பறவைப் பார்வை – கட்டுரை

பறவைப் பார்வை

சாகித்ய விருது வாங்கிய ராமகிருஷ்ணன்
‘பறவைக் கோணம்’ என்ற பேச்சைக் கேட்டேன்.
அவர் பேச்சில் சொன்ன கருத்துப் பதிவு.

அவருடைய சக ரயில் பயணி கேட்டார். ‘பறவை பார்வை’ என்றால் ‘மேம்போக்கான பார்வை தானே’ ‘இந்த தலைப்பில் என்னத்தை பேசப் போறீங்க? ‘ என்றாராம்.
இந்த சிந்தனை பெரும்பாலோர்க்கு வரக்கூடியது தான்.

இந்த தலைப்பு மிகவும் வித்தியாசமானதே. பறவையின் பார்வை என்பது மிகவும் உயர்ந்த இடத்தில் பார்க்கும் போது அனைத்து செயல்களும் மிகவும், மிகச் சிறிய அளவிலேயே தெரியும்.

காக்கை, பருந்து கொக்கு போன்ற பறவைகள் மிகவும் உயரத்தில் பறந்து, இரையைத் தேடி உண்டாலும், அதனுடைய பறந்த விரிந்த இயல்புகளும் மிகவும் உயர்வானவையே. அவற்றிற்கான உயிர்களின் இயல்பு அப்பார்வையிலேயே நிலைக்கப்படுகிறது.

அவரது பேச்சில், ‘நகரங்களில் , கிராமங்களில் பறக்கும் காக்கைக்கு’ காலப்போக்கில் ஏற்படும் மாற்றத்தை விவரித்தார்.
ஆம், நகரங்களில் எல்லைகளில் பறக்கும் காக்கை நகர மக்கள் எதை உண்கிறார்களோ, அவற்றையே உணவாக, நகரத்தில் வாழும் மக்களைப்போல தனியாகத்தான் இரையைத் தேடுகின்றன, உண்கின்றன. இதற்கான எடுத்துக் காட்டையும்
எழுத்தாளர் ராம கிருஷ்ணன் அவர்கள், அவரது மகனிடம் நடந்த உரையாடலை விவரித்தார்.

நாங்களும், சென்னை நகரத்தில் எமது மகள் வீட்டில் சில மாதங்கள் இருந்த பொழுது, சேலையூர் ஏரிக்கு அருகில் உள்ள புளிய மரத்தில் ஒரு சில காகங்கள் தொடர்ந்து கரைக்கும். காகங்களுக்கு மாடியில் ஒரு கிண்ணத்தில் தொடர்ந்து சாதத்தை வைத்தோம்.

ஒரு சில காகங்கள் பால்கனியில் இருந்து கொண்டு காகம் கரைக்கும் பொழுது ஒரு சில குறிப்பிட்ட நேரங்களில் சிறிது சாதம் வைத்தோம். சில நாட்களுக்குப் பிறகு, ஒரு காகம் மட்டும் தொடர்ந்து வந்து பால்கனியில் உள்ள கம்பியில் இருந்து கரைக்கும். கதவு மூடி இருந்தால்
கதவை கொத்தி தனது இரையை பெற்றது. இது எங்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

காகங்களும் இரை தேடுவதை, நகரங்கள், கிராமங்களில் காலச் சூழலுக்கேற்ப ஏற்படுத்தி இருக்கும் மாற்றத்தை உணர முடிந்தது.

அவர் பேசிய பேச்சிற்கேற்ப கால மாற்றத்தை நாங்களும் உணர்ந்ததால் இந்தப் பதிவு.

நாமே உயரத்தில் விமானத்தில் பறக்கும் பொழுதும்,
மாடி வீடுகளில், மலைப்பகுதியில் இருந்து கீழே பார்க்கும் பொழுது, நமது எண்ணங்களும் உயர்வானவையாக அமையும்.

இது எனது தொடர் கனவு.
‘கனவு காணுங்கள்’ என்று
அப்துல் கலாம் தமது பேச்சில் வலியுறுத்தும் கனவுக்கு முற்றிலும் வேறுபட்டது.

இரவில் நாம் உறக்கத்தில் தோன்றும் கனவு ஓர் கலைந்து செல்லும் அலைக்கற்றைகளின் எண்ணப்பதிவு.

நாம் அன்றாடம் பழகிய இடம், நபர்கள் கூட கனவுகளில் முற்றிலும் மாறுபடும்.

நினைவில் நின்ற கதைகளைக் கூட சிலர் மணிக்கணக்கில் விவரிப்பார்கள். இது நிஜத்தில்
நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் முற்றிலும் இல்லை.

அப்துல் கலாம் அவர்கள் பதிந்த கனவு,
‘ குறிக்கோள்களை செயலாக்குவதே’.

எம் கனவில் எம்மால் முடியாத கனவையும் பகிர்ந்து கொள்கிறேன்.

உறங்கும் பொழுது, என்னுடைய கையை பறவை பறப்பது போல இரு கைகளையும் விரித்து பறந்து பல இடங்களுக்குச் செல்வேன். ஆஹா! இது போன்ற பறக்கும் ஆற்றல் எப்பொழுது வந்தது என்று கூட ஆச்சர்யப் படுவேன்.

விடிந்ததும் கனவு மெய் படவில்லை என்பதை உணர்ந்த பின் தான் ‘ இது ஒரு கனவு என்று உணர்வேன்’ .

‘ கனவு மெய்ப் படவேண்டும்’ என்று பாரதியின் கூற்று
மிகச் சிறந்த பதிவு. ஆம், நாம் மெய்யால் உணரபபடவேண்டும்.

அதற்காகத்தான் நாம் காண்பது கனவா, நினைவா என்பதை நமது கையால் நம்மைக் கிள்ளிக் கொள்கிறோமோ!

பள்ளி நாட்களிலும் சரி, அலுவலகம் மற்றும் சமூகச் செயல்களின் ஈடுபாட்டிலும், எமது தொடர் நிகழ்ச்சிகளாலேயே எம்மை இது போன்ற பதிவுகளுக்கு எம்மால் வித்திட முடிந்தது.

வணிக முதுகலை பட்டயப் படிப்பு, எம்முடைய,
எண் கணக்குப் பணியிலும் ஓர் அடித்தட்டு கணக்குப் பிரிவு அலுவல்களில் ஈடுபட முடிந்தது.

பறவைப் பார்வையினால் என்னால் பறக்க முடியவில்லை, பதிய முடிகிறது.

பாரதியார் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பாரதி – கரந்துறையில்

பா-பாட்டின்
ர- ரகத்திலும்
தி-திக்கெட்டையும் ஒருங்கிணைத்தவர்.

நாடிச் சென்றால் நாட்டின் பலமென
ஒருங்கிணைத்தவர்.

சாதிகளில் பிரிவில்லை யாவரும் ஒன்றென
ஒருங்கிணைத்தவர்.

நாளும் கிழமையின் இயற்கையின் சூழலென
ஒருங்கிணைத்தவர்.

மொழியின் செம்புலமையும் வாக்கின் சிறப்பென
ஓருங்கிணைத்தவர்.

பாரதியார் பிறந்த தின வாழ்த்துக்கள்.

நல்லவை போற்றதும் தலைப்பு தினமணி

நல்லவை போற்றுதும்!

Discussion on dinamani

மிதமான விமர்சனப் பகுதியில் உள்ளவை

இயற்கையை பேணிக் காப்பது நம் அனைவரின் உயிர் வளர்ச்சிக்கு நிலைப்பதற்கான நிரந்தரச் செயல். தீய செயல்கள் வலிமையானவை. நல்ல செயல்கள் நிலைக்க நாள்பட முயற்சி செய்ய வேண்டும். மனித குலம் தழைக்க மனிதர்கள் நீர் வளம், நில வளம், காற்றுத் தூய்மை ஆகியவற்றை எக்காலமும் நாம் தொடர்ந்து பராமரித்தால் தான் எனறும் நிலைத்து நிற்கும்.

‘ உரிமை ‘ என்ற சொல்லை கரந்துறையில் விளக்க வேண்டுமெனில்,
உ – உயிரை
ரி – ரிதமாக
மை-மையப் படுத்தவது.

இயற்கையை காப்பது நம் அனைவரின் உயிரைக் காப்பதறகு சமம். இயற்கையில் நாம் ஒரு மிக மிகச் சிறிய அங்கம். இயற்கையை அழிப்பது, நம் உயிர் வாழ வழங்கும் இயற்கையின் கொடையை அழிப்பதற்குச் சமம். நல்ல செயல்களில் நாளும் ஈடுபடுவோம்.

Discussion onTyranny of the majority in the Hindu paper

Tyranny of the majority

Discussion on the hindu paper

The Electoral rhetoric care on the elections period is more on the cards. The Equal share claim at the time of elections seem to be more on the lower income people. Favour of government rule after the election is being more on wealthy and top level 5 percent citizens is the regular form of our democractic political system. The selection of candidates from the existing poltitical system is based upon the caste, religion etc., The visionary leaders from the existing poltical parties should be emerged in the electoral fray for stabilising and assuring government in our democratic system.

பாரதியார் பிறந்த தின வாழ்த்துக்கள் – கரந்துறையில்

பாரதி – கரந்துறையில்

பா-பாட்டின்
ர- ரகத்திலும்
தி-திக்கெட்டையும் ஒருங்கிணைத்தவர்.

நாடிச் சென்றால் நாட்டின் பலமென
ஒருங்கிணைத்தவர்.

சாதிகளில் பிரிவில்லை யாவரும் ஒன்றென
ஒருங்கிணைத்தவர்.

நாளும் கிழமையின் இயற்கையின் சூழலென
ஒருங்கிணைத்தவர்.

மொழியின் செம்புலமையும் வாக்கின் சிறப்பென
ஓருங்கிணைத்தவர்.

பாரதியார் பிறந்த தின வாழ்த்துக்கள்.

தந்தை தந்த சாதனையின் மிடுக்கு

சாமியில் சின்ன சாமி

உள்ளம் உருகும் சாமி

உறுதிப்பட செயல்படும் சாமி

ஊரார் அறிந்திடும் சாமி

ஊரெங்கும் உலவிடும் சாமி

புண்ணிய பூமியில்

பூரணத்தை மணந்தாய்

புவனம் போற்றும் புதல்வர்களையும்

புதல்வியையும் புன்னகையுடன்

பூத்துக் குலுங்க மலரச் செய்வாய்.

https://m.facebook.com/groups/980029092048474?view=permalink&id=1145680432150005

Discussion on the Hindu.Paper titled An Invitation to Corruption.

Discussion onthehindu.com in An invitation to corruption?

The political party’s expenditure on elections cannot monitor on any ceilings limitation, as mentioned in the articles on invitation to corruption. The bond scheme which is likely to cleansing the prevailing system of corruption does not contain any government restrictions. The money involvement in the bond scheme will not identify the donor’s as well as the receiving poltical party. The loss making shell companies is also donating money to certain political parties and retain their involvement in the corrupt practices, so as to get some favour from the winning parties. As rightly mentioned in the articles, it is difficult to conceive the real participation of people in political public life. The Constitution set up in the political affairs is easily surpassed by the politicians and retain their intrinsic value in the political parties.

தினமணி – நகர வளர்ச்சி குறித்து விமர்சனம்

My comment ondinamani.com in உலகின் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் தமிழக நகரங்கள் எவை தெரியுமா?

திருப்பூர், திருச்சி சென்னை ஆகிய இந்திய நகரங்களை உலக அளவில் வளர்ந்து வரும் நகரமாக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தேர்ந்தெடுத்து இருப்பது, தமிழக மக்கள், குறிப்பாக திருப்பூர், தொழில் துறையிலும், திருச்சி, கல்வித்துறையிலும், சென்னை பரவலாக வளர்ந்து இருப்பது நாம் அறிந்தவை எனலாம். தொடர்ந்த மிகச் சிறந்த கண்காணிப்பே இந்நிலையை மேலும் வளர்ச்சி உள்ள நகரமாக மாற்ற இயலும். உலகில் வேகமாக வளரும் நகரமாக வேண்டுமெனில் , கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் சிறந்து விளங்கினால் தான் மேலும் இந்த நிலையில் இருந்து முன்னேற முடியும். உள்நாட்டு நகர வளர்ச்சியில் இந்தியா நாட்டில் மட்டும் 17 நகரங்கள், 20 நகரங்களில் உலக அளவில் உள் நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பெற்று இருப்பது சிறப்பு வாய்ந்த நிலை ஏற்படுவதற்கான சந்தர்ப்பமாக கருதி செயல்படுதல் நலம்.

இந்து தமிழ் விசை விமர்சனம்

தி இந்து தமிழு விசை விமர்சனம்
174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி

பெரும்பாலும் தனி மனிதர்கள் நடைமுறை செயலில் இருந்து சொல்லும் கருத்துக்கள் எடுத்துக் கொள்வதில்லை. அந்த தனி மனிதன் சிறப்பு இயல்புகளை, அதிலும் குறிப்பாக விவசாயத்துறையை கண்டு கொள்வது அவரது இறுதி காலங்களில் நோய்க்காக போராடும் பொழுது தான், அவர் செய்யும் செயல்கள் நம் நினைவகத்தில் ஒளிர்விடுகின்றன. விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி, இடைத்தரகர்கள் மூலம் விற்கப் படும் பொழுது, விளைபொருட்கள் விளைவதற்க்கான காலம், நேரத்தையும் விலை நிர்ணயித்திற்கு கணக்கிடப்படும் துறையாக, விவசாயம் என்றும் உள்ளது. இதை நெல் ஜெயராமன் அவர்களும் தனது நேர்கானலிலும் தெரிவித்து இருக்கிறார். நம்மாழ்வருடன் சேர்ந்து செய்த களப் பணிகள், பாரம்பரிய நெல் ரகத்தை விவசாயத்தில் பயிரிட்டு நிறைவான சாகுபடிக்கான செயல்கள், விவசாயத்தில் அவர் பதித்த நிலை பெறும் செயல்களாகும்.
அரசுத்துறையில் உள்ளவர்களும், மற்ற நூற்றாண்டு கால சிந்தனை செயல்பாட்டாளர்களும். ஒருங்கிணைந்த நெல் சாகுபடியை மேம்படுத்துவது அவரின் நற்செயலின் தொடராக அமையட்டுமே. வாழ்க அவரின் செயல்.