ஊரும் நாடும் நாடிய வாழ்வே.




அன்பின் தொடர் தொகுப்பு வடிவம்
இன்ப நிலையில் உள்ளம் கோயில்
நன்று நின்று தொண்டு நிறுவ
ஊன்றி உதவ உறவு பெறும்.

உங்கள் தளம் பற்பல பயனர் செயல்
இங்கு வாழும் உயிர்கள் யாவும்
பங்கம் இலா அருட் கொடை
எங்கே உள்ளது ஆண்டு ஆள?

ஆளும் பேரும் சேரும் சேவை
நாளும் வளரும் தொடர் பாதை
தோளும் துடுப்பென ஆடிச் செல்லும்
தெள்ளு தமிழும் உயிரணுவில் தொடரே.

வண்டுகள் மொய்த்திடும் வணிகச் சோலையில்
பண்டு பலவாறு மருகிப் பருகும்
உண்டு உறவாக பற்றிடும் பற்று
உணவே மருந்து உட்கொள் முதலே.

மெய்யின் வழியது வழிவெளி மரபு
உய்த்து உணர்ந்து கொள்ளும் காலம்
ஆய்ந்து அறிந்து கொள்ளும் நிலை
பாய்ந்து தொடர்ந்து மேவிடும்உடை.

இருந்து கொண்டு கூடிய கூட்டம்
விருந்து விரும்பி உண்ணும் இடம்
தரும் நற்செயல் தற்குறி போர்வை
ஊரும் நாடும் நாடிய வாழ்வே.




Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: