விண்கல இணைப்பு
மண்டல வனப்பு

விண்கல இணைப்பு
மண்டல வனப்பு

விண்கலப் பிணைப்பு ஆகாய இணைப்பு
தண்ணீர் தகவல் அறியும் சேவை
கண்ணும் கருத்தாய் அனுப்பும் நுட்பம்
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.

வாழும் சூழலுக்கு வெளிச்சம் அளிக்கும்
அழும் குழந்தை உள்ளம் மகிழும்
புழுதி, புயல், மழை, காற்று
‌ பழுதில்லாது செல்லும் செயலுக்கு வழிகாட்டி.

வழிகாட்டி, படிக்க பழக்கம் வழக்கமாகும்
ஊழிக்காற்றறிய உள்ளூர் வணிக சேவைபெற
நாழிப் பொழுதிற்கும் என்றும் தேவை
இழுபறி நிலை இல்லா நிலைப்பு.

நிலை கள ஆய்வுச் செயல்
வலைப்பதிவு காட்சி தரும் வகை
கலைக் களஞ்சியம் நின்று நிலைக்கும்
இலைதழை உயர்வு உயிரணுவின் உயிர்ப்பு.

தமிழ் கணக்கு 7 பட்டய கணக்கு

தமிழ் கணக்கு – 7

பட்டய கணக்கு :

பட்டடை கணக்கு என்பது பட்டய கணக்கு என  மொழிதனில் நிலைப்பட்டு உள்ளது.

பட்டடை பெயர் விளக்கம்:

செயல்பட்டு குறிக்கோளை அடைந்து தொடராக நிலைப்பது மனித நிலைப்பாடு என்போம்.

நிலைப்பாடு செயலுக்கு உண்டானவைகளை பற்றி கணிப்பில் உள்ள பதிவு பட்டடைவதை “பட்டடை கணக்கு” ஆகத் திகழ்கிறது.

இலக்கிய வரலாற்றுப் பதிவில் முதன்மை நிலையில் நின்ற  கருத்தூறும் சொல்,
நெறிமுறை பதிவில் உருவாக்கம் தொல்காப்பிய பாவினத்தில் காணலாம்.

உயிரும் மெய்யும் கலந்து குறுகிய ஒலியுடன் புணர்ச்சியில் நெறிபடுதல் , பட்டடை ஆக அறிவினில் பட்டவை தொடர் நிகழ்வில் சிறந்து விளங்குகிறது.

தொல்காப்பியம் 482
எழுத்து அதிகாரம்
குற்றியலுகரப்
புணரியல்

உயிரும் புள்ளியும் எனத் தொடங்கும் பா
நெறிபடுதல் ஆக

பட, படுதல்,
பட்டு அடைதல்
“பட்டடை”  என்ற சொல்லாகி நிலைக்கிறது.

தொல்காப்பியம்
பொருளதிகாரம்
989 அகத்திணையியல்

‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும்., ‘ எனத் தொடங்கும் பாடலில் மூலம் நாம்
உயர்திணை, அஃறிணைக்கு
அப்பால் பட்ட  “தகுதி:

த-ரம்,
கு-ணம்,
தி-றமை”

என பெற்று தொடர்கிறது.

என்றும் நிலைக்கும் நண்பர்கள், உறவினர்கள்  ஒவ்வொரு பருவத்திலும், அந்தந்த காலகட்டங்களில், பழகும் மொழியோடு பட்டதொரு குறியீடு ஆற்றல் மிகவும் வேண்டிய தேவையை நிறைவேற்றுவர்.

ஒன்று எனும் இலக்கின் முதலாய் நிலைக்கும் பொருட்களின் பெயரோடு , ஆவலோடு ஆற்றும் செயல்படும் நற்செயல்கள் தொடர்ந்து நற்பயன் கிட்டும்.

இல்லாத ஒரு பொருளின் தன்மை, உற்ற வேற்றுமை பற்றித் தொடர்ந்து நின்று நிறைவு பெறும் நிலையில் பற்றித் தொடர்வது 
” உற்பத்தி”
ஆகும்.

அவற்றை சேவை இலக்குகளின் அடிப்படையில் பற்றுதலுடன்  அடையும் கணிப்பு முறை “பட்டய கணக்கு” எனலாம்.

பட்டய கணக்கு வரலாறு:

1913 இல் இயற்றபட்ட இந்திய நிறுமச் சட்டம், முதல்முறையாக ஒரு நிறுமம் குறிப்பிட்ட கணக்கு ஏடுகளை எழுதி பராமரிக்க வேண்டும் என நிலை நிறுத்தியது.

