மெய்ப் பொருள் காண் – தொல்காப்பியம்

மெய்ப் பொருள் காண்- தொல்காப்பியம்

1. எழுத்துக்களின் வகை:

‘ தொல் ‘ என்ற சொல்லுக்கு ‘ தொன்மை ‘
என்ற பொருளாகும்.

‘ காப்பு ‘ என்ற சொல்லுக்கு ‘ காப்பு, காத்து ‘ நிற்கும் எனப் பொருள்படும்.

‘ இயம்பு, இயல்பு ‘ என கருத்தோடு
‘இயம் ‘ என்றாகும்.

‘ தொல் ‘ என்ற சொல்லோடு ‘ காப்பு ‘ என்று
சொல்லை இயல்பாக சேர்த்தால் ‘ தொல்காப்பியம் ‘
என உருப் பெறுகிறது.

தொன்மை காலத்தில் இருந்து தமிழ் மொழியை எழுத்துருவில் மரபு உருவில் காத்து நிற்பது தொல்காப்பியம் ஆகும்.

‘ தமிழ்த் தானே வரும் ‘ தமிழர்களாகிய நாமறிவோம்.’
குழந்தைப் பருவத்திலிருந்தே நம் தாய் மொழி தமிழில் பேசும் பழக்கத்தில் இருப்பதால் பேச்சுத்தான் நாம் முதலில் அறிவோம்.

எழுத்தை பின்பு முறைப்படி படிக்கும்
பொழுதுதான் அறிவோம்.

தொல்காப்பியம் 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதியுடன் பதிந்ததை இங்கு பகிர்கிறேன்.

சைகையின் மூலமும், வரிகளின் மூலமும் உருவான தமிழ் எழுத்துக்களை, தொகையையும் வகைப்படுத்தி முறைப்படுத்தி பெயரையும் கூறும் நூல்,
‘ தொல்காப்பியம் ‘.

வாயில் உச்சரித்து உயிர்ப்புத் தன்மை கொண்ட எழுத்துக்களை உயிர் எழுத்துக்களாக பகிர்கிறோம்.

உயிர் எழுத்துக்களைக் சொல்லும் பொழுது வாயில் இருந்து சொற்கள் எழும். உதடுகள் ஒட்டாது.

உயிரின் ஓசையாக மலரும்.

‘ அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஒ,ஓ,ஔ,ஃ’ என்றாகும்.

மெய் எழுத்துக்களைச் சொல்லும் பொழுது
வாய் இதழ்களை ஒன்றொடு ஒன்று கூடி,
உதடுகள் ஒட்டும்.

மெய் எழுத்துக்கள் கூறும் பொழுது
நம் உடம்பு ஒட்டும்.

‘க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,

ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன ‘

1. எழுத்தெனப் படு(ப)வ
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.

எழுத்து எனப்படுவது என்னவென்றால்
‘அ ‘ முதல் ‘ ன ‘ வரை உள்ள முப்பது எழுத்துக்களும் சார்ந்து வரும்.

‘அ ‘ முதல் ‘ ஃ ‘ வரை உள்ள 12 உயிர் எழுத்துக்களும்,

‘ குறில் ‘ எழுத்தாக அ,இ,உ,எ,ஒ என ‘ 5 ‘ எழுத்தும்
‘ நெடில் ‘ எழுத்தாக ஆ,ஈ,ஊ, ஏ, ஐ,ஓ,ஔ ‘ 7 ‘ எழுத்தும்
‘ ஃ ‘ என்று ஆயுத்த நிலையில் உள்ள
ஆயுத எழுத்துக்களாகும்.

‘க ‘ முதல் ‘ ன ‘ வரை உள்ள 18 மெய் எழுத்துக்களுடன் க், ங் என்று ‘ அனுகரண ‘ ஓசையை என்று நம் மெய்யாகிய உடம்போடு உருவ வடிவம் பெற்று நம் பிறப்பு இயல்போடு சேரும்.

எழுத்து என்பது சொல்லில் முடியும் இலக்கு அக்கணத்திலேயே நிற்கும்.

இக்கூற்று தொன்று தொட்டு வரும் மரபாகும்.

‘ மரபு ‘ என்ற சொல்லை நாம் கரந்துறையில்

‘ ம-மக்களின்
ர-ரசனையைப்
பு-புரிதல் ‘
எனப் பகிர்வோம்.

எழுத்துக்களின் இலக்கை அக்கணமே நிர்ணயித்து
மக்களின் புரிதலோடு விளங்கச் செய்வது
நமது தமிழ் மொழியின் தொன்மை கால மொழியான
தொல்காப்பியம் ஆகும்.

மொழி முதலாக ‘ வரி ‘வடிவத்திலும்
பின்னர் ‘ ஒலி ‘ உருவத்தையும் பெற்று இருக்கிறோம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA