1, 42,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனித இனம் கடல்சிப்பி மணிகள் அறிந்து, பழகிய காலம் எனலாம்.
மொராக்கோவில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கடல் சிப்பி மணிகள், லெவன்ட் வரை பரவுவதை பதிந்து உள்ளனர்.
கிட்டத்தட்ட 115,000 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே மனித இனத்தின் தனித்தன்மை பட்டறிவு பெற்று உணர்வுகள் தொடங்கிய காலம் என்போம்.
ஸ்பெயினில் நியாண்டர்டால் மனித இனக் குழுக்களால் மணிகள் கட்டப்பட்டு, கண்டறிந்த காலமாகும்.
142,000 ஆண்டுகளுக்கு முன்பு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மொராக்கோவில் உள்ள ஒரு குகையில் உலகின் மிகப் பழமையான சிப்பி மணிகளைக் கண்டுபிடித்தனர்.
கடல் நத்தை ஓடுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மணிகள், இந்த காலகட்டத்திற்கு முந்தையவை மற்றும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகக் கருதப்படுகின்றன.
இது அந்த கால அடையாள நடத்தை மற்றும் தொடக்ககால மனிதர்களிடையே நிலையான தகவல்தொடர்பு இருந்த நிலையினைக் குறிக்கிறது.
அவை தனிப்பட்ட அலங்காரம் அல்லது தகவல்தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.
இந்த கால கட்டத்தில், அடையாள வெளிப்பாடு,
சமூக தொடர்பு அல்லது வர்த்தகம் போன்றவற்றில் அவற்றின் பங்கு உட்பட, இந்த மணிகளின் நிலையான புரிதல்களை அறிவியல் இயல்பாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த மணிகள், கல் கருவிகள் மற்றும் விலங்குகளின் எலும்புகள் போன்ற பிற கலைப்பொருட்களின் அதே அடுக்கில் காணப்பட்டன.
அவற்றின் உருவாக்கம் மற்றும் தொடக்க கால மனித வாழ்க்கையின் பிற தன்மைகளுக்கும் இடையே ஒரு தொடர்பை பரிந்துரைக்கிறது.
ஹார்வர்டின் டாக்டர் ஏமி இ. கிளார்க் உட்பட பழங்கால மானுடவியல் நிபுணர்கள் குழு, உலகின் ஆரம்பகால சிப்பி மணிகள் குறித்த புதிய செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
மொராக்கோவில் உள்ள பிஸ்மௌன் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட மணிகள் குறைந்தது 142,000 ஆண்டுகளுக்கு முந்தையவை
நமது ஆரம்பகால மனித இன (ஹோமோ சேபியன்ஸ்) மூதாதையர்களுடன் தொடர்புடைய குறியீட்டு நடத்தைகளின் மணிகள் ஒரு குறிகாட்டியாகும்.
அறிவியல் முன்னேற்றத்தில் முடிவுகளைப் படிக்க இது உதவும்.
இவ்வாறான படிமலர்ச்சி நிலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உரையாடலில் வம்பு இல்லாமல் மானுட இயல்பான மனிதர்கள் இதைச் செய்து, தங்களைப் பற்றித் தொடர்புகொள்வதற்கான வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் மேற்கு மொராக்கோவில் உள்ள ஒரு குகையில் இருந்து மீட்கப்பட்ட சிப்பி மணிகள், 142,000 முதல் 150,000 ஆண்டுகள் பழமையானது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த நடத்தை முன்னர் நினைத்ததை விட வெகு தொலைவில் செல்லக்கூடும் என்று கூறுகின்றன.
இது அறிவியல் முன்னேற்ற இதழில் பகிரும் இந்த கண்டுபிடிப்பு, அரிசோனா பல்கலைக்கழக சமூக மற்றும் நடத்தை அறிவியல் கல்லூரியில் மானுடவியல் பேராசிரியரான ஸ்டீவன் எல். குஹ்னை உள்ளடக்கிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவால் செய்யப்பட்டது
சில மணிகளில் ஓச்சர் என்று சொல்லக்கூடிய மண்பாண்டம் செய்த தடயங்களும் இருந்தன, இது பழங்கால மனிதர்களால் பொதுவாக தன்னுடைய அலங்காரத்தில் பயன்படுத்தப்படும் நிறமியாகும்.
இந்த அளவில் மணிகள் வட ஆப்பிரிக்காவில் உள்ள மத்திய கற்காலத்தின் அட்டீரிய கலாச்சாரத்துடன் தொடர்புடையது.
ஏட்டீரியர்கள் வேட்டையாடுவதற்காக, ஈட்டிகளுடன் இணைக்கப்பட்ட கல் புள்ளிகளை வடிவமைத்தனர்.
மேலும் குறியீட்டு பொருள் கலாச்சாரத்தின் முதல் எடுத்துக்காட்டுகள் அல்லது வேறுவிதமாகக் கூறினால், நகைகளை உருவாக்கிய பெருமை நீண்ட காலமாக உள்ளது.
அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் மணிகள் தன்னுடைய அலங்காரம் மட்டுமல்ல. தகவல்தொடர்பு வடிவமாகப் பயன்படுத்தப்பட்டதாக மிகவும் உறுதியாக உணர்கிறார்கள்.
“அவர்கள் அநேகமாக மக்கள் தங்கள் ஆடைகளுடன் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்”
என்று ஸ்டீவன் எல். குன் யுரேகா அலர்ட்டிற்கு அளித்த பேட்டியில் கூறினார்!
இது போன்று நூற்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததையும், மனிதர்கள் தங்கள் உடனடி நண்பர்கள் மற்றும் குடும்பகளுடன் தொடர்புகொள்வதில் ஆர்வமாக இருப்பதையும் அவை காட்டுகின்றன.
ஒரு நொடி பா ‘குழுக்கள்
குழுக்கள் மூல சமூக சேவை
பழுத்த குடும்ப முதுவோர் தொகுப்பு யாவும்
தழுவியவை நிறைவு பெறும் வரை
வழுவு இன்றி நெறிமுறை காக்கும்.
காக்கும் படைப்பில் ஊக்க நடைமுறை
தக்க வைத்துக் கொள்ள முடியும்
ஆக்கச் செயலின் பணிமனை நடப்பில்
மக்களின் மகிழ்ச்சி வழங்கும் தொடர்பு.
தொடரும் அறிவில் ஊன்றிய உணர்வு
படரும் மானிட இயல்புத் திறன்
உடல் நலம் தரும் வாழ்வு
இடம் பொருள் ஆடை அணிகலன்கள்
அணி அணியாய் ஒருமுறை இலக்கு
கணிப்பு முறைத் தோற்ற உரையாடல்
மணி மணியாய் தொகுத்த நிறுவல்முறை
பணியாளர் குறியீட்டு முறையே நகை.
நகைத் தொன்மணிகள் நீலமணி மாலை
நகைச்சுவை நான்மணிக்கடிகை நான்குவகை மணிகள்
பகை விலகி பாங்குத் தொடர்
ஓகைபெருக விளங்கவே மொழிப் பங்கு.