மெய்ப் பொருள் காண் – ஊர்

மெய்ப் பொருள் காண் – ஊர்

‘ ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிக்கிட்டேன்
கண்மணி, கண்மணி ‘

என்ற பாடலுக்கேற்ப ஊரை
தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் உலகத்தையும் புரிந்து
கொள்ள வேண்டும்.

உலகத்தை ஊகத்தால் அறியலாம்.
ஊரை உணர்ந்தறிந்து கொள்ளலாம்.

‘ ஊ ‘ என்ற உயிர் எழுத்தோடு ‘ ர் ‘ என்ற மெய்
எழுத்தில் உருவானது ‘ ஊர் ‘ என்ற சொல்.

ஊக்கமாக செயல்பட்டு இருப்பதற்கு ஊர்ந்து
நகர்ந்து நமது பணிகளைத் தொடர்வோம்.

ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்ப சகலமும்
சில பேர்களுக்கு ஊரின் எல்லையோடு
வாழ்க்கை முறைமை முடிந்து விடும்.

ஊர்ந்து தான் மனித இனம் தான் உயிருடன்
வாழக் கற்றுக் கொண்டது.

‘ எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா ‘

என்ற பாடலும்

‘ சொர்க்கமே என்றாலும் அது
நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும்
அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும்
பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா ‘

என்ற திரைப் பாடல்களுக்கு ஏற்ப
நாம் எங்கு பெற்றோர், உற்றாருடன்
வளர்கிறோமோ அந்த ஊர்
நம் சொந்த ஊர், பூர்விகம் எனச் சொல்கிறோம்.

நாம் எங்கு தொழில் நிமித்தம் தங்குகிறோமோ
அங்கு சொந்த ஊராக்கிக் கொள்கிறோம்.
தொழில் நிலைப்பட்டவுடன் உடைமைகளை பெருக்கிக் கொள்கிறோம்.

நம்மூர், அசலூர், வெளியூர், என்று ஊரின் பின்னடைவுச் சொற்களிலேயே ஒவ்வொரு ஊரின் பெயரும் அமைந்து விடுகிறது.

‘ திரு ‘ என்ற முன்னோட்டுச் சொல்லில் தான் பல ஊர்கள் உள்ளன.
‘ கோட்டை ‘ என்ற பின்னோட்டுச் சொல்லிலும் பல ஊர்கள் உள்ளன.

புரம், பட்டி, நகர் என பல சிறப்புத் தன்மையுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் தனிப் பெருமையோடும் சிறந்து விளங்கும்.

திருச்சியிலும் ஊர், நகர் புரம் எனப்
பழம் பெயர்களைக் கொண்டது.
உறையூர் ஒரு காலத்தில் சோழ நாட்டின் தலை நகராக இருந்தது.

உறை ஊரை, உறைவிடம் என்று நாம்
குடியிருப்பதற்க்கு அழைப்போம்.

பொன் நிறம் உடைய மலையை பெற்று இருப்பதால் ‘ ‘ ‘ பொன்மலை ‘ என்றும், மலையில் கோட்டை தடுப்புச் சுவர் என்ற உள்ளதால் ‘ திருச்சி மலைக்கோட்டை ‘ எனப் பெயர் பெற்று உள்ளது.

காவிரி நதி இங்கு தான் விரிந்து பரந்து உள்ளதை பிரிக்கப்பட்டு தஞ்சையில் தஞ்சம் புகுந்து செல்கிறது.
நீர்க்கால்வாய் விரிந்து செல்வதனால் கால் விரிந்து ‘ ‘ கா(ல்) விரி(ந்து) ‘ காவிரி ‘ எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

தமிழ் மொழி தரமான சொற்களுடன் இணைக்கும்
ஓர் செம்மொழியாகும்.

மொழியின் சிறப்பை நம் ஊரின் பெயரிலும் காணலாம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: