உயிரியம் உதிக்கும்

உயிரியம் உதிக்கும்.

கற்றார் படித்துறையில் நின்றார் பெற்றார்
       உற்றார் உள்ளார் உழைப்பைக் கொண்டார்
ஆற்றினார் இயம்பினார் தற்காத்தார் உதவினார்
      மற்றார் போதும் என்றார் பின்தொடர்ந்தார்.

பின்னர் பின்பற்றும் துறைகள் யாவும்
      முன்னர் செயலால் ஆற்றுபவை யன்றோ!
இன்னும் கோடி மக்கள் வறியவராய்
        முன்னர் பெற்றவற்றை ஆற்றுகின்றார் பலவாறு.

பலப்பல முறைப்படுத்தும் பேராற்றல் மிக்கதொரு
     சிலவற்றில் சிக்கி தவிக்கும் நிலையினிலே
நலமாக இருக்கும் நிலை அறிவோம்
     பலமாக உள்ள அது இதமாகும்.

இதழே சுவையை உணர வேண்டும்
     ஆதலால் அனைத்தும் இன்பமுற நடத்திவிடு
உதவிட தரமே ஊன்றுகோலென உதவிடும்
     அதனதன் ஆக்கத் தருணமே உயிரியமாம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA