தினமணி செய்திதாளில்- செயல் மன்றம் விமர்சனம்.

தினமணி இ-செய்தி தாளில்

கீழ்க்கண்ட தலைப்புகளில் செயல் மன்றம் விமர்சனம்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று!

1. பேசு , உருவாகு, தகுதி ஆகுமே என கரந்துறை பாக்களில் கூறலாம்.

பேசு:
பே-பேறுகளை
சு-சுகமாக்கு,

உருவாகு:

உ-உண்மையின்
ரு-ருசிகரத் தன்மையை
வா-வாழ்க்கைகுணங்களாக்கு,

தகுதி:

த-தரமும்,
கு-குறிக்கோளும்
தி-திட்டமிட்ட வாழ்க்கையும் நிரந்தரமாகும்

ஆஆகுமே:

ஆ-ஆக்கப்பூர்வ
கு-குதூகல குடும்பமாக
மே-மேம்படும்

என்பதை அனைவருக்கும் உணர வைப்போம்.

2. மண்ணை நேசிப்போம், மக்களைக் காப்போம்!

மக்களின் வாழ்வாதாரம் விஞ்ஞான தொழில் நுட்பங்களை மேம்படுத்துவது, மேல்தட்டு மக்களின் அதி நவீன வசதி வாய்ப்பிற்குத் துணை செய்கிறது.

விவசாய உற்பத்தி அடிப்படையை தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கியத் தேவை.

அரசின் எரிபொருளுக்கு நிலையான பல தனியார் நிறுவனங்களில் துணை செய்கிறது என்ற காரணத்திற்காக எந்த ஒரு அரசும் தாம் ஆட்சி செய்யும் காலங்களில் அடிக்கலை நிலைநாட்டி தமது சாதனையை என அடுத்த தேர்தலுக்கும் உத்திரவாத படுத்திக் கொள்கிறது.

இந்த தொழில் நுட்ப வசதிகள் அனைத்தும எல்லா மாநிலங்களுக்கும் பகிரப்படுவதால், தமிழ் நாடு நிரந்தரமாக நீர் வசதியின்மைக்கு உள்ளாகிறது என்பதை நாம் உணர வேண்டும்.

மக்கள் நிலையான வாழ்வு தான் முக்கியம்.

3. நீதிமன்றத் தீர்ப்பும் நீர்நிலைகள் பாதுகாப்பும்!

பெரும்பாலான நீர் நிலைகள் நகரப் பகுதிகளில் அரசே மனைப் பட்டா வழஙகி குடி இருக்கும்படி செய்து உள்ளது தான் கடந்த 50 ஆண்டு கால அரசின் சாதனை.

நீர்நிலைகளை பராமரிக்காமல் குடியிருப்பாக மாற்றினால், குடிக்க நீர் எப்படி கிடைக்கும்?

நாம் உலகில் வாழ்கின்ற ஓர் உயிர்.

நமக்குத்தான் அனைத்தும் சொந்தமென ஆக்கிரமிப்பு செய்து கொண்டால் நீர்நிலை எப்படி உயரும்?

போர்க்கால அடிப்படையில் நீராதார பெருக்கத்தை என்றும் செயல்படுத்துவதே நல்ல செயல்களுக்கு ஓர் வித்தாகும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: