குறள்-நமது குரல்
403.
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின் .
விளக்கம் :
கற்றவர் முன் கல்லாதவர், நம் அறியாமையை புரிந்து
கொண்டு பேசாதிருப்பதும், நல்ல செயலே.
நினைவக செயலுக்கு :
கற்ற நிலை காலத்திற்கும் மாறும் நிலை கொண்டது .
தாம் கற்றவர்கள் என்ற பண்பு, பட்டங்களிலும் ,
பதவியை தக்க வைப்பதிலும் நிலை பெறாது .
சமுதாய நிலைப்புத் தன்மை, மாறும் தன்மைக்கு ஏற்ப
செயல்பட வேண்டிய ஒன்று .
மாறுவோம்! மாற்றத்திற்கேற்ப செயல்படுவோம் .