மெய்ப் பொருள் காண் -எழு

மெய்ப் பொருள் காண் – ‘ எழு ‘

எழு, நட,ஓடு, என்ற வினைச்செயல்கள்
மனித இனச் செயல்களின் அடிப்படைக் கூறுகளாகும்.

‘ எழுந்திருக்கமாட்டான் போல ‘
என பேச்சு வழக்கில் கூறுவோம்.

பொதுவாக ‘ எழு ‘ என்ற சொல் உத்வேகம் இல்லாதவர்களை உத்வேக படுத்தும் சொல்.

சொல்லின் விளக்கம்,
சொல்லில் அமைவது சொற்களின் சிறப்பாகும்.

எந்த மொழியிலும் மனித சிந்தனயில்
அமைவது தான் எழுத்து.

உயிரை அடிப்படையாக கொண்ட எழுத்துக்களை உயிர் எழுத்து என்கிறோம்.

தமிழில் ‘ எழு ‘ என்ற சொல்லில்
‘ எ ‘ என்ற உயிர் எழுத்தும்
‘ ழு ‘ என்ற மெய் எழுத்துடன்
நம் உயிரை உடலுடன் எழச் செய்கிறது.

அவ்வாறு நாம் எழு என்ற சொல்லை கூறும் பொழுது ‘ உற்றுப்பார் ‘ என்ற சொல் ‘ உத்து ‘ என்றாகி
‘ எழு ‘ என்ற சொல்லில் சேரும் பொழுது ‘ எழு(உ)த்து ‘ என்றாகி நிலைப் பெற்று உள்ளது.

மொழிகளில் உள்ள ஒவ்வொரு எழுத்தும்
எழுதி உள்ளதை,
நாம் உற்றுப் பார்க்கிறோம்;
அறிந்து கொள்கிறோம்.
எழுத்தை உற்றுப் பார்த்து உத்தேசமாக அறிந்து
மூலையில் பதிவு செய்து கொள்கிறோம்.

தமிழ் இலக்கணத்தில் எழுவாய் என்ற சொல் பெயர்களைக் குறிக்கும்.
ஒவ்வொரு பெயரையும் அழைக்கப்படும் பொழுது
நம் ‘ வாய் ‘ இல் இருந்து ‘ எழு ‘ வதனால்,
‘ எழுவாய் ‘ என்கிறோம்.

ஒவ்வொரு எழுத்தும் சொல்லப் படும் பொழுது எழுத்தை அறிந்து உத்தேசமாக நம் அறிவு அடுக்கில் சேர்க்கப்படுகிறது.

‘ எழுந்து நட ‘ என நடப்பதற்கு கூறவோம் .

எழு(உ)ந்து என்ற சொல்லிலும் ‘ எழு ‘ என்ற சொல்லில் ‘ உந்து ‘ என்ற சொல்லாகிய
நகருதலைக் குறிக்கும் என்பதை நாம் அறிவோம்.

எழுந்து அர்த்தத்தில் கூறும் பொழுது எழு(உ)ந்து என்ற சொல்லும் உருவாகி உள்ளது.

‘ எழுச்சி பெறு ‘ என்று கூறுவோம்.
‘ எழுச்சி ‘ என்ற சொல்லை
எழு உச்சியில் எழு(உ)ச்சி என்று கூறலாம்.
ஒரு செயலுக்கு முக்கியத்துவம் பெற வேண்டும் எனில் அந்த உயர்நிலை எழுச்சி பெற்று அத்தியாவசியமாக நிறைவேற்றப்படும் நிலைக்கு
கொண்டு செல்லும்.

‘ எழுமை ‘ என்ற சொல்லில் ‘ எழு ‘என்ற சொல்லில்
‘ மை ‘ என்ற சொல்லுடன் ஒருமை படுத்தும் பொழுது ஒற்றுமை உண்டாகும்.

கிட்டத்தட்ட ஆங்கிலத்திலும் ‘ மை ‘ என்ற உச்சரிப்பு தன்னகத்துடன் ஒற்றுமைபடுத்தும் சொல்லே.

எழுமை என்ற சொல் ஒற்றுமையுடன் உயர்வைக் குறிக்கும்.

‘ எழுமின், விழுமின் ‘
என்ற விவேகானந்தர் கூற்று நமக்கு
உத்வேகம் தரும் சொற்கள்.

‘ எழு ‘ என்ற சொல்லை ‘ மின் ‘ என்றச் சொல்லுடன் இணையும் பொழுது ‘ எழுமின் ‘ மின்னல் வேகத்தில் நமக்கு முன்னேற்றம் தரும் சொல்லாகும்.

இவ்வாறான பல ‘ எழு ‘ என்ற சொல் உண்மையிலேயே உயர்வினைக் காட்டும்.

எழுதல், எழுகை என்ற சொல்லும் மனித வரலாற்றிலும், தமிழ் மொழியிலும் பல்வேறு வளர்ச்சி நிலைகளைக் குறிக்கும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA