நிறை ஊன்றும் உதவும் பகிரும்.

ஆவி சூழலும் வளி மண்டலம்
பாவி மேவிய நாடும் பொருள்
தூவி அங்கங்கே தொடரில் செல்லும்.
கவி பாடும் பாடல் வரிகள்.

இதுவே முதல் முறை தேற்றம்
அதுவும் குறிப்பினில் பயணம் தோறும்
தாது பொருள் விடும் தூது
சூது வாது காதல் தோது.

உயிர் மூச்சு தொடர்பு ஆகும்
பயிர் விதைகள் பதிய வளரும்
ஆயிரம் கோடி நினைவு அலைகள்
பாய்ந்திடும் ஊர்ந்திடும் சேர்த்திடும் காத்திடும்.

உறவே பண்பே நட்பே பலனும்
துறவே துளிரும் துள்ளல் துளியும்
மறவேன் மாட்சிமை பொலிவே பொருந்தும்
ஏறுவேன் இயல்பின் நிகழ்வே இனிது.

குறை கண்டோர் உரை சொல்வர்
துறை பயின்றோர் நிலை அறிவர்
மறை வேதம் யாவும் வசப்படும்
நிறை ஊன்றும் உதவும் பகிரும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: