- ராசியாக பொறாமையின்றி வாழ்க்கையை
க- கடப்பதற்கு நிகர் வேறொன்றும் இல்லை.

பொறாமை கொள்ளாத மனநிலை பெறும் பேறுகளுக்கு நிகர் வேறொன்றுமில்லை.

162.
விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

163. அழுக்காறாமை-திருக்குறள்-கரந்துறையில்

163. அவராவது.

அ-அறன் ஆக்கமாக
வ-வரும் என்று விரும்பாதவர்
ரா-ராசியாக அடுத்தவருக்கு
வ-வரும் செல்வத்தை கண்டு மகிழாமல்
து-துன்பமென எண்ணி பொறாமைப் படுபவரே.

அறன் ஆக்கமென விரும்பாதெவரும் பிறரின் ஆக்கத்தை விரும்பாது பொறாமைப்படுவார்.

163.
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

164. அழுக்காறாமை-திருக்குறள்-கரந்துறையில்

164. ஏதமாக

ஏ- ஏதும் துன்பம் பொறாமையினால் வருவதை
த- தடம் அறிந்த
மா-மானிடர்களில்
க- கற்றோர் அறமற்றதை செய்யமாட்டார்.

பொறாமையினால் துன்பம் வருவதை அறமற்ற
வழி அறிந்தோர் செய்யமாட்டார்.

164.
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

165. அழுக்காறாமை-திருக்குறள்-கரந்துறையில்

165. பகை அமைவது:

ப-பலரின் ஆக்கபூர்வ
கை-கையகப்படுயத்திய கருதாத செயல்கள் கண்டு

அ-அழுக்காறு அடைபவர்கள்
மை-மையமாக பகை அமைந்து,
வ-வழுக்கி கேடும்
து-துன்பமும் தரும்.

பிறரின் ஆக்கச்செயல்களில் அழுக்காறு காண்பவர்கள்
பகைமையோடு அழிவினை உண்டாக்கும்.

165.
அழுக்காறு உடையர்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடுஈன் பது.

166. அழுக்காறாமை-திருக்குறள்-கரந்துறையில்

166. நலமெது

ந-நல்
ல-லட்சியத்துடன் ஒருவர்
மெ-மென்மையாக கொடுப்பவரை தடுப்பவர், எவ்வித
து-துணையின்றி அவரது சுற்றமும் கெடும்.

ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதினால் பொறாமைப்படுபவரது
சுற்றமும்கூட முற்றிலும் கெடும்.

166.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

167. அழுக்காறாமை-திருக்குறள்-கரந்துறையில்

167. மூதேவி

மூ-மூர்க்க பொறாமை கொண்டோரின் வாழ்வு
தே-தேர்ந்தெடுத்த செல்வமும்
வி-விலகிப் போய் விடும்.

பிறரின் ஆக்கத்தை பொறுக்காதவர்களின்
வாழ்வு செல்வ வளமும் குன்றி விடும்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

168. அழுக்காறாமை-திருக்குறள்-கரந்துறையில்

168. பாவியா!

பா-பாவமே, பொறாமையால்
வி-வித்தியாச பெறும் செல்வம்
யா-யாவும் தீய வழிக்கு சென்றுவிடும்.

அழுக்காறினால் பெறும் செல்வம் யாவும்
தீவினையினால் அழிந்து விடும்.

168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்,
தீயுழி உய்த்துவிடும்.

169.அழுக்காறாமை-திருக்குறள்-கரந்துறையில்.

169. மேலாக அமை.

மே-மேலும் உயர்பவனின்
லா-லாகவமான அழுக்காறும்
க-கடமையில் நேர்மையுடையவனின்

அ-அழிவும்
மை-மையமாக ஆராயப் படும்.

அழுக்காறு உடையவன் மேலும் உயர்தலும்
நேர்மையானவனின் அழிவும் ஆராயப்படும்.

169.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

170. அழுக்காறாமை-திருக்குறள்-கரத்துறையில்

170.தீராதது

தீ-தீரச்செயலைக் கண்டு பொறாமைபட்டவர்கள்
ரா-ராஜநிலையில் செல்வரானவரும் இல்லை.
த-தரமான ஆக்கச்செயல்கள் செய்து
து-துன்பப் பட்டவரும் இல்லை.

மனதழுக்குடையோர் செல்வந்தரானது இல்லை
ஆக்கமுடையோர் வீழ்ந்ததும் இல்லை.

170.
அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

171 .வெஃகாமை-திருக்குறள்-கரந்துறையில்

171.வேகாதே

வே-வேற்றோர் நல்பொருட்களை நடுநிலையின்றி
கா-காக்காமல் அபகரித்தால் குடும்பம்
தே-தேறாமல் குற்றமே பெருகும்.

நடுநிலையின்றி பிறர் நற்பொருட்களை அபகரித்தால் குடும்பத்தில் குற்றமே பெருகும்.

171.
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

172. வெஃகாமை-திருக்குறள்-கரந்துறையில்.

172. பெருகுது.

பெரு – பெரும் பயன் விரும்புவோர்
கு – குடிப்பழியாகும் செயல்களை நடுநிலையின்றி
து – துணிந்து செய்ய அஞ்சுவர்.

நடுநிலையின்றி பெரும் பயன் விரும்புவோர்
பழியுண்டாகும் செயலை செய்யஅஞ்சுவர்

172
படுபயன் வெஃகிப் பழிப்ப்டுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.

173. வெஃகாமை-திருக்குறள்-கரந்துறையில்

173.சுகமது.

சு-சுகமான மற்றின்பம் பெறுவதை தவிர்த்து
க-கற்றறிந்த அறனுடையோர் ஆகாதவைகளை
ம-மறுத்து அறனையே
து-துணையாக கொள்வர்.

மற்றின்பம் பெறுவதற்காக நல்வினைகளற்றவற்றை
அறனுடையோர் விரும்பி செய்யமாட்டார்.

173.
சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

174. தமது புலமே

த-தமக்கு இல்லாமையிலுள்ள சூழலிலும்
ம-மறந்தும்
து-துயர் என கருதாது தம்

பு-புலன்களை வென்ற குற்றமற்ற
ல-லட்சியவாதிகள்
மே-மேலான பிறர் பொருளை விரும்பார்.

இல்லாமையெனினும் புலன்களை வென்ற குற்றமற்றவர் பிறர்பொருளை விரும்பார்.

174
இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

175.வெஃகாமை-திருக்குறள்-கரந்துறையில்

175. அது எது?

அ-அகன்ற அறிவின்
து-துணையால் என்னபயன்

எ-எல்லோரிடமும் அறிவற்ற
து-துன்பமுறு செயல்கள் செய்வதினால்?

எல்லோரிடமும் அற்ப செயலில் ஈடுபடுவாரானால்
பரந்த அறிவிருந்து என்னபயன்?

175
அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

176. வெஃகாமை-திருக்குறள்-கரந்துறையில்

176. அவாவி

அ-அறநெறியில்
வா-வாழ்பவர்களும் பிறர் பொருளை
வி-விரும்பினால் குற்றநெறி சிந்தனையால் கெடும்.

அறநெறியுடையோரும் பிறர்பொருள் விரும்பினால் குற்றநெறிகள் சூழக் கெடும்.

176.
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப பொல்லாத சூழக் கெடும்.

177.வெஃகாமை-திருக்குறள்-கரந்துறையில்
177.வெஃகாதே.

வெஃகா-வெஃகிந்து அடுத்தவர் பொருளை விரும்பி
தே-தேக்கி அனுபவிப்பது நன்மை தராது.

(வெஃகி-கவர்ந்து இழுத்தல்)

அடுத்தவர் பொருளை கவர்ந்து அனுபவித்தல்
பாவத்தின் பயன் நன்மைதராது.

177.
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் வினைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்.

178. வெஃகாமை-திருக்குறள்-கரந்துறை

178. அஃகாமை எது

அஃகா -அஃகாமல்(சுருங்காமல்) செல்வம்
மை -மையமாக பெருகுவதற்கு

எ-எவரது பொருளையும்
து-துணையாக பெறாமல் இருப்பதே ஆகும்.

சுருங்காத செல்வம் யாதெனில் பிறர்பொருளை
விரும்பாதிருத்தலே ஆகும்.

178.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

179. வெஃகாமை-திருக்குறள்-கரந்துறையில்

179. தகுதி அது

த-தரமான நல்வினையும்
கு-குணமும் அறிவும் உடையோரிடம்
தி-திறமை கூடி

அ-அவ்வகையுடனே செல்வமும்
து-துணை நிற்கும்.

நல்வினை அறிந்த வெஃகா அறிவுடையோரிடம்
திறமையறிந்து செல்வம் சேரும்.

179
அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு.
180. வௌவாதே;

வௌ-வௌவக் கருதமால் இருந்தால்
வா-வாழ்வில் மிகப் பெரிய
தே-தேர்ச்சியைத் தரும்.

(வௌவல்-பிறர் பொருளை அபகரித்தல்)

பிறர் பொருளை வெஃகின் வாழ்வில்
பெருமிதத்துடன் வெற்றியைத் தரும்.

(வெஃகின்-விரும்பாதிருப்பின்)

180.
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.

181. புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்

181. அவலமா

அ-அறம் கூறாமல் அல்லவை செய்யினும்
வ-வசைபாடி புறங்காறாமல் இருப்பவன்
ல-லகுவாக
மா-மாபெரும் இனிமையாக சூழ்நிலை அமையும்.

அறத்தை பேசாமல் தீமையை செய்தாலும்
பிறரை புறங்கூறாதவர் எனில் இனிமையாகும்.

181
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது.

182. புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்.

182. நலமே தீதே.

ந-நல்வினைகளின்
ல-லட்சியம்
மே-மேன்மை எனிலும், புறங்கூறின்

தீ- தீவினைகளால்
தே-தேய்ந்தழிந்து பொய்யாகி நகைப்பாகிவிடும்.

புறங்கூறினால் நல்வினையழிந்து சிதைந்து
பொய்யாகி நகைப்புக்குரியதாகி விடும்.

182.
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

183.புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்

183. ஆவது

ஆ-ஆக்கமான அறம் மேன்மையுரும்.
வ-வழக்கமாக பொய்யினை
து-துணிவோடு புறங்கூறி வாழ்தல் சாதலேயாகும்.

புறம்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தல் சாதலே
அறம் என்றும் ஆக்கம் தரும்.

183
புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.

184. புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்

184. பேசாதே

பே-பேசும் போது கண் முன் அறிவுரை கூறிடினும்
சா-சாடும் போது மறைவில் எம்மொழியிலும்
தே-தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டாம்.

கண்ணெதிரே நன்கு பேசி பின் இல்லாதபோது
அவரை இகழ்ச்சியாக பேசாதே.

184.
கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.

185. புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறை.

185. நீதி பேச

நீ-நீங்கள்
தி-தினம் நல்வினை

பே-பேசுபவரின் உள்ளத்தை புறங்கூறுவதிலும்
ச-சமநிலையற்ற கருத்துக்களின் மூலம் அறியலாம்.

அறக்கருத்து சொல்பவரின் நெஞ்சத்தை புறங்கூறும் புன்மை(இழிவு)சொல்லினால் அறியலாம்.

185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும்.

186. புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்

186. அலசி ஆய

அ-அடுத்தவரை பழி கூறுபவன்
ல-லட்சணம், அவனுடைய
சி-சிறப்பியல்புகளை பேசுவதை

ஆ-ஆராய்ந்து பார்த்தால்
ய-யதார்த்தமாக அப்பழியே அவர் மேல் சுமத்தப்படும்.

பிறன் பழி கூறுவோனின் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும்.

186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்

187. பக நகுக.

ப-பகையாளர்களிடமும்
க-கலந்து உறவாடாமல் பிரிப்பவர்கள்

ந-நண்பர்களிடமும்
கு-குறை சொல்லி
க-கலந்துறவை மேற்கொள்ளாதவராகவே இருப்பர்.

புறங்கூறிச் சொல்லி விலகப் பண்ணுபவர்
நட்பு மேற்கொள்வதை அறியாதவரே.

187
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

188. புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்.

188. மரபு யாது ?

ம-மற்ற நண்பர்களிடம்
ர-ரக வாரியாக குற்றம் சாட்டி இகழ்ச்சியை
பு-புரிவதையே இயல்பாக கொண்டவர்கள்

யா-யாதொரு அயலாரிடம்
து-துணையாக என்ன செய்வாரோ?

நண்பர்களிடம் குற்றம் காணும் மரபினர்
அயலாரிடம் என்ன செய்வாரோ?

188 .
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

189. புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்

189. வையக சுமை

வை-வையக நல் அறனை
ய-யதார்த்தமாக தாங்கும் பூமி
க-கடிந்து சொல்லும்

சு-சுடு சொல்பவனை, பூமி
மை -மையமாக கருதி அறனென பொறுக்கும்.

அறனை காக்கும் பொருட்டு வையகம் புன்சொல்லை சொல்லுபவனை பொறுத்துக் கொள்ளும்.

189
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை.

190. புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்

தீதாகுமா

தீ- தீமையின்
தா-தாக்கம் உண்டாகுமோ அயலார்
கு-குற்றத்தை தம் பிழை என
மா-மாறாக காணமுடியும் உயிருக்கு.

அயலாரின் பிழையை தமதாக காண்போமெனில்
தீமையுண்டோகுமோ நிலைபெறும் உயிருக்கு.

190.
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

191.
பயனில சொல்லாமை-திருக்குறள்-கரந்துறையில்

191. பலரது நலமா

ப-பல
ல-லட்சியமற்ற சொற்களை
ர-ரசிக்கும் படி சொன்னாலும்
து-துஷ்டனாக

ந-நன்மையற்றவைகளை சொல்லுபவன் என
ல-லட்சியமுடையோர் அனைவராலும்
மா-மாண்பின்றி இகழப் படுவான்.

பலர் வெறுக்கும் பயனற்ற சொற்களை
சொல்லுபவன் பலராலும் இகழப் படுவான்.

191.
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப்படும்

192. பயனில சொல்லாமை

192. நலமே இலது-

ந-நன்மையற்ற
ல-லட்சியமற்ற சொற்களை
மே-மேன் மேலும் சொல்லுதல்

இ-இன்புறும் நண்பர்கள்கூட
ல-லட்சிய இல்லாத செயல் எனக் கருதி
து-துன்புற்று தீதென விலகிடுவர்.