மேலும் இந்த கணக்கு ஏடுகளை கணக்காய்வு செய்ய குறிப்பிட்ட தகுதி உடைய ஒருவரை  கணக்கு ஆய்வாளாராக பணியில் அமர்த்த வேண்டும் என்றது.

ஒருவர் கணக்காய்வாளராக பணியாற்ற மாகாண அரசிடம் இருந்து கட்டுப்பாடுக்குட்பட்ட சான்றிதழ் ஒன்றை பெற வேண்டும்.

1930 இல் கணக்காளர் பதிவேடு ஒன்றை அமைக்க இந்திய அரசு முடிவு செய்தது.

இந்த பதிவேட்டில் இடம் பெற்ற நபர்கள் பதிவுபெற்ற கணக்காளர் என்று அழைக்கபட்டனர்.

——
தமிழ் கணக்கு – 7

பட்டய கணக்கு

பற்றித் தொடரும் பற்றின் வடிவம்
      தொற்றித் தொடர்ந்து பற்றிக் கொள்ளும்
மற்றும் பல தொடர்பு வடிவமைப்பு
     கற்று பெற்ற கணக்கியல் பட்டயம்.

பட்டயக் கணக்கில் பற்றும் வரவும்
     நட்ட இலாப பத்திபத்தியாய் பதிவு
வட்டி விகித வரிக் கொள்கை
       பட்டியல் இட்டு இருப்புநிலை ஆய்வு.

ஆய்வுத் தேர்ச்சி நம்பிக்கை நாணயம்
     தேய்வுப் பகுதி மீட்பில் பொருள்
வாய்ப்பு மிகும் மகிழ்ச்சி பகிர்வு
       உய்ய உலவும் தென்றல் காற்று.

காற்று நீர் அகம் புறம்
       தேற்றும் மொழி பேசும் வழி
பற்றிய தகவல் பெறுவதில் இன்பம்
      ஏற்றத் தாழ்வு ஊறும் உயர்வே.

நாணயம் சுழல்      ஆதார நம்பிக்கை.

நாணயம் சுழல் ஆதார நம்பிக்கை.

அங்கத்தை அங்குலமாக ஆடியோடி காக்கும்
       பங்கீந்து பகிர்ந்து அளிக்கும் பாங்கு
அங்கும் இங்கும் ஓடியாடிய தசை;
      தங்கி வழங்கும் கடை ‘அங்காடி.’

அங்கம் ஆடும் கடைசி வரை
      பங்கு சந்தை, பழைய வரி
தங்களது வருமானம் தரும் மானம்
      சங்க கால நிலவரி தலைவரி.

தலைவரி ஆள்வரி நாணய வரிவகை
      கலை இலக்கியம் பண்பாடு வரலாறு
ஆலையியந்திரம்; கணினியெணினி, துணைக் கருவி
     வலைப் பக்கம், ஊராட்சி, உலகாட்சி
        நிலையாட்சி.

நிலைகொள்ளும் யாவும் நிலம் கொள்ளுமா?
    ஓலைச் சுவடிபதிவு அகராதி
இலைதழை உண்ட மெய் ஞானம்
      வலைப்பதிவு வரை சுழலாளாதார குடும்பம்.

குடும்ப நலம்,  நீதிமன்றம் அரசு நிறுமம்
      நடுங்க வைக்கும் போரிடமா மாநிலம்?
உடுப்பு உடுத்தி உண்டுவாழ கண்டம்
      துடுப்பு செலுத்தி கடக்கும் கடல்.

கடல்சார் வரலாறு கணிப்பில் பயணம்
      உடல்சார் உயர உயிர் திணையாய்
படல் மறைப்புதட்டி தூங்கும் காலமொன்று
      ஊடல் கூடல் நிகழ்வு வீடுபேறு.

வீடுபேறு, இறைவணக்கம், கல்வியறிவு பெற்றோர்
       நடுத்தர வர்க்க இனத் தொழிலே ;
ஏடு படிப்பறிவே சார்புத் திறன்
       நாடு நாளும் புதுப்புதுவிசையே புவி.

புவிக்கோளம் சுற்று முற்றுப் பார்வை
       ஏவிவிடும் ஏவுகணை  நாடித் துடிப்பு
தாவி தவழ்ந்த காப்பீடே அறிவியல்
     சாவிகொண்டு இயங்கும் மனமே வாய்ப்பு.

வாய்ப்பு வழங்கி இயங்கும் படிக்கட்டு
      தாய் தந்தையர் சேவை நிலையம்
ஆய்ந்து அறிந்து கொள்ளும் முறை
      பாய்ந்து செல்லும் இயக்கம்  பரவட்டும்.

