நேயமுடன் பகிர்க!
வையக நிலையறிக!!

நேயமுடன் பகிர்க!
வையக நிலையறிக!!

இளமை துள்ளும் உள்ளம் அள்ளும்
     வளமை பொங்கும் இன்பம் கொள்ளும்
கோளம் கலசம் ஞானம் நாளும்
     நாளம் தாங்கும் திறன் மிகும்.

மிகும் கடமை முடிவில் ஆர்வம்
     தகும் வடிவம் தங்கும் இடம்
வகுக்கும் வகை பெருகும் பொழுது
      பகுக்கும் பருவம் ஆரம்பம் தொடரும்.

தொடரும் யாவும் பெயரளவு உண்டு
      வடம் பிடித்து எழும் சொல்
உடம்படும் மெய் ஞானம் தரும்
      இடமிடும் கொள்வகை பிடிதரும் உள்நிலை.

உள்நிலை உவகை உயிரினம் காக்கும்
      ஆள்நிலை சொல்லும் அளவு எழும்
தாள்நிலை தடம் பதிக்கும் பணி
      வாள்(பூக்கோள்)நிலை வாழும் இறைமை இயற்கை.

இயற்கை பேரெழில் உயிரியக் கொள்கை
      நயம்பட உரைக்கும் பாடலகப் பொலிவு
ஆயகலைகள் பதியும் பாவின வகுப்பு
      நேயமுடன் பகிர்க! வையக நிலையறிக!!


       
   

தமிழ் சொல் ” கண்ணி ” சொல்லி பழகுவோம்

தமிழ் சொல் ” கண்ணி ” சொல்லி பழகுவோம்.

கண்ணி:

பூமாலை, பூங்கொத்து, சூடுகின்ற பூமாலை, தலைமாலை, ஓர்இசைப்பாட்டு, கரிசலாங்கண்ணி.
எனப் பொருள்பட தமிழ் மொழி முறைமை வழிமுறை ஆகும்.


கண்ணி சொல் முறைமை :

கண்ணி எனும் சொற்‌ பொருள்
கண்ணில் பட வேண்டி நாளும்
கண்ணியம் கட்டுப்பாடுடன் அழகுறச் சொல்வோம் ;
கண்ணிமைக்குள் பகிர்ந்து கொள்ள விரும்புவோம்.

விரும்பிய அரும்பொருள் சொல் வழக்கம்
வரும், வரலாற்றில் தொகுக்க முடியும்;
தரும் வகையில் பண்டைத் தமிழினை,
ஊரும் பேரும் அறிந்து கொள்ளும்.

கொள் நினைவில், பழக்கத்தில் ஏற்றிடு ;
‌உள் நுழைய தடுமாறும் ‘டண்’ணகரம்
தாள் தேர்வு மூலக் கொள்கையோடு
நாள் ஒன்றுக்கு தமிழ்சொல் அறிவோம்.

அறிந்து கொள்ளும் நுண்ணுயிர் உணர்வு
கறிவேப்பிலை போல் ஏற்க மறுத்தாலும்
நெறிமுறை தொகுப்பில் சீராக அமையும்
அறிவோம் “றன்”னகர ‘கன்னி’மொழி வேறுபாடு.
லாலாலஜபதிராய்

பாரதியார் 48.
‘லாஜாபதியின் பிரலாபம்’

கண்ணிகள் :

நாடிழந்து “மக்களையும் நல்லாளை யும்பிரிந்து
வீடிழந்திங் குற்றேன் விதியினையென் சொல்கேனே?

ஓர் பாட்டு :

திபதை, பெயர்ச்சொல்.

இரண்டடிக் கண்ணிப் பாட்டு.
இசைப் பாடல் என்பது இரண்டு இரண்டு அடிகள் கொண்ட பாடல் வரிகள் ஆகும்.

இரண்டு இரண்டு மலர்களை வைத்துத்தொடுக்கும் மாலைக்குக்
கண்ணி என்பது பெயராதலின் திபதையைக் கண்ணி என்று வழங்குவர்.

ஊடிழை 2

ஊடிழை 2 (Inter Literariness)

ஊடிழை இயக்கவியல் இலக்கு முறை
நாடிழை நகரும் மெய் இயல்பு
ஆடிழைந்து ஊக்கம் தரும் சொல்
ஏடிலிழைந்து கணிப்பில் கணிக்கும் பழக்கம்.

பழக்கம் உள்ளவர் கவி பாடுவர்
கழகம் கூடி கட்டும் பணி
மழலையர் பேச்சிலும் தொடரும் பதிவு
ஆழம் கொண்ட உரையும் விளங்கும் .

விளங்கும் ஆர்வமிகு கதை கதைக்கும்
நளமிகு மொழி ஆற்றல் ஆதரவு
வளமிகு உரையிடை வழங்கும் வளரும்
தளமிகு மனமது நினைவு மலரும்.

மலரும் முகம் மேலும் சொல்லும்
அலகியல் அறிவுக் கூர்மை நிகழும்
நலமுடன் வாழ வளர் இளம் பருவம்
கலம்(உயிரணு) செல்லும் காலமே வாழ்வு.

காட்டுச் சிலம்பன் பேசும் குருவி

காட்டுச் சிலம்பன் :
பேசும் குருவி

குருவி இனக் குழு உயிரி
தரும் யாவும் பல்லுயிர் வளம்
இருப்பிடம் தேடி பேசும் தங்கும்
வரும் வழியமைதல் அதனதன் செல்லினமே.

செல்லினம் காட்டுச் சிலம்பன், பூணில்
சொல்லுடன் நம் மொழி வளர்க
செல்வகை சொல் வழக்கில் பதிவு;
செல்லும் வழி தேடி வளரும்.

வளரும் வாழ்வில் அளவில் சிறிது,
தளமதில் பறந்திடும் ஏழெட்டினில் திரியும்;
வளமிகத் தேடி வலமிடம் பறக்கும்
இளம் குருவிக்கென சேர்க்கும் உணவு.

உணவு உண்ண ஒலியெழுப்பி உண்ணும்
கொணரும் உணவை பகிர்ந்து கொள்ளும்
கணநேரமும் உதவும், உறவினில் கூடும்,
உணவினை தன்குஞ்சுக்கும் சேர்த்திடும்; பறந்திடும்.

தேவை சேவை

தேர்ந்த வைப்பகமே – தேவை;
சேர்ந்த வையகமே – சேவை.

மலை உள்ள நிலைத் தொடர்
அலை அலையாய் கடல் நீளம்
இலை தழை முளைக்கும் புவி
தலைமுறை தாங்கும் திறன் சிறப்பு.

சிறப்பு வரிசை வரையறை விளக்கும்
உறவு முறை கொள்ளும் வகை
பறந்து சென்று பற்றும் போற்றும்
ஆற அமர வைக்கும் இடம்.

இடம் பாலினத் தேர்வு மூலம்
உடம்படு மெய் ஞானம் பெறும்
கடந்த கால வரலாறு கூறும்
நடப்பு அமைவிடமாக தேடிய வீடு.

வீடு பேறுகள் கொண்ட ஊர்
நாடும் நகரமும் நகர்ந்த கோலம்.
ஆடு, மாடு சொத்தின் மதிப்பு
இடும் பழக்கப் பொறுப்பில் உண்டு.

உண்டு உயிர்த்து உற்று நோக்கு
பண்டு தொட்ட வையகப் பார்வைகொள்.
கண்டு புரியும் ஆற்றலே கல்வி
தொண்டு சேவை சேர்ப்பதே வையகம்.

ப, பா பாவினமாகும் நிலை அறிவோம்!

பா எனும் எழுத்துருக் கோள்
வா வெனக்கோடு கீழிறங்கும் புவி
தா என பதிக்கும் நிலம்
நா ஒலிப்பு மேல் எழும். ‘ |__| ‘

எழும்பட ‘ ப ‘ ஆவெனும் ‘ பா ‘
வாழும் பாரின் நம் நிலை
ஏழு சுழியம் ஆகும் கோடி
நாழி ஆகி விடும் பொழுது.

பொழுதும் பொறுப்பும் கடமையும் உரிமையுடன்
வாழுகின்ற மனித திறன் சேரும்
ஏழுமலை ஊரும் உறவும் தொடர்பும்
இழுக்கும் புவியீர்ப்பு விசையே யாற்றல்.