பலனில்லாதவைகளை பலரிடம் சொல்வது நீதியற்ற
செய்தலை நண்பரிடம் செய்வதைவிட தீமையாகும்.

192.
பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது.

193.
பயனில சொல்லாமை-திருக்குறள்-கரந்துறையில்

193. நீதி இல

நீ-நீதியற்றவன் என அறிவது
தி-தினமும் அவன் சொல்லும்

இ-இயல்பிலே பயனற்ற சொற்களை
ல-லட்சியமின்றி சொல்லும் சொல்லாகும்.

நீதியற்றவன் எனஅறிவது பயனற்ற சொற்களை
விரிவாக சொல்லும் உரையாகும்.

193
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.

194.
பயனில சொல்லாமை- திருக்குறள்-கரந்துறையில்

சேத நயமே

சே-சேராத பயனற்ற சொற்களை
த-தரமற்ற ஒருவன் பேசுவானேயானால்

ந-நன்மைகளில் இருந்து விலகி
ய-யதார்த்தமான நீதி கூட
மே-மேன்மையற்றதாகி விடும்.

பலரிடத்தும் பயனற்ற பேச்சு விருப்பமற்று
நீதி இல்லாமை ஆக்கிவிடும்.

194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.

195.
பயனில சொல்லாமை-திருக்குறள்-கரந்துறையில்

195. சீரமை

சீ-சீராக இனிய இயல்புடன்
ர-ரசித்து இனிமையாக பயனற்றவற்றை பேசினால்
மை-மையமான நன்மதிப்பும் அகலும்.

பயனற்றவைகளை சொல்பவரின் சீர்மை இனிய இயல்புடையவரின் சிறப்பும் நீங்கும்.

195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்.

பயனில சொல்லாமை-திருக்குறள்-கரந்துறையில்

196. பதராத

ப-பயன்
த-தராத சொற்களை
ரா-ராசியான தாய் மொழியிலே கூறினாலும்
த-தன்மையற்ற சொல்லை சொல்பவர் பதர் என்போம்.

பயனிலா மொழியிலே சொல்பவனை மனிதனல்ல
மக்கள் பதர் என்பர்.

196
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.

197.
பயனில சொல்லாமை திருக்குறள்-கரந்துறையில்

197. நீதி சாரா

நீ-நீதியற்ற சொற்களை சான்றோர்
தி-திறம்பட கூறினாலும்.

சா-சால்புற்றோர் எந்த வகையிலும் பயனற்ற
ரா-ராசியற்ற சொற்களை சொல்லாமை நன்று.

சான்றோர் இனிமையற்றவற்றை கூட சொன்னாலும்
பயனற்றவற்றை சொல்லாதிருத்தல் நல்லது.

197
நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

198.
பயனில சொல்லாமை-திருக்குறள்-கரந்துறையில்

198. அருமை இல

அருமை-அரும்பயன் ஆராயும் அறிவினோர் இலக்கு

இ-இல்லாதவைகளை எம்மொழிகளிலும்
ல-லட்சியமற்ற சொற்களை சொல்லமாட்டார்.

அரும்பயனை ஆராயும் அறிவுடையோர் பயன்
தராத சொற்களை சொல்லமாட்டார்.

198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

199.
பயனில சொல்லாமை-திருக்குறள்-கரந்துறையில்

199. மாசு

மா-மாண்புடையோர் பயனில்லாத
சு-சுகமற்ற சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்.

மாண்புமிக்க அறிவுடையோர் பொருட்பயனற்ற
சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்.

199
பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீரந்த
மாசறு காட்சி யவர்.

பயனில சொல்லாமை-திருக்குறள்-கரந்துறையில்

200. பேசுக

பே- பேச வேண்டிய பயனுடைய சொற்களை
சு-சுத்தமாக அறிந்ததை
க-கற்றதை பகிர்க,சொல்லாதே பயனற்ற சொற்களை.

பயனுடைய சொற்களை சொல்லுக பயனற்ற
சொற்களை சொல்லாதே.

200
சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்.

201. தீவினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்

201. தீய செயலாகுமே

தீ-தீவினையாளர்கள்
ய-யதார்த்தமாக தீயவை

செயலாகுமே-செய்ய அஞ்சார்; மேலோர் செய்ய அஞ்சுவர்

தீவினையாளர் தீய செயல் அஞ்சார் மேலோர்
பாவச்செயல் செய்ய அஞ்சுவர்.

201.
தீவினையார் அஞ்சார் விழுமியர் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

202. வினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்

202. தீயவை

தீய-தீய செயல்கள்
வை- வையகத்தில் துன்பமானதால்
தீயைவிட அஞ்சப்படும்

கொடிய செயல்கள் துன்பமானதால்
தீயைவிட அஞ்சப்படும்

202.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

203. தீவினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்

203. தலையாய

தலை-தலையாய அறிவு
யா-யாதெனில் பகைவர்க்கும் தீய செயலை
ய-யதார்த்தமாக கூட செய்யாதிருத்தலாகும்.

தீய செயலை பகைவர்க்கும் செய்யாதிருத்தலே
தலையாய அறிவாகும்.

203.
அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

204. தீவினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்

204. நினையாதே

நினை-நினைவு மறந்துக் கூட கேடு
யா-யாதொருவருக்கும் செய்யாதிரு, செய்திடில்
தே-தேர்ந்தெடுத்து அறமே கெடுதியுண்டாக்கும்.

மறந்தும் யாருக்கும் கேடு செய்யாதே செய்திடில்
செய்திடும் அறமே கெடுதியாகும்.

204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

205. வினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்

தீய இல

தீய-தீய செயல்கள் வறுமை என்பதற்காக செய்யாதே;

இல-இல என செய்தால் மீண்டும் வறுமை நிலையே.

இல்லையென்பதற்காக தீயவை செய்யற்க செய்தால் மீண்டும் வறுமை நிலையாகும்.

205:
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.

தீவினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்

206. தீ பகுதி

தீ-தீமை

ப-பக்கத்தில் வர வேண்டாதவன் எந்த
கு-குறுகிய வழியிலும் தீயவை செய்யாதிருப்பது
தி-திடிரென கூட மற்றவர்களிடம் செய்யாதே.

தீமை தன்னைருகே வர விரும்பாதவன்
தீவினைகளை மற்றவர்க்கு செய்யாதே.

206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

207. தீவினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்

207. எது பகை

எ-எவ்வுளவு பெரிய பகையுடையோரும்
து-துணைபுரிந்து தப்ப இயலும்.

பகை-பகையுடைய தீச்செயல் தொடர்ந்து கொல்லும்.

எவ்வுளவு பெரிய பகையுடையோரும் உய்வர்(தப்புவர்)
செயல் பகை வீயாது(தொடர்ந்து) நின்று கொல்லும்.

207
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

208. தீவினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்

208. தீய கெடு

தீய-தீய செயலர்களுக்கு அழிவு நிழல் போல
கெடு-கெடுதலாகி தொடர்ந்து வரும்.

தீய செயலர்களுக்கு கெடுதல் நிழல் போல வீயாது(தொடர்ந்து) பற்றும் தன்மையாகும்.

208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
209. தீவினை அச்சம்-திருக்குறள்-கரந்துறையில்

209. தமது பகுதி

த-தன்னை என்றும் காதலிக்கும்
ம-மனித நேயம் மிக்கவரானாலும்
து-துன்பம் தரும் சிறு

பகுதி-பகுதி தீவினையைக் கூட
துன்னற்க(விட்டொழிக)

தன்னையை காதலனாக நேசித்தாலும் சிறிய தீய
செயலையும் முற்றிலும் விட்டொழிக.

209
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.

210. தீவினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்

210. கேடு அறிக

கேடு-கேடில்லாதவன் நன்கு வாழ்வதை
அறிக-அறிவது தீயவினை செய்யமாட்டான் என்பதே.

அருங்கேடன் வாழ்வதை அறிவது தீவினை
செய்யாமாட்டான் என்பதேயாகும்.

210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

211.ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்

211. கை உதவி

கை-கைம்மாறு கருதாது உதவி செய்யவும்.

உ-உலகுக்கு தம் கடமையென
த-தரும் மழைக்கு
வி-வியந்து என் செய்யும் இந்த உலகம்

பிரதிபலனை எதிர்பார்த்து உதவி செய்யாதே.
வளம் தரும் மழைக்கு என் செய்யும் இவ்வுலகம்.

211
கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ வுலகு.

212. ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்

212. ‘தமது உதவி’

த-தமது முயற்சியினால்
ம-மக்களில் தகுதியுடையோர்க்கு பொருள்
து-துணையாக அமைவது

உ-உதவியை
த-தகுதியுடையோருக்கு
வி-வியாபித்து வழங்குவதற்கே.

முயற்சியினால் பொருள் பெறுவோர்க்கு
அமைவது தகுதியுடன் வழங்குவதற்கே.

212.
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

213. ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்

213. உதவி அரிதே

உ-உலகத்தில் வேறெங்கும்
த-தரமாக கொடுக்கும் பெறும்
வி-விதத்தில் உதவி செய்வதை காண்பது

அரிதே-அரிதே.

பொது நலனே பெரிது; வானுலகத்தும்
பெறுதல் கொடுத்தலும் அரிதே.

213
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

214. ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்

214. உலக ஒருமை

உ-உலக நடை அறிந்த
ல-லட்சியத்துடன்
க-கடமை புரிகிறவன்

ஒரு-ஒரு உயிரோடு கூடி வாழ்பவன்; மற்றவனை
மை-மையமாக இறந்தவருள் வைக்கப்படும்.

ஒத்தது(உலக நடை) அறிபவன் உயிர் வாழ்பவனாகும்
பிறன் செத்தாருள் வைக்கப்படும்.

214
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

215. ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்

215. உலக நலமா

உல -உலக நலத்தை விரும்பி
க-கற்றறிந்தவன்

நல- நல்ல நன்மையுடன் நீர் நிரம்பிய குளம் போல
மா-மாபெரும் செயல்களில் செல்வனாவான்.

ஊருணி நீர்நிரம்புவது போல உலகநன்மை
கருதுபவன் அறிவுடன் செல்வந்தனாவான்.

215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

216. ஒப்புரவறிதல்-கரந்துறையில்-கரந்துறையில்

216. நயமது

ந-நன்மை தருகின்ற
ய-யதார்த்தமாக வளரும் உள்ளூர்
ம-மரம் கனிந்து செல்வம் தருவது போல
து-துணைபுரியும் நல்லவரிடம் சேரும்.

மரம் உள்ளூரில் பழுத்து பயன் தருவதுபோல நல்லவனிடம் பொருள் சேருவதனாலாகும்.

216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

217. ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்

217. தகைமை(தன்மை)

த-தரமான மருந்தாக மரம் போன்று
கை-கைமாறு கருதா பெருந்தகையோனின் செல்வம்
மை-மையமாக அனைவருக்கும் பயன்படும்.

மிகுதியான பெருந்தகையோனின் செல்வம் மருந்தாக மரம்போன்று தவறாது பயனுறும்.

217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

218. ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்

218. வசதி இல

வ-வளம்
ச-சரியாக அமையாவிடினும்
தி-திறமையுள்ள ஒப்புரவாளர்(பொது நலவாதி)

இ-இல எனும் நிலையிலும் தம்மை உணர்ந்து
ல-லட்சியத்துடன் உதவி செய்ய தளர மாட்டார்.

வசதி இல்லாத காலத்தும் பொதுநலவாதி
கடமையறிந்து தளராது உதவுவார்.

218
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

219. ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்

219. நலமாகாத

ந-நன்மை செய்யும்
ல-லட்சியமுடைய நல்கூர்ந்தவர்க்கு
மா-மாபெரும் பொது நலன்களை
கா-காத்து அமையாத
த-தன்மைக்கு வருந்துவான்.

செய்வதைச் செய்யமுடியாது வருந்தும் தன்மையே பொதுப்பணி ஆற்றுபவனின் வறிய நிலையாகும்.

219.
நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

220. ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்

220. பொது தகுதி

பொது-பொது நன்மை கருதி கேடு வருமெனில்

த-தன்னை விற்றாவது
கு-குன்றாத நிலையில் அந்த
தி-திறமை பெறத்தக்க தகுதி உடையதாகும்.

பொதுநன்மை செய்வதினால்
கேடு வருமெனில்
அஃதை தன்னை
விற்றாவது பெறத்தக்க
தகுதியை உடையதாகும்.

220.
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.

221. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்

221. ஈவதே

ஈ-ஈவது இல்லாதோர்க்கு கொடுப்பது ஈகை மற்றவை
வ-வரும் என்று எதிர்பார்த்து
தே-தேர்ந்து வழங்கும் தன்மையுடையது.

வறியோர்க்கு உணவு ஈவதே கொடை மற்றவை
பயனை எதிர்பார்க்கும் தன்மையது.

221.
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து.

222. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்

222. யாசி, தீது

யாசி-யாசிப்பது நல்நெறி எனினும். கொளல்
தீது-தீது, உலகமே இல்லையெனினும், ஈதலை நன்று.

நல்நெறியெனினும் கொளல்(ஏற்றல்)தீது மேல்
உலகமே இல்லையெனினும், ஈதலை நன்று.

222
நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

223. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்

223. இலது கலமே

இலது-இலன் என்று சொல்லுவதற்கு முன்பே ஈதல்

க-கற்றுணர்ந்தோரின்
ல-லட்சிய
மே-மேன்மையுடைமையாகும்.

இலன்என்னும் எவ்வம்(துயரம்) முன் கொடுத்தல்
நற்குடிப் பண்புடையோரிடத்தில் இருக்கும்.

223.
இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள.

224. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்

யாசி யாசி

யா-யாசிப்பவர்க்கு வழங்கி அவர் இன்முகத்துடன்
சி-சிறப்போடு ஏற்க்கப்படுதல் நன்று, அஃதில்லாமல்

யா-யாசிப்பவர் இல்லாமல் வாடுவது துன்பமான
சி-சிந்தனையாகும்.

ஏற்றவர் இன்முகம் காணும் வரை
இனியதன்று ஏற்கப்படுதல்.

224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.

225.ஈகை-திருக்குறள்-கரந்துறையில்

225. தவ பசி

த-தமக்கு
வ-வரும் பசியை பொறுத்தல் வலிமை

பசி- பசியை மாற்றுவார் தவ வலிமையுடையோர்.

செய்யவல்லவர்க்கு வலிமை பசி; அப்பசியை
மாற்றுபவர் தவ வலிமையுடையோர்.

