பயிலுக

செம

மனித இன செயல்களின் மன்றம்

பயிலுக

பயிலுக ,
படிக்கும் பழக்கத்தை
பயிலுக .

பெறுக ,
நல் அனுபவத்தை
அனைத்திலும்
பெறுக.

பழக்கப்படுத்து ,
நற்செயலை பழக்கப்படுத்து
செயல்படுத்து .

வழக்கப்படுத்து ,
நல்ல செயலை
வழக்கப்படுத்து .

நல்ல செயல்களை
செய்வோம்.

நம் செயல்களை
கடமையென கொள்வோம் .

செயல் மன்றம் – பல மன்றங்களுடன்

ஓர் ஒப்பீடு .

பல செயல்கள் ஒருங்கிணைந்து மனித இன

செயலால் உருவானவைகள் தான் நாம்

உபயோகப்படுத்துகின்ற அனைத்துப்பொருட்களும் .

நமக்கு தேவைப்படும் பொருட்களை மேலும்

தேடிக்கண்டுபிடித்து உற்பத்தி செயுகிறோம் .

தேவைப்படாதவைகளை விட்டு விடுகின்றோம் .

இவ்வாறாக சேர்க்கப்படும் பொருட்களும், அமைப்புகளுமே

பல மன்றங்களாக நம் உலக நடவடிக்கைகளில் பவனி

வருகின்றன .

எனவே , மனித வாழ்விற்கு செயல் தான்

முக்கியம் .

இவ்வாறான செயல்களுக்கான மன்றமே

செயல்மன்றம் .

செயல் மன்றம் , சட்டமன்றமாக, பாராளுமன்றமாக,

நீதி மன்றம் என பல நடவடிக்கைகள், மனிதர்களை

ஒழுங்கான செயல்களுக்காக உருவாக்கப்பட்டு

செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன .

செயல் , மனிதர்களின் ஒழுங்கு .

பல்வேறு செயல்கள் மனிதர்களை

ஒருங்கிணைக்கும் .

செயல்கள், தவறுகளை ஒழுங்குபடுத்தும் .

பொருட்கள் நிலைத்து நிற்பதற்கே பல

செயல்களை ஒருங்கிணைப்பதில் தான் நிலைத்து

நிற்கும் .

இலக்கு

மனிதர்கள் உருவாக்குகின்ற கண்டத்திற்கான ,

நாட்டிற்கான , மாநிலத்திற்கான, மாவட்டத்திற்கான என

பலப்பிரிவுகளின் எல்லைக்கோடுகள் இப்பூமி

அறிவதில்லை .

நாமே ஏற்படுத்திக்கொள்கின்ற ஒழுங்கு நடவடிக்கைகளே

இந்த அமைப்புக்களாகும் .

ஒழுங்கு நடவடிக்கைகளில் , இலக்கியமும் பங்கு

பெறும் ஓர் கலையாகும் .

இலக்குகள் இயல்பாக நடைபெறுவதை

இலக்கியம் .

இலக்குகளை இயல்பாக விவரித்து

கூறும் மனித பண்புகளில் கதை , கவிதை முக்கியத்துவம்

பெறுகிறது .

கற்பனை

கதை , கற்பனையை சிந்தையில் நூற்கும்,

தையல்முறையே கதையாகும் .

கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையில்

உருவகம் பெற்றாலும் உண்மை வடிவமாக

காவியக்கதைகள், நில அமைப்புகளில்

சித்தரிக்கப்படுகின்றன .

கவிதை , உருப்பெறுவதும் கற்பனையை

உலாவ விடுவதேயாகும் .

இவை நம் உணர்வுகளை நிம்மதிப்படுத்துகின்றன .

உண்மையும், இதில் பெரும்பாலும் வெளியிடுகின்றோம் .

தேவை

நம் தேவையான பொருட்கள் நிலைப்பெறுவது

நம்முடைய தொடர்செயல்களே .

நம் தேவைகள் ஆயிரம் . நம் ஆற்றல்கள் நிலைப்பெற

தொடர் எரிபொருள் சூரிய ஒளி ஆற்றலே.

நம் கண்டுப்பிடிப்பும் , சூரிய ஒளி ஆற்றல்

நிலைப்பெறுதல் நம் தற்பொழுதான முக்கிய

செயல்களில் ஒன்று .

நம் உடல்நிலை , உள்ளநிலை

நம் வாழ்க்கையின் வழிநிலை .

உள்ளச் செறிவு, உன்னத பண்பின் வெளிப்பாடு .

உயிர் நிலைக்க உணவுப் பொருட்களின்

உற்பத்தி என்ன ? தொழிலின் இயல்பான

துறைகள் என்ன எங்கே அதன்

மூலப்பொருட்கள் எவ்வாறு கிடைக்கும் ?

இயல்பானச் செயல்களே அறிவதே அறிவியல் ஆகும் .

மதிப்பெண்களும், தரநிலையுமா

கல்வி படிப்பு என இப்பொழுதாவது

உணர வேண்டுமல்லவா?