பரவி விடும் அளவுகோல் குடியரசு
      புரவி கொண்ட வேகம் இயற்பியல்
தரவு மதிப்பு பெறும் வரையறை
     இரவு பகலும் அறிவுப் பரவல்.

புவி புது விசை

புவியின் விசை புதிய திசைப்பற்று

நவிலும் நற்கதி அடைந்திடும்.

26 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு புவி நடுப்பகுதி மனித இனத்தோற்றம்

Contact THANGAVELU CHINNASAMY, Pathivar Seyalmantram , Tiruchirapalli

https://in.bold.pro/my/thangavelu-chinnasamy-230819073650

சுதந்திரநாள் பாயிதழ் :

சுதந்திரநாள் பாயிதழ் :

சுதந்திரநாள் பாயிதழ் :

சுதந்திர மூலம் படரும் கொடி;
ஏதம் பிழைகள் காண்; சீரமை
பதம் ஓர் படிமலர்ச்சி படிவம்
கதம்ப மாலை கோரும் ஒற்றுமை.

ஒற்றுமை ஒற்றை பக்கம் கொண்டு
பற்றி கொள்ளும் தளத்தில் சுழல்;
வற்றாத மலர்கள் பூக்கும் நாளும்
நாற்றங்கால் நன்மை தரும் தொடர்ச்சி.

தொடர் ஆகும் பற்று வரவு
மடல் வழியில் மொழி பேசும்;
தடம் பதிக்கும் சேவை சேர்க்கும்
படம் பார்க்கும் வையகத் தலைமை.

தலைமை ஏற்று நடத்து நம்
வலைப் பின்னல் இயல்பு நிலை;
இலை தழை மணி விதைகள்
கலைகள் பொங்கும் பெருகும் சுழலாளாதாரம்.

பாவிய‌ ‘பு’து  ‘வி’சை, ‘புவி’

பாவிய‌ ‘பு’து  ‘வி’சை, ‘புவி’

நீரடி பாரடி திணையடி துறையடி
    தேரடி நாளடி தளயடி மடிப்படி
போரடி நாடி ஆடி பாடி
   ‌ ஈரடி நாலடி பாடிடும் அறமடி.

அறம் அறிவுசார் கொள்ளும் கைத்தலம்(உள்ளங்கை)
      மறம் பண்பாட்டின்(பத்து பண்பாடுகள்) திறன் சேர்க்கை
       குறம்(குறி சொல்லுதல்) வஞ்சி குறவஞ்சி பாட்டு
     வறம்(வறட்சி) தளம் இலாமை சிறப்பு.

சிறப்பு மலர் சீரிய பணி
     பறந்து சென்று பற்றும் ஆய்வு
இறக்குமதி ஏற்றுமதி வணிக வாய்ப்பு
     ஏற இறங்கிச் செல்லும் புவியடி.

புவியடி நாளும் நிகழும் நிலையடி
     கவிதனில் மொழி பேசும் அணி
ஓவியம் ஒளி கால வகை
    பாவியப் ‘பு’து ‘வி’சை ‘ புவி.’

ECOLONOMY PARADIGYM BY ROMANIA SCHOLARS

ECOLONOMY Paradigm

தமிழ் கணக்கு நாழிகை கணக்கு

தமிழ் கணக்கு 6 –

” நாழிகை கணக்கர்கள் ‘

நேர கால கணிப்பு முறையினை
‘ நாழிகை ‘ வரையறை செய்கிறது.

தமிழில் கணிக்கும் திறனை
‘ நாழிகை ‘‌ கொண்டு வகுக்கும் வழிமுறைகளை அறிவோம்.

‘நா’ வில் ஏற்படும் ஒலி
உதரவிதானத்திற்கு மேல் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் துணை செய்யும்.

ஈன்ற உயிரணுக்கள் ஒவ்வொன்றும் எழும்பும்.

ஏற்றமிகு ஒலியுடன், ஐக்கியமாகும்.

உயர‌ எழுப்பி,
வாயை திறந்து
ஒலிக்கும் முயற்சியில் ஈடுபடும்.

மேல் வாய்ப் பல் அடி நாவில் விளிம்பில் ஆழ்ந்து பொருந்தி ஒவ்வொரு சொல்லாக வெளிவரும்.

“நா(ஆ)+(வி)ழி”
“நாழி” என
நம் உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாயில் இருந்து ஒலிப்பது, உயிரணுக்களின் ஒன்று சேர்ந்த அமைப்பு, தாயனை, ஆறனைத் தொடராற்றல் கொண்டது ஆகும்.

இவ்வாறு
நம்
‘நா'(க்கு) வ’ழி’
வகுப்பதை
ஒவ்வொரு மொழியும் பேசும்.

அவ்வாறு பேசும் நொடிக்கு
‘ நாழி ‘ என்போம்.

மெய்யுறுப்புகளின் நிலைப்பாட்டை ஒவ்வொரு நொடியும் அறிந்து, ‘ நாழி ‘ என நம் ‘கை’யின் உதவி கொண்டு நாழி’கை’ என வகுத்தனர்.

சூரிய ஒளி வெளிப்பாடு அறிந்த பின், ஒவ்வொரு காலத்திலும் ஒளியின் வெளிச்சத்தில், நிழல் விழுவதன் மூலமும் அறிந்தனர்.

இவ்வாறு ‘ நாழிகை ‘ சொல் வரலாற்றின் வழிமுறை அறியலாம்.

நாழிகை தொகுப்பவர்களை நாழிகை கணக்காளர்கள் என அழைத்தனர்.

‘ நாழிகைக் கணக்கர் ‘
என்பவர் இரவில் தூங்காமல் நாழிகையை வட்டில் மூலம் கணக்கிட்டு,
அதை மணியோசையால்
ஊரில் உள்ளவர்களுக்கு அறிவிப்பர்.

நாழி குறித்து
முல்லைப்பாட்டு 1-9 :

நனந்தலை யுலகம் வளைஇ நேமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி வலன்ஏர்பு
கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
அருங்கடி மூதூர் மருங்கில் போகி
யாழிசை இனவண்டு ஆர்ப்ப நெல்லோடு
நாழி கொண்ட நறுவீ முல்லை

மனித இனம்

” நன+(வு-(‘வ’+’உ’)) ” = ” நனவு “

எனும் சொல் வரலாறுப் பதிவினை அறிவோம்.

” நன “‌ என்ற சொல் “நினை”வில் நின்று, சொல்லாக நிலைக்கிறது.

நினைவில் வளர்ந்து
‘வ’ரும் ‘ உ’ண்மையை ரிங்காரமிட்டு மையமாக,”
மனித இன “உரிமை‌” என கால காலமாக வளர்ந்து உள்ளது.

உரிமை நாம் வாழும் தளத்தின் களம் ஆகும்.

“களம்” என்ற தளத்தில்
“அகலம்” ஆக விளங்கி நாம் வாழும் , ” புவி ” வாழ்நாளினை
குறிக்கத்தக்கது.

(எ.கா: தொல்காப்பியம் சொல்லதிகாரம் 370 உரியியல்)

” நனவே களனும் அகலமும் செய்யும்”

நனவு எனும் உரிச்சொல் களம், அகலம் என குறிப்பாக பொருள்களை உணர்த்தும்.

தலையில் தோன்றும் நனவு, நினைவுத் திறன் கொண்ட மனித வரலாறு ஆகும்.

சக்கரமாக விளங்கும் கருப்பொருள்கள், ஒலி குறிப்பினில், ஒவ்வொரு துளியாக வலிமை பெறும்.

வலிமை பெற்ற ஆறனை தாயனையின் மூலக்கூறுகள் ஆற்றல் கொண்டு இயங்கும்.

அவ்வாறு இயங்கும் உமிழ் நீர் சுரந்து, வாயியல் முறைமையில் நற்சொல் ‘ நாழி ‘ எனப் புரிந்து, தமிழ் சொல்லாக கைத்துணை மூலக்கருவிகள் மூலம்,
” நாழிகை ” என்று கணித்து சொல்லப் படுகிறது.

இவ்வாறே ,
முல்லைப் பாட்டு 55 – 58 பதிவினில்

‘பொழுது’ இது தான் என பல காலமறிந்து ‘நா’வில் பொய்யே கூறாத மக்கள், வி’ழி’ மூலம் கை கூப்பி வணங்கி, அலைகள் சூழ் கடல்நீர் செல்லும் வையகம் செல்வதைக் குறு(உமிழ்) நீரில் சொல்லும் சொல்லாக வாய்மொழியில் அனைவரும் விளங்கும் வகையில்,

‘ நாழிகை வட்டில் ‘ என்ற கருவி மூலம் பின்னர் நேரகாலமுறை ஆக தொகுத்தனர்.

நாழிகை கணக்கர்,

” பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்
தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி,
எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின்
குறுநீர்க் கன்னல் இனைத்தென் றிசைப்ப ‘
எனப் பதிந்து உள்ளார்.

அதுபோல்,
குறுந்தொகை 261/9 இல்,

நாழிகை கணக்கர் குறித்து, கழார் கீரன் எயிற்றி பதிந்து உள்ளார்.

” நான் உறங்கிவிட்டால், தலைவன் வரும் நேரத்தை அறியாமல் அவனைச் சந்திக்க முடியாமல் போய்விடும்.” என்று இப்பாடலில் தலைவி கூறுகிறாள்.

“பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
நள்ளென் யாமத் தையெனக் கரையும்
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.”

காவலர் கணக்கு வகை என இப்பாடலில் பதிந்தவை, நாழிகை கணக்கர் இரவில் முழித்து மணியின் மூலம் எழுப்புவது போல், தலைவி தலைவனுக்கு என வருந்தி துஞ்சாதிருப்பதை பதிந்து உள்ளார்.

  1. இந்திரவிழவூரெடுத்த காதை

49
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர் நாழிகைக் கணக்கர் - அரசனுக்குச் சென்ற நாழிகையை அறிந்து சொல்லுவார் ;

இதனை, "பூமென் கணையும் பொருசிலையுங் கைக்கொண்டு காமன் றிரியுங் கருவூரா--யாமங்கள் ஒன்றுபோ யொன்றுபோ யொன்றுபோய் நாழிகையும் ஒன்றுபோ யொன்றுபோ யொன்று"

என்பதனாலறிக.
சிலப்பதிகாரம் கூறுகிறது.

புவியியல் பகுதியில் பூ போல ஒவ்வொன்றும் கண்டறிந்து மெல்லிய குரலில் அக்கணமே ஒவ்வொரு பொருளும் சொல்லாக கணித்தனர் .

அப்பொருட்களை நாவிலும் கையிலும் அசைத்து, விழி மூலம் காட்சியகங்களில் திரியும் கருப்பொருள்களாக கண்டறிந்ததை யாவும் ஒரு சிலவற்றை ஆங்காங்கே ஒன்றன் பின் ஒன்றாக அறிந்து தொகுத்தனர்.

இது போலவே
நாழிகையினையும் கணக்காளர்கள் ஒவ்வொரு பொருளையும் வகுத்துள்ளனர் .

ஒவ்வொரு நாளும், ஆண்டும் நாழிகை மூலம் கணிப்பது

‘நாழிகை கணக்கு’ ஆகும்.

தமிழ் கணக்கு 6

  • ” நாழிகை கணக்கர் ” குறித்து

நாழிகை

நனந்தலை கொண்ட மனித வளம்
ஆன முதலொரு சில மெய்யியல்பு
இனம் ஆக வளர்நில இயல்பு
தனம் மெய்யெனக் கொண்ட நாவிழி.

நாவிழி கை கூடிய நாழிகை
தாவி தத்தி செல்லக் கை
அவியல் சோறு ஆராய்ச்சி வயல்
புவி நில சூழ் ஆழி(கடல்).

ஆழி மழை விண் பொழிவு
நாழிகை காட்டும் எணினி காட்டி
வாழிய செந்தமிழ் சேர்ந்த பதிவு
ஊழியர்கள் செயலே நாட்டின் திறம்.

திறமை திறந்தவெளி மூலச் சேவை
உறவு கொள்ள விரும்பும் யாவும்
ஆற அமர வைத்து சிறக்கும்
பறந்து சென்று பற்றிக் கூறும்.

கூறும் கூடு; கூட்டம் குடில்
ஊறும் நீர்மம், வளிம உமிழ்நீர்
ஏறும் இறங்கும் வடிகால் அமைப்பு
மாறும் நிலை உயிரின மரபுவழி.

2
நாழிகை வந்த வழி பாடல்:

வந்த காலம் ஒன்று; இன்று
பந்த கால நிகழ்வே!

வந்த காலம் ஒன்று, வாழ்ந்து
வந்த காலம் ஒன்று, இன்று
அந்த காலம் முதல், தொகுக்கும்
பந்த பாசம் மிகுதி ஆக்கும்.

ஆக்கும் பேராற்றல் மிக்க மகிழ்ச்சி
ஆகும் கருணை உள்ளம் உள்ளும்
நகும் நல்லுள்ளம் ஓர் பார்வை
வகுக்கும் நிலம், நீர்ச்சுற்று அழகு.

அழகு, ஆனந்தம் புரிதல் வேண்டிப்
பழகு மொழி சொல் முறைமை
வழக்கம் போல் ஏற்க, முயல்க;
குழல் இசை, இனிது காண்க.

காண கோடியாண்டு பதிவு வகை
நாணய மாற்று‌ இயல் கணக்கு
வாண வேடிக்கை அல்ல என்றும்
பாணர், ஆன்றோர், சான்றோர் வாக்கு.