225
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

226. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்

226. அது உதவி

அ-அற்றாரின்(பொருள் இல்லோரின்)பசி தீர்க்கும்
து-துணையாவது

உ- உண்மையிலே
த – தரமான பல பொருள்கள் சேர்க்கும்
வி-விந்தையூட்டும் சேமிக்குமிடமாகும்.

அற்றார் மிகுபசி தீர்த்தல் அஃதுஒருவனுக்கு
பொருள் வைப்பிடமாக உதவும்.

226.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

227. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்

227. அவரது பசி

அ-அடுத்தவர்க்கு
வ-வரும்
ர-ரக வாரியான
து-துன்பமான நோய் தீண்டலரிது

ப-பலரோடு பகுத்து உண்ணும்
சி-சிறப்பான பழக்கம் உள்ளவனை.

பகுத்து உண்ணும் பழக்கமுள்ளவனை பசியெனும்
தீப்பணி தீண்டல் அரிது.

227.

பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

228. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்

228. தராத

த-தம்
ரா-ரசிப்பு பொருட்களை வைத்து இழப்பர்
த-தராமலிருக்கும் இன்பத்தையறியா கொடியவர்

கொடுப்பதால் அடையும் இன்பத்தை அறியாதவர் வைத்திழக்கும் தம்பொருளை தராதக் கொடியவர்.

228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்க ணவர்.

229. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்

229. தாமே

தா-தாங்களாகவே தனியராக உண்ணுவதற்காக
மே-மேலும் பொருள் நிரப்புவது
ஏற்பதைவிட கொடியது.

தாமே தனியராக உண்ணுவதற்காக பொருள்
நிரப்புவது, ஏற்பதைவிட கொடியது.

229

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

230. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்
230. தருவது
தரு-தரும் நிலை இல்லை எனும் போது
வ-வருந்தும் சாவும் நிலை கூட
து-துன்பமில்லை இன்பமாகும்.

கொடுக்கும் நிலை இயலாத போது சாதலும்
துன்பமில்லை இன்பமே.

230
சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.

231. புகழ்-திருக்குறள்-கரந்துறையில்

231. இசை அது

இ-இன்பமான
சை-சைகையாகும் உயிருக்கு

அ-அன்புடன் கொடுத்து உதவுவது புகழேயன்றி
து-துன்பமில்லை ஊதியமே.

கொடுத்து உதவுவது வாழ்வு அதுவன்றி
ஊதியமில்லை உயிர்க்கு.

231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

232.புகழ் -திருக்குறள்-கரந்துறையில்

232. அவரவை

அ-அனைத்து நற் சொற்கள்
வ-வரும் நாவில்
ர-ரசிக்க சொல்பவை, இரப்பார்க்கு ஒன்று ஈவாருக்கு
வை-வையகத்தில் என்றும் நிலைக்கும் புகழ்.

உரைப்பவர்(சொல்லுபவர்) சொல்பவையெல்லாம் இரப்பார்(ஏற்பவர்)க்கு ஒன்று
ஈவார்(கொடுப்பவர்க்கு)மேல் நிற்கும் புகழ்

232

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.

233. புகழ்-திருக்குறள்-கரந்துறையில்

233. இது மரபே

இ-இணையில்லாத உலகில்
து-துலங்கிடும்

ம-மங்கா புகழ்
ர-ரசனையுடன்
பே-பேராற்றலுடன் பொங்காது நிற்பதொன்று இல்.

இணையில்லா புகழன்றி அழியாது நிற்பது
வேறொன்றும் இல்லை.

233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்.

234. புகழ்-திருக்குறள்-கரந்துறையில்

234. புகுமே

பு-புகழுடைய செயல்களை
கு-குன்றாது செய்வானெனில்
மே-மேலும் உலகப் புகழ் பெறுவர், புலவரை புகழாது.

நிலைத்து நிற்கும் செயலுக்காக உலகமே
புகழும், புலவரை போற்றாது.

234.
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.

235. புகழ்-திருக்குறள்-கரந்துறையில்

235. ஆவதாவது

ஆ-ஆக்கமிக்கோர் அழிவும்
வ-வரும்
தா-தாமும் இறப்போம் என்ற
வ-வல்லமையையும்
து-துணையாக கொள்வர்; பிறருக்கு அரியதாகும்.

கேடும், இறப்பும் வருமென வித்தகர்
அறிவர் மற்றவர்க்கு அரிது

235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.

236. புகழ்-திருக்குறள்-கரந்துறையில்

236. புகு; விலகு

பு-புகழுடன் தோன்றி
கு-குணத்துடன் நிலை பெறுக

வி-விரும்பும்
ல-லட்சியப் புகழ்
கு-குன்றும் எனில் விலகு.

புகழோடு தோன்றுக அதில்லாதவர்
அத்துறையில் ஈடுபடாதது நன்று.

236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

237. புகழ்-திருக்குறள்-கரந்துறையில்

237. நோவாத

நோ-நோவது ஏனோ?
வா-வாழ வழி வகை செய்யும்
த-தம் முயற்சியானால் புகழ் அடைபவரை

புகழுண்டாக வாழாதவர் தம்மை நொந்துகொண்டு
தம்மை பழிப்பவரே வருந்துவதுஏனோ?

237.
புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.

238. புகழ்-திருக்குறள்-கரந்துறையில்

238. நில வசை

நில-நிலையான புகழ் ஒருவருக்கு இல்லை எனில்

வசை-வஞ்சமே நிலவும்.

புகழ் ஒருவருக்கு நிலை பெறாவிடில்
வையகத்தார் வசை பாடுவர்.

238
வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

239. புகழ்-திருக்குறள்-கரந்துறை

239. புவி இசை

பு-புவியின் வளம் குன்றும்
வி-விளங்குகின்ற

இசை-இசை(புகழ்)இலா யாக்கை(உடல்)
பொறுத்த நிலம்.

குறைஇலா நல்லபயன் குன்றும் புகழ்இலா
யாக்கை பொறுத்த நிலம்.

239
வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

240. புகழ்-திருக்குறள்-கரந்துறையில்

240. வசையாவது

வசை-வசையின்றி
யா-யாதொருவர் புகழுடன்
வ-வளருவதே வாழ்க்கை; புகழின்றி வாழ்வது
து-துன்பத்துடன் வாழ்பவரே.

பழியின்றி வாழ்வாரே வாழ்வார்; புகழின்றி
வாழ்வோர் வாழாதவரே

240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசை
ஒழிய வாழ்வாரே வாழா தவர்.

241. அருளுடைமை-திருக்குறள்-கரந்துறையில்

241. அருமை உடைமை; அழியாது.

அரு-அருள் செல்வமே
மை-மையமான உயர்வுள்ள

உடைமை-உடைமையாகும்

அழி-அழிந்து போகும் பொருட்செல்வம்
யா-யாதொருவருக்கும்
து-துணைபுரியாது.

அருட்செல்வமே செல்வத்தில் உயர்வானது
பொருட்செல்வம் பூரியாரிடமே(இழிந்தார்) உள (இருக்கின்றன).

241

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

242. அருளுடைமை-திருக்குறள்-கரந்துறையில்

242. உதவி யாது

உ-உள்ள நல் நெறியை
த-தரத்துடன் ஆராய்ந்து
வி-விழையச் செய்க

யா-யாவருக்கும் அருளுடையராகி
து-துணையாகும்.

நல் நெறியை ஆராய்ந்து அருளுடயராகுக பலநெறி
ஆராய்ந்தாலும் அதுவே துணை.

242
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை.

243. அருளுடைமை-திருக்குறள்-கரந்துறையில்

243.தீயவை இல

தீயவை-தீய உலகம் புகல்
இல-இல்லை லட்சியமுள்ள அருளுடையோருக்கு

அருளுடைய நெஞ்சினை உடையோருக்கு இருள் செறிந்த தீய உலகம் புகுதலில்லை

243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

244. அருளுடைமை-திருக்குறள்-கரந்துறையில்

244. ஏதுவாக

ஏ-ஏற்ற
து-துணையுடன்
வா-வாழும் மற்றுயிர்களை பேணி காப்பது தமது
க-கடமை என்போற்கு அருளாட்சிமை புரியும்.

மற்ற உயிர்களை பேணி ஆள்கின்றவர்க்கு தீவினையஞ்சும் அருள் பெறுவர்

244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

245. அருளுடைமை-திருக்குறள் – கரந்துறையில்

245. உலக மதி

உ-உரிய அருளுடைய
ல-லட்சிய ஆள்வார்க்கு துன்ப
க-கதியில்லை

ம-மக்களில் காற்றின் இயங்குகின்ற
த-திசை மல்லலே(வளப்பம்) உலக சான்று

துன்பம் அருளில்லோர்க்கு இல்லை வளி(காற்று)
இயக்கமே உலக சான்று.

245
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு
மல்லல்மா ஞாலம் கரி.

246. அருளுடைமை-திருக்குறள்-கரந்துறை

246. அவை தீயது

அ-அருள் நீங்கி அல்லவை செய்வோரை
வை-வையகத்தில்

தீயது- தீயது செய்து நடந்து கொள்பவரென்பர்

அருள்நீங்கி அல்லவை செய்தவரை
பொருள்நீங்கிப் பொச்சாந்தார்(மறந்தவர்)என்பர்.

246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்துஒழுகு வார்.

247. அருளுடைமை-திருக்குறள்-கரந்துறையில்

247. அருளது இலாரது.

அருளது- அருளற்றவர்க்கு அவ்வுலகம்இல்லை
இலாரது- பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாதது போல

பொருள்இலார்க்கு இவ்வுலகம் இல்லதாதது போல அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை.

247
அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லைபொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

248. அருளுடைமை-கரந்துறை-கரந்துறை

248. ஆகுதலாக

ஆ-ஆக்கத்துடன்
கு-குணமுடையவராக
த-தரமான பொருட்களற்றவரும்
லா-லாவகமாக அடைவர்
க-கடமையை செய்தாலும் அருளற்றவர் ஆதலரிது.

பொருளற்றார் ஒருகால் பொலிவுடையவராவர்
அருளற்றார் அருமையாக ஆவது அரிதே

248
பொருளற்றார் பூப்பர் ஒருகால்அருளற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது.

249. அருளுடைமை-திருக்குறள்-கரந்துறையில்

249. அருள் இலாத

அருள்-அருள்
இலா-இல்லாதவனின்
த-தரமான நற்செயலை ஆராய்ந்தால்
தெளிவிலாதவன் கற்றுணர்தல் போலாகும்.

ஆராய்ந்து பார்த்தால் அருளில்லாதவன் செய்யும் அறம் தெளிவிலாதவன் கற்றுணர்ந்ததை போலாகும்.

249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டு அற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

250- அருளுடைமை-திருக்குறள்-கரந்துறையில்

250. மெலியது-மெலியவரிடத்தில் தானே
அருள் உண்டாகும்
வலியவர்முன் தன்னை நினைக்க.

மெலியவரின் முன் தானே அருள் பிறக்கும்
வலியவரிடத்தில் தன்னை எண்ணும்பொழுது.

250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

Featured

Daily Notes

Personality
Today is the day commemorated for Gandhi Birth Day. I have started for my chat on with Daily Notes in this article from today. Popular figures in human being is ever remembered on account of their life time action. Gandhiji is one of the popular figure in 20th century.
Why Gandhiji birthday is being celebrated every year ?
Why is he so popular?
The struggle he faced in his life cycle converted his action into positive affirmative way. The positiveness action with regularity is his way of popularity. A singleman voice is always paving the way for integration. The popular quote noted by Mr. James Allen
‘ Integration is the unified, coherent action for Human Unity.’

நன்று எக்கணமும் வல்லமை பெறும்      நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம்

நன்று எக்கணமும் வல்லமை பெறும் நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம்.

நன்று எக்கணமும் வல்லமை பெறும்
      நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம் .

நன்று நோக்கினில் நாளும் கூடும்
     நன்று செயல்படின் அறமும் ஆக்கமுறும்
நன்று எக்கணமும் வல்லமை பெறும்
      நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம் .

பேரண்டம் பெரும் பொழுது சிறு
      அரங்க கதிரவன்
புவிவளி உயிரக
நீரக சுழற்சி முறை விதைப்பில்
     பரந்து விரிந்த விண்மீன் வரம்பு.

வரம் தரும் பயண நெறிமுறை
     மரபுவழி கூட்டில் மேன்மை பெருகும்
அரசிலும் சிறப்புற வேண்டிய தேவை
   உரசிப் பார்த்து தேர்ந்தெடுக்க ஆட்சிமுறை.

ஆட்சிமுறை குழு உறுப்பினர் தேர்வு
     நாட்டு உடைமை வாய்ப்பில் உண்டு நாட்களிலும் நல்ல உரிமை சேர்க்கும்
     ஓட்டுக்கு மயக்கும் திட்டம் உருபெறுமா?

மலர் போல காக்கும்_காலம்

மலர் போல காக்கும் காலம்       கலர் மாறுபாட்டில் வேறுபடும் காசும்.

தமிழ் பாடி வரும் வரை
நிமிர் இலக்கு இலக்கிய இயல்பு
உமிழ்நீர் சுரப்பி உறுப்பு உறுதியுடன்
அமிழ்தம் பருகி பெருகி வளரும்

வளர் இளம் பருவம் முதல்
தளர் பதிவில் நிரலாக்க மொழி
அளர்(உவர்) சோற்றில் சிறிது சேர்
ஆளர் ஆளுமை வளர்ச்சியில் சிலர்.

சிலர் ஆடும் நடன ஆட்டம்
பலர் ஏங்கி வாடும் வாழ்க்கை
மலர் போல காக்கும் காலம்
கலர் வேறுபாட்டில் மாசுபடும் காசும்.

காசு காகிதம் முதல் ஆளராய்
மாசுபட்ட புவி தளம் வாய்ப்பில்
தூசு பறக்கும் சுழல் ஆளாதார
ஆசுகவி நாவின பாதுகாப்பிலும் சமூகமாட்டும்.

ஓர் இணைப்பு ஒருமைப்பாடு ஒற்றுமை
    ஆர்வத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்.

ஓர் இணைப்பு ஒருமைப்பாடு ஒற்றுமை
    ஆர்வத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்.

காலநிலை மாற்ற விளைவுத் தோற்றம்
     அலகு முறை ஒப்பீட்டு அளவு
வலமிடம் நகர்ந்து மாறும் பொருள்
      பலமிகு வேறுபாட்டில் உருப்படி சேரும்.

சேரும் இடங்கள் மாறிமாறிடத்து காலமுறை
       அரும்பி மலரும் இயற்கை பங்கு
பருப்பொருள் ஊடாடி அருகருகே உறவாடும்
        உருப்பொருள் உருண்டு திரண்ட இயற்பியல். 

இயற்பியல் வருமலை பெருமலை உருவஅலை
   இயல்புடன் உருவமிலா
கலப்புடன்  பெருவெடிப்பு
உயரும் அறிவியல் அனைத்து உயிருக்குமே
     இயல் அமைவு ஓரிடச் சேர்க்கையே.

சேர்க்கை நுட்ப அறிவு உதவும்
  பார்த்து பயிற்சி பெற்ற ஆற்றல்
ஓர் இணைப்பு ஒருமைப்பாடு ஒற்றுமை
    ஆர்வத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்.

உடுத்தி உண்டு மகிழ்வதே இன்பம் நடுநிலைமை சமுதாய பார்வை கொள்.

நடுநிலைமை கொள்

உடுத்தி உண்டு மகிழ்வதே இன்பம்
      நடுநிலைமை சமுதாய பார்வை கொள்.

வீடு உறவு உடைமை யாவும்
      நாடு இனம் மொழித் தொடர்
தேடும் துருவம் துருவி முயலும்
    ஓடும் விலகி படும் பாடு.

பாடுபடும் பாடலுடன் கூறும் அவை
    ஏடுடன் புழங்கும் சொல் கேளீர்
எடுபடும் மேற்பார்வை செயலைத் தூண்டும்
    ஆடும் ஆட்டம் உடுக்கும் உடுப்பு.

உடுப்பில் தோன்றும் தோற்றத்தின் மதிப்பு
     வடு தழும்பு மறையும் மேலும்
ஈடுபடும் தொழில் நுட்ப அறிவு
    மடுவு மலை நீர்நிலத்தில் ஈடுபடும்.

ஈடுபட்டு முயன்றவை தொடர் வாழ்வு
       கடும் உழைப்பில் பெறும் தொகுப்பு
உடுத்தி உண்டு மகிழ்வதே இன்பம்
      நடுநிலைமை சமுதாய பார்வை கொள்.

பண்ணிய ஆரத் திண்பண்டம் பணியாரமானது
எண்ணிய இலக்கு முறை எணினியானது.

பண்ணிய ஆரத் திண்பண்டம் பணியாரமானது
எண்ணிய இலக்கு முறை எணினியானது.

பண்ணிய ஆரத் திண்பண்டம் பணியாரமானது
     எண்ணிய இலக்கு முறை எணினியானது
உண்ணும் பொருட்கள் மாறும் நிலைக்கும்
     எண்ணும் இலக்கு எணினியில்
பெறுமொளி .

பெறும் வரை சுழற்சி நடைமுறை
    ஆறும் அகலும் சொல்லும் அலகுகள்
தேறும் வண்ணமே வணிக விதிமுறைகள்
     ஊறும் தேரும் நீரும் அமைப்பு.

அமைப்பு கொண்ட அகராதி ஆய்வு
    அமைத்து கொள்வதில் நலம் மிகும்
தமையன் தந்தை உறவு முறை
    இமை பொழுதும் சேர்ந்தே இருக்கும்.

இருக்கும் இருப்பு நிலை ஏடும்
     ஊரும் ஊரகப் பார்வை தரும்
பருப்பொருள் சார்பில் உள்ள உருப்பொருள்
     கருப்பொருளே கருதும் கருதுகோளில் விளங்கும்.

Shattering Boundaries: Evolution Casino’s Strategy for Multicultural Gaming in Korea

As a leader in multicultural gaming in Korea, lottoland breaks down boundaries and unites people from different backgrounds to share the excitement of online gaming. Evolution Casino, the top casino in Korea, takes pride in its advanced technology and user-friendly features, which enable players from various backgrounds to enjoy themselves. Whether you prefer roulette, blackjack, or Baccarat, Evolution Casino provides a smooth and mobile-friendly gaming experience that is compatible with desktops, smartphones, and tablets.

The key to Evolution Casino’s success is its dedication to offering a wide range of casino games that suit the needs and inclinations of global gamers. With cutting-edge studios spread across the globe, Evolution Casino aims to please its patrons with a variety of games, including online slots and live casino offerings. Evolution Casino began operations in 2006 and has since grown significantly, with studios throughout Europe, Malta, Pennsylvania, Lithuania, and even the United States.

A fundamental component of Evolution Casino’s multicultural gaming strategy is their rajbet offering, which makes the traditional game of Baccarat accessible to players from a wide range of backgrounds. Evolution Baccarat is a cross-culturally immersive gaming experience that offers players from Korea and other countries an interesting and captivating gaming experience thanks to its user-friendly interface.

Evolution Casino’s top awards, like as the EGR B12B Awards Live Casino Supplier Award, which it has won for two years running, show that its commitment to innovation and excellence has not gone unnoticed. Evolution Casino is a leading online gaming company that consistently sets the bar for quality in the sector by questioning the current quo and pushing the envelope.

To sum up, Evolution Casino’s strategy for multicultural gambling in Korea is dafabet evidence of its dedication to inclusion, diversity, and innovation. Evolution Casino is tearing down borders and building a genuinely global gaming community by giving players from all backgrounds a place to gather and experience the thrill of online gaming. Being the pioneer in online gaming, Evolution Casino is committed to provide its customers the greatest possible service and experience both now and in the future.

Казино Вавада зеркало

Обзор игровых автоматов Вавада

Выбор лучших игровых автоматов в казино Вавада

Игровые автоматы в казино Вавада предлагают широкий выбор увлекательных игр. Вас ждут сотни игр, среди которых каждый сможет найти что-то по своему вкусу.

Преимущества игры в казино Вавада

Играть в казино Вавада выгодно благодаря регулярным акциям и высоким выплатам. Кроме того, на сайте казино предусмотрена удобная система вывода средств и поддержка пользователей 24/7.

Новинки и популярные игры в казино Вавада

Вам доступны все новинки игровой индустрии и любимые классические слоты. Также игроки имеют возможность испытать удачу в розыгрыше джекпотов и получить крупные суммы денег.

Игра в казино Вавада: безопасность и удовольствие

Доверьте свои деньги и время проверенному казино Вавада и наслаждайтесь игрой без риска. Начните играть в казино Вавада прямо сейчас и почувствуйте азарт и возможность большого выигрыша.

https://vavadabonuses.com/

Игровые автоматы в казино Вавада: наслаждение азартом и выигрыши

Регистрация и выбор игр на сайте

Чтобы начать играть в казино Вавада, необходимо зарегистрироваться на сайте и выбрать интересующий вас игровой слот. Вас ждут лучшие игры от ведущих разработчиков и возможность получить крупный выигрыш.

Игровые слоты в казино Вавада приносят игрокам удовольствие от игры и шанс на крупный выигрыш. Выбирайте любую игру и начинайте завоевывать джекпот.

Бонусы и акции для игроков

Игроки казино Вавада могут рассчитывать на разнообразные бонусы и акции, https://welnesbiolabs.com/%d0%ba%d0%bb%d1%83%d0%b1-%d0%b2%d0%b0%d0%b2%d0%b0%d0%b4%d0%b0-%d0%b8%d0%b3%d1%80%d0%b0%d1%82%d1%8c-%d0%be%d0%bd%d0%bb%d0%b0%d0%b9%d0%bd/ увеличивающие шансы на выигрыш. Получайте дополнительные средства для ставок и увеличивайте свои шансы на победу.

Не пропустите возможность участвовать в турнирах и акциях, которые регулярно проводит казино Вавада. Вас ждет большой азарт и возможность значительно увеличить свой выигрыш.

Вывод средств и поддержка пользователей

Игроки казино Вавада могут легко и быстро вывести свои выигрыши благодаря удобной системе вывода средств. Наслаждайтесь своими выигрышами в любое время.

Служба поддержки пользователей казино Вавада всегда на связи и готова ответить на все ваши вопросы. Не стесняйтесь обращаться за помощью.

Новинки и интересные предложения

Не упустите возможность попробовать новые слоты и заработать еще больше выигрышей в казино Вавада. У вас есть шанс найти свою удачу среди новинок.

Узнавайте первыми о новых бонусах и акциях от казино Вавада, https://vortexsourcing.com/%d0%ba%d0%b0%d0%b7%d0%b8%d0%bd%d0%be-%d0%b2%d0%b0%d0%b2%d0%b0%d0%b4%d0%b0-%d0%be%d1%82%d0%b7%d1%8b%d0%b2%d1%8b которые помогут вам увеличить свои выигрыши. Не упустите свой шанс на большой выигрыш и интересное времяпрепровождение в казино Вавада.

Игровые автоматы в казино Вавада

Игры в казино Вавада приносят игрокам большое удовольствие и возможность заработать деньги. Игровые автоматы в казино Вавада предлагают широкий выбор азартных игр. Игроки могут выбирать из множества увлекательных игр.

Регистрация на сайте казино Вавада очень проста и занимает всего несколько минут. Зарегистрироваться на сайте казино Вавада можно всего за пару минут. После регистрации игроку доступны все игры и бонусы.

Бонусная система в казино Вавада радует игроков различными привилегиями. Новые игроки могут получить приветственный бонус при первом пополнении счета. Участие в турнирах казино дает возможность выиграть крупный приз.

Вывод выигрышей в казино Вавада происходит быстро и без задержек. Благодаря надежной системе вывода, игроки могут получить свой выигрыш в кратчайшие сроки. Казино Вавада ценит своих клиентов и предлагает удобные способы вывода выигрыша.

Игровые автоматы в казино Вавада: как играть и выигрывать

Регистрация на сайте казино Вавада

Для того чтобы начать играть в игровые автоматы в казино Вавада, exceltotally.com нужно пройти регистрацию. Для этого на главной странице казино нужно нажать кнопку “Регистрация”.

Выбор игры и размещение ставок

После успешной регистрации на сайте казино Вавада игроку открывается доступ к огромному выбору игр. Игроку нужно выбрать размер ставки и нажать кнопку “Играть”.

Получение бонусов и выигрышей

Игроки могут получить разнообразные бонусы при регистрации и во время игры в казино. На сайте самого казино регулярно проводятся акции и конкурсы с ценными призами.

Вывод выигрышей и безопасность

После выигрыша игрок может выбрать удобный способ вывода средств и запросить необходимую сумму. Казино Вавада предоставляет высокий уровень защиты данных пользователей с помощью новейших технологий шифрования.

Играйте в лучшие игровые автоматы, получайте большие выигрыши и наслаждайтесь азартом в онлайн казино Вавада!

Вопрос психологу онлайн анонимно.

Консультация психотерапевта онлайн без регистрации. психолога авито. На последнем этапе клиент может остаться неудовлетворенным произошедшими изменениями, и тогда процесс придется начинать с первых стадий. С. 12. – 208 с. Связь с родителями до определенного времени необходима. «Я все-таки оптимист и считаю, что люди способны договариваться». Миссией портала выступает создание и развитие сервиса, позволяющего людям проработать свои проблемы с психологом по приемлемой стоимости. Какой характер имеет волнующий вас и вашего ребенка вопрос, в чем кроется причина и как избавиться от нее (в случае, если Ваши переживания оправдались). Психолог срочно онлайн. – это не просто человек, который решил стать психологом, прочитал книги, прошел короткие курсы.

Работа с психологом онлайн. Клиент – за выполнение домашних заданий и активную работу на сессиях. «Я сам разберусь», – идти к психологу или нет, решаете вы. Активно занимаюсь предотвращением самоубийств в Литве – провожу международные тренинги по предотвращению суицидов (ASIST). Низкий интерес к знаниям по психологии проявили представители трех федеральных округов, Психолог анонимно чат. общее число таких Сервисы по поиску психолога.льзователей составляет 30 %. Нейтральный интерес представлен лишь в одном округе, что составляет 10 % пользователей. Вы можете выбрать врача в зависимости от вашей проблемы и свободного времени. Сейчас многие клиенты сами не знают, почему идут ко мне. Визит к психотерапевту, как и все, что связано с приставкой психо-, сильно стигматизирован и демонизирован.

Найти психолога онлайн. Выбрать психолога. Ребенок стал конфликтным, упрямыми, Онлайн сервис психотерапии. чересчур стеснительным или тревожным. Я буду благодарна, если вы напишите несколько слов о том, помог ли мой ответ решить вашу проблему. Подведение итогов. Обсуждение дальнейших отношений Прощание консультанта с клиентом. Они и не должны быть обязательно серьезными – достаточно того, что они причиняют дискомфорт. Мне тяжело, а найти психолога с которым я могу бесплатно по консультироваться, не возможно. Ко мне обращаются, если нужна Онлайн консультация врача психотерапевта. психолога СПб. Поэтому не всегда такие решения приносят успех.

Консультации психологов. семейного психолога. Психолог онлайн консультация цена.и с многолетним профессиональным опытом 10-25 лет. Цель терапии – научить клиента проживать все эмоции так, чтобы они не мешали жить. Погает в самых сложных случаях. Достаточно много людей при первых же проявлениях усталости опускают руки и начинают изо всех сил жаловаться на свои проблемы. Даля и определила «хорошего психолога» – как способного, Онлайн сервис психотерапии. ценимого по внутренним качествам, полезным по свойствам и достоинствам профессионала. Мой бизнес-моя жизнь. Я решил обратиться к Аркадию Кузнецову за помощью. А при увеличении дистанции – в вашем случае, когда вы уехали – Хочу поговорить с психологом.трасть и желание быть вместе возвращаются, снова приходит влюбленность, тянет друг к другу, хочется заниматься сексом, Онлайн сервис психотерапии. хочется близости.

Психолог онлайн консультация в чате. яндекс. Мы находимся по адресу: Нижний Новгород, ул. Помощь Личный психолог онлайн.а при депрессии может осуществляться разными методами. А если захотите лично попасть на прием, с этим проблем не возникнет – почти все лучшие психологи в СПб принимают удаленно и в кабинете. Текстовые консультации в режиме реального времени, в закрытом формате. Не стесняйтесь читать соцсети, смотреть ролики на YouTube, слушать подкасты психолога, к которому хотите пойти. Вместо того чтобы встреАнонимный чат с психологом онлайн.ься со специалистом лично в его кабинете, клиент общается с психологом благодаря техническим средствам: Онлайн сервис психотерапии. по телефону, через видеозвонки, Онлайн сервис психотерапии. текстовые сообщения в мессенджерах или даже с помощью электронной почты. Предлагаемая в дальнейшем практическая работа предполагает первичное освоение наиболее простых вариантов с дальнейшим их усложнением.

Онлайн психолог москва. психолог в чате. Еще узнайте, Онлайн сервис психотерапии. можно ли возобновить беседы, если это потребуется. Наверное, интереснее сейчас рассказать именно про само приложение, про систему онлайн-консультаций, что это такое. К примеру, зарплата педагога-психолога в небольшой государственной школе составит 45-50 тысяч рублей в месяц. Как правило, жертвам насилия не к кому идти за помощью в реальности, и они обращаются к интернету. Наталья Болбас помогает Где найти психолога онлайн. точки соприкосновения с сослуживцами, военачальниками, стать частью большой военной семьи. Важен не только срок, в течение которого ведет практику психолог, но и направления его деятельности. Для начала можно обратиться к рекомендациям друзей, коллег или знакомых, которые уже имели опыт консультации с психологом онлайн.

Психолог консультант онлайн. по переписке. Принцип «Не навреди» подразумевает деликатное отношение к самочувствию клиента и учет рисков и последствий профессиональной деятельности. Якобы так проще выстроить так называемый терапевтический альянс, то есть наладить с человеком контакт и создать доверительные отношения. Бесплатную первую консультацию предлагает и наша служба Сервисы психологической помощи онлайн. помощи. » Если человек говорит, что нужна, то не надо придумывать идеи – просто спросите, Онлайн сервис психотерапии. чем именно можно помочь. Проблемы с ссорами в семье. Для них особенно важен грамотный и своевременный профессиональный взгляд. Пользователю доступна краткая справка об образовании каждого специалиста и специализации.

Частный Онлайн психолог. При первом же вашем требовании, записи должны быть предоставлены. И возможно ли из одной группы перейти в другую? Вместо того чтобы встречаться со специалистом лично в его кабинете, клиент общается с психологом благодаря техническим средствам: по телефону, через видеозвонки, текстовые сообщения в мессенджерах или даже с помощью электронной почты. Но статьи на этих сайтах достаточно рафинированные, Онлайн сервис психотерапии. отредактированные и обезличенные. Поэтому консультант должен быть чутким человеком, владеющим знаниями в области диагностики, коррекции и профилактики эмоциональных нарушений. 3. А психолог не раскроет мои тайны другим людям? Оформите карту и получите «золотой ключик» финансового благополучия!

Помощь психолога Психотерапевт онлайн консультация недорого. чат. Встречающий должен первым представиться клиенту и начать беседу со знакомства. Изменения в оплате труда, условиях работы, графике или формате? Следствием станут вполне прогнозируемые ожидания клиента, что ему дадут Нужен совет психолога онлайн без регистрации.. Есть психологи, которые даже не сами пишут анкеты. Скорее всего, это нежелание исходит из страха. Если же сведения представлены сухо, психолог ограничился биографическими данными и контактной информацией, такого специалиста лучше избегать. Безопасность психотерапевтического процесса также гарантируется профессиональным психологом.

Пообщаться с психологом онлайн. с Онлайн психолог для женщин.ом. Отказывается выполнять назначения врачей, отказывается есть, пить некоторые лекарства, жалуется на множество систем. «Дома и стены помогают». Преимущества печатных, электронных (радио, видео и телевидение) СМИ и Интернета перед устными выступлениями в том, что опубликованная в них информация всегда найдет своего адресата из-за большого охвата читательской аудитории. Встречающий должен первым представиться клиенту и начать беседу со знакомства. В-третьих, Онлайн сервис психотерапии. причиной обращения к психологу могут быть пережитые жизненные ситуации, Онлайн сервис психотерапии. оказавшись в которых люди, могут быть склонные к нервным, психическим, а также физическим заболеваниям и действительно рискуют серьезно заболеть. Чтобы избавиться от постоянных переживаний, так досаждающих ежедневно, нужно провести огромную работу над собой. Но помните, что на онлайн консультации психотерапевт не назначает медицинских препаратов и не ставит диагноз.

Психолог на час. Проблема психологического здоровья личности, живущей в нестабильном, изменяющемся мире, сложных, экстремальных социоэкологических условиях, выступает на первый план в конце прожитого – начале нового, XXI века – века наук о человеке, среди которых и не только, на первый взгляд, консолидирующее место принадлежит психологии. А при увеличении дистанции – в вашем случае, когда вы уехали – страсть и желание быть вместе возвращаются, снова приходит влюбленность, тянет друг к другу, хочется заниматься сексом, хочется близости. А при увеличении дистанции – в вашем случае, когда вы уехали – страсть и желание быть вместе возвращаются, снова приходит влюбленность, тянет друг к другу, хочется заниматься сексом, хочется близости. Бесконечно ускоряющаяся и динамичная жизнь, которая, порой задаёт слишком строгие правила и тенденции Сайты для профессиональных психологов. успеха, не всегда позволяет задуматься о важных вопросах. В случае сложных ситуаций в жизни не забудьте вызвать психолога на дом в Москве и Подмосковье. Медицинский центр психического здоровья и анонимной помощи «Майпсихелс» совместно с Петрухиной Ольгой Сергеевной окажет психологическую Онлайн помощь психолога. каждому клиенту. Нет совместной бытовой жизни и всех прелестей личного контакта – кто когда ходит в туалет, в каком настроении просыпается, какие звуки издаёт во время еды, Онлайн сервис психотерапии. моет ли за собой посуду, любит слушать музыку громко или тихо, предпочитает сериалы или книги, убирает ли за собой,забывает ли купить продукты, как часто хочет секса.

Психолог консультация онлайн. Чтобы избежать неприятных последствий от неразрешенных жизненно важных проблем, повысить эффективность лечения от туберкулеза, улучшить эмоциональное состояние, расширить кругозор, научиться с пользой Сайт для поиска психолога. здоровья проживать кризисные ситуации и, тем самым, повысить адаптационные возможности организма, рекомендуем Вам обращаться к специалистам-психологам, Онлайн сервис психотерапии. которые обладают необходимыми знаниями и большим опытом практической работы. В каких случаях требуется психологическая Онлайн консультация психолога цена.? В этом разделе вы можете написать мне и бесплатно получить конультацию. Выезд Семейного Психолог чат.а на Дом. 3. Обсудите с психологом предпочтительный формат сессии. По словам эксперта, во-первых, важно понимать, что Онлайн психолог в чате. – это человек, работающий с психически здоровыми людьми. Работать психологом онлайн: где и как?

Нужна помощь Онлайн психолог анонимно без регистрации.а. Затем консультант предлагает клиенту расска­зать о том, Онлайн сервис психотерапии. что его волнует, и внимательно, терпеливо и доброже­лательно выслушивает его. ». Или зашел бы в кафе, чтобы познакомиться с подругами. Сервис с психологами онлайн.ы подбора семейных психологов берут в работу ваш запрос и быстро предлагают подходящих консультантов. Для продвижения по карьерной лестнице необходимы амбициозность, целеустремленность и набор лидерских качеств. Скажем, пропавшая картинка – не беда, можно продолжить разговор в аудио-формате. С каждым годом услуг становилось больше и больше, в аренду можно было взять крутую тачку, Онлайн сервис психотерапии. и даже «жениха в брендовом костюме на час» – молодой человек пришел бы в гости к родителям, которые неустанно спрашивают: «Когда уже замуж? Клиент сразу видит, имеет ли тот или иной специалист профильное образование и в каком объеме.

Специалисты психологи. А еще надо быть готовым в начале объяснить детям азы управления в видеоконференции: как включить или отключить звук, как опустить/поднять экран. В среднем психотерапевтическая сессия обходится в 3 часа времени – 2 из них занимает дорога. Иногда в ходе консультации у ребенка выявляются расстройства аутистического спектра, Онлайн сервис психотерапии. которые были не видны родителям. А значит, эта специальность останется одной из самых востребованных. Теперь разберемся с другим списком. Но, если мы понимаем, как работает механизм, то можем влиять на его работу, Онлайн сервис психотерапии. осуществлять настройку и производить ремонт. Услуги могут быть ограничены по времени или доступности, Онлайн сервис психотерапии. но это может быть хорошей возможностью для тех, кто ограничен с финансовой точки зрения.

Псих поддержка.олог Психолог онлайн чат. круглосуточно. Именно поэтому в конце XX века на законодательном уровне принято решение подготовки психологов в большем количестве для их работы в разных сферах жизни общества. Он владелец этой информации. Однако если вы только начинаете работать психологом, о себе лучше заявить на всех подходящих площадках в интернете – так клиенты появятся гораздо быстрее. Специалист поможет справиться с непростой жизненной ситуацией и найти согласие с самим собой. Как проходит психотерапия в нашей клинике? Онлайн сервис психотерапии.-формат помогает психологу наПсихологический чат онлайн.ь работать с клиентами, которым не подходят очные сессии. 20 минут ждала окончания предыдущей Онлайн консультации психолога..

Помощь Спросить психолога. Халва знает, Онлайн сервис психотерапии. как заставить цвести ваше «денежное дерево» в любых условиях: покупать в беспроцентную рассрочку товары более чем в 250 000 магазинов-партнеров на сумму до 500 000 рублей, получать кешбэк до 10% и приумножать сбережения в удобной онлайн-копилке до 15% годовых. В статье разбираем три “больные органа”, вылечив которые, наша самооценка становится здоровой! С какими проблемами люди приходят к психологу? Межличностные конфликты: психолог поможет нам развить навыки коммуникации и улучшить отношения с другими людьми. Я не знаю где мы территориально находились, не знала куда идти… Но, ситуации бывают разными. Расстояние поддерживает любовное напряжение, желание, эротику отношений.

Разговор с психологом. Ещё важно, Онлайн сервис психотерапии. работает ли психолог в медицинском учреждении. Это предусмотрено в утвержденной правительством программе госгарантий бесплатного оказания медицинской помощи на 2024-2026 годы. Многих клиентов волнует Задать вопрос психотерапевту. конфиденциальности. Обсессивно-компульсивное расстройство (ОКР): психическое расстройство характеризуется наличием навязчивых мыслей (обсессий) и повторяющихся действий или ритуалов (компульсий). Психопрофилактика (Дубровина) – это специальный вид деятельности детского психолога, направленный на сохранение, укрепление и развитие психологического здоровья детей на всех этапах дошкольного и школьного детства. В отпуске или командировке вы также сможете продолжить работу. Клиент имеет право обратиться в институт, Консультации психологов. который выдавал диплом психологу, и написать жалобу в этическую комиссию о том, что его взял в работу специалист с неподтвержденной компетентностью.

Психол ок.огия онлайн. Повлиять на убеждения и ценности другого человека – достаточно сложный процесс и сделать это за один разговор тяжело. К врачу сходим, он что-то пропишет от бессонницы, Онлайн психология. выспимся и станет получше. Ответ психолога Светланы Филяевой. Психолог онлайн чат. по семейным отношениям онлайн может потребоваться, если Ваши отношения зашли в тупик, супруги находятся на грани развода. Самое интересное, что страх неудач может быть никак не связан с реальностью. На эффективность удаленной помощи влияют и особенности клиента: его личностные черты, актуальный психоэмоциональный статус, нюансы запроса. Я знаю, как это сделать.

Семейный психотерапевт онлайн. Анонимность. Это можно назвать частным случаем стигматизации. РБК Life разобрался, какие качества необходимы будущему специалисту, где учиться и сколько зарабатывает психолог. СоПообщаться с психологом онлайн.тояние мое улучшилось: кажется, дело было в том, что мне дали хорошенько выговориться – правда, за 10 у.е. А людям, живущим в отдаленных регионах и маленьких городах, Совет психолога онлайн без регистрации анонимно. онлайн-формат позволяет обратиться к таким специалистам, которых просто невозможно найти по месту жительства. Стоит помнить про семьи, в которых до сих пор применяются жесткие методы воспитания, неприемлемые в сегодняшнем мире. Но этот пункт работает не всегда: Онлайн сервис психотерапии. иногда цена остается прежней, потому что психологу сложнее работать онлайн. Расстояние поддерживает любовное напряжение, желание, эротику отношений.

Психолог онлайн анонимно без регистрации сейчас. семейный Психотерапия онлайн. Этот специалист не может быть только профессиональным психологом. Те родители детей, кто уже воспользовался психологическимим Онлайн консультация психолога круглосуточно.ми и услугами, отзываются о работе специалистов проекта. На всех этапах лечения – от момента постановки диагноза до выздоровления, больной человек испытывает серьезные стрессовые нагрузки, которые негативно сказываются на его отношении к лечению, качестве жизни и дальнейшей адаптации в социуме. В социальной психологии эта позиция известна как «подчинения человека» правилу «кнута и пряника», где в роли «кнута» выступает страх, а «пряником» является врожденная потребность обладать чем-либо. Во-вторых, он обучен осознавать и отслеживать свои реакции и не вноСайт с психологами онлайн.ить в конЧат с психологом онлайн.ультацию свои взгляды на жизнь, ценности и страхи. Понять, насколько вам подходит эта профессия, можно на бесплатном онлайн-вебинаре “12 шагов, как стать психологом”. «Надо больше размышлять, чувствовать и говорить.

Бот психолог Психолог онлайн сайт.. Психогигиеническими и психопрофилактическими проблемами в СССР занимаются все врачи, особенно психиатры, гигиенисты и педиатры. То есть надо делать маленькие шаги. Когда люди физически находится рядом, становится возможным более глубокое доверие. 2007 г. – Санкт-Петербургский институт сказкотерапии, сказкотерапия. В разные моменты жизни я проходила собственную личную терапию и профессиональную подготовку как психотерапевт. Коммуникация, умение говорить о сексе до и после, интерес к эмоцоинальному и физическому сотоянию другого – качества хорошего партнера в сексе. Ссоры – признак того, что супруги не настроены на взаимопонимание и поиск взаимовыгодного решения.

Псиальтер. Ведет индивидуальные и семейные консультации, группы, работает с парами. Как в консультировании, так и в психотерапии используются те же самые профессиональные навыки; требования, предъявляемые к личности клиента и психотерапевта одинаковы; процедуры, используемые в консультировании и психотерапии тоже подобны. Концепция различных психологических платформ примерно одинаковая: Онлайн сервис психотерапии. включает в себя подбор и консультацию психолога онлайн в удобном Сайты для поиска психолога. пользователя формате. Вопрос к психологу.ы по практическим и теоретическим аспектам собеседования им задает эксперт-психолог, так что пользователь не рискует быть введенным в заблуждение. Психолог в интернете. всегда работает в контакте с другим человеком, а потому он часто сам нуждаетПоговорить с психологом онлайн анонимно сейчас чат.я в интервизии или супервизии, то есть в обсуждении своих проблем со своим психологом или с коллегами. Автор формулирует свои представления о психологическом здоровье, опираясь на положения мировоззренчески близкого ему экзистенциального подхода, а также идею Б.С. Этот сайт-лидер в подборке профессионалов из области психологии.

Помощь психолога онлайн. Удаленность от клиники. В какой бы точке мира вы не находились, в каком бы удаленном от крупного города населенном пункте вы не жили, удаленная консультация вашего психолога всегда доступна для вас при условии наличия доступа к интернету. В этом разделе вы можете написать мне и бесплатно получить конультацию. «Запомнился случай, как в чат обратилась девочка 16 лет. 80% обратившихся ко мне пар решали свои проблемы за 3-5 посещений. В регионах ситуация немного иная – за услуги придется заплатить от 1 до 3 тысяч рублей. Важно уметь противостоять всем негативным факторам, чтобы не допустить полного разрушения нервной системы. Детально распишите проблему. Вопрос психологу.ы к психологу задаются анонимно, с полным сохранением конфиденциальности.

Психотерапевт дистанционно. онлайн анонимно без регистрации. Наши близкие и знакомые не всегда нас понимают, нередко подводят и расстраивают, Все это сказывается и на нашем настроении, мы спорим и доказываем свою правоту, обижаемся, ссоримся, что ыв конечном итоге отражается на нашем психологическом Яндекс здоровье психолог.. Я могу понять одиночество и никогда не виню клиентов за то, что они мне пишут. И наличие независимого специалиста, которому вы можете выговориться, Онлайн сервис психотерапии. кто в силах помочь вам осознать ваши мысли и чувства, Онлайн сервис психотерапии. и помочь в преодолении кризиса, действительно ценно. Необходимо следить за тем, чтобы вопросы психолога не сбивали клиента с мысли, не вызывали у него раздражения, напряжения, сопротивления. Зарегистрировано Федеральной службой по надзору в сфере связи, информационных технологий и массовых коммуникаций. Психолог для пары онлайн.ом можно работать в частной клинике или в медицинском Анонимный центр психологической помощи.е. Еще один способ сделать психологическую помощь вашим близким доступной – это подарить им сертификат сервиса онлайн-терапии PsyPsy.

Психолог по интернету.

Онлайн сервисы психологов. консультация с психотерапевтом. Принципы и протоколы проведения дистанционных консультаций регламентируются рекомендациями международных ассоциаций. Как это работает? Сформулируйте свою проблему и запишите Ваш вопрос в специальную форму на нашем сайте. Поэтому, может снизиться ощущение контакта и присутствия – таких важных составляющих работы. Записываться на первый прием лучше всего по телефону. Основной метод консультирования – беседа, построенная опре­деленным образом. Один и тот же вопрос: «Что страшнее, Сайт психологической поддержки. чем пойти к психологу», вы поймете сами, когда сможете закончить. Консультация психолога онлайн. с психологом – это первый шаг, который свидетельствует о реальном желании что-то изменить в себе, в своих личных отношениях или в профессиональной жизни, и этот шаг делает данное желание более реальным.

Консультация с психологом онлайн чат. в психологии. Это серьёзно мешает нормальной жизнедеятельности человека. Опасение у участников рынка и остальных экспертов вызывает скорее реализация идеи. Мы выбрали несколько популярных платформ, предоставляющих услуги текстовой терапии, проанализировали их возможности и недостатки и ранжировали по мере возрастания стоимости одного сеанса общения с психологом по переписке. Что делать? Эксперты сходятся во мнении, что стоит пойти к психологу. Конечно, это далеко не все онлайн-ресурсы, где вы можете подобрать психотерапевта. К счастью, в России уже не относятся к психологической помощи как к чему-то постыдному. Если любовь не приносит радости – это аддикция.

Сервис по поиску психологов. по подбору Найти психолога. На приеме у психолога видео.иболее высокий интерес к знаниям по психологии проявляют в таких федеральных округах, как Дальневосточный (115 %), СибирПоговорить с психологом онлайн анонимно чат.кий (112 %), Южный (108 %) и Приволжский (103 %). Если вы желаете – можете получить более подробную информацию о специалисте.Психолог анонимно. вызов на дом прямо сейчас. В результате каждый получает все, что нужно, Психолог онлайн анонимно без регистрации чат круглосуточно для мужчин. и никто ничего не теряет. Людей все больше охватывают страх и паника за свою жизнь, многие оказываются в стрессовых состояниях, которые крайне негативно влияют на здоровье, а со временем могут развиваться в разные фобии. Среди привычных предметов и любимых игрушек он более открыт. Это может быть ответ на один вопрос или продолжающаяся беседа; это может быть по электронной почте, чату, видео или даже интернет-телефону. Там мне сказали, что нельзя просто так взять и начать ходить к психологу.

Псиальтер. Как можно получить дистанционную консультацию? Внимание ребенка удерживать онлайн гораздо сложнее, поэтому групповое занятие необходимо строить более разнообразно. Человек закрыт, его анализаторы не воспринимают то, что окружающие хотят до него донести. Когда партнеры редко видятся, Анонимный чат психолог. то они могут додумать, досочинить, достроить образ «идеального» или желаемого другого. Доход психологов тоже вырос. Избежать кризисных ситуаций невозможно: сама окружающая среда сталкивает людей лбами, приводя к многочисленным конфликтам. И здесь также основополагающим является высказывание В.

Психологическая помощь онлайн. Онлайн консультация психотерапевта. онлайн. Вершина карьерной лестнице профессионал открытие собственного кабинета. Поэтому высыпаться нужно всегда, откладывая дела, которые можно сделать чуть Сайт по подбору психолога.зже. Грандаксин на ночь можно или нет. Классическое оффлайн-образование в ВУЗах, колледжах и университетах. В помощь психологу.ы выбираете себе специалиста, который вам понравился, Психолог онлайн анонимно без регистрации чат круглосуточно для мужчин. назначаете «встречу» и связываетесь на любой удобной для вас платформе в любое удобное для вас и для вашего психолога время. Само здоровье может рассматриваться как условие для успешного достижения человеком намеченных жизненных целей. На этой основе он выбирает техники, позПсихотерапевт в орше.оляющие клиенту самостоятельно определить свои проблемы.

Онлайн психологи консультации чат без регистрации. Онлайн консультация психолога анонимно без регистрации. Взрослый психолог. Консультация с психологом. Консультация психолога психотерапевта. Психолог онлайн платный. может быть полезна, но это нельзя сравнивать с психотерапией. Возможно использование вашего случая как примера, Психолог онлайн анонимно без регистрации чат круглосуточно для мужчин. но которое описано в общих чертах и без имени, чтобы нельзя было идентифицировать личность. Также удаленные консультации с Онлайн психолог анонимно чат.ом будут интересны людям с плотным рабочим графиком. Сами специалисты отмечают, Психолог онлайн анонимно без регистрации чат круглосуточно для мужчин. что россияне перестали считать обращение к ним чем-то зазорным. Психолог онлайн консультация анонимно.ию можно разделить на фундаментальную и прикладную. Не работать с таким запросом. Как сексолог я добавлю, что для девушки эта разница в возарсте может быть и одним из возбуждающих факторов.

Моральная поддержка онлайн. Люди идут к психологу не только тогда, когда все плохо. Гораздо больше. Потому что я уважаю и люблю свое Дело и работаю для Вас на все 150%! 2. Опыт работы. Квалифицированную Психологическая помощь чат. Вам окажет специалист, работающий в области психотерапии и психологии не менее 5 лет. Выбор психологичесЗаписаться к психологу онлайн.ого консультирования по скайп может быть единственным для людей, которые в силу определенных причин не могут покинуть свой дом, или же такое перемещение осложненно, а также если нет дополнительного свободного времени на транспорт. Сценарный анализ и анализ сновидений. Поначалу мне не очень нравилось, потому что сами люди не были к этому готовы. В этом вам может помочь наша статья о том, что такое сюрприз для любимого и как его можно реализовать в жизни – с обоюдным удовольствием для обеих сторон.

Юток психология. 6. Развитие профессиональных навыков и компетентность исключительно важны для специалиста, поэтому он постоянно старается их развить, проходя личную терапию и супервизии (так называются разборы нестандартных ситуаций с более опытными коллегами). Арт-терапевтические техники. Для решения проблемы и развития подростка используется, например, рисование, работа с бумагой, другими материалами. Надеемся, они смогут хотя бы немного помочь! Нужно только отправить заявку. «Позвольте уточнить. Вы сказали … Наталья: Я живу в небольшом городе, где все друг друга знают. Когда за Психологическая помощь чат.ю к другу, Онлайн чат поддержки. а когда к психологу?

Анонимный центр психологической помощи. Если суть проблемы в конфликте с другим человеком (ребенком, партнером), нужно прийти на консультацию вдвоем или семьей. Влюбиться можно имея прочную семью и хорошие отношения с основным партерном. В колледжах больший упор на педагогику, зато в вузах спектр направлений более разнообразный. Сделан вывод о том, что Лучший психолог онлайн.ическое консультирование онлайн в современном мире имеет большие перспективы, так как позволяет решать психологические проблемы с минимальными затратами времени и сил. Моя девушка отправила пост соискательницы: Мне нужен психолог помогите. был студент, который согласится работать за небольшую сумму или даже бесплатно, потому что положение крайне бедственное. К психологу обращаются в 3 случаях: неудовлетворенность жизнью, череда однотипных ситуаций (например, выбор определенного типа мужчин), необходимость разобраться во внутреннем мире. Несут боевое дежурство по противовоздушной обороне, готовят для патрульной, минно-розыскной, поисково-спасательной и розыскной деятельности собак, Психолог онлайн анонимно без регистрации чат круглосуточно для мужчин. реализуют себя в военной медицине, журналистике, достигают вершин в дипломатической службе, радуют своими успехами на спортивных площадках и надежно держат оборону в радиоэфире.

Вопрос психологу онлайн. На одном полюсе работа профессионала затрагивает в основном ситуационные проблемы, решаемые на уровне сознания и возникающие у клинически здоровых индивидов. Характер работы в обеих профессиях частично совпадает, что немного сбивает с толку. Для возвращения к спокойной и безопасной жизни, вам важно изолировать себя от своего мужчины. Давайте разберемся в их отличии и предназначении. Самое свежее направление – разработка компьютерных программ-психотерапевтов. Как показывает международный опыт, эффективность и производительность команды напрямую зависит от атмосферы в компании. Если вы нажмете кнопку «Создать кампанию», то попадете на страницу с настройками.

Сервис по поиску психологов. онлайн психологии. На домашнем обучении подростки Онлайн час с психологом.то перестают соблюдать режим дня. Светлана упорная, она в принципе уверена в своей женственности, неудачи ее расстраивают, но не демотивируют окончательно. По несколько десятков минут в день, и вы уже вполне способны контролировать свои эмоции и легко уходить от дискомфорта. Психолог записаться на прием.ическое консультирование чаще всего бывает краткосроч­ным и включает одну консультацию. Важно понимать, что не каждый готов открыто рассказать специалисту о существующей проблеме в силу ее интимного или конфиденциального характера. Уехала домой и теперь не понимаю как мне себя вести, чтобы вернуть его любовь. Там часто можно найти ответы на нужные вопросы.

Найти онлайн психолога. психолога в москве онлайн. Специалисты Центра МЕНТАЛ отмечают, что психологическое консультирование все чаще воспринимается как норма, эмоциональная поддержка, забота о своем душевном здоровье, а не как признак психических заболеваний. Основной вид услуг, который оказывает психолог – это психологические консультации. Качественно изменить Вашу жизнь. Анонимное общение: если вы стесняетесь поговорить с психологом в офлайне, онлайн-консультация поможет начать разговор о волнующей проблеме, не раскрывая свою личность. Почему пациенты не сбегают от манипуляторов, тех, кто раскрывает приватную информацию, или тех, кто дает неэтичные советы? Всегда можно найти специалиста по приемлемой стоимости. Посмотрите несколько вариантов, задайте вопросы и выберите того, кто подходит вам лучше всего.

Посоветуйте хорошего психолога онлайн. Я очень признательна центру за то, Психолог онлайн анонимно без регистрации чат круглосуточно для мужчин. что нас познакомили с настоящим профессионалом своего дела. Основой методики является доверительное отношение между специалистом и клиентом, которое специалисты Центра умеют быстро налаживать благодаря своему искреннему желанию помочь людям преодолеть психологические трудности. В онлайн терапии и клиент, и терапевт вместе работают ради этого. И на этой почве я все время плакала и устраивала ему истерики. Рассказывали ли вы кому-то о своих переживаниях? Но даже в этом случае начинающий психолог может неплохо заработать. Это особенно удобно для отдаленных городов, где нет психологов, Домашний психолог. или уровень квалификации местных специалистов Вас не устраивает, либо Вы известный человек в своем городе и не можете обратиться к местному психологу (психоаналитику) из-за опасения нарушения конфиденциальности.

Психолог онлайн анонимно без регистрации чат круглосуточно для мужчин. по семейным отношениям Консультирование онлайн. Постарайся облегчить ему эту задачу, написав развернутое сообщение. Происходить беседа может по-разному: Психолог онлайн анонимно без регистрации чат круглосуточно для мужчин. например, в формате «вопрос – ответ», Помощь психолога онлайн анонимно. но для начала вы должны чётко сформулировать и описать свою проблему. В выборку вошли 62 пациента, большинство из которых имели депрессивные симптомы. То есть тем, кто имеет степень бакалавра или не имеет ее вовсе, нужно будет выложить определенную сумму денег и, по-хорошему, приостановить свою деятельность до достижения предписанного законом статуса. Другие площадки «поставляют» психологу клиентов и берут комиссию за сервис либо предлагают каждый месяц платить за доступ. В итоге, Психолог онлайн анонимно без регистрации чат круглосуточно для мужчин. чтобы избежать непредвиденных негативных ситуаций в своей жизни, а именно аффекта, необходимо больше уделять внимания своему психологическому здоровью. Да, над собой работать действительно придется!

