![](https://i0.wp.com/www.seyalmantram.in/wp-content/uploads/2023/03/img-20230315-wa00018704351324879420351.jpg?resize=300%2C255&ssl=1)
சுழளாதாரம் – நரம்பிழை பயணம்
நுண் உயிரிகள் நீர் பசை
கண் உள்ள ஆக்க நிலை
உண்டு உயிர்த்த உயிரகத் தன்மை
கண்டு பிடித்து கொள்ளும் கலம்.
கலம் நகரும் தர உறுப்பு
தலம் இனிதே நிறைவு செய்யும்
பலம் பெறும் ஆற்றல் மிகும்
நலம் தரும் பண்பாட்டு பாலினம்.
விழிவழி தொடரும் நரம்பிழை பயணம்
அழிவது உறுதி அடுத்த அடுக்கில்
நாழி ஆகி முன் மறுசுழற்சி
அழிவில் உதித்த
உயிர்ப்பில் நுண்ணுயிர்.
பால் ஊட்டும் உயிரினக் கூறுகள்
ஆல் இழை இணைப்புத் தளம்
நல் வாழ்வு முறை பழக்கம்
வல்லமை உந்தவோர் விருப்பம் கொள்வீர்.