ஆற்றல் வாய்ப்பு உள்ள பாவினம்
காற்று சீரமைப்பு மூலம் படரும்
சுற்றும் சுடரே பாவின வகை
ஏற்றம் பிறக்கும் நாவிதழ் பாடல்.

பாடல் நாளும் ஒன்றிய ஓசை
நாட வேண்டிய கருத்து உணரும்
நாடறிய பதியும் பதிவுச் செயல்
உடல் உறுப்பின படிவத் தொடர்பு.

தொடர்பு பக்க அமைப்பு உருவகம்
படத்தை கொண்டு பேசும் மகிழும்
இடம் பெற்ற அளவு நிறைவு
தடம் பார்த்த நிலவாழ்வுத் துறை.

‘துறை’ ‘தாழிசை’ தனிச்சொல் பாவினம்
இறை இயற்கை பங்கில் பாக்கள்
உறை விடம் உண்ண உடை
முறைமை வழிமுறை ஒன்றே வகை.

Why அ அ a a Sound in all Languages?

WHY அ ., அ ., A ., A SOUND IN ALL LANGUAGES ?

ஆதி அந்தம் தொடுப்பு

.

ஆதி அந்தம் தொடுப்பு:


பருப்பொருள் கொண்ட பேரண்ட பேரணி
உருப்பொருள் உருப்பெற்று தரும் யாவும்
இருப்பொருளால் விளங்கும் நிலைப்பாட்டில் ஆற்றல்
கருப்பொருள் பற்றும் படரும் சுற்றும்.

சுற்றும் பல முறைப்படி வழங்க
உற்றப் பொருள் நிற்கும் வகை
ஆற்றும் தன்மை உடைமை நிலைமை
ஏற்றுக் கொள்ள முடிந்தவை ஊரும்.

ஊரும் ஊடகங்கள் மூலம் பல
இருப்பு வைப்பு நிலையில் எழுச்சி
பாரும் சுழலும் செயல் இயக்கம்
ஒரு முறையில் தானே சிறக்கும்.

சிறப்பு சேர்த்து பிடித்த அழுத்தம்
ஆற அமர முடிச்சு போடும்
மாறாத மாற்றம் தோற்றம் மாற்றமே
ஏறாமல் இறங்காமல் இயக்கும் விசை.

விசை வரிசை நிலைத்து நிற்க
பசை வடிவ அமைப்பு நிலைப்பு
இசை தரும் இயற்கை சைகை
ஓசை யெழும் ஆக்கம் வேதியியல்.

வேதியியல் பொருட்கள் அனைத்தும் நிகழ்வு
கதிர் வீச்சு சுழல் பந்து
இதில் ஒவ்வொன்றும் சுற்றும் முற்றுகை
ஆதி அந்தம் தொடும் தொடுப்பு.

சொல் தமிழ்! சொல் கோடி – காதொலி

சொல் தமிழ் சொல் கோடி

வானாகி மண்ணாகி புல்லாகி மரமாக
        ஊனாக உயிராக நேசித்த தம்மிதழை
தானாக முன்வந்து தொடர்புக் கொண்டார்
     தானே சிறப்பு கண்டோர்; பெற்றார்.

புதுவை சுப்புரத்தினம் சுப்பையாவின் பாவினம்
     ஏதுவாய் கவிதையில் பதிவில் பாட்டைமைத்து
தூது விடு தத்தை தமிழ்
      காது குளிர கேட்கும் நற்றமிழ்.

நற்றமிழ் வல்லமை நெஞ்சில் நிற்கும்
     பற்றும் மொழி சொல்லும் அளவு
ஏற்றத் தமிழ் அறிந்து கொள்வகை
      ஏற்றுக் கொள்; தொடர் தமிழறிவு.

தமிழறிவு உள்ளத்தார்; வெளிநாட்டிலும் தொடர்ந்தார்
       தமிழ்ச் சொல்லில் பயிலக இயக்கம்
தமிழ் வரலாற்று நிலமெங்கும் பரவட்டும்
தமிழ்நாடுத் தன்னகத்து மொழி தானெங்கே?