Яндекс здоровье психолог. Зачем нужен вызов Помощь психолога онлайн анонимно., Психолог онлайн анонимно без регистрации чат круглосуточно для мужчин. психолог на дом? Спецпроект «ЕГЭ по полной программе» продолжают советы Спроси психолога онлайн.. На ней можно разобрать какой-то конкретный вопрос, рассмотреть варианты решения проблемы. Когда требуется Психологическая помощь москва онлайн. психолога? Семейный психолог. Работает с парами, в том числе и индивидуально. Он будет перевешивать свои проблемы на Вас, т. Другими словами Онлайн психолог чат.ия занимается вопросами причин поведения человека в той или иной ситуации на подсознательном уровне.

Психолог онлайн анонимно. для пары онлайн. Психолог онлайн консультация анонимно.ическое консультирование как профессиональная специализация в международной практике утвердилось с 50-х годов XX века. Теперь в нашей семье гармония и разводиться мы передумали. Оплата консультации онлайн (в отличие от очного консультирования) производится вперед. Подайте заявку с сайта администратору Психологический центр онлайн.а на работу с Психолог онлайн анонимно чат.-психологом. Напряженный трафик транспорта в столице зачастую становится веской причиной отказа человека от посещения специалиста, даже когда он остро нуждается в грамотной помощи. Есть научные специалисты, работающие в образовательных учреждениях и научно-исследовательских институтах. Как правило, психологи работают в детском саду, в школе или в интернате.

Чат с психологом. с психологом онлайн. Важно: советы в рубрике не являются консультацией, если чувствуете серьезную проблему – обращайтесь к психологу. Краткое ознакомление с историей клиента. Разнообразные колледжи, МИТУ, Сибирский федеральный университет, ИМПЭ им. Твой бизнес поплыл и его шатает из стороны в сторону? Дорога туда помогает настроиться, а обратно – уложить внутри себя новый опыт. На наши встречи Вы приходите ко мне таким, каким Вы являетесь на самом деле, а не тем, кем Вы «должны» быть. Нет совместной бытовой жизни и всех прелестей личного контакта – кто когда ходит в туалет, в каком настроении просыпается, какие звуки издаёт во время еды, Психолог онлайн анонимно без регистрации чат круглосуточно для мужчин. моет ли за собой посуду, любит слушать музыку громко или тихо, предпочитает сериалы или книги, убирает ли за собой,забывает ли купить продукты, как часто хочет секса.

Сходить к психологу. Мы собрали инструменты и сервисы для начинающих и опытных психологов, которые помогут вам найти клиентов, коллег, спланировать время, приобрести подходящее оборудование и получить юридическую консультацию. Точно такой же формат с открытой консультацией где отвечает только один специалист, может быть и в открытом виде. Через такой контакт он получит поддержку, дополнительные ресурсы для преодоления беспокоящих его проблем. Современные методики психологии позволяют проводить обследование безопасно и комфортно, новорожденные при этом не испытывают никакого дискомфорта. Действительный Член ППЛ, автор и ведущая обучающих программ для Агрегатор психологов. К нему обращаются, если сексуальная жизнь не приносит удовольствия или вовсе отсутствует. Нет совместной бытовой жизни и всех прелестей личного контакта – кто когда ходит в туалет, в каком настроении просыпается, какие звуЗаписаться к психотерапевту онлайн.и издаёт во время еды, моет ли за собой посуду, любит слушать музыку громко или тихо, предпочитает сериалы или книги, убирает ли за собой,забывает ли купить продукты, как Онлайн час с психологом.то хочет секса.

Е общение с психологом онлайн. Нередко среди живущих вместе матерей и сыновей наблюдается такое явление, Психотерапевт онлайн круглосуточно. как «психологический брак», когда на мальчика возлагаются обязанности мужа, привязанность и включенность матери и ребенка в жизнь друг друга настолько сильны, что оба не испытывают потребности в глубокой связи с другими людьми. » Этот вопрос поможет понять, Психолог онлайн анонимно без регистрации чат круглосуточно для мужчин. какой канал по продвижению услуг психолога лучше работает. Бихевиорально-ориентированное направление в консультировании ставит своей целью изменение поведения человека. Посмотрите, как будет проводиться Анонимная психологическая помощь онлайн чат без регистрации. консультация – обычно доступны чаты в мессенджерах, сессии по видео- и аудиозвонкам. Оказываете ли вы психологическую поддержку детям? Или, может быть, вы все еще сомневаетесь, стоит ли вам с кем-то поговорить, но не уверены, что это является приоритетом для вас прямо сейчас. Не забывайте делать для себя пометки, фиксируйте жалобы клиента – это поможет составить полную картину.

Психолог онлайн консультация отзывы.ия сайты Сайт психологов. Именно такую прекрасную возможность дает Вам онлайн-консультация Помощь психолога онлайн анонимно без регистрации чат., психотерапевта по Skype, WhatsApp и Viber. На сайте Псих поддержка.ологический навигатор можно застрять надолго. Также в нем есть блок с учебными материалами, где можно найти модели действий при стрессовых ситуациях. Как сексолог я добавлю, что для девушки эта разница в возарсте может быть и одним из возбуждающих факторов. 2. Пейте витамин Д, он поможет стойко перенести сложные моменты жизни. Как понять, к кому нужно идти? Важно помнить про инициацию – процесс «посвящения» в мужчины.

Бот психолог онлайн. Возможность в любой момент связаться с терапевтом важна, но лучше ей не злоупотреблять. Причем это становится понятно спустя несколько сеансов. После этого на странице курса будут доступны уроки – лучше сделать закладку, так как в личном кабинете курс не появится. Но это работа над собой и над отношениям. Всё большую популярность приобретает метод текстового консультирования, в связи с чем появляется множество психологических онлайн-сервисов. Он добавляет, что некоторые операции инвесторам доступны исключительно в офлайн-формате. В рамках этого подхода считается, что Онлайн психолог анонимно 24 часа.ические проблемы возникают из-за внешних факторов, которые сам пациент не в силах выявить и исключить или изменить к ним отношение.

Онлайн психолог. Супружеская консультация у Клинический психолог онлайн.а Консультации онлайн психолога., может решить текущую проблему, предотвратить обострение проблем или просто обеспечить “проверку” для счастливой пары, которая переживает переходный период или повышенный стресс. Возможно, есть факторы, вызывающие нежелание работать? Разбираемся, в чем задача психотерапевтических консультаций, что делает психолог онлайн и какая от этого польза клиенту. Коммуникация, умение говорить о сексе до и после, интерес к эмоцоинальному и физическому сотоянию другого – качества хорошего партнера в сексе. Гиппократ предположил физическую природу психических расстройств. Это являетПообщаться с психологом онлайн анонимно.я показанием Сервис для поиска психологов. обращения за Психологическая помощь онлайн круглосуточно.ю к психологу. Все началось с того, Психолог онлайн анонимно без регистрации чат круглосуточно для мужчин. что моя семья заболела ковидом, что повлекло за собой кучу переживаний и мыслей о том, что это приведет к смерти.

Моральная поддержка Психоаналитик онлайн. Ответ психолога Светланы Филяевой. Это включает в себя предоставление объективной и достоверной информации, а также отказ от манипуляций или введения клиента в заблуждение. Оказание помощи медикам и социальным службам в работе с определенными категориями населения (люди с зависимостями, жертвы насилия в семье, терминальные больные и т.п.). Из своей практики психолога могу сказать, что есть две ситуации измены. Здравствуйте. Сын, 15 Лет прогуливал школу, учитель боится, что не сдаст огэ. Для такой коммуникации используют ресурсы электронной почты, Психолог онлайн анонимно без регистрации чат круглосуточно для мужчин. блогов, чатов и программ-коммуникаторов, сохраняющих информацию. У горожан, обратившихся в СППН, есть возможность пройти психологическую реабилитацию длительностью в восемь сеансов.

Онлайн консультация психолога прямо сейчас. чат с психологом. Это важно, потому что психотерапия происходит не только в кабинете, Очная консультация психолога. и задача Консультация психолога онлайн. – дать вам инструменты для реальной жизни. Один из самых надежных предикторов хорошего терапевтического результата – это ощущение, что клиенты находятся в партнерстве со своими терапевтами. Где искать психолога. может работать психолог? Под этой агрессией может быть гнев на себя. Это еще занимает два-три года», – объяснила она. Как правило того, кто влюбился, находясь в браке, кто изменил, мучают неопределённость и сомнения. Специалист должен грамотно обнаружить очаг всех негативных эмоций, которые проявляются у пациента, и подобрать оптимальный вариант их устранения.

Агрегатор психологических услуг.

Подбор психотерапевта Психологи онлайн. Тревожность и депрессия (на фоне тревожности человек не может сконцентрироваться и заниматься делами, при депрессии, чаще всего возникает апатия и пропадает интерес к общественной деятельности, пропадает сон и аппетит). Зачастую видеосвязь позволяет видеть только лица друг друга. Она считала такое отношение незаслуженным. Добрый день, встречаюсь с парнем год, но он живет в другой стране. Это во время консультационного процесса психолог может быть учтивым, бережливым к чувствам клиента, Онлайн психолог анонимно чат. понимающим и принимающим его самого и его проблемы. Вызывающими доверие должны быть как манера вести разговор, так и внешность в целом. Консультации психолога онлайн. Почему не стоит бояться?

Онлайн психолог. Моральная поддержка онлайн. психолога. Или же роман на стороне говорит о том, Посоветуйте психолога онлайн. что есть проблемы в отношениях с мужем. Номинант на премию «Золотая Психея» 2019 году. Благотворительную программу также запустил PsyChat: более 100 Онлайн психолог анонимно чат.ов и психотерапевтов сервиса готовы провести бесплатную консультацию и помочь справиться с тяжелым эмоциональным состоянием. Он же сказал ему в ответ: написано: Онлайн психолог анонимно чат. «не хлебом одним будет жить человек, но всяким словом, исходящим из уст Божиих» (Мф. Собеседница указывает на опыт Германии, где очень жестко устроена система работы психологов. Но если психолог тащит «секс» в работу с запросом, который никак интимной сферы не касается – это странно. Юлия – грамотный детский и подростковый специалист.

Онлайн консультация психолога по семейным отношениям. конЧат с психологом.ультация психолога прямо сейчас. Таким образом, Записаться к психологу онлайн. с рождением психологического консультирования для отечественных психологов создалось пространство, Онлайн психолог анонимно чат. открывающее «легальную» возможность психотерапевтической работы, пусть и под другим названием. Современные люди ответственно относятся к своему психологическому состоянию. Приемы самого простого аутотренинга пригодятся подростку не только при сдаче экзаменов. После окончания учебного заведения набиралось опыта в детском саду, но судьба все-таки забросила туда, куда Наталье очень хотелось. Это так же конфиденциально, как и традиционная консультация. Скорее наоборот, грамотное использование онлайн технологий значительно увеличивает эффективность взаимодействия в системе «консультант-клиент». Это было мощное подспорье, Онлайн психолог анонимно чат. и к окончанию факультета у меня был солидный опыт тренинговой работы.

Психолог семейный онлайн. яндекс. Как подготовиться к приему и как проходят консультации онлайн. Опытными специалистами считаются те, кто выслушал множество человеческих историй и успешно помог своим клиентам. Возможность обратиться к психологу через сеть интернет расширяет горизонты: можно выбрать специалиста из другого города, страны, континента. Одним клиентам сложнее раскрыться в домашней обстановке. Бывает и так, что в силу занятости человек просто не может найти в своем расписании достаточно времени для регулярных визитов к психологу. Коммуникация, умение говорить о сексе до и после, интерес к эмоцоинальному и физическому сотоянию другого – качества хорошего партнера в сексе. Где в чужой стране найти русскоговорящего психолога, который поймет все проблемы и переживания?

Как найти онлайн Найти психолога. Еще мы практикуем телеПообщаться с психологом онлайн анонимно.но-ориентированный подход, и есть одна тема, для проработки которой мне нужен личный контакт, не через экран. Если бы я не была автором этой статьи, а случайно наткнулась на нее в ленте новостей – скажем, год назад – я бы вряд ли её открыла. И так же, как разрешить ситуацию с этим студентом можно, только пригласив его в аудиторию, так и с бессознательным – нужно выяснить, чего же оно хочет от нас. Психолог срочно.о-педагогическая помощь ребенку оказывается только с письменного согласия родителей или его законных представителей. Отсутствие всех этих ритуалов может привести к тому, что мозг окажется не готов к погружению в учёбу, Онлайн психолог анонимно чат. и уроки придётся пересматривать несколько раз. Психологи онлайн. также могут оказывать консультационные услуги, но они обычно больше сосредоточены на оценке, чем на лечении. «Скажите, как нам сесть?

Услуги психолога в москве цены. «Это можно назвать как угодно: ленью, прокрастинацией, но по сути проблема в том, что человек занимается чем угодно, но только не своим здоровьем, откладывая это дело на потом. Влюбиться можно имея прочную семью и хорошие отношения с основным партерном. Групповые занятия временно не провожу. СПЕЦИАЛИЗАЦИЯ: общее психологичеСервисы с психологами.кое консультирование, детская психология, психология зависимостей, комплексная патопсихологическая диагностика. Для вызова медицинского специалиста вы можете связаться с нашим консультантом по телефону или отправить заявку с сайта. Бывают ли бесплатные терапевты? Все больше ученых и психологов признают, что версия химического дисбаланса, как причины депрессии, уЧат с психиатром онлайн.тарела, поэтому все больше людей пытаются разобраться с психологическими механизмами возникновения и лечения депрессии, хотят узнать, помогает ли психолог при депрессии, и что представляет собой психологическая Психологическая помощь онлайн. в такой ситуации.

Семейный психолог онлайн анонимно без регистрации. психолог онлайн Психологи консультация. Впечатляет список услуг, предлагаемых на сайте. Назначение врача, критикуется оно или нет, обычно принимается как рекомендация к действию. Рекламировать услуги центра психологических. В зависимости от того, как мы справляемся со стрессом, ментальное здоровье может быть стабильно хорошим, Онлайн психолог анонимно чат. а может и ухудшаться. В условиях распространения коронавирусной инфекции, необходимоЧат с психологом.ти соблюдения мер безопасности, режима самоизоляции или карантина – ежедневный уклад жизни множества людей изменился: распорядок дня, питание, сон, покупки, режим работы и общения с близкими, темп перемещений, привычные атрибуты уровня комфорта и безопасности. Важно помнить про инициацию – процесс «посвящения» в мужчины. Также существует идея о том, что просить о помощи могут только слабые люди.

Онлайн психология. психотерапевты. Платные психологи зачастую уже имеют немалый опыт работы в данной сфере, объяснила Морозова. Это не реклама, а признание в любви. Кроме того, он будет наблюдать за вашим состоянием и, если тревожные мысли не уйдут, сменит методиЗапись к психологу онлайн.у работы. Основная задача психолога-консультанта заключается в том, чтобы помочь клиенту посмотреть на свои жизненные сложности со сторо­ны, Онлайн психолог анонимно чат. обсудить с ним те особенности его поведения и межличностных отношений, которые стали источником трудностей. Пищевая зависимость: психологическая зависимость от определенных видов пищи, которая может привести к компульсивному перееданию или анорексии, а также к проблемам с весом и здоровьем. Консультация психолога онлайн анонимно без регистрации. психолога также проводится в случаях, когда пациенту не удается четко сформулировать проблему. Юридические консультации проводят высококвалифицированные юристы, сотрудники юридического отдела Центра.

Услуги психолога онлайн. Ваши темы, переживания и цели – всегда в приоритете. Детский психолог: консультация только для детей? Но это не помогает, и у людей начинают появляться различные фобии, тревоги, панические атаки, Онлайн психолог анонимно чат. депрессии и другие неприятные состояния. И залог того, что секс будет развиваться и выходить на новые уровни. Даже телесноориентированные методики частично выполнимы при таком способе удаленной Онлайн платформа психологической помощи. работы. В этом вам помогут популярные среди россиян интернет-сервисы. Одной из распространенных потребностей людей в специалистах в области психического здоровья является диагностика и лечение психических заболеваний.

Онлайн консультирование психолога. психолог анонимно чат без регистрации для женщин на русском круглосуточно. Если вы спросите друга, что делать в случае измены, ответ будет: «Уйти! В статье обсудим исследование, которое показывает одну из основных причин тревоги и как следствие болезней. Стоит навести справки, Онлайн психолог анонимно чат. в конце концов. Сеансы проходят в комфортной обстановке в удобное для вас время. Например: навели порядок в комнате, протёрли пыль, сходили с друзьями в кино, подготовились к ВПР, Онлайн психолог анонимно чат. выполнили домашнее задание на отлично, помог бабушке перейти через дорогу и т.д. Выделяют неОбщение с психологом онлайн.колько уровней психопрофилактики, каждому из которых соответствуют свои цели и ме­тоды. Если же ребенку уже исполнилось 13 лет, то первая встреча может проводиться только с ним.

Поддержка психолога. В последнее время именно Телеграмм стал лакомым кусочком, я бы даже сказал базой сосредоточения мошенников всех мастей. Целью эмпирического исследования выступает выявление структурных и содержательных характеристик потребности личности в знаниях по психологии (Апреликова, Китова, 2018). Благодаря ей удается предупредить развитие серьезных заболеваний, которые обычно становятся поводом для обращения уже к психотерапевтам и психиатрам. Однако, вопреки ожиданиям, наблюдается все большая готовность к участию в интернет-диалоге как со стороны психологов, так и со стороны потребителей психологических услуг. Суть консультации – дать человеку возможность увидеть причину его проблемы, эти новые знания должны помочь ему двигаться вперед. Что такое лень и как с ней бороться? Средний опыт консультирования – 8 лет.

Где искать Робот психолог онлайн.а. Бесплатный психолог в СПб. Вот так проходит любовь, конечно, для этого иногда нужны годы. Не обязательно говорить о психологе или Анонимный центр психологической помощи.е что-то позитивное – Вы ведь недостаточно знаете об этом, и никто не требует от Вас незаслуженных дифирамбов. Практические задания помогают закрепить материал, способствуют созданию позитивной привычки. ППоговорить с психологом онлайн анонимно.ихотерапия дает возможность с Мне нужна помощь психолога.ю терапевтических методик обнаружить проблему, Онлайн психолог анонимно чат. пережить ее изнутри и найти все возможные решения для изменений в позитивную сторону. 2. Принимает решение оставить прежний метод лечения или скорректировать схему терапии. После каждого блока стоит сделать перерыв на 1-1,5 часа.

Объявление психолога. И конечно, ответим на все Задать вопрос психологу онлайн без регистрации.ы об оплате и функционале платформы. Кроме того, педагоги-психологи, являющиеся также и педагогическими работниками, по закону «Об образовании» и так должны повышать квалификацию не реже чем один раз в три года, добавила Леонова. За это время было накоплено достаточно опыта и проведено немало исследований. Каждый сможет задать самые сокровенные вопросы. Психологическая помощь в москве онлайн. служба «Ковчега»: профессиональные волонтеры-психологи предлагают помощь эмигрантам из России в формате индивидуальных и групповых консультаций. Ключевые слова: онлайн-психотерапия, преимущества Психотерапевт онлайн недорого.-консультирования, сложности онлайн-консультирования. В некотором роде это похоже на неотложную психологическую помощь по телефону?

Помощь психолога онлайн анонимно без регистрации круглосуточно. психотерапевта онлайн. Домочадцы, включая домашних питомцев – за плотно закрытой дверью. Консультант-психолог способен выявить возникающие искажения и скорректировать их, а, когда вы изучаете вопрос самостоятельно, вам может не хватить образования и опыта, чтобы понять написанное. Основные ценности, лежащие в основе этических принципов психологии, Онлайн психолог анонимно чат. включают уважение к достоинству и правам личности, добропорядочность, компетентность, ответственность и неприкосновенность конфиденциальности. Одним словом, изучение климата в подразделении – важнейшая задача, от решения которой зависит многое. Гештальт-терапия направлена на то, чтобы помочь понять человеку его чувства, осознать подавленные чувства и истинные желания. С помощью промокода вы можете получить консультацию от врачей по любым вопросам, связанным с вашим здоровьем. Теперь вы знаете, как выбрать Консультация психолога авито. и сможете найти того, который удовлетворит вашим запросам.

Психолог записаться на прием. онлайн анонимно чат. Патологическая же ревность отличается бредовыми и навязчивыми состояниями. Психическое здоровье определяет, как мы справляемся со стрессом, Онлайн психолог анонимно чат. относимся к другим и делаем выбор. Это повышает качество работы и позволяет следить за их деятельностью. Наткнулся на вашу статью на хабре о недобросовестных психологах и звоночках с набатами. Настоящий профессионал избегает ярлыков, даже после долгого изучения. На первую Получить консультацию психолога онлайн. Поиск психолога онлайн. лучше прийти парой, чтобы психолог мог выслушать и понять обоих партнеров. Психодиагностика позволяет определить, какие психологические интервенции будут наиболее эффективными для конкретного человека.

Онлайн помощь психолога. сервис психотерапии. Онлайн психолог анонимно чат. консультирование может быть не только индивидуальным, но и групповым, как и в реальной психологической и психотерапевтической практике. Помнить, что каждая ситуация многогранна и имеет свои неповторимые особенности. Есть несколько признаков, которые могут указывать на то, что человеку стоит обратиться к Написать психологу онлайн анонимно.. 4. Способность дать объяснение симптомам и проблемам клиента и адаптировать это объяснение по мере изменения обПлатформа с психологами.тоятельств. Сколько консультаций может потребоваться? Можно ориентироваться на правило, что если что-то причиняет страдания или каким-либо образом мешает в ходе повседневной жизни, то следует обратиться за психологической помощью. В апреле 2022 года спрос на услуги Посоветуйте психолога онлайн. вырос на 81%, согласно исследованиям Авито, предоставленным Иваном Чулковым, руководителем маркетинговых проектов «Авито.Услуги».

Ищу психолога. В дистанционном консультировании такой контакт отсутствует. Генетическая предрасположенноПлатформа с психологами.ть к пониженной стрессоустойчивости. Где гарантии, что он не сольёт родителям всё, что было на консультации? Пользователи могут обратиться к педиатру и терапевту – врачи готовы выйти на связь в любое время. К вашей визитке это тоже относится. Когда Наталья впервые переступила порог КПП командования, то сразу поняла – попала домой. И трудности с бизнесом решают сами.

Консультация психотерапевта онлайн. психолога сайт. Тревога в норме помогает нам лучше функционировать, когда нам нужно сделать что-то важное для нас. В этой статье вы узнаете, какие профессии сейчас востребованы и как их освоить после школы. Психолог семейный онлайн. Бесплатно 15 минут выслушает Вас и поймёт какой выход и решение нужно лично Вам. Врачи постоянно повышают квалификацию. Стремление к постоянному профессиональному росту и расширению профнавыков. Нет контактов поддержки нигде и чата. Психика человека – внутренний мир человека, который проявляется в эмоциональных состояниях, установках, целях, суждениях, мотивации, Онлайн психолог анонимно чат. темпераменте, ощущениях, Онлайн психолог анонимно чат. мышлении, навыках поведения, адаптации к окружающей среде и деятельности.

Психолог онлайн консультации. онлайн по переписке. Или же роман на стороне говорит о том, что есть проблемы в отношениях с мужем. На Ваши вопросы отвечают Онлайн психолог чат.и Научно-практического института Семейный психолог онлайн.ии личности, члены Московской научной школы христианской Онлайн психологи анонимно.и, а также выпускники и магистранты факультета Онлайн психолог по переписке.ии Российского православного университета святого Иоанна Богослова. Тренд на всеохватывающую цифровизацию социальных отношений в современном мире активно проникает в психологическую практику. У людей, Онлайн психолог анонимно чат. которые впервые обращаются за психологической помощью, могут быть в ее отношении заблуждения, опасения. Комфорт. Псих помощь онлайн.отерапия не должна усложнять жизнь. Важно! Тревожные состояния, депрессия, зависимости сильно снижают иммунитет человека, Онлайн психолог анонимно чат. его организм становится ослаблен, повышаются риски заражения вирусными инфекциями. Записаться к психологу в СПб онлайн можно буквально в пару кликов, но многое будет зависеть от того, как быстро вы сравните анкеты, остановитесь на оптимальном для себя варианте.

Сайт психологической поддержки.ы психологов онлайн. В сексе приемлемо все, если в паре совершеннолетние и обоих устраивают привила и границы их секса. Договориться о времени персональной консультации по скайпу psy-consult2 можно, заполнив приведенную ниже форму. Дети с пассивным стилем поведения в конфликте не имеют возможности проявить чувство гнева. 1 Что такое психологическое консультирование? Запреты, нарушение социальных установок, реализация фантазий, где нарушаются правила – один из фетишей, мехнизмов, запускающих сексуальное возбуждение. Уехала домой и теперь не понимаю как мне себя вести, чтобы вернуть его любовь. Это очень радует, ведь работа психотерапевта и заключается в том, чтобы помогать людям!

Психолог онлайн круглосуточно. консультирование. А знаешь, почему? Да потому, что мы все разные. Эти принципы обеспечивают основу для этического поведения психологов в различных ситуациях, помогая им принимать решения, которые соответствуют наилучшим интересам клиентов и общества в целом. Вопрос психологу: В последнее время в жизни происходит какая-то полная дичь. Все эти факторы влияют на задержку или невозможность принятия решения об обращении за психологической помощью. Если хочется доступным языком объяснять пользу какого-то продукта, продвигать его на рынке, то твое направление – социальная Онлайн психология. С расстройством как диагнозом нужно обратиться с пстхиатру или врачу-психотерапевту, которые могут назнаАнонимный чат помощи психологической.ь, наряду с терапией, медикаментозное лечение. Таких очень мало. За четыре с половиной года моей службы в батальоне был только один такой солдат.

Психолог онлайн.ический чат онлайн. Трудность исследуемой тематики состоит в том, что сам термин «здоровье» в менталитете россиян однозначно связан с медициной, а его нарушение – с обязательным лечением у врача, экстрасенса, ясновидящего, других различных направлений традиционной и нетрадиционной медициной. 1. Внимательно слушает нас, чтобы полностью понять нашу ситуацию. Поэтому я прошу родителей дать малышу наушники и не заходить в комнату на время нашей работы. Просьба о помощи – самый трудный шаг. Отдельно нужно узнать, может ли психотерапевт выписывать рецепты на лекарРазговор с психологом.тва, потому что у некоторых врачей на это нет разрешения. 3. Если вы хотите отменить запись на приём, сделать это не позже, чем за день до назначенного времени. Наиболее высокий интерес к знаниям по психологии проявляют в таких федеральных округах, как Дальневосточный (115 %), Сибирский (112 %), Южный (108 %) и Приволжский (103 %).

Консультации с психологом. Переписка с психологом онлайн. с психологом ведется в приложении Telegram. Есть ребята, которые уже на третий день службы чувствуют себя здесь как рыба в воде, Онлайн психолог анонимно чат. – говорит старший лейтенант. Если вы ищете частного психолога в Ярославле, медицинский центр “Ваш Врач” предоставляет профессиональные услуги как для взрослых, так и для детей. Сервис подбора психотерапевтов. психологов онлайн обычно означает платформу или веб-сайт, предоставляющий услуги консультаций с психологами через интернет. Сколько стоят удаленные консультации? Когда будете разговаривать с родителями, Онлайн психолог анонимно чат. не обвиняйте их. Общество (APS). Продвинутый уровень квалификации в США в качестве клинического Советы психолога онлайн. предоставляется Американским советом профессиональной психологии .

Частный психолог. Приоритетом семейной Нужен психолог онлайн.ии является работа над отношениями между мужчиной и женщиной, а также поиск взаимопонимания с детьми. Чтобы повысить мотивацию психолог советует почитать истории из жизни, посмотреть мотивационные видеоролики, найти подходящие книги, связанные с вашей целью. Здравствуйте! скажите, пожалуйста, у меня такая ситуация – я влюбилась в коллегу по работе. 20 до 22, также подойдет суббота с 15, если есть такая возможность». Я рада пообщаться с Вами и ответить на все Ваши Задать вопрос психологу.ы. Отличительное достоинство наших специалистов – специализация в области психотерапии, наличие научной степени в области медицины, стажировка у выдающегося психотерапевта США Джеймса Бюдженталя из Pacific Institute, Онлайн психолог анонимно чат. постоянная практика в известных отечественных и зарубежных медицинских центрах, связанных с психическим здоровьем и психологическим состоянием человека. Чувствуете в себе призвание помогать людям?

%d bloggers like this: